என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. பெற்றோர் மேற்கண்ட ஏதும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.

    பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.

    உங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

    ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.

    உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை! குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமையோடு சுய கட்டுப்பாடும்உறுதியான நிலைப்பாடும்தான் தேவை.

    சண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள்.

    பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப் படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இந்த நிலையில் சற்றே வளர்ந்த விவரம் தெரிந்த இளம் பெண் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படுவதும் இயற்கை.

    பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

    ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை குழந்தைகள் முன்னிலையில் காட்டாமல் இருப்பது நலம். உங்கள் வாதங்கள் எழத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே அவற்றைத் தீர்க்க முயன்று, அவை பெரும் சிக்கல்களாக மாறுவதைத் தடுக்க முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். பெற்றோர் வாதிடுவதைப் பார்க்கும் நிமிடத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது முற்றிலும் அமைதியாகிவிடுகிறது.

    பெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சமாக உணர்கிறது. பல குழந்தைகள் அசாதாரண நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டுகின்றன. தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

    குழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை விரும்பலாம். பெற்றோரின் கவனத்தை சண்டையிலிருந்து திசைதிருப்ப தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் செய்யலாம்.

    சூடான விவாதங்களின்போது ஒரு நபரைப் பற்றி தவறாகப் பேசுவதையோ, மோசமான மொழியைப் பயன்படுத்தி தரக்குறைவாக நடந்துகொள்வதையும் தவிர்த்துஅமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் உங்கள் பிரச்சனைகளைப் பேசுங்கள்.

    ஆக்கபூர்வமான மோதல்களால் குழந்தைகள் பாதிப்படைவதில்லை,மாறாக பயனடைகிறார்கள். நேர்மறையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய மிதமான மோதல்கள் மூலம் குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

    பெற்றோர் அடிக்கடி சண்டையிடும்போது, ??குழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால் அது அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    இதற்கு முன்பும் இந்த கொரோனா பேரிடர் போன்றுஉள்நாட்டுப்போர், நோய்த்தொற்று, பஞ்சம் என பல்வேறு கடினமான சூழல்களையும் நாம் கடந்து மீண்டும் வலுவடைந்து வந்திருக்கிறோம்.

    இதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை அறிவோம். பொதுவாக இளைஞர்கள் தங்களால் இயன்றததையும், தங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடியதையும் எண்ணியே செயலாற்றுவார்கள். அதற்கு முதலில் பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கியத்தேவை. ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒரு பெற்றோரின் முக்கிய கடமை. மனிதரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மனிதப் பண்புகள் சீர்குலைவதன் மூலம் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 
    பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும்.
    துரத்திவரும் வெளி உலக துன்பங்களிலிருந்து ஒருவருக்கு அடைக்கலம் கொடுப்பது அவரவர் வீடு மட்டுமே. வீடு என்பது வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல. குறிப்பாக குழந்தைகளுக்கு வீடு என்பது பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரின் அன்பு, அரவணைப்பு, நேசம், பாசம் என அனைத்தோடும் அடைக்கலமாக்கும் ஆனந்தமாக உணரும் இடம். ஆனால் அப்படிப்பட்ட வீடே பாதுகாப்பற்றதாக மாறும்போது வேறு போக்கிடம் இல்லை என்றகையறு நிலையே தோன்றுவது இயல்பு.

    அதுவும் பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.

    கொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.

    பெற்றோர்கள் சண்டையிடும்போது குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிப்படைகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. பெரும்பாலும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகிறார்கள். சிக்கலான அந்த நேரத்தில் தாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் குழப்பமடைகிறார்கள்.

    சின்ன குழந்தைகளோ, சற்று வளர்ந்த பதின்மப்பருவத்தினரோ பெற்றோர்கள் சண்டையிடுவதைக் கண்டு செய்வதறியாது அழ ஆரம்பிக்கிறார்கள். பெற்றோரின் அனல் தெறிக்கும் சூடான விவாதங்களைக் காணும்போதும் இருவரில் யாருக்காவது ஏதும் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதோடு தங்களை பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள்.

    பெற்றோரின் இந்த நடத்தைகளை குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டு நேரத்திலோ, பள்ளியிலோ அல்லது உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போதோ அப்படியே பிரதிபலிக்கிறார்கள். இதனால் அவர்கள் அடுத்தவரை கொடுமைப்படுத்துபவர்களாக மாறுவதற்கும் வாய்ப்பாகிவிடுகிறது. சக தோழர்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதன் மூலம் தாம் ஆறுதலடைய முயல்கிறார்கள். சில குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள் அல்லது செல்லப் பிராணிகள் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள்.

    சற்று வளர்ந்த சில குழந்தைகள் வீட்டை விட்டு ஓடவும் நினைக்கிறார்கள். சிலர் வீட்டிற்குச் செல்ல அஞ்சி நீண்ட நேரம் பள்ளியில் தங்கி நேரத்தைக் கடத்த முயல்கிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் முதியோருக்கும் இதே சிக்கலான நிலைதான் என்பதையும் நினைவில் கொள்க!

    அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைவதைப்போன்று, வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தோடு, இருதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல் போன்ற பல எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், அரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. இரக்கமற்ற பெற்றோரின் தேவையற்ற விவாதங்களால் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிவதில்லை. குழந்தைகள் தங்கள் ஆழ்மனதில் பெற்றோருடன் ஒன்றிணைந்து வாழும் நிலையில்அவர்களின் நடத்தையும் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையும் குடும்பத்தினுள் ஏற்படும் மோதல்களால் பெரிதும் பாதிக்கப்படலாம்.

