என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "paneer masala"
- பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா?
- இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் பனீரை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் பனீரை அடிக்கடி சமைப்பீர்களா? எப்போதும் நீங்கள் பனீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா? பனீரை ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டதா? இன்று உங்கள் வீட்டில் பனீர் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இந்த முறை பனீரைக் கொண்டு குருமா செய்யுங்கள். இந்த பனீர் குருமா சப்பாத்தி, பூரி,
நாண் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பனீர் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1 அங்குல அளவு
பச்சை மிளகாய் - 4
பாதாம் -12
முந்திரி - 12
கசகசா - 2 டீஸ்பூன்
சோம்பு- 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு -2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை -1
அன்னாசி பூ - 2
தயிர் - கால் கப்
பால் -1 கப்
பிரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
கொத்த மல்லித்தழை (பொடிதாக)
நறுக்கியது) -2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும். பாலை காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாதாமை சூடான நீரில் போட்டு 4 மணி நேரம் ஊறவைத்து மேல் தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். முந்திரி மற்றும் கசகசாவை வெந்நீரில் போட்டு கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, கசகசா மூன்றையும் மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பனீரை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து ஆறவைக்கவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை. அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் வெங்காய விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பாதாம் மற்றும்
முந்திரி விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கியவுடன் அதில் தயிர் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் பாலை ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் பனீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியாக அந்த கலவையில் பிரஷ் கிரீம் சேர்த்து கலக்க வேண்டும். கசூரி மேத்தி மற்றும் கொத்த மல்லி தழையை அதன் மேலே தூவி இறக்கினால் சுவையான நவாபி பனீர் தயார்.
ராஜ்மா - ஒன்றரை கப்,
பன்னீர் - 150 கிராம்,
வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவில்),
தக்காளி - 2,
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்,
மஞ்சள் போடி - அரை டீஸ்பூன்,
மிளகாய்ப் பொடி - அரை டீஸ்பூன்,
மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்,
சீரகப்பொடி - அரை டீஸ்பூன்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பன்னீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.
சூப்பரான ராஜ்மா பன்னீர் கறி ரெடி.
இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்