என் மலர்
குழந்தை பராமரிப்பு
ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பயனுள்ள அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொடுங்கள். அவர்களின் கல்வி அறிவு அதிகரிக்கும். கூடவே பொது அறிவும் கூடும்.
ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பயனுள்ள அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொடுங்கள். அவர்களின் கல்வி அறிவு அதிகரிக்கும். கூடவே பொது அறிவும் கூடும்.
டாக்டர் பாண்டாஸ் ஐஸ் கிரீம் டிரக்(Dr.Panda’s Ice Cream Truck)
ஐஸ்கிரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? அதனால்தான் ‘உங்களுக்குப் பிடித்த பிளேவர்களில் நீங்களே ஐஸ்கிரீமை உருவாக்குங்கள்’ என்கிறது, ‘டாக்டர் பாண்டா’ ஆப்ஸ்.
டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்கிரீம்களை நீங்களே உருவாக்கலாம். ஐஸ்கிரீம் மட்டுமல்ல, இன்னும் பல வற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.
கிளவுட் மேக்கர் (Cloud Maker)
வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரசிய மான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதில் வரும் மேகங்களை உங்கள் விருப்பப்படி மாற்றி, பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான உருவங்களை உருவாக்கலாம்.
டோகா லேப்(Toca Lab)
வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம ‘த்ரில்லிங்’காக இருக்கும். உண்மையான ஆய்வகங்களைப் போல விபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ள லாம்.
பிக்கபூ யூ.எப்.ஓ(Peekaboo UFO)
ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும் சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ் இது. வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டிடங் கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங் கள், எளிதாக மனதில் பதியும்.
டாக்டர் பாண்டாஸ் ஐஸ் கிரீம் டிரக்(Dr.Panda’s Ice Cream Truck)
ஐஸ்கிரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? அதனால்தான் ‘உங்களுக்குப் பிடித்த பிளேவர்களில் நீங்களே ஐஸ்கிரீமை உருவாக்குங்கள்’ என்கிறது, ‘டாக்டர் பாண்டா’ ஆப்ஸ்.
டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்கிரீம்களை நீங்களே உருவாக்கலாம். ஐஸ்கிரீம் மட்டுமல்ல, இன்னும் பல வற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.
கிளவுட் மேக்கர் (Cloud Maker)
வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரசிய மான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதில் வரும் மேகங்களை உங்கள் விருப்பப்படி மாற்றி, பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான உருவங்களை உருவாக்கலாம்.
டோகா லேப்(Toca Lab)
வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம ‘த்ரில்லிங்’காக இருக்கும். உண்மையான ஆய்வகங்களைப் போல விபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ள லாம்.
பிக்கபூ யூ.எப்.ஓ(Peekaboo UFO)
ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும் சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ் இது. வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டிடங் கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங் கள், எளிதாக மனதில் பதியும்.
பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளுக்கு தாயார்தான் வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக கற்றல் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளுக்கு தாயார்தான் வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த விஷயத்தில் தந்தை போதுமான ஈடுபாடு காட்டுவதில்லை என்ற மனக்குறை பிள்ளைகளிடமும் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக கற்றல் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 21.4 சதவீதம் பிள்ளைகள் தங்கள் படிப்பு விஷயத்தில் தந்தையின் ஈடுபாடு அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஊரடங்கு கால கட்டத்திற்கு முன்பும் தந்தையின் பங்களிப்பு அதே மாதிரிதான் இருந்தது என்று 48.6 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.
வீட்டுப்பாடம் செய்யும்போது டிஜிட்டல் தளங்களை கையாள்வதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் எளிமையாக கற்கும் யுக்தியை தெரிந்து கொள்வதற்கும் தந்தை உதவி செய்வதாக 34.1 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். படிப்பில் தாங்கள் சாதிப்பதற்கு ஏதாவதொரு வகையில் தந்தையின் பங்களிப்பு இருப்பதாக 76.3 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் தளங்கள் வழியாக கல்வி சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு தந்தை வழிகாட்டுவதாகவும் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, ஆய்வு செய்த ஆன்லைன் கற்றல் மையத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் பைசானி கூறுகையில், “ஆன்லைன் கற்றல் தளங்கள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடமும் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் கற்றல் தளங்கள் வழியாக பெற்றோர் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு எளிமையாக புரியவைக்கிறார்கள். பள்ளிகள் திறந்ததும் நேரடி பாடத்திட்ட முறையில் பாடம் பயில தொடங்கினாலும் ஆன்லைன் கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடரும் என்று நம்புகிறோம்” என்கிறார்.
மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 21.4 சதவீதம் பிள்ளைகள் தங்கள் படிப்பு விஷயத்தில் தந்தையின் ஈடுபாடு அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஊரடங்கு கால கட்டத்திற்கு முன்பும் தந்தையின் பங்களிப்பு அதே மாதிரிதான் இருந்தது என்று 48.6 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.
