என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.
    ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக கொரோனா வைரஸ் மாறி விட்டிருக்கிறது. அதனால்தான் அதற்கு எதிராக முழு உலகமும் போர் தொடுத்திருக்கிறது.

    இந்த கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் யார் என்று சொன்னால் அது குழந்தைகள்தான்.

    துள்ளிக்குதித்தாடும் மான் குட்டிகள் போன்ற அவர்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போய் இருக்கிறது.

    தினசரி பள்ளிக்கூடம் செல்ல முடிவதில்லை. பக்கத்து வீட்டு சக குழந்தைகளுடன்கூட நினைத்த நேரத்தில் விளையாட முடிவதில்லை. நண்பர்களை, தோழிகளை சந்தித்து பேச முடிவதில்லை. அப்பா,அம்மாவுடன் வெளியே செல்ல முடிவதில்லை. பார்க், பீச், ஓட்டல், மால், தியேட்டர் எல்லாமே எட்டாக்கனவுகளாகி விட்டன. வீட்டுச்சிறையில் தங்களை அடைத்து வைத்திருப்பதாகத்தான் குழந்தைகள் கருதுகிறார்கள்.

    இந்த குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தொற்று விட்டு வைப்பதில்லை. அப்பா, அம்மா மூலமோ, தாத்தா, பாட்டி மூலமோ குழந்தைகளையும் கொரோனா தொற்று பாதிக்கிறது.

    குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்தக் குடும்பமே இடி விழுந்த மண்பானை போல நொறுங்கிப்போய் விடுகிறது. ஆனால் அந்தளவுக்கு நொறுங்கிப்போகத்தேவையில்லை. ஒருவிதத்தில் பார்த்தால், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக சமாளிக்கிறார்கள் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளான 7,500 குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மருத்துவ தரவுகளை விஞ்ஞானிகள் ஒப்பிட்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.

    இதில் வெளியாகி உள்ள முதல் ஆச்சரியமூட்டும் தகவல், ஐந்தில் ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் தெரிவதில்லை என்பதுதான்.

    குழந்தைகளின், இளைஞர்களின் நுரையீரல் எக்ஸ்ரேக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் 21 சதவீத குழந்தைகளின் நுரையீரலில் மட்டுமே திசு காயத்தின் அறிகுறிகள் தெரிந்துள்ளன. 5.6 சதவீத குழந்தைகள் மட்டும்தான் காய்ச்சல் அறிகுறிகிளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    3 சதவீதத்துக்கும் சற்று அதிகமான அளவிலான குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாகி அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை பார்க்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    தி லேன்சட் மருத்துவ இதழின் அங்கமான ‘இகிளினிக்கல் மெடிசன்’ பத்திரிகையில் இந்த ஆய்வு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த ஆய்வுக்கு பின்னர், பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனாவை சிறப்பாக சமாளிக்கிறார்கள் னன்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

    எனவே குழந்தைகளுக்கு கொரோனா என்ற உடனேயே உலகமே முடிவுக்கு வந்து விட்டது போல பெற்றோர் கலங்கி விடத்தேவையில்லை. அவர்கள், அதில் இருந்து மீண்டு வெளியே வருகிற சிறப்பான சக்தியை அவர்கள் இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. குழந்தைகள் மனதளவில் மீண்டு வர பெற்றோரும், மற்றோரும் கைகொடுத்தால் போதும். 
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது இந்த வழிகளை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும்.  பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக, அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.

    1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.

    2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.

    3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.

    4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத்தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம்.

    குறிப்பு :

    டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.

    இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மருந்து கொடுக்கும் முறை:

    1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி, நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துக்களைக் கொடுக்கக் கூடாது.

     2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக் கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

    3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.

    4. வலிப்பு(Fits) உள்ள குழந்தைக்கு, வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது.

    5. பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.

    மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவதே மிகவும் நல்லது.
    கொரோனா காரணமாக மாணவர்கள் படிப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா. சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாணவிகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவது அதிகரிக்கும்.