    பெரும்பாலும் குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதியை இது போன்ற அனுபவங்களே உருவாக்குவதால் அவர்களின் சமூக தொடர்புகளுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. தவறான சூழலில் வளரும் குழந்தைகளின் நடத்தை பெரும்பாலும் சிக்கலாகிவிடுகின்றன. அதிகமாகப் பொய் பேசுவது, திருடுவது, பொறுப்பில்லாமல் தங்களின் பொம்மைகள், போன்ற உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவது, தவறான மொழியைப் பயன்படுத்துவது போன்ற எதிர்மறை செயல்பாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    இது அனைத்தையும்விட மிக முக்கியமான ஒன்று, இது போன்று அமைதியற்ற சூழலில் பிறந்து வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கவனக்குறைவு, அதீத செயல்பாட்டுக் குறைபாடு, கவலை, மனச்சோர்வு, அதிக கோபத்தை வெளிப்படுத்துவதுபோன்ற மனநலக் கோளாறுகள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அன்றாடம் வீட்டில் நடக்கும் சண்டைகளைச் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் மனநல கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.

    சில குழந்தைகள் அதிக அளவில் உணவு சாப்பிடும் பழக்கத்தினால் உடல் பருமனாகவும் அல்லது மிகக்குறைவாக உண்ணும் பழக்கத்தினால் மிக மெலிந்தும் போகிறார்கள்.

    கல்வி கற்றலில் பெரும் சிக்கலுக்கு ஆளாகும் சில குழந்தைகள் வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடுவது போன்று ஆபத்தான காரியத்திலும் ஈடுபடுவதோடு போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.

    மன அழுத்தம் குழந்தைகளை மோசமாக பாதிப்பதால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் இழந்து விடுகிறார்கள். இதனால் அடிக்கடி ஒவ்வாமை, தொற்று நோய்கள் போன்றவற்றின் தாக்கத்திற்கு உள்ளாவதால் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதும் கடினமாகிவிடுகிறது.


    குழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்சனை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.
    குழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று பரம்பரை காரணமாக வருவது. இன்னொன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்னை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.

    அதுபோல சில சுற்றுச்சூழல் காரணிகளும் அலர்ஜி ஆபத்தை அதிகரிக்கக்கூடும். 2013 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உணவு அலர்ஜி பிரச்சனை 1997 மற்றும் 2011 க்கு இடையில் 3.4 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

    அதே காலகட்டத்தில், 18 வயதிற்குட்பட்டவர்களிடையே தோல் ஒவ்வாமை 7.4 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு என்னென்ன அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்தும் பார்ப்போம்.

    1 பால் மற்றும் முட்டை அலர்ஜி

    பால் மற்றும் முட்டைகள் சிறு குழந்தைகளிடம் ஏற்படும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஆகும். பால் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறல், வாந்தி, தோலில் அரிப்பு மற்றும் செரிமான வரை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முட்டை அலர்ஜி பொதுவாக தோல் வெடிப்பு, தோலில் அரிப்பு, மூக்கில் அரிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.

    2. வேர்க்கடலை அலர்ஜி

    சில குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். வேர்க்கடலை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு தோல் அரிப்பு ஏற்படும். இப்படி ஏற்படும் அரிப்பு சில நேரங்களில் அதிக தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். பெற்றோர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும்.

    3. நட்ஸ் வகைகள் அலர்ஜி

    இது பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படுவதல்ல. பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது அனைத்து பருப்பு வகைகளுக்கும் பொருந்தாது. பெரியோர் எந்த பருப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுகிறது என பார்த்து அவைகளை தவிர்க்க வேண்டும்.

    4. மீன் அலர்ஜி

    பொதுவாக கடல் மற்றும் ஏரி மீன்கள் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளான நண்டு, இறால், சிப்பி போன்றவை குழந்தைகளிடம் அலர்ஜியை ஏற்படுத்தும். மீன் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள புரதங்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்படும்போது இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் வாந்தி, வீக்கம், தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

    5. சோயா ஒவ்வாமை

    பொதுவாக இந்த ஒவ்வாமை குழந்தை பருவத்திலேயே தோன்றும். இதன் அறிகுறிகள் பொதுவாக வாயில் ஏற்படும் நமைச்சல், அரிப்பு மற்றும் புண்கள் ஆகும். சோயா ஒவ்வாமை ஏற்படும் போது சோயாவைக் கொண்டு தாயரிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    6. பருவகால ஒவ்வாமை

    பருவகால ஒவ்வாமை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகளை பாதிக்கிறது. இது ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு நமைச்சல், கண்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுதல், மூக்கு ஒழுகுதல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.

    படை நோய் அல்லது தோல் அரிப்பு, தோலழற்சி , நமைச்சல் , தோல் தடிப்புகளும் பருவகால ஒவ்வாமைகளால் ஏற்படுகிறது. அதுபோல பல வாரங்கள் நீடிக்கும் சளி, ஜலதோஷம் அல்லது குளிர் அறிகுறிகள் உண்மையில் தொற்றுநோய்க்கு பதிலாக ஒவ்வாமையாக இருக்கலாம். எனவே இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் குழந்தையை காண்பியுங்கள்.

