என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    • Sensex tumbles 930.67 points to close at 75,364.69; Nifty declines 345.65 points to 22,904.45
    • நிஃப்டி நேற்று 166.65 புள்ளிகளும், இன்று 345.65 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவு.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக நேற்றும் இன்றும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்று (புதன்கிழமை) சென்செக்ஸ் 322.08 புள்ளிகளும், நிஃப்டி 166.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,295.36 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 130 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் 76,258.12

    புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதன்பின் தொடர்ந்து சரிவை சந்தித்தது. இறுதியாக 930.67 புள்ளிகள் சரிவை சந்தித்து 75,364.69 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 23,250.10 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை ஏறக்குறைய 60 புள்ளிகளில் சரிந்து 23,190.40 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிகபட்சமாக 23,214.70 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 22,857.45 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 345.65 புள்ளிகள் சரிந்து 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • நேற்று தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் சற்று ஆறுதலை கொடுத்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,400-க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    • நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயர்ந்து வந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அந்த வகையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து சவரன் ரூ.68,480-க்கும் விற்பனையாகிறது.

    நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    பிற நாடுகளின் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்ததை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது.

    ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68% சரிவையும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.16% சரிவையும், சீனாவின் CSI 300 குறியீடு 0.48% சரிவையும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29% சரிவையும், ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17% சரிவையும் சந்தித்தது.

    • நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்தது
    • இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன.

    ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 353.654 புள்ளிகள் சரிந்து 23,165.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து 76,671.44 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி 166.65 புள்ளிகள் உயர்ந்து 23,332.35 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    சென்னை:

    தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயர்ந்து வந்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அந்த வகையில் கடந்த 28-ந் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. அதேபோல் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.520 அதிகரித்து இருந்தது. இப்படியாக விலை உயர்ந்து, நேற்றும் அதிரடி உச்சத்தை காட்டியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து425-க்கும், ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.8,510-க்கும் சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகிறது.



    தங்கம் விலையை போல, வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    • கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.
    • பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது.

    சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி சென்றால் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் கட்டாயம் ஒரு லட்சத்தை தொட்டு விட வாய்ப்புள்ளது.

    தங்கத்தின் மீதான அதிக ஆர்வம், உலகப் பொருளாதாரம், கச்சா எண்ணெய், தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவை தங்க விலை அதிகரிக்க முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.

    பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது,

    மார்ச் 1ஆம் தேதி 65,760 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று 68,080 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 3 மாதங்களில் ஒரு சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    • சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது.

    அதன்பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் விலை மளமளவென சரிந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

    மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோடு, அதைவிட அசுர வேகத்தில் விலை அதிகரித்தது.

    இதற்கிடையே தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது.

    இவ்வாறு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.

    இந்த விலை உயர்வு குறைந்தபாடில்லை. கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, 'கிடுகிடு'வென உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.

    கடந்த 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 840-க் கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

    இந்த சூழலில், கடந்த 28-ந்தேதி தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 720-க் கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, அதாவது கடந்த 29-ந்தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 360-க்கும், சவரன் ரூ.66 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையானது.

    இதனை தொடர்ந்து, தங்கம் விலை மீண்டும் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.65-ம், சவரன் ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 425-க்கும், சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையானது.

     


    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    29-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    29-03-2025- ஒரு கிராம் ரூ.113

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    • கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த மாதம் உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை இம்மாதம் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.43.50 காசுகள் குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வரை ரூ.1,965-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. 

    • இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது.
    • கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும்

     மார்ச் 31 (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை ஆகும். வார இறுதி விடுமுறையை தொடர்ந்து திங்கள்கிழமை இந்த விடுமுறை வருகிறது.

    ஆனால் இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

    அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான சேவைகள் இயங்க வாய்ப்பில்லை. 

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 20-ந் தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 310-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளே விலை குறையத் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 26-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை குறைந்த தங்கம் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80, நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720-க்கும் விற்பனையானது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    23-03-2025- ஒரு கிராம் ரூ.110

    ×