    பள்ளிகள் மூடி இருப்பதால், கல்வி ஆண்டு, ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், பள்ளி உரிமம், தேர்வு என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை திறந்தாலும், ஆசிரியர்கள், தொற்று அபாயம் குறித்து கவலைப்படுவார்கள். மிகக்குறைவான பள்ளிகளில்தான் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற முடியும். மொத்தத்தில், மாணவர்களின் படிப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது.

    ஆன்லைன் வகுப்பு மூலம் கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அந்த வசதி கிடைக்காது. இதனால், ஆன்லைன் வகுப்பு நடத்துவது, சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும். ஆகவே, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய சிறப்பான கல்வி முறையை உருவாக்குவதில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.
    பிறந்த 10 நிமிடத்தில் ஒரு குழந்தை அழத்தொடங்கினால், அக்குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அந்த குழந்தைகளின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று விட்டது என்றே அர்த்தம். அதேவேளையில், பச்சிளம் குழந்தையின் மூளைக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அக்குழந்தை அழாது. மூளைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் செல்லாத காரணத்தால். அதன் உடம்பின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறிவிடும். இதனை, பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் Cyanosis என்று குறிப்பிடுவார்கள்.

    குழந்தையின் உடம்பு நீலநிறமாக மாறுவதைத் தொடர்ந்து, அதன் கை மற்றும் கால்கள் அசைவது(Grimace Refleexs) நின்று விடும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகள் மூக்கில் சக்‌ஷன்(Suction) பொருத்தினால், அதை தள்ளிவிடும். மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்கிற குழந்தைகள் அதனைத் தள்ளாது.

    இதுமாதிரியான குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை மருத்துவரின்(Neonatologist) தொடர் கண்காணிப்பு அவசியம் தேவை. பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆக்சிஜன் போகாத காரணத்தால், மூளை செல் பாதிப்பு அடையும். இதுபோன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகளை, மருத்துவ உலகில் Cereberal Palsy என்று குறிப்பிடுவோம்.

    எந்தவித பாதிப்பும் இல்லாமல், இயல்பாக பிறக்கும் குழந்தையின் APGAR ஆனது ஒரு நிமிடத்துக்கு 8/10-வும், 5 நிமிடத்திற்கு 9/10-வும் காணப்படும். உடலில் ஏதேனும் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இந்த ஸ்கோர் அளவு குறையும். அந்த சமயத்தில், நாங்கள் அந்தக் குழந்தைக்கு செயற்கை சுவாசம் தரப்படும். இந்த செயற்கை சுவாசத்தில், Bag And Mask Ventilation, PPV, Intubation என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றின்மூலம், மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதை சரிசெய்யலாம். இதன் பின்னர், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    இந்த சிகிச்சை முறை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை, செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தை, தாயிடம் உள்ள சில பிரச்னைகளால் பாதித்த குழந்தைகள் ஆகியோருக்குத் தேவைப்படும். இந்த சிகிச்சை முறைக்கு Hypoxia எனப் பெயர். செயற்கை சுவாசம் தரப்படுகிற குழந்தைகளைNICU-வில்(Neonatal Intensive Care Unit) வைத்து முழுமையாக குணமாகும் வரை கண்காணிக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வென்டிலேட்டரைப் பொருத்த வேண்டும். பிறந்து 34 வாரம் முடிவடையாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சை தொடர்ந்து தர வேண்டியிருக்கும். அதற்கான காலத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.

    பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் நன்றாக குடித்து, சிறுநீர், மலம் ஆகியவற்றை சரியான நேரத்தில் நன்றாக கழித்தால் உடனே டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். Neonatology Intensive Care Wing அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக, New Born Care Week கடைப்பிடிக்கப்படுவது வெளியே நன்றாக தெரிகிறது.

    பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள். அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.
    பெற்றோர்களே தொட்டதற்கெல்லாம் ஒழுக்கமாய் இரு, ஒழுக்கமாய் இரு என கூறி குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்துவிட வேண்டாம். இது அவர்களுக்குள் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தலாம்.
    இப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற்றவர்களை விட ரோபோக்கள் போல வளர்க்கும் பெற்றோர்கள் தான் அதிகம்.  பிறக்கும் போதே அவனுக்கு இவற்றை எல்லாம் கொடுக்க வேண்டும், உட்புகுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். எல்லாம் சரி தான், உங்களுக்கு கிடைக்காததை உங்கள் குழந்தைக்கு கொடுக்க விரும்புகிறீர்கள்.