    7. செல்லப்பிராணி ஒவ்வாமை

    உங்கள் குழந்தைக்கு செல்லப்பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்படுவதை தெரிந்திருக்க மாட்டீர்கள். குறிப்பாக செல்லப்பிராணிகள் உரோமம் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்தும்.”பூனை அல்லது நாயின் தோல் செல்கள், உமிழ்நீர், சிறுநீர், முடிகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

    8. தோல் ஒவ்வாமை

    பருவகால ஒவ்வாமை, செல்லப்பிராணிகள், உணவு, மருந்து மற்றும் பலவற்றால் தோலில் அழற்சி, அரிப்பு,தோல் வெடிப்பு, தோல் தடித்தல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் தோலில் ஏற்படலாம். தோல் நோய் சில நேரங்களில் வைரஸ்கள் அல்லது தொற்றுநோய்களால் ஏற்படலாம். எனவே குழந்தைகள் தோல் நோயால் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
    குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை தாய்மார்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.
    வகுப்பறைகள் இயங்கவில்லை. ஆனால் இப்போது சமையல் அறைகள் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சமையல் அறை பாடத்தை கற்றுக்கொடுத்துவிடலாம் என்று நிறைய தாய்மார்கள், சமையல் செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை தாய்மார்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.

    பொதுவாக குடும்பத்தலைவிகள் 30 வயதினை கடக்கும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலியால் அவதிப்படுகிறார்கள். சில தாய்மார்கள் சமையல் வேலைகளை செய்து முடித்ததும் தங்கள் கைவிரல்கள் மரத்துப்போவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் சமையல் வேலைகளில் செய்யும் சின்னசின்ன தவறுகள்தான். அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்து சரிசெய்துகொண்டால்தான், தங்களை வாட்டும் வலிகளில் இருந்து விடுதலை பெறமுடியும். அதோடு அந்த தவறுகளை தவிர்த்து, சமையல் அறை பாடங்களை சரியாக கற்றுக்கொடுத்தால்தான் எதிர்காலத்தில் அவர்களது குழந்தைகளால் எந்த வலியையும் அனுபவிக்காமல் சிறப்பாக சமையலை செய்யவும் முடியும்.

    வலியில்லாத சமையலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வழிமுறைகள்!

    சமைப்பவரின் உயரத்திற்கு ஏற்ப சமையல் மேடை அமைந்திருக்கவேண்டும். சமையல் மேடை உயரம் அதிகமாக இருந்தால் அடுப்பில் இருக்கும் சமையல் பாத்திரங்களை எளிதாக கையாளமுடியாது. எட்டிப்பார்த்தபடி சமையல் வேலை செய்யவேண்டியதாகிவிடும். சமையல் பாத்திரங்களில் இருக்கும் உணவுப் பொருட்களை கிளறும்போது கைவலி ஏற்படும். அது பிள்ளைகளுக்கு சமையலில் இருக்கும் ஆர்வத்தை குறைத்துவிடும். அதனால் இயல்பாக நின்று சமைக்கும் விதத்தில் சமையல் மேடை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் உயரம் குறைவாக இருந்தால் அகலமான, பாதுகாப்பான மரப் பலகையை கீழேபோட்டு அதன் மீது ஏறி நின்றுகொண்டு சமையல் செய்ய கற்றுக்கொடுங்கள். இயல்பாக நின்றுகொண்டு, உடலுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்காமல் சமையல் செய்ய கற்றுத்தாருங்கள். ஒரு கையை சமையல் மேடையில் ஊன்றிக்கொண்டு இன்னொரு கையால் அடுப்பில் இருக்கும் உணவுப்பொருளை கிளறினால், கை வலி ஏற்பட்டு உடல் எளிதில் சோர்வடைந்துவிடும் என்பதை உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள், அதுபோல் சமையல் மேடையை குறைந்த உயரத்தில் அமைத்துக்கொண்டு குனிந்து வேலைபார்ப்பதும் சரியான முறையல்ல. அது முதுகு வலிக்கும், கழுத்து வலிக்கும் காரணமாகிவிடும்.

    சமையல் பணி என்பது சமைப்பது மட்டுமல்ல, சமைத்த பாத்திரங்களை முறையாக கழுவவும் கற்றுக்கொடுங்கள். பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ‘சிங்க்’கும், பொருத்தமான உயரத்தில் அமைந்திருப்பது அவசியம். குனிந்து கழுவும் நிலையிலோ அல்லது எட்டிப்பார்த்து கழுவும் நிலையிலோ அது இருக்கக்கூடாது. பாத்திரங்கள் கழுவும்போது உடுத்தியிருக்கும் துணியில் தண்ணீர்பட்டு துணி அழுக்காகிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தக் கூறுங்கள்.

    கிரைண்டரை பயன்படுத்தும்போது முழுகவனமும் அதில்தான் இருக்கவேண்டும். குறிப்பாக மாவு அரைக்கும்போது கூந்தலை பறக்கவிடாமல் நன்றாக ஒதுக்கிகட்டிக் கொள்ளச்சொல்லுங்கள். கிரைண்டர் இருக்கும் மேடையும், நின்ற நிலையில் வேலை பார்க்க வசதியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து வேலைபார்க்கும் விதத்தில் கிரைண்டர் மேடை அமைந்துவிடக்கூடாது,

    சமைக்கும் பொருட்களை, சமையல் அறையில் எந்தெந்த பகுதியில் வைத்திருக்கிறீர்கள் என்பதை முதலிலே பிள்ளைகளுக்கு, ஒவ் வொரு பொருளையும் திறந்துகாட்டி கற்றுக்கொடுங்கள். எந்த உணவுப் பொருளை சமைக்கவேண்டும் என்பது பற்றி முதலிலே திட்டமிட்டுவிட்டு அதற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைக்கு எட்டும் விதத்தில் எடுத்து வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். பார்வைக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க உடலை முழுமையாக திருப்பவேண்டும். கையை மட்டும் நீட்டி எடுத்தால் சில நேரங்களில் முதுகில் பிடித்துக்கொள்ளும்.

