என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ராஜ்மா, பன்னீர் கறியை சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா  - ஒன்றரை கப், 
    பன்னீர் - 150 கிராம்,
    வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
    தக்காளி - 2,
    இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
    மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
    மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
    மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
    சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.

    சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.

    இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பொடிமாஸ். இன்று இந்த பொடிமாஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 3
    பூண்டு - 2 பல்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை

    பன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.

    பிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உப்பு உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த உப்பு உருண்டையில் காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்,
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 3,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், பீன்சை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு. கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக பிடித்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான சத்தான வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
    மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
    வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
    பூண்டு - 1
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 மேஜைக்கரண்டி
    கறிவேப்பில்லை - சிறிது
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை  :

    இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.   

    பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    சுவையான மீன் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பத்தில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - மூன்று டம்ளர்
    தேங்காய் துருவல் - 2  கப்
    உளுந்து - 3 தேக்கரண்டி
    வெந்தயம் - 1 தேக்கரண்டி
    சமையல் சோடா - 3 சிட்டிகை
    உப்பு  சிறிதளவு

    முட்டை மசாலாவிற்கு :

    முட்டை - மூன்று
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி
    நெய் - இரண்டு மேசைக்கரண்டி



    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலந்து வைக்கவும்.

    அரிசியுடன், உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்கு கழுவி விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து புளிக்க விடவும். ஆப்பத்திற்கு புளித்தால்தான் மென்மையாகவும், சாப்பிட நன்றாகவும் இருக்கும்.

    ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்து விட்டு, ஆப்பக்கடாயில் சிறிது எண்ணெய்த் தடவி, ஒரு வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேய்த்துவிட்டு மாவைச் சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும்.

    பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை ஒரு குழி கரண்டி எடுத்து மாவின் நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி, சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வேக வைத்து சுட்டெடுக்கவும்.

    சுவையான மிளகு சேர்த்த முட்டை ஆப்பம் ரெடி.

    இதற்கு காரச் சட்னி, சன்னா மசாலா வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பேபிகார்ன் வைத்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசு - 1 கப்
    பேபி கார்ன்  - 6
    குடை மிளகாய் - 1 (சிறியது)
    வெங்காயம் - 1
    கேரட் - 1 (சிறியது)
    பூண்டு - 5 பல்
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - ¼ ஸ்பூன்
    சர்க்கரை - ¼ ஸ்பூன்
    மிளகாய் தூள் - ¼ ஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    பூண்டை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    பேபிகார்னை பக்கவாட்டில் நீளத் துண்டுகளாக நறுக்கி 3 நிமிடம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் வடிகட்டி நன்கு துடைத்து வைத்துக் கொள்ளவும்.

    சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், உப்பு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் இதில் பேபிகார்னை புரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி ¼ கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உப்பு சேர்த்து பாசுமதி அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பின் இதை அகலமான தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய குடைமிளகாய், கேரட், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

    ஓரளவு வதங்கியபின் ¼ ஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு, பொன்னிறமாக பொரித்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் மிளகு தூள், ஆறவைத்த சாதம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

    சுவையான பேபிகார்ன் பிரைடு ரைஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை வைத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    புளி - ஒரு எலுமிச்சை அளவு
    தக்காளி - ஒன்று

    அரைக்க

    இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    முழு தனியா - ஒரு மேசை கரண்டி
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு
    கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு

    தாளிக்க

    நெய் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
    பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு



    செய்முறை

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.

    தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

    சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி!
     
    குறிப்பு

    1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.

    2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.

    3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பொட்டுக்கடலையில் இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - ஒரு கப்,
    பாகு வெல்லம் - முக்கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - சிறிதளவு.



    செய்முறை :  

    வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.

    பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

    சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - கால் கிலோ,
    காய்ந்த மிளகாய் - பத்து,
    புளி - எலுமிச்சை அளவு,
    உப்பு - தேவையான அளவு,
    நல்லெண்ணெய் - 100 மில்லி,
    பெருங்காயம் - தேவையான அளவு,
    வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
    கடுகு - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

    மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

    ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும்.

    ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

    சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி.

    குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஹனி சில்லி பொட்டேடோ. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 250 கிராம்,
    உப்பு - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் - 2 கப்,
    அரிசி மாவு - 5½ டீஸ்பூன்,
    மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
    வெள்ளை எள் - 3½ டீஸ்பூன்,
    நறுக்கிய பூண்டு - 3 பல்,
    பச்சைமிளகாய் - 3,
    வெங்காயம் - 1/2,
    குடைமிளகாய் - 1/4,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    டொமேட்டோ கெட்சப், தேன் - தலா 2 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர்,
    ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

    ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

    இந்த உருளைக்கிழங்குடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர்  ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    இந்த மாவில் உருளைக்கிழங்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, சோயாசாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், டொமேட்டோ கெட்சப், தண்ணீர்  ஊற்றி கொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், வறுத்த உருளைக்கிழங்கு, தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    சூப்பரான ஹனி சில்லி பொட்டேடோ ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,   
    கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    ஸ்மைலி செய்ய...

    ஸ்பூன் - 1,
    ஸ்ட்ரா - 1,
    ரவுண்ட் கட்டர்- 1.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பிசைந்த மாவில் பெரிய உருண்டையாக எடுத்து அதை நன்றாக உருட்டி கொள்ளவும்.

    பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தேய்த்து நடுவில் மாவை வைத்து மூடி சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போல தடியாக தேய்க்க வேண்டும்.

    பின்னர் ரவுண்ட் கட்டர் கொண்டு வெட்டி ஸ்ட்ரா கொண்டு கண்கள் போல் இரண்டு ஓட்டை போட வேண்டும்.

    அடுத்து வாய்க்கு ஸ்பூனால் வரைய வேண்டும்.

    இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை போட்டு பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

    சூப்பரான பொட்டேடோ ஸ்மைலி ரெடி.

    குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும் இந்த தேங்காய் சம்பல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய தேங்காய் - ஒரு கப்
    சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.
    வரமிளகாய் - நான்கு
    உப்பு  - தேவையான அளவு.
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
    கடுகு உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு கொத்து.



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதோடு துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும்

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும்.

    சூப்பரான தேங்காய் சம்பல் ரெடி.

    குறிப்பு: இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×