என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள கருணைக்கிழங்கு (அ) சேனைக்கிழங்கு மசாலா வறுவல் சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு - 200 கிராம்
கடலைப்பருப்பு - கால் கோப்பை
கொத்தமல்லி விதை (தனியா) - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மிலி.
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.
* கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
* கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த கிழங்குகளை ஒவ்வென்றாக அடுக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான சேனைக்கிழங்கு மசாலா வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேனைக்கிழங்கு - 200 கிராம்
கடலைப்பருப்பு - கால் கோப்பை
கொத்தமல்லி விதை (தனியா) - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மிலி.
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.
* கழுவிய கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
* கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சோம்பு ஆகியவற்றை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* பின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* இந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த கிழங்குகளை ஒவ்வென்றாக அடுக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான சேனைக்கிழங்கு மசாலா வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். இன்று சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 7 விசில் விட்டு இறக்கி வைக்கவும்..
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக வைக்கவும்.
* அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
* குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
* அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 7 விசில் விட்டு இறக்கி வைக்கவும்..
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக வைக்கவும்.
* அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
* பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும்.
* குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
* இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
* அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரைப்பதற்கு :
புழுங்கல் அரிசி - 4 கப்,
முழு உளுந்து - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
வெந்தயம் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு :
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துருவிய சீஸ் - 1 கப்
கார்ன் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கு
கேரட் - 3

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கார்ன், கேரட் தூவவும்.
* கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.
* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் - சீஸ் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரைப்பதற்கு :
புழுங்கல் அரிசி - 4 கப்,
முழு உளுந்து - 1 கப்,
துவரம் பருப்பு - கால் கப்,
வெந்தயம் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
ஊத்தப்பத்துக்கு :
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துருவிய சீஸ் - 1 கப்
கார்ன் - அரை கப்
எண்ணெய் - தேவைக்கு
கேரட் - 3

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கார்னை வேக வைத்து கொள்ளவும்.
* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கார்ன், கேரட் தூவவும்.
* கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.
* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான கார்ன் - சீஸ் ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த முட்டை மசாலா இடியாப்பம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்,
முட்டை - 3,
சின்ன வெங்காயம் - 10,
நாட்டு தக்காளி - 3,
பூண்டு - 6 பல்,
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை கனமான அடையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* முட்டையை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
* தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.
* ஓரங்களில் நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும், நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
* சூப்பரான முட்டை மசாலா இடியாப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்,
முட்டை - 3,
சின்ன வெங்காயம் - 10,
நாட்டு தக்காளி - 3,
பூண்டு - 6 பல்,
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை கனமான அடையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* முட்டையை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
* தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.
* ஓரங்களில் நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும், நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
* சூப்பரான முட்டை மசாலா இடியாப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரானது நண்டு குருமா. இன்று இந்த குருமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
பூண்டு - 5 பல்

செய்முறை :
* நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு, அதனுடன் பாதி கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய், தக்காளி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் நண்டை போட்டு கொதிக்க விடவும்.
* இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.
* குருமா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் நண்டு குருமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 டம்ளர்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கரம்மசாலாத்தூள் - ½ டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
மஞ்சள்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
பூண்டு - 5 பல்

