என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சாதம், பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை கீமா. இன்று இந்த கீமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    பெரிய வெங்காயம் - 1



    செய்முறை  :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

    தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

    பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

    பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை போனதும் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

    சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 1
    இறால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கடுகு - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

    5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

    எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருள்கள் :

    ரவை - 250 கிராம்
    சர்க்கரை - 1 கப்
    தேங்காய் - அரை மூடி ,
    உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.

    வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

    இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.

    பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - கால் கிலோ
    கோதுமைக் குருணை - 2 கப்
    நெய் - இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    பட்டை - ஒன்று
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    பிரிஞ்சி இலை - ஒன்று
    சின்னவெங்காயம் - அரை கைப்பிடி
    பெரியவெங்காயம் - ஒன்று
    இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்
    பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    பச்சைமிளகாய் - 4 (கீறியது)
    தக்காளி - 2
    புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    தேங்காய்ப்பால் - 4 கப்
    முந்திரிப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

    சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

    இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

    கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

    கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
    எண்ணெய் - தேவையான அளவு 



    செய்முறை :

    மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

    இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

    பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).  

    இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

    பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

    இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  

    சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. பட்டாணியில் செய்யும் ரகடாவை பட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்புமாக அருமையாக இருக்கும்.
    பேட்டீஸ்:

    தேவையான பொருட்கள் :

    உருளை கிழங்கு - கால் கிலோ
    பிரட்  - 3 ஸ்லைஸ்
    பூண்டு - சிறிதளவு
    சோள மாவு - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள்  - அரை ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

    ரகடா :

    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - ஒரு கப்
    வெங்காயம்   - ஒன்று (பெரியது)
    கரம்மசாலா தூள்  - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ்   - தேவையான அளவு
    லெமன் ஜூஸ்  - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு
    சர்க்கரை - அரை ஸ்பூன்
    இஞ்சி  - சிறு துண்டு
    பூண்டு - 4 பல்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

    அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

    பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    தேங்காய் துருவல் - அரை கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    நெய் - 50 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
    பால் - சிறிதளவு



    செய்முறை:  

    ரவையை நெய்யில் சிவக்க வறுத்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.

    ரவையுடன், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்கும் போது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

    இப்போது இந்த பாகை ரவை கலவையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

    சூப்பரான ரவை தேங்காய் லட்டு ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறில் சுண்டல், தோசை, பெசரட் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பச்சைப்பயறை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,
    பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :  

    பச்சைப் பயறை 3 மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சரிசியை தனியே அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பச்சைப் பயறுடன், அரிசியை சேர்த்து அரைக்கவும்.

    கடைசியாக அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எண்ணெய் சேர்க்காத ஸ்டீம்டு சங்கரா மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை வராது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சங்கரா மீன் - 250 கிராம்,
    பெரிய வெங்காயம் - 50 கிராம்,  
    சிகப்பு மிளகாய் - 10 கிராம்,
    இஞ்சி - 20 கிராம்,
    பூண்டு - 5 கிராம்,
    கொத்தமல்லித் தழை - 15 கிராம்,
    சோயா சாஸ் - 5 மி.லி,
    உப்பு - ஒரு கிராம்,  
    வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,  
    தண்ணீர் - 50 மி. லி.



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சங்கரா மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    சங்கரா மீனின் மேல் உள்ள தோலை அகற்றி விட்டு சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலந்த கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும்.

    நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும்.

    இந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது) ரெடி.

    குறிப்பு : எந்த மீனில் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
    நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
    பெரிய வெங்காயம்100 கிராம்,
    பூண்டு - 1,
    புளி எலுமிச்சை அளவு,
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 100 மி.லி,
    வெந்தயம் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
    தனியா தூள் - 1 டீஸ்பூன்,
    தேங்காய் - பாதி



    செய்முறை :

    தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

    அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

    அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

    பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×