    ஆனால், அது உங்கள் குழந்தைக்கு பிடிக்குமா என்று தெரிந்து தான் தருகிறீர்களா என்பது தான் முக்கியமான கேள்வி. பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் குழந்தைகள் மத்தியில் தன்னம்பிக்கை குறைய பெரும் காரணியாக மாறிவிடுகிறது...

    குழந்தைகள் என்றால் தவறு செய்வார்கள் தான். அதற்காக அவர்களிடம் திட்டவோ, கத்தவோ கூடாது. பலமுறை தவறுகள் செய்தாலும் புரியும்படி சொல்லிக் கொடுங்கள். திட்டிக்கொண்டே இருப்பது ஓர் தருணத்தில் திட்டத்தானே போகிறீர்கள் என்ற மனப்பான்மை வந்துவிடும், மேலும் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

    வேறு குழந்தைகளுடன் உங்கள் குழந்தையை ஒப்பீடு செய்ய வேண்டாம். இது அவர்களுக்கு அவர்கள் மேலே வெறுப்பும், தன்னம்பிக்கை குறைபடும் ஏற்பட காரணியாக மாறிவிடுகிறது. அதீத அக்கறை திட்டுவது ஒருபுறமும், அதீத அக்கறை ஒருபுறமும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை குறைய காரணியாக இருக்கின்றன.

    எதற்கெடுத்தாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் தன்னால் முடியும் என்ற எண்ணத்தை குறைத்து விடுகிறது. எனவே, உதவியை நாட ஆரம்பித்துவிடுகிறார்கள். மீண்டும் அதே தான் தவறுகள் செய்தால் தட்டிக் கொடுத்து புரிய வையுங்கள். பொது விடங்களில் மற்றவர்கள் முன்னே அவமானம் செய்ய வேண்டாம்.  குழந்தையாக இருந்தாலும், அவர்கள் வயதுடைய நபர்கள் முன்பு அவர்களுக்கும் கெளரவம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

    பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட தாங்கள் செய்த காரியங்களுக்குக் பாராட்டு எதிர்பார்பார்கள். எனவே, அவர்கள் சின்ன சின்ன செயல்களுக்கும் பாராட்டுங்கள். அப்போது தான் அவர்களுக்குள் தன்னம்பிக்கை வளரும்.

    உள்ள பெற்றோர் மற்ற குழந்தைகள் நன்கு படிக்கின்றன என்றால், உடனே தங்கள் குழந்தையுடன் அமர்ந்துக் கொண்டு படி, படி நச்சரிப்பது கூடாது. உங்கள் போட்டி மனப்பான்மைக்கு குழந்தைகளை பலியாக்கிவிட வேண்டாம்.

    ஒழுக்கம் மிகவும் அவசியம் தான். ஆனால், அதற்காக தொட்டதற்கெல்லாம் ஒழுக்கமாய் இரு, ஒழுக்கமாய் இரு என கூறி குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்துவிட வேண்டாம். இது அவர்களுக்குள் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுத்தலாம்.
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்னும் இலகுவான காரியம் அல்ல. கோபம் கொள்ளும் குழந்தையை பெற்றோர் எப்படி கையாள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது ஒன்னும் இலகுவான காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை கையாள வேண்டும் என்றால், அவ்வகையான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.

    இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றி விடலாம்.

    அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம்.

    உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம்.  அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம்.

    ஓய்வில்லாத (busy) இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

    சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

    நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிது காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.

    உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி விடும். அவர்களை அடிக்கும் பொழுது அதுவே அவர்களுக்கு பழகிவிடும். பயம் என்பதே இல்லாமல் போய் விடும்.
    கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர். நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

    கார்ட்டூன் பார்ப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சியை பெரிதாக பாதிக்கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது, குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புறவெளியில் விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அவர்கள் உணர்வதில்லை. புறவெளியில் விளையாடுவது, அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுகிறது; கூடவே, துடிப்போடு இருக்கவும் வைக்கிறது.