வீட்டுப்பாடம் செய்யும்போது டிஜிட்டல் தளங்களை கையாள்வதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் எளிமையாக கற்கும் யுக்தியை தெரிந்து கொள்வதற்கும் தந்தை உதவி செய்வதாக 34.1 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். படிப்பில் தாங்கள் சாதிப்பதற்கு ஏதாவதொரு வகையில் தந்தையின் பங்களிப்பு இருப்பதாக 76.3 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் தளங்கள் வழியாக கல்வி சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு தந்தை வழிகாட்டுவதாகவும் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, ஆய்வு செய்த ஆன்லைன் கற்றல் மையத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் பைசானி கூறுகையில், “ஆன்லைன் கற்றல் தளங்கள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடமும் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் கற்றல் தளங்கள் வழியாக பெற்றோர் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு எளிமையாக புரியவைக்கிறார்கள். பள்ளிகள் திறந்ததும் நேரடி பாடத்திட்ட முறையில் பாடம் பயில தொடங்கினாலும் ஆன்லைன் கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடரும் என்று நம்புகிறோம்” என்கிறார்.
பெற்றோர் படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
கால்பந்து: 3 முதல் 5 வயதுக்குள் கால்பந்து விளையாடுவதற்கு பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓட வும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும்.
கராத்தே: பெரும்பாலான குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சிகளை 3 வயதில் பழக தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளை பொறுத்து வயது மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் தற்காப்பு கலைகள் வெகுவிரைவிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சி யைத் தொடங்குவது உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இசை: 4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ள தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
நீச்சல்: 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடெமி பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்கு பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது.
பரத நாட்டியம்: பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான உடல் அசைவுகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.
கால்பந்து: 3 முதல் 5 வயதுக்குள் கால்பந்து விளையாடுவதற்கு பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓட வும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும்.
கராத்தே: பெரும்பாலான குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சிகளை 3 வயதில் பழக தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளை பொறுத்து வயது மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் தற்காப்பு கலைகள் வெகுவிரைவிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சி யைத் தொடங்குவது உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இசை: 4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ள தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
நீச்சல்: 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடெமி பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்கு பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது.
பரத நாட்டியம்: பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான உடல் அசைவுகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.
சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந்தைக்கு அழுகை தான் மொழி.
குழந்தைகள் எப்போது அழும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அழுகின்றன என்ற காரணமும் பலருக்கு புரியாது. அதனால் சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தை அழுகையை நிறுத்தாதபோது, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் பரிசோதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடும்.
ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந் தைக்கு அழுகைதான் மொழி. தகவல் தொடர்புக்கான மாற்றுவழி எதுவும் அதற்கு தெரியாததால், தனக்கு தெரிந்த அழுகை மொழி மூலமே தனது பசி, வலி, அசவுகரியம், நோய் போன்ற பலவற்றையும் குழந்தை வெளிப்படுத்தும். உற்றுக் கவனித்தால் அழுகை மூலம் குழந்தை வலியுறுத்தும் காரணத்தைக் கண்டறிந்து விடலாம்.
குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கிறது. அழுகையோடு கை விரலை வாய்க்குள் கொண்டு செல்வது, பால்குடிப்பதுபோல் நாக்கை துழாவுவது போன்றவைகளை செய்தால் அப்படியே குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து பால் புகட்டினால் போதும், குழந்தை பசியாறி அழுகையை நிறுத்திவிடும்.
போதுமான அளவு குழந்தைகள் தூங்காவிட்டாலும் அழுதுகொண்டிருக்கும். அப் போது தாலாட்டு பாடியபடி லேசாக தட்டிக்கொடுத்தால் தூங்கிவிடும். எழுந்து நடந்து தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாலும் உடனே தூங்கும். தொட்டிலில் இட்டு பாடிக்கொண்டே ஆட்டினாலும் சீக்கிரமாக தூக்க நிலைக்கு சென்றுவிடும்.
சிறுநீர் கழித்து ‘டயாபர்’ நன்றாக நனைந்து தொங்கி அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அழும். உடனடியாக அந்த டயாபரை மாற்றிவிட்டால் அழுகை நின்றுபோகும்.
பால் குடித்து முடிந்ததும் வாயு மேல்எழும்பி வரும் தொந்தரவாலும் குழந்தைகள் அழும். பால் குடித்த உடனே குழந்தையை கீழே கிடத்தாமல், தோளில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தால் ஏப்பம் வெளியேறி அழுகை நீங்கிவிடும்.
