என் மலர்
வணிகம் & தங்கம் விலை
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8290-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-03-2025- ஒரு கிராம் ரூ.113
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
- ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் உயர்வை சந்தித்தன.
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை அதிக அளவிலான உயர்வைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 74,169.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
இன்று குறைந்தபட்சமாக 74,480.15 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 75,385.76 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக 1,131.30 (1.53 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 75,301.26 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 22,508.75 ஆக இருந்தது. இன்று காலை சுமார் நிஃப்டி 154 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சடமாக 22,599.20 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 22,857.80 புள்ளிகளிலும் வர்த்தகமாகி, இறுதியாக நிஃப்டி 22,834.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை 30 நிறுவன பங்குகளை முன்னணியாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஹெச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்டு டி பங்குகள் உயர்வை சந்தித்தன.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் சரிவை சந்தித்தன.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8250-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
- தங்கம் சவரனுக்கு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
அதன்படி நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8220-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும் விற்பனையானது,.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
- நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் விலை குறைந்து காணப்பட்டு, கடந்த 4-ந் தேதியில் இருந்து பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை பயணித்து வருகிறது.
அந்த வரிசையில் தங்கம் விலை நேற்றுமுன்தினம் கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் உயர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
- தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது.
- தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த 10-ந்தேதி வரை ஏறுமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் சற்று இறங்கியது.
தங்கம் விலை நேற்று மீண்டும் ஏற்றத்தில் காணப்பட்டது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,120-க்கும், சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்து இருந்தது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,520
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-03-2025- ஒரு கிராம் ரூ.109
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
- சவுந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதாக அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்.
- சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா (31 வயது) கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றுக்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்து சௌந்தர்யா புறப்பட்ட தனி விமானம் விழுந்து நொறுங்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதன் பின்னணியில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருப்பதாகவும் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
அவரது புகாரில், தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.
விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை. இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கோரியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு சார் மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.
சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு சார் எனது மனைவி மறைந்த ஸ்ரீமதி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபு சாரை அறிவேன்.
அவருடன் வலுவான நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் மோகன் பாபு சாருடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் பழகி வந்தனர். இதனால் அவரை நான் மதிக்கிறேன்.
அவர் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா உயிரிழப்பதற்கு 1 வருடத்திற்கு முன் 2003 இல் சாப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவை மணந்து கொண்டார். உயிரிழந்த சமயத்தில் சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
- நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது:-
பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்.
நிதியமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பெற்று, தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று, நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ள விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,065-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கும் விற்பனையாகிறது.
நேற்று வெள்ளி விலை சற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,160
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-03-2025- ஒரு கிராம் ரூ.107
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
- இந்திய பங்குச் சந்தை காலையிலேயே சரிவுடன் தொடங்கின.
- நேற்றைய நாள் முடிவிலும் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கின. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 138 புள்ளிகளும் சரிவடைந்து வர்த்தகத்தை தொடங்கின.
இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 379.79 புள்ளிகள் சரிந்து 73,735.38 புள்ளிகளையும், என்.எஸ்.இ. நிஃப்டி 108.40 புள்ளிகள் சரிந்து 22,351.90 ஆகவும் உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வங்கித் துறை, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி. துறைகளை சேர்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. நேற்றைய பங்குச் சந்தை சரிய தொடங்கும் முன் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதாக சந்தை வல்லுநரான ஜதின் ஜெடியா தெரிவித்தார்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.
- வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 5 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ள விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,400
09-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.64,320
08-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,320
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-03-2025- ஒரு கிராம் ரூ.108
09-03-2025- ஒரு கிராம் ரூ.108
08-03-2025- ஒரு கிராம் ரூ.108
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
- இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 74,332.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 74,474.98 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
தொழில்துறை, ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 22 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 8 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக முடிவில் 22,552.50 ஆக இருந்தது.

இன்று காலை 22,521.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 22,429.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக நிஃப்டி 22,675.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 92.20 புள்ளிகள் சரிந்து 22,460.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு 38 பைசா குறைந்து 87.33 ரூபாயாக உள்ளது.