    பெரும்பாலான கார்ட்டூன்கள், சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இதனால், தவறான மொழி ஆளுமையை பின்பற்ற வைக்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டு விட்டு, தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் பேச முயற்சிக்கின்றன. இது, கார்ட்டூன்களால் குழந்தைகள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று. கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள், திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர்.

    இதுவே, குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூலக் காரணம். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத்திருக்கும். கார்ட்டூன்கள் முன், அதிக நேரம் செலவழிப்பது, குழந்தைகளுக்கு தனிமை மனப்பான்மைக்கும், அலட்சிய மனப்பான்மைக்கும் வித்திடும். இதனால், தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது, அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது இருக்கத்தான் செய்யும். அந்த பயத்தை நிரந்தரமாக அப்படியே விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை.
    பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும்.  அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.

    குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும்.  எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை. இப்போது குழந்தைகளின் பயத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்ப்போமா!

    1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது.  அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம். ஏனெனில் குழந்தைகள் உலகத்தை பெற்றோர்கள் மூலமாக காண்கின்றனர். அவர்களின் வாழ்வானது புதிய படைப்பாக இந்த உலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

    அதனால் அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவை களை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற் குள்ளாகி விடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

    3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

    4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.

    5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக் கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும்.  அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர் மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.

    6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.

    7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர் கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.

    8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும்.
    எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
    குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடிய வில்லை. குழந்தைகளை அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.

    எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர்.

    அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

    எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது.

    தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.

    தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.

    குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துருதுரு என இருப்பார்கள்.

    அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.

    எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.

    குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.

    குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.

    குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.

    உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.
    குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம்.
    சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், கோடைகாலத்தில் அதிகரிப்பது வாடிக்கையானது.. அது ஏன் தெரியுமா?

    நமது உடலில் இருந்து சுவாசித்தல் மற்றும் வியர்வை மூலமாக, நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். இந்த இருவகை மூலம் தினமும் 600 முதல் 700 மி.லி. நீர் வெளியேறும். கோடை காலத்தில் இந்த வகைகளில் வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கும். ஒருவர் தினமும் ஒன்றரை லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். இந்த அளவுக்கு வெளியேற்றப்பட வேண்டுமானால், 2 முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால், சிறுநீர் வெளியேறும் அளவு இயல் பாகவே குறைந்து போகும். இதனால் உடலுக்கு தேவையில்லாத உப்பு, கழிவுகளை உடலில் இருந்து சிறுநீர் மூலமாக அப்புறப்படுத்தும் தன்மை குறைந்துவிடும்.

    குறைந்த அளவே சிறுநீர் வெளியேறினால், சிறுநீரில் நிறமாற்றம் தோன்றும். அடர்த்தியாக சிறுநீர் வெளியேறும் பட்சத்தில் சிறுநீர் பையில் இருந்து, சிறுநீர் முழுமையாக வெளியேறாது. சிறிதளவு உள்ளேயே தேங்கிவிடும். இதனால் தொற்றுக் கிருமிகள் அதிகம் வளர்ந்து, சிறுநீரகக் கல் உருவாகும்.

    சிறுவர் - சிறுமியர் ‘டாய்லெட்’ சுத்தம் இல்லாததாலோ, அதை பயன்படுத்த விரும்பாததாலோ சிறுநீரை அடக்கி வைத்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ‘இன்பெக்‌ஷன்’ இருந்தால், அவர்களால் சிறுநீரை தேக்கிவைக்க முடியாது. அதனால் நமைச்சலுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள். நினைத்த உடன் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு நீர் கசிவும் ஏற்படும்.