குழந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதால், வாயுவால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அப்போது வாயுத் தொந்தரவைப் போக்கும் மருந்தை குழந்தைக்கு புகட்டவேண்டியதிருக்கும். அதை கொடுத்த பின்பும் அழுகை நீடித்தால், மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டும்.
பற்கள் வெளிப்படும்போது சில குழந்தைகள் அசவுகரியத்தை உணரும். அதனாலும் அழுவதுண்டு. நான்கு மாதத்தில் இருந்தே பற்கள் முளைக்கத் தொடங்கும். அப்போது கையில் கிடைப்பதை எல்லாம் வாய்க்கு கொண்டுசென்று கடிக்க முயற்சிக்கும். இந்த தருணத்தில் சுத்தமான காட்டன் துணியால் குழந்தையின் ஈறுகளை துடைத்துவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். குழந்தைகள் கடிப்பதற்கு ஏற்ற பொம்மைகளையும் வாங்கித்தருவது நல்லது.
மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குழந்தையை கொண்டுசெல்லும்போது திடீரென்று அழுதால் அந்த சூழ்நிலை குழந்தைக்கு பிடிக்கவில்லை என்பதை உணருங்கள். போதுமான அளவு காற்று கிடைக்காமல் இருக்கலாம். அதிகமான சத்தம் இருந்துகொண்டிருக்கலாம். அதனால் குழந்தை அழும்போது முடிந்த அளவு சீக்கிரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
குழந்தை தனிமையை உணர்ந்தாலும் திடீரென்று அழும். அது விளையாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தாய் வெளியேறிவிட்டால் உடனே அழும். தாய் அருகில் இருப்பதை உணர்த்தினால் அந்த அழுகை நின்றுவிடும். தொடுதலாலோ, சத்தத்தினாலோ தான் அருகில் இருப்பதை குழந்தைகளுக்கு தாய்மார்கள் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் குழந்தை அழுகையால்தான் வெளிப்படுத்தும். எவ்வளவு ஆறுதல்படுத்தியும் விடாமல் தொடர்ச்சியாக, உச்சமான சத்தத்துடன் குழந்தை அழுதுகொண்டிருந்தால் நோயால் குழந்தைக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். காய்ச்சல், வாந்தி, எடைகுறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும்.
ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந் தைக்கு அழுகைதான் மொழி. தகவல் தொடர்புக்கான மாற்றுவழி எதுவும் அதற்கு தெரியாததால், தனக்கு தெரிந்த அழுகை மொழி மூலமே தனது பசி, வலி, அசவுகரியம், நோய் போன்ற பலவற்றையும் குழந்தை வெளிப்படுத்தும். உற்றுக் கவனித்தால் அழுகை மூலம் குழந்தை வலியுறுத்தும் காரணத்தைக் கண்டறிந்து விடலாம்.
குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கிறது. அழுகையோடு கை விரலை வாய்க்குள் கொண்டு செல்வது, பால்குடிப்பதுபோல் நாக்கை துழாவுவது போன்றவைகளை செய்தால் அப்படியே குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து பால் புகட்டினால் போதும், குழந்தை பசியாறி அழுகையை நிறுத்திவிடும்.
போதுமான அளவு குழந்தைகள் தூங்காவிட்டாலும் அழுதுகொண்டிருக்கும். அப் போது தாலாட்டு பாடியபடி லேசாக தட்டிக்கொடுத்தால் தூங்கிவிடும். எழுந்து நடந்து தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாலும் உடனே தூங்கும். தொட்டிலில் இட்டு பாடிக்கொண்டே ஆட்டினாலும் சீக்கிரமாக தூக்க நிலைக்கு சென்றுவிடும்.
சிறுநீர் கழித்து ‘டயாபர்’ நன்றாக நனைந்து தொங்கி அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அழும். உடனடியாக அந்த டயாபரை மாற்றிவிட்டால் அழுகை நின்றுபோகும்.
பால் குடித்து முடிந்ததும் வாயு மேல்எழும்பி வரும் தொந்தரவாலும் குழந்தைகள் அழும். பால் குடித்த உடனே குழந்தையை கீழே கிடத்தாமல், தோளில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தால் ஏப்பம் வெளியேறி அழுகை நீங்கிவிடும்.
குழந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதால், வாயுவால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அப்போது வாயுத் தொந்தரவைப் போக்கும் மருந்தை குழந்தைக்கு புகட்டவேண்டியதிருக்கும். அதை கொடுத்த பின்பும் அழுகை நீடித்தால், மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டும்.
