என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    • நேற்று கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

    நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனையாகிறது.

    இதன் மூலம் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,960

    10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-04-2025- ஒரு கிராம் ரூ.108

    10-04-2025- ஒரு கிராம் ரூ.107

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    • நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன.
    • சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.

    உலகளாவிய நிச்சயமின்மைக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது.

    மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் (1.54%) அதிகரிப்புடன் 75,200 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,850 புள்ளிகளில் உள்ளது.

    NSE-யில் உள்ள 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை குறியீடுகள் சுமார் 2% அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.

    டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பால் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வார தொடக்கத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.

    • 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

    நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகத்தை நோக்கி சென்றது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,745-க்கும் சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-04-2025- ஒரு கிராம் ரூ.107

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    • நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதத்தின் தொடக்கத்திலும் விலை அதிகரித்து இருந்தது. கடந்த 3-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் பதிவு செய்தது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என பேசப்பட்ட நிலையில், கடந்த 4-ந்தேதியில் இருந்து என்ன வேகத்தில் ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரியத் தொடங்கியதை பார்க்க முடிந்தது.

    இந்த விலை குறைவு ஓரளவுக்கு மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் விலை எகிறியது. நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில் காலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்திருந்தது. அதேபோல், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் நேற்றும், இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    • கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 1-ந்தேதி ரூ.68 ஆயிரம் எனும் புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், சவரன் ரூ.68 ஆயிரத்து 400-க்கும் மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

    இதன் பிறகு, தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 4-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. இது, அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து ரூ.8 ஆயிரத்து 225-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.65 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    • தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்கநாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,225-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், கிலோவுக்கு ஆயிரம்  ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-04-2025- ஒரு கிராம் ரூ.102

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
    • இந்திய பங்குச் சந்தை இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று கடும் ஆட்டம் கண்டன. அமெரிக்கா முதல் இந்திய பங்கு சந்தை வரை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜெர்மனி பங்குச் சந்தை 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை இன்று கடும் சரிவை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,364.69 புள்ளிகளில் முடிவடைந்தது.

    இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    மதியம் ஒரு மணி வரை சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இறுதியாக 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 73,403.99 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 71,425.01 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போல், இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • இன்று சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.
    • இன்று நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

    ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

    கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒன்று ஒருநாளில் மட்டும் ரூ.19 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 3200 புள்ளிகள் சரிந்து 72,133 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 1000 புள்ளிகள் சரிந்து 21, 850 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,285-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,200-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    • டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
    • செக்செக்ஸ் இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

    ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

    கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 2600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 72, 735 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்தவாரே வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 800 புள்ளிகளில் சரிந்து 22,075 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. 

    • சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
    • வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

    அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.

    டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.

    கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.

    இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987 க்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.

    ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

     இந்நிலையில் அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறினார்.

    இதற்கிடையே தனது சொந்த சமூக ஊடகமாக ட்ரூத் சோசியலில் இன்று அவர் வெளியிட்ட பதிவில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.

    இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

    மேலும் பார்ப்பதற்கு ஒரு அழகான விஷயம். தூங்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் காலத்தில் இந்த நாடுகளுடனான உபரி வளர்ந்துள்ளது. நாம் அதை மாற்றப் போகிறோம், விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்! என்று பதிவிட்டுள்ளார். 

    இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக டிரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • உலகின் முதல் 500 பணக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.
    • கடந்த 1987, அக்டோபர் 19 ஆம் தேதி உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது .

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

    அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திந்தன. எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.

     இதற்கிடையே டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது.

    இந்நிலையில் டிரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தக போரால் வாரத்தின் தொடங்க நாளான இன்று (திங்கள்கிழமை) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    கடந்த 1987, அக்டோபர் 19 ஆம் தேதி உலகளவில் வாரத்தின் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவால் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது கருப்புத் திங்கள் (Black Monday) என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் இன்று Black Monday நிகழும் என பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜிம் கார்மர் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, டொனால்ட் டிரம்ப் விதிகளின்படி செயல்படும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கவில்லை என்றால், 1987 சூழ்நிலை மிகவும் உறுதியானது. ஆனால் இந்த சரிவு நிச்சயம் பொருளாதர மந்தநிலைக்கு வழிவகுக்கும் என கூற முடியாது" என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எக்ஸ் தளத்தில் Black Monday என்ற ஹஸ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.

    ×