    குழந்தைகளுக்கோ, சிறுமியர்களுக்கோ அடிக்கடி ‘யூரினரி இன்பெக்‌ஷன்’ ஏற்பட்டால், அது உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டிய விஷயம். முறையாக சிகிச்சை பெறாவிட்டால் அந்த குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியே பாதிக்கப்படும். 15 வயதுக்குரியவர்கள் 7, 8 வயது போல் தோன்றுவார்கள். ஒன்று முதல் 5 வயது வரை குழந்தை களுக்கு சிறுநீரக உறுப்புகள் நன்றாக வளரும் காலகட்டமாகும். அக்கால கட்டத்தில் சிறு நீரக பிரச்சினை ஏற்பட்டு, முறைப்படி சிகிச்சை பெறாவிட்டால், பிற்காலத்தில் சிறுநீரக உறுப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

    சில குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடத்தில் பிறவியிலேயே தோல் ஒட்டிப்போய் இருக்கும். அவர்கள் சிறுநீர் கழிக்க விரும்பும்போது முன் பகுதி பலூன் மாதிரி உப்பிப்போகும். சிலருக்கு சிறுநீர்பை வீக்கம், கிட்னி லேசாக இடம் மாறி இருத்தல் போன்ற பல தொந்தரவுகள் பல விதங்களில் உருவாகக் கூடும். அவர்களின் சிறுநீரை சோதனை செய்து ‘இன்பெக்‌ஷன்’ எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறியலாம். ‘அல்ட்ரா சவுண்ட்ஸ் கேனிங்’ மூலம் எல்லாவித சிறுநீரக பாதிப்புகளையும் கண்டறிந்துவிட முடியும். கிட்னி நிலை, சிறுநீர் பையின் பாதிப்புகள், பிறவியிலேயே ஏற்படும் நீர் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள் போன்ற வற்றையும் பார்த்து முறையான சிகிச்சையை உடனுக்குடன் அளித்திட முடியும்.

    ‘அல்ட்ரா சவுண்ட்’ சோதனையை நடத்து வதற்கு ஒருமணி நேஇஇரத்த ிற்கு முன்பு நிறைய தண்ணீர் பருகிவிட்டு, சிறுநீர் கழிக்காமல் சோதனைக்கு செல்லவேண்டும்.

    சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால், காலையில் எழுந்ததும் முகத்தைப் பார்த்தால் வீக்கமாகத் தோன்றும். அப்போதே உணராவிட்டால் உடலில் நீர் போடும். பின்பு வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். கோடைகாலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் சிறுநீரக தொந்தரவுகள் ஏற்படாத அளவுக்கு குழந்தைகளின் உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

    அறிகுறிகள்

    நீர் கடுப்பால் குழந்தைகள் அழுது அவதிப்படுதல்

    சிறுநீர் வெளியேறும் நுனிப்பகுதியில் நமைச்சல் ஏற்படுவதால், அடிக்கடி பிறப்பு உறுப்பின் நுனிப் பகுதியை குழந்தைகள் அழுத்துதல்.

    இன்பெக்‌ஷன் ஏற்பட்டு குளிர் காய்ச்சல் தோன்றும்.

    கிட்னியிலோ, சிறுநீர் பையிலோ இன்பெக்‌ஷன் ஏற்பட்டு, சிறுநீர் கலங்கலாக வெளியேறுதல்.

    சிறுநீரில் இஇரத்த ம் வெளியேறுதல்.

    உள்ளே கல் உருவாகி, அதன் மூலம் சிறுநீரகத்தில் வலியோ, வயிற்று வலியோ ஏற்படுதல்.
    தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும்.
    தளிர் நடையை சொந்தமாகக் கொண்ட குட்டீஸ்களே... துள்ளல் நடை கொண்ட சின்னஞ்சிறுவர்களே... நீங்கள் தளர்நடை பற்றி அறிவீர்களா? அது ஒன்றும் புதிரானதோ, புதிதானதோ அல்ல. நாம் இயல்பாக கவலைகள் மறந்து காலாற நடைபோடுவதே தளர்நடையாகும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமா? உங்களில் எத்தனை பேர் பள்ளிக்கு நடந்து சென்று திரும்பி வருகிறீர்கள். நீங்கள் பள்ளிக்கு கிளம்பும்போதுகூட பரபரப்பு நடை போட்டிருக்கலாம், ஆனால் பள்ளிவிட்டதும் ஜாலியாக நண்பர்களுடன் பேசியபடி இயல்பாக நடந்து வீடு திரும்புவீர்களே, அதுதான் தளர் நடை. உங்களுக்குத் தெரியுமா? தளர் நடைக்கு என்று சர்வதேச அளவில் ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது என்பது? ஆம், இன்றுதான் (ஜூன் 19) ‘சர்வதேச தளர் நடை தினம்’. இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், அதன் பயன் என்ன? என்று கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