    காய்கறிகளை, நின்று கொண்டே வெட்டும்படி கூறுங்கள். அப்போதுதான் முழு கவனத்தையும் செலுத்தி சரியாக வெட்டமுடியும். பெரும்பாலும் குழந்தைகள் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு காய்கறிகளை வெட்ட விரும்புவார்கள். அது சரியான அணுகுமுறையல்ல. ஏனென்றால் கைகள் விரைவாக வலிக்கத் தொடங்கிவிடும்.

    சிலிண்டர்களை எளிதாக கையாண்டு சமையல் அறைக்கு கொண்டு வருவது, காலி சிலிண்டரை இணைப்பில் இருந்து விடுவித்து மாற்றிவிட்டு, புதிய சிலிண்டரை இணைப்பது போன்ற வேலைகளை செய்யவும் சொல்லிக்கொடுங்கள். 
    துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம்.
    குழந்தைகளே, பந்துகளைக் கொண்டு விளையாடும் எல்லா விளையாட்டுகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா? கிரிக்கெட் பந்து, கால்பந்து, கைப்பந்து, விளையாட்டுப் பந்து என எத்தனையோ பந்துகள் இருந்தாலும் துடிப்பான குழந்தைகள் விரும்புவது துள்ளிக் குதிக்கும் ‘துள்ளு பந்து’களைத்தான். இதை ‘ஜம்பிங் பால்’ என்றும் ‘பவுன்சிங் பால்’ என்றும் அழைப்பது உண்டு. வண்ண மயமாகவும், வினோத வடிவங்களுடனும் துள்ளிக் குதிக்கும் வேகத்தில் இந்தப் பந்துகள் சிறுவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் கவர்ந்துவிடும். துள்ளுபந்துகளைப் பற்றிய சங்கதிகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    துள்ளுபந்துகள் (பவுன்சிங் பால்) மற்ற பந்துகளைப் போல தோல் மற்றும் ரப்பர் மூலம் இடையில் காற்று நிரப்பி உருவாக்கப்படுவதில்லை. இவை நவீன ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது. இவற்றில் காற்று நிரப்பப்படாமலே இவை துள்ளிக்குதிக்கும் திறன் கொண்டவை. ஏனெனில் இவை அந்த அளவு மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஆகும். இவற்றின் பெயர் செக்ட்ரான் எனப்படும். வேறுசில பிளாஸ்டிக் கலவையிலும் இந்த வகை பந்துகள் தயாராகின்றன.

    துள்ளுபந்துகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் நார்மன் ஸ்டிங்லி என்பவர் ஆவார். வாயில் போட்டு மெல்லும் சூயிங்கங்களை பந்துபோல உருட்டி விளையாடும் வழக்கம் பொதுமக்களிடம் இருந்தது. இதன் தாக்கத்தில்தான் துள்ளுபந்துகள் பிறந்ததாக கூறப்படுவது உண்டு.

    துள்ளுபந்துகளுக்கான பிளாஸ்டிக், மேற்கிந்திய ரப்பர் தாவரங்களில், மங்கோலிய பிளம் மரத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அதில் உண்மையில்லை. கோல்ப் பந்துகளின் உள்ளடாக இருக்கும் பாலிபுடாடையின் போன்ற மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் வகைதான் செக்ட்ரான் ஆகும்.

    துள்ளுபந்துகள் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் துள்ளிக்குதிக்க காரணம் என்ன தெரியுமா? அதன் மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் மட்டுமல்ல அதனுள் ஒரு சதுர அங்குலத்தில் 1200 பி.எஸ்.ஐ. அளவு அழுத்தம் இருப்பதே அவை ஆக்ரோஷத்துடன் துள்ளிக்குதிக்கக் காரணமாகும்.

    துள்ளுபந்துகளை ஒருமுறை அழுத்தம் கொடுத்து குதிக்க வைத்தால் அது எத்தனை முறை குதிக்கும் தெரியுமா? சுமார் 12 முதல் 15 தடவை அவை சிறுசிறு துள்ளல்களை வெளிப்படுத்தும். ஏனெனில் அவை ஒவ்வொரு முறையும் 8 சதவீத அளவுக்கு ஆற்றலை இழந்து கொண்டே வரும். முதல் முறை ஒரு துள்ளுபந்து ஒரு மீட்டர் உயரம் எழும்பினால் அடுத்த முறை அது 92 சென்டிமீட்டர் உயரம் எழும்பும், அடுத்தமுறை மேலும் அதன் எழும்பும் வேகம் குறைந்து கொண்டே வந்து சுமார் 15 முறையில் அது தரையில் உருள ஆரம்பித்துவிடும்.

    துள்ளுபந்துகள் இன்று 5 ரூபாய் மலிவு விலையில் கூட கிடைக்கிறது. ஆனால் அவை அறிமுகமான காலகட்டத்தில் சுமார் 100 டாலர் விலை வரை விற்றது.

    துள்ளுபந்துகளைக் கொண்டு வேடிக்கையாக விளையாடலாமே தவிர கிரிக்கெட் போல விளையாடுவது சிரமமாக இருக்கும். ஏனெனில் இந்த பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடினால் பவுன்சர்கள் பேட்ஸ்மேன்களால் தொட முடியாத அளவுக்கு மிக உயரத்திற்கு சென்றுவிடும். அதாவது சாதாரணமாக பந்துவீசுபவர்கூட பவுன்சிங் பால் கொண்டு பந்துவீசினால் சுமார் பனை அளவு உயரத்திற்கு பந்து எழும்பி ஓடிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஆச்சரியமாக துள்ளிக் குதிப்பதால்தானே துள்ளுபந்துகள் குழந்தைகளை மகிழ்விப்பதுடன், உங்களை ஈர்த்து வைத்துள்ளன.