செய்முறை :
* நண்டை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு, அதனுடன் பாதி கொத்தமல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய், தக்காளி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
* இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் நண்டை போட்டு கொதிக்க விடவும்.
* இரண்டு கொதி கொதித்ததும் மிதமான தீயிலேயே வைக்க வேண்டும்.
* குருமா திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் நண்டு குருமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது வெஜிடபிள் கோப்தா கிரேவி. இன்று இந்த வெஜிடபிள் கோப்தா கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
பச்சைப்பட்டாணி - அரை கப்
கேரட் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
சோள மாவு : 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 2
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவி தயாரிக்க
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 5
இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
* பிரட்டை உதிர்த்து வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அதைத் தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுத்து இத்துடன் உதிர்த்த பிரெட், சோளமாவு சேர்த்து மசித்தாற்போல் கிளறி இறக்கி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
கிரேவி தயாரிக்க:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
* ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
* பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள்.
* அருமையான சுவையுடன் வெஜிடபிள் கோப்தா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 2
பச்சைப்பட்டாணி - அரை கப்
கேரட் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
சோள மாவு : 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 2
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவி தயாரிக்க
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 5
இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
* உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
* பிரட்டை உதிர்த்து வைக்கவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அதைத் தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
* அடுத்து இத்துடன் உதிர்த்த பிரெட், சோளமாவு சேர்த்து மசித்தாற்போல் கிளறி இறக்கி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
கிரேவி தயாரிக்க:
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
* ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
* பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள்.
* அருமையான சுவையுடன் வெஜிடபிள் கோப்தா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கேழ்வரகு தட்டுவடை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - அரை கிலோ,
வறுத்த உளுந்து - 50 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.
* இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
* மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.
* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு - அரை கிலோ,
வறுத்த உளுந்து - 50 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.
* இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
* மாவை சிறிது எடுத்து சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்துள்ள தட்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகுத் தட்டுவடை ரெடி.
* இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரியாணியில் பல வகைகள் உண்டு. இன்று ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* மட்டனை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும்.
* மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
* அடுத்து முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
* மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் அதை எடுத்து குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
* மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.
* சூப்பரான மொகல் மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
* மட்டனை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும்.
* மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
* அடுத்து முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
* மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் அதை எடுத்து குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
* மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.
* சூப்பரான மொகல் மட்டன் பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ (தோல் நீக்கியது)
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 3 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இழை - 10 தண்டுகள்
வெங்காயத்தாள் - 1 தண்டு (optional)
எண்ணெய் - 3 டே.ஸ்பூன்
அரைக்க :
இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 10 பெரிய பல்
வரமிளகாய் - உங்கள் சுவைக்கு ஏற்ப
கிராம்பு/லவங்கம் - 10
பட்டை - 2 இஞ்ச்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
* முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும்.
* இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறவும்.
* அடுத்து அதில் நறுக்கின தக்காளி, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும்.
* இந்த ஸ்டேஜ்ல சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கனில் இருந்து தண்ணீர் விடும். அதுவே போதுமானது.
* சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க.
* சூப்பரான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி.
* இது ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் - 1 கிலோ (தோல் நீக்கியது)
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 3 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இழை - 10 தண்டுகள்
வெங்காயத்தாள் - 1 தண்டு (optional)
எண்ணெய் - 3 டே.ஸ்பூன்
அரைக்க :
இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 10 பெரிய பல்
வரமிளகாய் - உங்கள் சுவைக்கு ஏற்ப
கிராம்பு/லவங்கம் - 10
பட்டை - 2 இஞ்ச்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
* முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும்.
* இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறவும்.
* அடுத்து அதில் நறுக்கின தக்காளி, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும்.
* இந்த ஸ்டேஜ்ல சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கனில் இருந்து தண்ணீர் விடும். அதுவே போதுமானது.
* சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க.
* சூப்பரான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி.
* இது ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் செய்யக்கூடிய சுருள் போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - ஒரு கப்,
கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை (பொடித்தது) - முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் - கால் கப்,
துருவிய கலர் கொப்பரை - 2 டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கிலோ,
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :
* கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரித்து வைக்கவும்.
* மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* பிசைத்து வைத்த மாவை மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் தோய்த்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதன் நடுவில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவி பரிமாறவும்.
* சூப்பரான சுருள் போளி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா - ஒரு கப்,
கடலை மாவு - ஒரு கப்,
சர்க்கரை (பொடித்தது) - முக்கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் - கால் கப்,
துருவிய கலர் கொப்பரை - 2 டீஸ்பூன்,
நெய் - 3 டீஸ்பூன்,
எண்ணெய் - கால் கிலோ,
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :
* கடலை மாவை நெய்யில் சிவக்க வறுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பூரணம் தயாரித்து வைக்கவும்.
* மைதாவை உப்பு, தேவையான நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* பிசைத்து வைத்த மாவை மெல்லிய, சற்றே பெரிய பூரி போல் தோய்த்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிறுதீயில் வைத்து, பூரிபோல் இட்டு வைத்ததை போட்டு பாதி வேகவிட்டு (மொறுமொறு என்று ஆகிவிடாமல்) எடுத்து, சூட்டோடு இருக்கும்போதே அதன் நடுவில் பூரணம் தூவி, உடனே பாய் போல் சுருட்டி, மேலே கலர் கொப்பரை தூவி பரிமாறவும்.
* சூப்பரான சுருள் போளி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மாலையில் சூடாக சாப்பிட ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 500 கிராம்
கடலை மாவு - 1 கப்
கெட்டியான தயிர் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சோடா பானம் - 1/2 பாட்டில்
ஆரஞ்சு கலர் பொடி - தேவைக்கேற்ப
லெமன் - 2
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :
* ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி, கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும். பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.
* அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.
* இப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
* சிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும். பிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
* மீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
* இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.
* சுவையான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துண்டு மீன் - 500 கிராம்
கடலை மாவு - 1 கப்
கெட்டியான தயிர் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சோடா பானம் - 1/2 பாட்டில்
ஆரஞ்சு கலர் பொடி - தேவைக்கேற்ப
லெமன் - 2
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஓமம் விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :
* ஒரு பெரிய பெளலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி, கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* நன்றாக கலந்த இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில் பேட்டர் தயாரிக்க வேண்டும். பேட்டர் தயாரிக்கும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். சோடா பானம் தான் மீனின் மொறு மொறுப்பு தன்மைக்கு காரணம். இதற்கு பதில் நீங்கள் தண்ணீர் அல்லது பீர் கூட பயன்படுத்தலாம்.
* அப்புறம் மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை பேட்டரில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.
* இப்பொழுது பெளலில் ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி விட வேண்டும். இந்த கலவை நன்றாக கலக்கும் வரை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
* சிறிது நேரம் கழித்து பிரிட்ஜிலிருந்து எடுத்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இதை ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் எண்ணெய் அவ்வப்போது தெறிக்கும். பிறகு தீயை குறைத்து மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.
* மீன்கள் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
* இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும்.
* சுவையான ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் - 12 துண்டுகள்,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1½ டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கிராம்பு - 2,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 2,
முந்திரி - 20 கிராம்,
தக்காளி - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன், பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தந்தூரி மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போடடு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், முந்திரி, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அதில் மீதியுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து, காய்ந்த வெந்தய இலையை சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீன் - 12 துண்டுகள்,
இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1½ டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1,
கிராம்பு - 2,
பட்டை - 1 துண்டு,
ஏலக்காய் - 2,
முந்திரி - 20 கிராம்,
தக்காளி - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.

செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன், பாதியளவு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தந்தூரி மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போடடு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், முந்திரி, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயம், தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அதில் மீதியுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும், பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து, காய்ந்த வெந்தய இலையை சேர்த்து கொதிக்க விடவும்.
* தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான சைடிஷ் ஃபிஷ் டிக்கா மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






