search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    காலாப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

    காலாப்பட்டில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாபட்டு சோலை வீதியை சேர்ந்தவர் அருள் (வயது39). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் தனது நண்பர் லியோ பிரபுடன் அங்குள்ள பங்களா தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியக்காலாப்பட்டு பெருமாள்நகரை சேர்ந்த புகழேந்தி (25) என்பவர் அங்கு வந்தார். அவரிடம் அருள் வேலைக்கு செல்லவில்லையா என்று கேட்டார்.

    அதற்கு புகழேந்தி நீ யார்? என்னை கேட்பது என்று கேள்வி கேட்டு தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் புகழேந்தியை அருள் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இருவரையும் லியோபிரபு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அருள் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். மாத்தூர் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த போது பின்னால் வந்த புகழேந்தி திடீரென அருளை வழிமறித்து என்னிடம் பிரச்சினை செய்கிறாயா? எனக்கூறி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார்.

    மேலும் இனிமேல் என்னிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அருளை அவருடன் வேலை பார்க்கும் சின்னப்பதுரை மற்றும் அருளின் சகோதரர் ஆறுமுகம் ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அருள் நடந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புகழேந்தியை தேடி வருகிறார்கள்.

    நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுக்காலனியை சேர்ந்தவர் கமுதி. இவரது மகன் கலைவேலு (25). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இரவு கலைவேலு தனது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்த போது அங்கு வந்த விக்னேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி கலைவேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த கலைவேலு நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து கலைவேலுவின் தந்தை கமுதி கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×