    துள்ளுபந்துகளின் வடிவமைப்பும் குழந்தைகளை ஈர்க்க முக்கிய காரணமாகும். ஒளிஊடுருவும் திறன், பளிச்சிடும் வண்ணங்கள், மற்றும் வண்ணங்களின் கூட்டுக்கலவையில் தோன்றும் வினோத வடிவங்கள், துளி, துகள் போன்ற உருவங்களின் உள்ளடு, நியான் ஒளிவீச்சு ஆகியவை துள்ளுபந்துகளை ஈர்ப்புடையதாக வைத்துள்ளன.

    எல்லா வயது குழந்தைகளையும் துள்ளுபந்துகள் மகிழ்விக்கும் என்றாலும், 3 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் துள்ளுபந்துகளை விளையாட கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வயதுக் குழந்தைகள் எல்லாப் பொருட்களையும் வாயில் வைத்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். துள்ளுபந்துகள் ஈர்ப்புடைய வண்ணங்களில் இருப்பதும், மென்மையான திறனுடன் இருப்பதுவும் குழந்தைகளை வாயில் வைத்து சுவைப்பதையும், கடிக்கும் ஆர்வத்தையும் தூண்டலாம். ஆனால் அது ஆபத்தானது என்பதால் துள்ளுபந்துகளை வாயில் வைத்து விளையாடக்கூடாது.

    1971-ல் துள்ளுபந்தில் இசையை இணைத்து வெளியிட்டார்கள். அதாவது அந்த பந்தின் குறிப்பிட்ட பகுதியை தேய்க்கும்போது ஒருவகை இசையை கேட்க முடிந்தது. இந்த துள்ளுபந்துகளுக்கு ‘சூப்பர் பால்’ என்ற பெயரும் உண்டு. இந்த பெயருடைய நிறுவனம்தான் அதிக அளவில் துள்ளுபந்துகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது.

    குழந்தைகள் பந்துகளுடன் விளையாடுவதால் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். பந்துகளின் பின்னால் ஓடுவதால் அவர்களின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. வண்ணம் அறிதல், வடிவம் அறிதல், இணைந்து விளையாடும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வளர்கின்றன. துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம். துள்ளுபந்துகளுடன் துள்ளி விளையாடி மகிழ்வோம்!
    உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும்.
    பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.
     
    * ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்குவதற்கு முன்பு, ஆரோக்கியமான ஷாப்பிங்கைத் தொடங்குவது முக்கியமானது. விவசாயிகள் சந்தைக்கும், ஆர்கானிக் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள், அப்போதுதான் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு இடையே உங்கள் குழந்தைகளால் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

    * உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அவர்களே தேர்ந்தெடுத்த ஃப்ரெஷ்ஷான பொருட்களை வைத்து, என்ன சமைக்கலாம் என்று அவர்களிடம் கேட்கலாம், தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் ஆற்றல் தம்மிடம் இருப்பதாகத் தெரிந்து கொள்ளும் குழந்தைகள், உணவைக் குறித்து இன்னும் நேர்மறையாகவும், சோதனை முயற்சிகளுக்கு தயாராகவும் உணர்வார்கள்.

    * உங்கள் குழந்தைகளை, நீங்கள் சமைக்கும்போதும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்யும்போதும் உங்களுடன் வேலைசெய்ய கூறுங்கள், அதில் உணவு சமைப்பதற்கான முன்னேற்பாடுகளான, நறுக்குதல், வெட்டுதல் போன்ற வேலைகளும் உள்ளடங்கும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கத்திகளை குழந்தைகளிடம் தருவதன் மூலம், அவர்களையும் நறுக்கும் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இறுதி வரை இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உணவை சுவைத்து பார்க்க, எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கவும். இதனால் அவர்கள் உணவு செய்யும் செயல்முறையின் ஒரு அங்கமாக தங்களை உணர்வார்கள், உணவுக்கு உரிமைதன்மையை உணர்ந்து கொள்வார்கள். பிறகு, உணவு ஒரு முழுமையான சரிவிகித உணவாக எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தொடங்குவார்கள்.

    * நீங்கள் பார்ப்பதைத்தான் சாப்பிடுவீர்கள். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சன் மேடைகளில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களைக் காட்சிப்படுத்துங்கள். அதிக கலோரி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், சோடா மற்றும் இனிப்புகள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    * நீங்கள் சமைக்கும்போதே, உங்கள் குழந்தைகளை ஒரு உணவில் இடவேண்டிய இடுபொருட்களைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அப்போது, நீங்கள் ஒரு கறியை சமைக்கிறீர்கள் என்றால், அதில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க விரும்புகிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கவும். அது, உணவு தொடர்பான சிந்தனையைத் தூண்டும். அதுமட்டுமல்லாமல், பல்வேறு வகையான மசாலா மற்றும் ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தவும். இது நல்ல வழிமுறையாக இருக்கும், இதனால்,உங்கள் குழந்தையின் சுவை உணர்வு மற்றும் விருப்பங்கள் பல்வேறு சுவைகளையும் அறியக்கூடியதாக மாறும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
    பெரும்பாலும் கைக்குழந்தைகள் அவதிப்படுவதற்கு முதன்மையான காரணம் வயிற்று வலியை உண்டாக்கும் உபாதைகள் தான். அதிலும் குறிப்பாக அஜீரணக்கோளாறுகள் என்றே சொல்லலாம்.  4 மாதத்துக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகளில் 50% குழந்தைகள் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இவை சாதாரணமாக இருந்தாலும் குழந்தையின் ஜீரணமண்டலம் சீராக செயல்பட உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே செய்யகூடிய சிகிச்சைகள் குறித்து பார்க்கலாமா?