பற்கள் வெளிப்படும்போது சில குழந்தைகள் அசவுகரியத்தை உணரும். அதனாலும் அழுவதுண்டு. நான்கு மாதத்தில் இருந்தே பற்கள் முளைக்கத் தொடங்கும். அப்போது கையில் கிடைப்பதை எல்லாம் வாய்க்கு கொண்டுசென்று கடிக்க முயற்சிக்கும். இந்த தருணத்தில் சுத்தமான காட்டன் துணியால் குழந்தையின் ஈறுகளை துடைத்துவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். குழந்தைகள் கடிப்பதற்கு ஏற்ற பொம்மைகளையும் வாங்கித்தருவது நல்லது.
மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குழந்தையை கொண்டுசெல்லும்போது திடீரென்று அழுதால் அந்த சூழ்நிலை குழந்தைக்கு பிடிக்கவில்லை என்பதை உணருங்கள். போதுமான அளவு காற்று கிடைக்காமல் இருக்கலாம். அதிகமான சத்தம் இருந்துகொண்டிருக்கலாம். அதனால் குழந்தை அழும்போது முடிந்த அளவு சீக்கிரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
குழந்தை தனிமையை உணர்ந்தாலும் திடீரென்று அழும். அது விளையாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தாய் வெளியேறிவிட்டால் உடனே அழும். தாய் அருகில் இருப்பதை உணர்த்தினால் அந்த அழுகை நின்றுவிடும். தொடுதலாலோ, சத்தத்தினாலோ தான் அருகில் இருப்பதை குழந்தைகளுக்கு தாய்மார்கள் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் குழந்தை அழுகையால்தான் வெளிப்படுத்தும். எவ்வளவு ஆறுதல்படுத்தியும் விடாமல் தொடர்ச்சியாக, உச்சமான சத்தத்துடன் குழந்தை அழுதுகொண்டிருந்தால் நோயால் குழந்தைக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். காய்ச்சல், வாந்தி, எடைகுறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும்.
உங்கள் குழந்தை டூத்பேஸ்ட்டை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா? அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அளவுக்கு அதிகமாக, தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெரியவர்களாகும்போது “டென்டல் ப்ளுரோசிஸ்” என்னும் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
உங்கள் குழந்தை பருவத்தின் முதல் எட்டு ஆண்டுகளில், அதிகரித்த ப்ளுரைடு வெளிப்பாட்டின் காரணமாக உங்கள் பற்கள் பாதிக்கப்படும் நிலையை ப்ளுரோசிஸ் என்று அடிப்டையில் கூறுகின்றனர். ப்ளுரைடு என்பது ஒரு கனிமம் ஆகும். இது தண்ணீர் மற்றும் மண்ணில் அதிகமாகக் காணப்படும்.
தண்ணீர் அதிக அளவு பருகும் மனிதர்களுக்கு ப்ளுரைடு அளவு இயற்கையாகவே அதிகமான அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு குறைந்த அளவு பற்குழிகள் இருந்ததாகவும் 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, டூத்பேஸ்ட், மவுத் வாஷ், குழாய் நீர் மற்றும் இதர பொருட்களில் ப்ளுரைடு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
குழந்தைப் பருவத்தில், பற்கள் உருவாகும் நிலையில், அதிகரித்த ப்ளுரைடு பயன்பாடு, டென்டல் ப்ளுரோசிஸ் அல்லது பற்களில் கோடுகள் உண்டாவது அல்லது பற்களில் திட்டுக்கள் தோன்றுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், 3-6 வயது குழந்தைகள் பெரும்பாலும் ஒரு முழு பிரஷ் அல்லது பாதி பிரஷ் அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
“ப்ளுரைடு என்பது பல அற்புத நன்மைகளைக் கொண்டது, இருந்தாலும் அதனை கவனமாகக் கையாள வேண்டும்”, என்று சிகாகோவில் உள்ள குழந்தைகளுக்கான டென்டிஸ்ட் மேரி ஹேஸ் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறினார்.
அதிக டூத்பேஸ்ட் பயன்பாட்டால் எத்தனை குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு, திட்டுக்கள், கோடுகள் ஆகியவை இருந்தது என்பது கூறப்படவில்லை என்றாலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு அரிசிமணி அளவிற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும், 3-6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும் கூறுகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பேஸ்டில் சுவை அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனால் குழந்தைகள் தங்கள் விருப்பம் போல் டூத்பேஸ்ட் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினா்.
டூத்பேஸ்ட் என்பது ஒரு உணவு அல்ல, விரும்பிய அளவிற்கு உட்கொள்வதற்கு, எனவே, குழந்தைகளின் டூத்பேஸ்ட் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களே என்று கூறி அவர்கள் ஆய்வை நிறைவு செய்தனர்.
அளவுக்கு அதிகமாக, தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெரியவர்களாகும்போது “டென்டல் ப்ளுரோசிஸ்” என்னும் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
உங்கள் குழந்தை பருவத்தின் முதல் எட்டு ஆண்டுகளில், அதிகரித்த ப்ளுரைடு வெளிப்பாட்டின் காரணமாக உங்கள் பற்கள் பாதிக்கப்படும் நிலையை ப்ளுரோசிஸ் என்று அடிப்டையில் கூறுகின்றனர். ப்ளுரைடு என்பது ஒரு கனிமம் ஆகும். இது தண்ணீர் மற்றும் மண்ணில் அதிகமாகக் காணப்படும்.