    இன்றைய வாழ்க்கை எந்திர கதியாக ஓடியாடி இயங்கக் கூடியதாக மாறியிருக்கிறது. பலருக்கு வாழ்வே போராட்டம் என்ற நிலை உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத இளம் குட்டீஸ்களுக்கும் இது பொருந்தும். ஆமாம், உங்கள் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால், உங்களைக் கவனித்துக் கொள்ள தாத்தா பாட்டி இல்லாத நிலை இருந்தால், அவர்களின் வாழ்வு போராட்டமும், ஏக்கமும் நிறைந்ததுதானே...

    நீங்கள் பள்ளி செல்லும் சிறுவர்களாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் பள்ளிக்கு பரபரப்பாக கிளம்புவது, வீட்டுப் பாடங்களை ஒழுங்காக முடித்துவிட்டோமா? என்பது தொடங்கி ஒவ்வொரு செயலிலும் அந்த பரபரப்பு எதிரொலிக்கும். சரியாக படிக்காத குழந்தைகள், ஆசிரியர்கள் சொல்லும் பாடங்கள் புரியாத குழந்தைகள் என்றால் இந்த பரபரப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பள்ளி வகுப்புகளுடம்கூட கசப்பான அனுபவங்களாக இருக்கும். பள்ளி முடிந்தால் டியூசன் செல்ல வேண்டும், வீட்டுப் பாடங்கள் முடிக்க வேண்டும், அதற்குள் இரவு சாப்பாட்டு நேரமும், தூங்கும் நேரமும் வந்துவிடும். பின்னர் மறுபடியும் பொழுது விடிந்ததில் இருந்து மீண்டும் அதே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

    இப்படி, உங்கள் உலகில் நீங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் உலகம் வேறு மாதிரியானது. உங்களுக்குப் பள்ளி போல அவர்களுக்கு வேலை, அலுவலகம், தொழில் என பரபரப்பு சூழல். குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் ஆரோக்கியம், உடல்பராமரிப்பு பற்றிய கவலைகள் ஒருபுறம். இப்படி பெற்றோரும், குழந்தைகளுமாக இந்த உலகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். இந்த பரபரப்பை குறைக்கும் ஓய்வு தினம்தான், ‘சர்வதேச தளர் நடை தினம்’. இது நிச்சயம் நாமும் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய தினம் என்று கூறலாம்.

    அமெரிக்காவில் தளர்நடை தினம் ஒரு விடுமுறை தினமாகும். வழக்கமான வார விடுமுறை போல அல்லாமல் வாழ்வின் அன்றாட பணிகள், பாரங்கள் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மனதில் கவலைகள், திட்டங்கள் எதையும் நினைவால் அசை போடாமல் ஓய்வெடுப்பது, மற்றும் தளர்வாக நடைபோட்டு மனதை லேசாக்கிக் கொள்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

    மூச்சுவாங்க ஓடும் ஓட்டப் பயிற்சி உடலுக்கு நன்மை வழங்கும் என்றாலும், அதுபோன்ற பலனை மெல்லோட்டம் எனப்படும் ‘ஜாகிங்’ மூலமும் பெற முடியும். அதுபோலவே நடைப்பயிற்சி மூலம் உடல் பல நன்மைகளைப் பெறும் என்றாலும், பரபரப்பாக நடக்கும் நடையைவிட, இயல்பாக நடக்கும் தளர்நடை உடலையும், மனதையும் லேசாக்கி வெகு வான பலன்களைத் தருவதை பல்வேறு ஆராய்ச்சிகளும், இன்றைய மருத்துவ உலகமும் ஒப்புக் கொள்கிறது. அதன் அடிப்படையில் கவலைகள் மறந்து மகிழ்ச்சியாக, இயல்பாக நடைபோடுவதை பின்பற்றும் தினமே தளர்நடை தினமாகும். 
    ×