    குழந்தைகள் தாங்கள் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் பால் கக்கும் போது தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை . அதற்கு முன்னரே சில அறிகுறிகளை உணர்த்துவார்கள்.

    தாய்ப்பால் கொடுக்கும் போது பெரும்பாலும் முதுகை வளைத்தபடியே குடிப்பார்கள். பாலை முழுமையாக குடிக்க மாட்டார்கள். விக்கல் வழக்கட்தை விட அதிகமாக இருக்கும்.ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். இதனாலும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உண்டாகலாம். இவை சாதாரணமாக உண்டாகும் பாதிப்புதான் என்பதால் கைவைத்தியத்திய முறையில் சரிசெய்துவிடமுடியும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகளுக்கு வாயு பிரச்சனையால் வயிறுவலி அஜீரணம் உண்டாகியிருந்தால் முதலில் வலியை குறைக்க முயற்சிக்கலாம். இதனால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். மிருதுவான துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி நீரை பிழிந்து குழந்தையின் மார்பு பகுதியில் இருந்து வயிறுவரை மெதுவாக ஒத்தடம் கொடுத்தபடி இலேசாக அழுத்தி அழுத்தி எடுக்கலாம். இதனால் குழந்தையின் உடலிலிருக்கும் வாயு பிரிந்து ஜீரணம் எளிதாக இருக்கும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இது போல் செய்துவரலாம்.

    தாய்ப்பால் குடித்ததும் குழந்தைகள் ஏப்ப விடும் வரை படுக்கையில் கிடத்தவேண்டாம். அம்மாக்கள் குழந்தையை அணைத்தபடி மடியிலேயே வைத்திருப்பார்கள். அப்படி செய்தால் குழந்தைக்கு ஏப்பம் வராமல் அதனாலும் அஜீரணம் உண்டாகலாம். அதோடு குழந்தை பால் குடிக்கும் போது பால் உறிஞ்சுவதோடு காற்றையும் சேர்த்து உறிஞ்சு கொள்ளவும் வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததும் அவர்களை தோளில் நிற்கும் படி வைத்து தட்டி கொடுக்க வேண்டும். ஐந்து முதல் பத்துநிமிடங்கள் வரை தட்டி கொண்டெ இருந்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும் பிறகு படுக்கையில் கிடத்தலாம். இதனால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

    சிலருக்கு அஜீரணம் பிரச்சனை உண்டாகும் பொது மலச்சிக்கலும் கூடவே இருக்கும். அதனால் குழந்தையை மலச்சிக்கலிலிருந்து விடுபட வைக்க வேண்டும்.

    தினமும் காலையில் குழந்தையை குளிக்க வைக்கும் முன்பு சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது சோம்பு, பெருஞ்சீரக எண்ணெய் கிடைக்கும். இதை தேங்காயெண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்.

    இந்த எண்ணெயை சிறிது எடுத்து உள்ளங்கையில் தடவி குழந்தையின் தொப்புளை சுற்றி தடவவேண்டும். பிறகு உள்ளங்கையை வைத்து குழந்தையின் வயிற்றை மென்மையாக கடிகார திசையில் மசாஜ் செய்யவேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் வாயு வெளியேறும். இரண்டு காலையும் இலேசாக மசாஜ் செய்து ஒவ்வொரு காலையும் நீட்டி மடக்கி பொறுமையாக செய்யவேண்டும். இதனால் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதோடு செரிமானப்பிரச்சனையும் நீங்கும்.

    மூன்று மாதம் ஆன பிறகு குழந்தைக்கு செரிமானத்துக்கு ஓம வாட்டரை கொடுப்பது உண்டு. இதை வெளியில் வாங்காமல் நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    அஜீரணக்கோளாறு என்பது எளிதாகவே சரி செய்யகூடியது தான். எனினும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது உணவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பால் ஒப்புக்கொள்ளாமல் குழந்தைக்கு செரிமானக்கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் என்று உண்டாக்கிவிடும்.

    இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். 
    விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள்.
    இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்வி மையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளை சொல்கின்றன.

    குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.

    குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்துவிட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.

    ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.

    சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்? அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்? பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன. பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்? சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெறப் போகிறார்கள்?

    விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களைக் கற்கவிடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.
    மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன.
    கல்வியானது நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டு வருகிறது. அதாவது பழங்காலத்தில் குருகுல கல்வி வழக்கத்தில் இருந்தது. கால மாற்றத்தால் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., சமச்சீர் கல்வி என நாளுக்கு நாள் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் கல்வி முறை வந்துள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் மூடப்பட வேண்டிய பள்ளிக்கூடங்கள், முன்கூட்டியே மார்ச் மாத இறுதியிலேயே மூடப்பட்டு விட்டன. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளிகளும் அறிவித்துள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்போடு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆன்லைன் வகுப்புகள்

    கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்து விட்டது. கொரோனாவால் இந்த கல்வி ஆண்டில் இன்னமும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும் மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி விட்டது. இதற்கு அரசும் பச்சை கொடி காட்டி விட்டது.

    அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. காலையில் வழக்கமாக பள்ளிக்கு செல்வது போன்று மாணவ- மாணவிகள் குளித்து முடித்து சீருடை அணிந்து தனது வீட்டிலேயே செல்போன் அல்லது லேப்-டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.

