என் மலர்tooltip icon

    குஜராத்

    • உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா ஆல் ரவுண்டர்களாக முத்திரை பதித்து தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர்

    இதன்மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அதன் பிறகு உள்ளூரில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

    அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக ருசித்த 4-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். 2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை போட்டுத் தாக்கியிருந்தது. இதில் 2 முறை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது
    • நிதானமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது.

    உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.

    விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள்.

    இந்தியா 102வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

    இந்நிலையில், 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 3 ரன்களோடும் , குனமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்

    ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    • மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது.
    • இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இ னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.

    விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள். இந்தியா 102-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.

    ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன்னாக இருந்தது. அடுத்து கோலியுடன் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது. வீராட் கோலி 88 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    5-வது வீரராக களம் இறங்க வேண்டிய ஸ்ரே யாஸ் அய்யர் முதுகில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார். அவரை கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கவில்லை. இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 17,000 ரன்கள் கடந்தார்.
    • 17 ஆயிரம் ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா

    அகமதாபாத்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டியபோது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து 17,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய 6-வது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

    ரோகித் சர்மா தனது 438-வது சர்வதேச இன்னிங்சில் இதனை செய்திருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அதில் 9,782 ரன்களை ஒருநாள் போட்டிகளிலும், 3,853 ரன்களை டி20 போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 3,350 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் எடுத்துள்ளார்.

    ஏற்கனவே சச்சின், விராட் கோலி, டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் எம்.எஸ்.டோனி ஆகியோர் 17000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
    • நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. விராட் கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    4 போட்டி கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டும். எனவே நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    இப்போட்டியில் இந்தியா தோற்று, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை 2-0 என வெற்றி பெற்றால் இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஒருவேளை இந்தியா இப்போட்டியை டிரா செய்து, இலங்கை 2-0 என வெற்றி பெற தவறினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும்.

    எனவே நாளைய ஆட்டத்தில், அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கும். இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நிதானமாக ஆடிய அவர் அரை சதம் கடந்துள்ளார். நாளை அவரும், ஜடேஜாவும் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நாளை முழுவதும் பேட்டிங் செய்து, ஆஸ்திரேலியாவை விட 150 ரன்கள் முன்னிலை பெறும் முயற்சியில் இந்திய பேட்ஸ்மேன்கள் இறங்குவார்கள். கடைசி நாளில் சுழற்பந்துக்கு சாதகமாக ஆடுகளம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியும் என கணித்துள்ளனர்.

    வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சுப்மன் கில் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். கிட்டத்தட்ட 6 மணி நேரம் களத்தில் நின்ற அவர் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இரண்டாவது சதம் ஆகும். முன்னதாக புஜாரா 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

    இதேபோல் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்தார். இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவைவிட இந்தியா தற்போது 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    • ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
    • புஜாரா 46 பந்துகளில் 22 ரன்களும், தொடர்ந்து விளையாடி வரும் கில் 119 பந்துகளில் 65 ரன்களும் எடுத்துள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்கள் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினார்கள்.

    மிட்செட் ஸ்டார்க் வீசிய ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரியை அடித்தார். அதே போல் ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

    நாதன் லயன் பந்துவீச்சில் சுப்மன் கில்லுக்கு எல்.பி.டபிள்யூ அவட் கேட்கப்பட்டது. ஆனால் அவுட் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்தது. இதில் அவுட் இல்லை என்று தெளிவானது.

    ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் லபுசேனிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

    3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இந்தியா 37 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இதில் புஜாரா 46 பந்துகளில் 22 ரன்களும், தொடர்ந்து விளையாடி வரும் கில் 119 பந்துகளில் 65 ரன்களும் எடுத்து இருவரும் களத்தில் உள்ளனர்.

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது.
    • ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்கள் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினார்கள்.

    மிட்செட் ஸ்டார்க் வீசிய ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரியை அடித்தார். அதே போல் ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

    நாதன் லயன் பந்துவீச்சில் சுப்மன் கில்லுக்கு எல்.பி.டபிள்யூ அவட் கேட்கப்பட்டது. ஆனால் அவுட் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்தது. இதில் அவுட் இல்லை என்று தெளிவானது.

    ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் லபுசேனிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

    • ஆஸ்திரேலிய அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார்.

    அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், பார்டர்- கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட்டில், 2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    • கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர்.
    • கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.

    இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

    உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
    • 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    ×