என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை
Byமாலை மலர்22 Jun 2020 6:49 AM GMT (Updated: 22 Jun 2020 6:49 AM GMT)
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் போது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துருதுரு என இருப்பார்கள்.
அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.
எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.
குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.
உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.
அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.
எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.
குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.
உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X