    மாணவர்கள் உற்சாகம்

    ஆசிரியர்கள் வீடியோ காலில், அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாடம் எடுக்கின்றனர். வகுப்பு முடியும்போது வீட்டு பாடத்தை செய்து விட்டு நாளை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். இது மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த புதுவிதமான வகுப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    ஆனாலும் இந்த கல்வி முறை வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும். ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும், வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படும் என்றும், தமிழக மாணவர்கள் படிப்போடு ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள். எனவே நமது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடி வழிகாட்டல் அவசியம். எனவே நமக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒத்து வராது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. ஆனாலும் கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு ஏன்? எதிர்ப்பு எழுகிறது என்பது பற்றிய விவரங்களை பார்ப்போம்.

    ஏழை மாணவர்கள்

    ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆசிரியை தேவி:- ஆன்லைன் வகுப்பு என்பது நல்ல திட்டம் தான். இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடத்தின் மீதான கவனம் குறைவாக உள்ளது. ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கொண்டே பாடம் கவனிக்கின்றனர். நேரில் பாடம் எடுத்தாலே சில மாணவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாடங்களை கவனிப்பது இல்லை. வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதாவது கற்றுக்கொண்டால் நல்லதுதான். ஏழை மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் அல்லது லேப்டாப் அவசியமாகிறது. பல ஏழை குடும்பங்களில் இன்னமும் செல்போன், லேப்டாப் அறியாத பொருளாகவே உள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

    மறவன்குடியிருப்பை சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்:- கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வாழ் வாதாரத்துக்கே வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இருக்க அறிவு பசிக்கு எவ்வாறு இடம் கொடுக்க முடியும். ஆன்லைன் வகுப்புகள் சில மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பது எப்படி என்பது கூட தெரியாமல் உள்ளனர். அவர்களது பெற்றோருக்கும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரம் ஓரளவு தெரிந்தால்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். ஒரு மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியரால் மட்டுமே முடியும். ஆன்லைனில் எப்படி மாணவர்களை நல்வழியில் நடத்த முடியும். ஆன்லைன் வகுப்புகளை காட்டிலும் பள்ளிக்கூட வகுப்புகள் தான் சிறந்தது.

    வரவேற்பு

    நாகர்கோவிலை சேர்ந்த பிளஸ்-1 மாணவி சன்மதி:- நான் பிளஸ்-1 படித்து விட்டு, தற்போது விடுபட்ட பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இதற்காக தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறேன். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். ஆன்லைன் வகுப்பில் பிளஸ்-1 விடுபட்ட தேர்வுக்கும், பிளஸ்-2 பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. முதலில் பாடம் நடத்தப்படும். பின்னர் அதிலிருந்து வீட்டுப்பாடம் கொடுத்து, படிக்கச் சொல்வார்கள். மேலும் பாடம் தொடர்பாக வீடியோவும் அனுப்புவார்கள். இந்த வீடியோவை டவுன்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம். மேலும் எப்போது தேவை என்றாலும் வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள முடியும். இதனால் ஆன்லைன் வகுப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே சமயம் என்னுடன் படிக்கும் பலரிடம் செல்போன் இல்லை. எனவே அவர்களால் ஆன்லைன் வகுப்பு மூலம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கோகிலா:- என் மகன் கோணத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறான். மகள் பிளஸ்-1 வகுப்பில் விடுபட்ட தேர்வு எழுத இருக்கிறாள். 2 பேருமே தற்போது ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். மகனுக்கு தினமும் 3 வகுப்புகள் நடக்கின்றன. அவனுக்கு ஆன்லைனில் தேர்வும் நடக்கிறது. மகளுக்கு பிளஸ்-1 விடுபட்ட தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் படிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்கள். வீட்டில் வெகு நாட்களாக சும்மா இருக்கும் போது மாணவர்களின் கல்வி திறன் குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு நன்மைதான். எனவே ஆன்லைன் வகுப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டும்.

    இன்னும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடுமுறையில் நேரத்தை வீணாக்குவதற்கு பதில் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று கூறினாலும், இன்னும் லேப்- டாப், ஆன்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத வீடுகள் எத்தனையோ உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த ஆன்லைன் வகுப்புகள் எட்டாக்கனிதான் என்றும் பெற்றோர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதிகாரி

    இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகள் உள்ளன. 133 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 204 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 10 முதல் 15 அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தற்போதும் தொடர்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டால் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அதிலும் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு உத்தரவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்“ என்றார்.
    குட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன வைட்டமின் சத்து இருக்கிறது என்ற தகவல்களையும் இங்கே காணலாம்.
    குட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. அது கிடைக்க விட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நோய்களும் ஏற்படக்கூடும். அதனால், வைட்டமின் சத்து பற்றாக்குறையால் வரக்கூடும் பாதிப்புகளையும், எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன வைட்டமின் சத்து இருக்கிறது என்ற தகவல்களையும் இங்கே காணலாம். அதன்படி உணவில் மாற்றங்களை செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

    உதாரணமாக, வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால் கண் பார்வை மங்குவதுடன், எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். கருவில் வளரும் குழந்தைக்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் வைட்டமின் ‘ஏ’ தேவை. இந்த வைட்டமின் முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

    வைட்டமின் ‘பி’ சத்து குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். வாயில் புண்கள் உண்டாகலாம். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் ‘பி’ சத்து நிறைய உள்ளது.

    வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து விட்டால் குழந்தைகள் மன அமைதியை இழப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால், அவர்கள், கோபமாகவும் காணப்படுவார்கள். எலும்புகள் பலம் குறைவதுடன், பல் ஈறுகள் பாதிக்கப்படலாம். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய உள்ளது.

