என் மலர்tooltip icon

    சமையல்

    • சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன.
    • இன்று சாக்லேட் சாண்ட்விச் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 4 துண்டுகள்

    டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

    * பின் பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரெட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

    * இதேப் போன்று மற்ற இரண்டு பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * சூட்டில் சாக்லேட் உருகி பிரெட்டில் பரவியதும் எடுத்து விடவும்.

    * இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்ய வேண்டும்.

    * இப்போது டேஸ்டியான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

    • உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
    • பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1 கப்

    தேங்காய் - 2 துண்டு

    புளி - நெல்லிக்காய் அளவு

    பூண்டு - 2 பல்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    வரமிளகாய் - 6

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    வர மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 1 கொத்து

    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

    பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!

    • குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை பூ நல்ல பலனளிக்கும்.
    • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    நெல்லி அளவு - புளி

    பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    பூண்டு - 5 பல்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் வற்றல் - 2

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

    உப்பு , எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).

    இப்போது சத்தான முருங்கை பூ ரசம் ரெடி.

    • தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.
    • அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    தினைமாவு - ஒரு கப்

    நெய் - 1/2 கப்

    நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப்

    நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்

    செய்முறை :

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து இலேசாக வறுத்து எடுக்கவும்.

    பின்பு தினைமாவை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

    அதனுடன் நாட்டுச் சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்து கைகளால் உதிர்த்து இலேசாக பிசிறவும்.

    பிறகு சூடான நெய் விட்டு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

    இப்போது சுவையான தினை நட்ஸ் லட்டு ரெடி.

    • குஜராத்தில் இந்த இனிப்பு மிகவும் பிரபலம்.
    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டி தயிர் - 250 ml

    சர்க்கரை - 1/4 கப்

    பாதாம் மற்றும் முந்திரி தலா - 10

    உப்பு சேர்க்காத பிஸ்தா - 6-8 நம்பர்ஸ்

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் பூ - 2 இழைகள்.

    செய்முறை:

    இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, தயிரை ஒரு மெல்லிய துணி கொண்டு மூட்டை கட்டி வடிகட்டவும்.

    பாதாம், முந்திரி, ஏலக்காய், பிஸ்தா மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாக(வாயில் தட்டு படும் அளவிற்கு) பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிருடன் சர்க்கரையை நன்றாக கலந்து கொள்ளும்வரை ஒரு கரண்டியால் அடித்துக் கொள்ளவும்.

    பின்னர் பொடி செய்து வைத்துள்ள முந்திரி பாதாம் பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும்போது ஜில்லென்று பரிமாறவும்.

    குறிப்புகள் :

    ஜாதிக்காய் பூ இல்லை எனில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்க்கலாம்.

    • விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 250 கிராம்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 300 மில்லி

    சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி

    கேரட் - 1

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

    நெய் - ஒரு குழி கரண்டி

    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - அரை டீஸ்பூன்

    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    முந்திரிப் பருப்பு - 15

    பெருங்காயம் - சிட்டிகை

    மஞ்சள் பொடி - சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.

    இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.

    • இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • சிக்கன் சிந்தாமணி செய்முறையை பார்க்கலாம்..

    கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.

    இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். எப்போதுமே சிக்கனை வைத்து வறுவல், தொக்கு, பிரட்டல் என ஒரே மாதிரியான ரெசிபிக்களை சமைத்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் சன்டே சமையலில் சிக்கன் சிந்தாமணியை சமைத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - 1 கிலோ

    கடலை எண்ணெய் - 50 மிலி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    சிவப்பு மிளகாய் - 150 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 5

    தக்காளி - 1

    பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 கைபிடி அளவு

    சீரகம் - 1 ஸ்பூன்

    நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை

    சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி இடித்துகொள்ளவும்.

    சீரகத்தை இடித்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும். 

    அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். 

    பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். 

    இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும். 

    மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும்.

    இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும். 

    அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம்.

    சுவையான கொங்குநாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்.

    • பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
    • ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
    • பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கட்டு

    வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்துமல்லித்தழை - சிறிது

    உப்பு - சுவைக்கு

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து கொள்ளவும்.

    மசித்த கீரையுடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    பின் அதில் புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
    • ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1/2 கப்

    பாசி பருப்பு - 1/2 கப்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பச்சை பட்டாணி - 1/4 கப்

    பெருங்காய தூள் - சிறிதளவு

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    நெய் - 2 தேக்கரண்டி

    பட்டை - 1துண்டு

    சீரகம் - 1 தேக்கரண்டி

    தண்ணீர் - 3 கப்

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும்

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கிச்சடி ரெடி.

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும். 

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துகள் அடங்கியுள்ளன.
    • சிறுதானியங்கள் நூடுல்ஸ் வடிவிலும் கிடைக்கின்றன.

    தேவையான பொருட்கள்

    ராகி நூடுல்ஸ் - 1 கப்

    பெரிய வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கேரட் - 1/2 கப்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    குடை மிளகாய்- 1

    பூண்டு- 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மிளகுத்தூள்- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ராகி நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்

    பின், தண்ணீரை வடிகட்டி சிறிது எண்ணெய் சேர்த்து உதிர்த்து வைக்கவும். எண்ணெய் சேர்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    மற்றொரு வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிய பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், குடை மிளகாய், முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதில் வேகவைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்

    மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் அதில் இன்னும் சிறிதளவு வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான சுவையான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 2 கப்

    சாதம் - அரை கப்

    சோடா மாவு - அரை டீஸ்பூன்

    துருவிய தேங்காய் - 1 1/2 கப்

    நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.

    மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மாவு மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும்.

    ஆட்ட கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார்.

    இதற்கும் தேங்காய்பால், முட்டை குருமா சூப்பராக இருக்கும்.

    ×