தண்ணீர் அதிக அளவு பருகும் மனிதர்களுக்கு ப்ளுரைடு அளவு இயற்கையாகவே அதிகமான அளவில் இருப்பதாகவும் அவர்களுக்கு குறைந்த அளவு பற்குழிகள் இருந்ததாகவும் 70 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, டூத்பேஸ்ட், மவுத் வாஷ், குழாய் நீர் மற்றும் இதர பொருட்களில் ப்ளுரைடு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
குழந்தைப் பருவத்தில், பற்கள் உருவாகும் நிலையில், அதிகரித்த ப்ளுரைடு பயன்பாடு, டென்டல் ப்ளுரோசிஸ் அல்லது பற்களில் கோடுகள் உண்டாவது அல்லது பற்களில் திட்டுக்கள் தோன்றுவது போன்றவற்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், 3-6 வயது குழந்தைகள் பெரும்பாலும் ஒரு முழு பிரஷ் அல்லது பாதி பிரஷ் அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
“ப்ளுரைடு என்பது பல அற்புத நன்மைகளைக் கொண்டது, இருந்தாலும் அதனை கவனமாகக் கையாள வேண்டும்”, என்று சிகாகோவில் உள்ள குழந்தைகளுக்கான டென்டிஸ்ட் மேரி ஹேஸ் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறினார்.
அதிக டூத்பேஸ்ட் பயன்பாட்டால் எத்தனை குழந்தைகளுக்கு பற்களில் பாதிப்பு, திட்டுக்கள், கோடுகள் ஆகியவை இருந்தது என்பது கூறப்படவில்லை என்றாலும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு அரிசிமணி அளவிற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும், 3-6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பட்டாணி அளவிற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துவது போதுமானது என்றும் கூறுகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பேஸ்டில் சுவை அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனால் குழந்தைகள் தங்கள் விருப்பம் போல் டூத்பேஸ்ட் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினா்.
டூத்பேஸ்ட் என்பது ஒரு உணவு அல்ல, விரும்பிய அளவிற்கு உட்கொள்வதற்கு, எனவே, குழந்தைகளின் டூத்பேஸ்ட் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது பெற்றோர்களே என்று கூறி அவர்கள் ஆய்வை நிறைவு செய்தனர்.
பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.
கடும் அனலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் ஏசி-யை நம்பத் தொடங்கி விட்டனர். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இன்றைய பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கூட ஏசி அறையில் தூங்கவைக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாறு செய்யலாமா? குழந்தையை ஏசியில் வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.
பொதுவாக நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் பொழுது,அறை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தைகளால் தங்களது நிலைமையை வாய்விட்டுச் சொல்லவும் இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.
ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்
குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.
ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?
குழந்தை அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதால், குழந்தையின் உடலும் மனமும் அந்த தட்பவெப்பநிலைக்குப் பழகிப் போய் இருக்கும். திடீரென்று நாம் குழந்தையை வெளி நிகழ்ச்சிகளுக்கு அல்லது வேறு பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகையில் குழந்தையால் அந்த தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைக்குத் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
வெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை ஏசிக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. பாதுவாகவே ஏசி அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே பரவ இயலாது. இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய ஆக்சிஜன் அதில் கிடைக்காமல் போகலாம். இது சரியானது இல்லை. மேலும் மூடிய ஏசி அறையில் சில சமயம் துர்நாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம்.
சில குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சரியான எடை அளவிற்குக் கீழ் பிறந்திருப்பார்கள். இந்த குழந்தைகளை ஏசி அறையில் படுத்து உறங்க வைப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மையம் போதிய வளர்ச்சியை அடைந்து இருக்காது. ஏசி அறையில் வெப்ப நிலை மிகவும் குறைவாகக் காணப்படும். இதனால் இவர்களின் கை கால் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இது மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு ஏசி அறை உகந்ததா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பரீசிலித்து கொள்வது நல்லது.
பொதுவாகவே காலை நேரத்தில் சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. சூரிய ஒளி குழந்தை உடலில் உயிர்ச்சத்து டி உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஏசி அறையில் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.
பொதுவாக நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் பொழுது,அறை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தைகளால் தங்களது நிலைமையை வாய்விட்டுச் சொல்லவும் இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.
ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்
குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.
ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?