    குழந்தைகளின் எலும்புகள் வலுவாக வளர வைட்டமின் ‘டி’ சத்து அவசியமானது. இந்த சத்து போதிய அளவு கிடைக்காத குழந்தைகளின் கால்கள் உட்புறமாக வளைந்து விடக்கூடும். போதிய சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் வைட்டமின் ‘டி’ சத்தை உடல் தாமாகவே தயாரித்துக்கொள்ளும். உணவுப்பொருட்களில் முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘டி’ சத்து இருக்கிறது.

    வைட்டமின் ‘ஈ’ சத்து குறைந்து விடும்போது குழந்தைகளின் தசைகள் பலவீனமடையலாம். மேலும், ரத்தம் உறைவது சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஈ’ சத்து இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள்.
    குட்டீஸ், தாத்தா, பாட்டி இருக்கறவங்க வீட்டுல ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு முடிச்சதுக்கு அப்புறமா அவர்களிடம் நீங்க கதை கேட்பீங்க இல்லையா..? டி.வியில வர்ற கார்ட்டுன் கதைகளை விடவும் தாத்தா, பாட்டி சொல்லும் பல கதைகள் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அவங்க சொல்ற கதையை வீட்டுல இருக்கிற குட்டி பசங்கள் ஆர்வமா கேட்டுக்குவாங்க. அந்த கதைகளில் வரும் ஆச்சரியமான ஹீரோ, வில்லன் பத்தியெல்லாம் அவங்க கேட்டுட்டு அதை அப்படியே நண்பர்களிடம் சொல்லி அவங்களை ஆச்சரியப்படுத்தறதும் உண்டு.

    கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்த நிலையை குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் சொல்லி புரிய வைப்பார்கள் இல்லையா..? கதைகள் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும். அதன் மூலம் ஒழுக்கம் மற்றும் நல்ல பழக்கங்களை குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள். வீட்டுல இருக்கும் தாத்தா, பாட்டிகள் அவங்க பேரக்குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதனால, அம்மா, அப்பா வேலைக்கு போற வீடுகளில் உள்ள குட்டி குழந்தைகள் தனியாக இருக்கும் உணர்வு இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க.

    குடும்ப பெரியவர்களின் அரவணைப்பில் வளரும் சின்ன குழந்தைகள் குடும்ப பின்னணி பற்றியும், உறவுகளின் மதிப்பு பற்றியும் புரிந்து கொண்டு மதிப்பு அளிப்பார்கள். வேலைக்கு போகும் அம்மா, அப்பா சந்திக்கும் சிரமங்களை எல்லாம் குட்டீஸ்கள் அவர்கள் அளவிற்கு புரிந்து கொள்வார்கள். அதனால, மரியாதை, ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு போன்ற நல்ல குணங்கள் அவங்களுக்கு வரும் இல்லையா..?

    வீட்டில் தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் விளையாடும்போது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிக்கல்களை எப்படி சரி செய்வது என்றும் யோசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் பாசம் காரணமாக சின்ன குழந்தைகளுக்கு தனிமை உணர்ச்சி, பயம், சோர்வு போன்ற பாதிப்புகள் வருவதில்லை என்றும் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால, வீட்டுல இருக்கற பெரியவங்களுக்கு நீங்களும் மரியாதை கொடுக்கணும் குட்டீஸ்..என்ன சரியா..? 
    குழந்தைகளைப் பொறுத்துவரை நோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அதிக கவனம் அவசியம். வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம்.
    கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளை வீட்டிற்கு உள்ளேயே வைத்து பாதுகாப்பாக பார்த்து வருகிறார்கள். இருப்பினும் வீட்டிற்குள் இருந்தாலும் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம். ஏனெனில் குழந்தை வீட்டிற்குள் இருந்தாலும் பெரியவர்கள் வெளியில் சென்று வரக்கூடும். எனவே இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்.

    குழந்தைகள் அடிக்கடி கை வைக்கும் இடங்களை கிருமிநாசினி கொண்டு துடைத்து சுத்தமாக வையுங்கள்.வீட்டின் தரையை அடிக்கடி துடைத்து வையுங்கள்.

    அவர்களுக்கு உணவு கொடுக்கும் முன் உங்கள் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். குழந்தையின் கைகளையும் கழுவி விடுங்கள்.

    அவ்வபோது குழந்தைகளின் கைகளையும் கழுவிவிடுதல் நல்லது.

    வெளியே சென்று வந்தால் கைகளைக் கழுவுங்கள். முடிந்தால் குளித்துவிட்டு குழந்தைகளோடு விளையாடுங்கள்.

    அவர்களை தினமும் குளிக்க வைத்து சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். தினமும் 2 முறை குளிக்க சொல்லுங்கள்.

    உணவில் அதிகம் காய்கறி , பழங்கள் , நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகம் கொடுங்கள்.

    சோஃபா, கட்டில் உள்ளிட்ட ஃபர்னிச்சர்களில் குழந்தைகள் அதிகம் விளையாடக் கூடும். எனவே அவற்றை வேக்யூம் கிளீனர் கொண்டு துடையுங்கள். அதன்மேலே உறைகளை தினமும் மாற்றுங்கள்.

    அவர்களுக்கு உணவு அளிக்கும் பாத்திரங்களை சுடுதண்ணீரில் அலசிவிட்டு கொடுக்கலாம்.

    ஏதாவது காய்ச்சல், இருமல் எனில் மருத்துவரை ஃபோனில் அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
    ×