என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவ் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    தனியாப் பொடி - 2 டீஸ்பூன்
    கரம் மசாலாபொடி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 2 டீஸ்பூன்
    தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப
    உப்பு- தேவைகேற்ப
    கேரட் - 100 கிராம்
    குடைமிளகாய் -  சிறியது 1
    வெங்காயம் - 2
    பீன்ஸ் - 100 கிராம்
    உரித்த பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 3
    காலிபிளவர் - பாதி
    கொத்தமல்லி - சிறிதளவு.

    அரிசியுடன் தாளிக்க :

    ஏலக்காய் - 6
    பட்டை - 4
    கிராம்பு- 6
    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    * கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    * பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும்.

    * கு‌க்க‌ரி‌ல் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

    * வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும்.

    * .வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.

    * கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.

    * ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும்.

    * நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    * சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    கத்திரிக்காய் - 1
    புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    வறுத்து அரைப்பதற்கு…

    மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 5
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    * வெண்டைக்காய், கத்தரிக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாதும் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.

    * சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    வான்கோழி - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    மசாலாவிற்கு...

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

    * பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, மல்லித் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் என அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.

    * மசாலா வாசனை போனவுடன் அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக  இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 6
    கடுகு - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    உளுந்து - 1/4 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 1 குழிக்கரண்டி
    புளி கரைசல் - 1/2 கப்



    செய்முறை :

    * கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிரட்டி தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும்.

    * மசாலா தூள்கள் வாசம் போக கொதித்து, கத்திரிக்காய் வெந்ததும், புளி கரைசல் சேர்த்து கிளறி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.

    * இதில் தூள் வகைகள் சேர்க்கும் போது கொஞ்சம் தயிர் (2 டீஸ்பூன்) சேர்த்தால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.

    * கத்தரிக்காய் கார குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்
    வெங்காயம் - 1
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகு  - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்றவாறு



    செய்முறை :

    * மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.

    * அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.

    * அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.

    * அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

    * சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பிட சூப்பரான ஸ்நாக்ஸ் சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோயா - 1/2 கப்,
    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடை மிளகாய் - 1,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.



    செய்முறை :

    * சோயாவை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    * கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுத்து ஊறவைத்த சோயாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் காய்கறிகளை போட்டு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் பொடித்த சோயா சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்து வைத்த சோயா மாவை வடை போல் தட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

    * சோயா - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    * இதனை தக்காளி சாஸு டன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
    நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    உடைத்த மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
    தேங்காய் பால் - 1 கப்,
    தேங்காய் பால் - 1 கப்,
    கோகம் புளி - 2 சின்ன துண்டுகள்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    கறிவேப்பிலை - 1 கொத்து.



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு நன்கு வதக்கி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    * பின்பு தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும், இறால், கோகம் புளி போட்டு வேகவிடவும்.

    * தேங்காய் பால் நன்கு வற்றியதும், உடைத்த மிளகு, சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

    * கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, பிரியாணி, புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான ஃபிஷ் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெய் மீன் - 1/2 கிலோ,
    சின்ன வெங்காயம் - 20,
    பூண்டு - 5 பல்,
    பச்சைமிளகாய் - 3,
    மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    முதல் தேங்காய்ப்பால் - 1 கப்,
    கோகம் புளி - 2 துண்டுகள்,
    உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு.



    செய்முறை :

    * மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * மிக்சியில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மிளகு, தனியாத்தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன், அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிரட்டவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கோகம் புளியை போட்டு அடுப்பில் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

    * கிரேவி திக்காக வரும்வரை கொதிக்கவிட்டு, தேங்காய்ப்பால், கறிவேப்பிலையும் சேர்த்து சிம்மில் வேக விடவும்.

    * நன்கு கொதித்து மீன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

    * சூப்பரான சைடிஷ் ஃபிஷ் பெப்பர் மசாலா ரெடி.

    * எந்த மீனிலும் இந்த மசாலாவை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் - முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய்
    சோம்பு
    வெங்காயம்  -  2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    தக்காளி - 1
    மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
    முட்டை - 2
    கொத்தமல்லி - சிறிதளவு

    சிக்கனை வேக வைக்க :

    சிக்கன் - அரை கிலோ
    உப்பு - சுவைக்கேற்ப
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    * தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

    * சிக்கன் நன்றாக வெந்ததும் தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து ஆறவைத்து உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் சிக்கன் பொடிமாஸை சேர்த்து டிரையாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    * இப்போது அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்.

    * சிக்கன் உதிரியாக பொடிமாஸ் போல் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், பிரியாணிக்கு குடை மிளகாயில் பன்னீரை ஸ்டஃப்டு செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று பன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 6
    ஸ்வீட்கார்ன் - 1 கப்,
    உருளைக்கிழங்கு - 3
    வெங்காயம் - 2,
    பன்னீர் - அரை கப்,
    மாங்காய் - சிறியது 1
    மஞ்சள்தூள், இஞ்சி விழுது, மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
    சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 தேக்கரண்டி
    கார்ன்ஃப்ளார் - 2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு



    செய்முறை :

    * ஸ்வீட்கார்னை வேக வைத்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * கொத்தமல்லி, வெங்காயம், மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நற்காக வதங்கியதும் இதில் வேகவைத்த ஸ்வீட்கார்ன், மாங்காய், மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    * இதை அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி கலந்து வைக்கவும்.

    * குடைமிளகாயின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விடவும். உள்ளிருக்கும் விதைகளை சுரண்டி எடுத்து விட்டு, ஒவ்வொரு மிளகாயிலும் தயாரித்து வைத்திருக்கும் கலவையை நிரப்பவும்.

    * கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையாக்கி மிளகாய்களின் மேல் பகுதியை மூடவும்.

    * தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு ஸ்டஃப்டு குடைமிளகாய்களைப் பரவலாக வைத்து மூடி, 15 நிமிடம் வேக விடவும்.

    * ஆறியதும் இரண்டாக வெட்டி சாஸ் அல்லது மல்லி சட்னியை மேலே ஊற்றி சாப்பிடவும்.

    * சூப்பரான ஸ்டஃப்டு குடைமிளகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த தக்காளி - சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழுத்த தக்காளி - அரை கிலோ,
    சின்ன வெங்காயம் - 150 கிராம்,
    மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு - 8 பல்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    கடுகு - அரை டீஸ்பூன்,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - கால் கப்.



    செய்முறை :

    * தக்காளியை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்த பின் பூண்டு சேர்த்து நன்றாகப் பொரிந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காய விழுதை மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

    * அடுத்து அதில் தக்காளி சாறை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், கறிவேப்பிலை சேர்த்து தொக்கு நன்றாக சுருங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான தக்காளி - சின்ன வெங்காய தொக்கு ரெடி.

    * சப்பாத்திக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடாக சாப்பிட பட்டாணி மசாலா வடை சூப்பராக இருக்கும். இதை செய்வதும் மிகவும் சுலபம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த பட்டாணிப் பருப்பு - 1 கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    சோம்பு - அரை டேபிள்ஸ்பூன்
    கோஸ் - அரை கப்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி - 1 துண்டு
    மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு



    செய்முறை :

    * இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பட்டாணி மற்றும் கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சோம்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, மீதியுள்ள சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    * அடி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மிதமான தீயில் வைத்து வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான பட்டாணி - கோஸ் மசாலா வடை ரெடி.

    * சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×