குழந்தை அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதால், குழந்தையின் உடலும் மனமும் அந்த தட்பவெப்பநிலைக்குப் பழகிப் போய் இருக்கும். திடீரென்று நாம் குழந்தையை வெளி நிகழ்ச்சிகளுக்கு அல்லது வேறு பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகையில் குழந்தையால் அந்த தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைக்குத் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
வெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை ஏசிக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. பாதுவாகவே ஏசி அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே பரவ இயலாது. இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய ஆக்சிஜன் அதில் கிடைக்காமல் போகலாம். இது சரியானது இல்லை. மேலும் மூடிய ஏசி அறையில் சில சமயம் துர்நாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம்.
சில குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சரியான எடை அளவிற்குக் கீழ் பிறந்திருப்பார்கள். இந்த குழந்தைகளை ஏசி அறையில் படுத்து உறங்க வைப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மையம் போதிய வளர்ச்சியை அடைந்து இருக்காது. ஏசி அறையில் வெப்ப நிலை மிகவும் குறைவாகக் காணப்படும். இதனால் இவர்களின் கை கால் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இது மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு ஏசி அறை உகந்ததா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பரீசிலித்து கொள்வது நல்லது.
பொதுவாகவே காலை நேரத்தில் சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. சூரிய ஒளி குழந்தை உடலில் உயிர்ச்சத்து டி உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஏசி அறையில் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.
ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.
சிறு குழந்தைகளும் மற்ற பெரியவர்களைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பும் ஆபத்து இருக்கிறது என்பது அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
வாஷிங்டன் :
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.
இதுபற்றி விஞ்ஞானிகள்கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.
இது குறித்து டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவதற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.
இதுபற்றி விஞ்ஞானிகள்கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.
5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.
இது குறித்து டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவதற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.
பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
தொப்புள் கொடி (Umbilical cord) என்பது பிறக்கும் முன்னர் தாய்க்கும் குழந்தைக்குமான உணவுப் பாலம். குழந்தையின் சுவாசப் பாதையும் அது தான். குழந்தை பிறந்த பின், அது தாய்க்கும் சேய்க்குமான உணர்வு பாலமாகி விடுகிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடியை அறுத்து விடுவார்கள்.
குழந்தை இயற்கையான சுவாசத்துக்கு பழகி விடும். தாய்ப்பால் அருந்தத் தொடங்கி இயல்பான இவ்வுலக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடும். ஒரு சில குழந்தைகளுக்கு தொப்புள் லேசாக வீங்கினாற் போல இருக்கும். அழும் போது இன்னும் அது புடைத்துக் கொள்ளும்.
இந்த தொப்புள் வீக்கம் (Belly bulge) எதனால் ஏற்படுகிறது?
பிறந்த சில குழந்தைகளுக்கு இது போல ஏற்படுவது உண்டு. பிறந்த உடனே தெரியாது. சில நாட்கள் ஆகும். கிட்டத் தட்ட ஒரு மாதத்தில் இந்த வித்தியாசத்தை கண்டறியலாம். தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறிய தசையைத் தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி.
ஒரு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ, மலம் போவதற்காக முக்கி தனது வயிற்றைத் தள்ளினாலோ, அழுத்தம் காரணமாக உள்தசை கிழிந்து உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளின் ஊடாகத்தள்ளும். ஒரு நாள் மலச்சிக்கலால் இது ஏற்படாது.
தொடர் மலச்சிக்கல் பிரச்னை தான் அந்த பலவீனமான பகுதியை மேலும் பலவீனமாக்கும். சில ஆண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க ரொம்ப சிரமப்படுவார்கள். சிறுநீர் வெளியேறும் துவாரம் மிகச் சிறியதாக இருப்பதே அதற்குக் காரணம். இதை Phimosis என்பார்கள். இதனால் அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படும். அதற்காக ரொம்ப அழுத்தம் கொடுக்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
அதனால் தான், இது அப்படியே வெளியே வந்து விடாமல், தூங்கும் போது உள்ளே அழுந்தி இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அழுதாலோ இன்னும் பெரிதாகத் தோன்றும். இது 90 - 95 சதவிகிதக் குழந்தைகளுக்குத் தானாகவே சரியாகி விடும்.
குழந்தை வளர வளர குழந்தையின் வயிற்று தசைகள் பலமடைந்து குடல் வெளி வருவது நின்று விடும். இதனால் அந்தப் புடைப்பு இருக்காது. குழந்தை பிறந்த போது தொப்புளை சரியாக கட்டாததால் காற்று உள்ளே போய் அப்படி ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அது உண்மையல்ல. குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தொப்புள் கொடியின் தோல் பகுதி தானாக உலர்ந்து விடும். இது உள்ளே இருக்கும் தசை திறந்திருப்பதால் ஏற்படுவது தான்.
இந்த வீக்கத்தை கட்டுப்படுத்த குழந்தையின் வயிற்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி வைக்கலாம். அல்லது துணியால் கட்டி வைக்கலாம். இது அந்த குடல் வெளி வருவதை தவிர்த்து அந்த இடத்தை நார்மலாக்கும். இப்பிரச்னை மலச்சிக்கலால் ஏற்படுகிறதா? அல்லது சிறுநீர் துவாரம் அடைப்பா? அல்லது வேறு எதாவது காரணமா? பரிசோதித்து அறிந்து, அதை சரி செய்தாலே இந்தப் பிரச்னையை தவிர்த்து விடலாம்.
உதாரணமாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால் கொடுப்பார்கள். அதனால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். குடல் அசைவு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் உணவின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை அதைத் தவிர்க்கும் பட்சத்தில் இந்தப் பிரச்னை இந்தக் குழந்தைக்கு சரியாகி விடலாம். சிறுநீர் பிரச்னை உள்ள ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குதல் போன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டால்,
இந்தப் பிரச்னையும் தானாகவே மெல்ல குறையும். பொதுவாக இது மரபுரீதியான சிக்கல் அல்ல என்றாலும், இது ஏற்பட காரணமாக இருக்கும் அடிப்படை பிரச்னைகளால் இது அடுத்து வரும் தலை முறைக்கும் வரலாம்!’’
குழந்தை இயற்கையான சுவாசத்துக்கு பழகி விடும். தாய்ப்பால் அருந்தத் தொடங்கி இயல்பான இவ்வுலக வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடும். ஒரு சில குழந்தைகளுக்கு தொப்புள் லேசாக வீங்கினாற் போல இருக்கும். அழும் போது இன்னும் அது புடைத்துக் கொள்ளும்.
இந்த தொப்புள் வீக்கம் (Belly bulge) எதனால் ஏற்படுகிறது?
பிறந்த சில குழந்தைகளுக்கு இது போல ஏற்படுவது உண்டு. பிறந்த உடனே தெரியாது. சில நாட்கள் ஆகும். கிட்டத் தட்ட ஒரு மாதத்தில் இந்த வித்தியாசத்தை கண்டறியலாம். தொப்புளானது தோலுக்குக் கீழ் மிகச் சிறிய தசையைத் தான் கொண்டிருக்கிறது. அது ஒரு பலவீனமான பகுதி.
ஒரு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தாலோ, மலம் போவதற்காக முக்கி தனது வயிற்றைத் தள்ளினாலோ, அழுத்தம் காரணமாக உள்தசை கிழிந்து உறுப்பின் ஒரு பகுதியை அல்லது திசுவைத் தொப்புளின் ஊடாகத்தள்ளும். ஒரு நாள் மலச்சிக்கலால் இது ஏற்படாது.
தொடர் மலச்சிக்கல் பிரச்னை தான் அந்த பலவீனமான பகுதியை மேலும் பலவீனமாக்கும். சில ஆண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க ரொம்ப சிரமப்படுவார்கள். சிறுநீர் வெளியேறும் துவாரம் மிகச் சிறியதாக இருப்பதே அதற்குக் காரணம். இதை Phimosis என்பார்கள். இதனால் அந்தக் குழந்தை சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படும். அதற்காக ரொம்ப அழுத்தம் கொடுக்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.
அதனால் தான், இது அப்படியே வெளியே வந்து விடாமல், தூங்கும் போது உள்ளே அழுந்தி இருக்கும். மற்ற நேரங்களில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். அழுதாலோ இன்னும் பெரிதாகத் தோன்றும். இது 90 - 95 சதவிகிதக் குழந்தைகளுக்குத் தானாகவே சரியாகி விடும்.
குழந்தை வளர வளர குழந்தையின் வயிற்று தசைகள் பலமடைந்து குடல் வெளி வருவது நின்று விடும். இதனால் அந்தப் புடைப்பு இருக்காது. குழந்தை பிறந்த போது தொப்புளை சரியாக கட்டாததால் காற்று உள்ளே போய் அப்படி ஏற்பட்டதாகக் கூறுவார்கள். அது உண்மையல்ல. குழந்தை பிறந்து சில நாட்களுக்குள் தொப்புள் கொடியின் தோல் பகுதி தானாக உலர்ந்து விடும். இது உள்ளே இருக்கும் தசை திறந்திருப்பதால் ஏற்படுவது தான்.
இந்த வீக்கத்தை கட்டுப்படுத்த குழந்தையின் வயிற்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை வைத்து கட்டி வைக்கலாம். அல்லது துணியால் கட்டி வைக்கலாம். இது அந்த குடல் வெளி வருவதை தவிர்த்து அந்த இடத்தை நார்மலாக்கும். இப்பிரச்னை மலச்சிக்கலால் ஏற்படுகிறதா? அல்லது சிறுநீர் துவாரம் அடைப்பா? அல்லது வேறு எதாவது காரணமா? பரிசோதித்து அறிந்து, அதை சரி செய்தாலே இந்தப் பிரச்னையை தவிர்த்து விடலாம்.
உதாரணமாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால் கொடுப்பார்கள். அதனால் கூட மலச்சிக்கல் ஏற்படலாம். குடல் அசைவு என்பது நரம்பு சம்பந்தப்பட்ட விஷயம் தான். ஆனால், சில நேரங்களில் உணவின் காரணமாகவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் மலச்சிக்கல் வரலாம்.
பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, அது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஒரு வேளை அதைத் தவிர்க்கும் பட்சத்தில் இந்தப் பிரச்னை இந்தக் குழந்தைக்கு சரியாகி விடலாம். சிறுநீர் பிரச்னை உள்ள ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பின் மேல் தோலை நீக்குதல் போன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டால்,
இந்தப் பிரச்னையும் தானாகவே மெல்ல குறையும். பொதுவாக இது மரபுரீதியான சிக்கல் அல்ல என்றாலும், இது ஏற்பட காரணமாக இருக்கும் அடிப்படை பிரச்னைகளால் இது அடுத்து வரும் தலை முறைக்கும் வரலாம்!’’
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.
நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.
நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
மனிதனுக்கு என்று தனி அடையாளத்தை தருவது பேச்சுத் திறன்தான். அதை தெளிவாக உச்சரிக்க பற்கள் உதவுகிறது. பற்களின் அணிவகுப்பை வெள்ளைச் சிப்பாய்களின் அணிவகுப்பு என்று கூறலாம். சத்தான உணவை அரைத்து, சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவதுதான் இந்த வெண் சிப்பாய்களின் வேலை.
பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.
மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.
‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.
பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.
மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.
‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.
கொரோனா வைரஸ் தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பெண்களே நீங்களும் தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது அவசியமானதாக இருக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பலரும் பயனுள்ள வழியில் செலவிட தொடங்கி இருக்கிறார்கள். பொழுதைப்போக்குவதற்கு சிரமப்படுபவர்களும் சில வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவாகி விடலாம். தனித்திறன்களை வளர்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லலாம். அதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
* ஏதாவதொரு புதிய திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இணையதளத்தில் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தொழில் ரீதியாக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தெரியாத புதிய விஷயங்கள் எதையாவது கற்றுக்கொண்டால் கூட அது வீண்போகாது. அதனை கொண்டு முதலீடு செய்து வாழ்க்கையில் முன்னேற தொடங்கலாம்.
* பெண்கள் ஏதாவதொரு கைவினைக்கலையை கற்றுக்கொள்ளலாம். இணையதள வீடியோக்கள் அதற்கு வழிகாட்டும். எளிமையான முறையில் விளக்கி புரியவைக்கும் விதத்தில் இருப்பதால் சிரமமில்லாமல் கற்றுக்கொண்டு சம்பாதிக்க தொடங்கலாம்.
* செல்போனில் வீணாக பொழுதைபோக்குவதை விட புத்தகங்கள் படிப்பது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும். தெரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொள்வது வெளி உலகத்தொடர்பை விசாலப்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு தரும் பழங்கள், ஜூஸ்களை பருகுங்கள். ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பொருட்களை உணவில் அதிகம் சேருங்கள். இந்த சமயத்தில் அவை உடலுக்கு அதிகம் தேவை.
* வெளி உணவுகளை தவிர்ப்பதற்கு பதிலாக அதே உணவை வீட்டிலேயே தயார் செய்வதற்கு பழகுங்கள். அது சமையல் கலை மீது உங்களை நாட்டம் கொள்ள வைக்கும். புதிய ரெசிபிகளை தயார் செய்து ருசித்துப்பார்க்க தூண்டும்.
* வீட்டின் மொட்டைமாடி, பால்கனியில் செடிகள் வளர்க்கலாம். அறைக்குள்ளும் உள் அலங்கார செடிகள் வளர்க்கலாம். வீட்டின் மொட்டை மாடியை மினி தோட்டமாக மாற்றுவதற்கு உகந்த நேரமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழலை உருவாக்குங்கள். படுக்கை அறையில் இருந்து அலுவலக வேலைபார்ப்பதை தவிருங்கள். இடையூறு ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள்.
* உடல் ரீதியான சமூக இடைவெளி என்பது முழுமையான தனிமையில் வாழ்வது என்று அர்த்தமல்ல. குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் நேஇரத்தை செலவிடாமல் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடந்தவர்கள் இந்த தருணத்தை அவர்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* ஏதாவதொரு புதிய திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இணையதளத்தில் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தொழில் ரீதியாக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு தெரியாத புதிய விஷயங்கள் எதையாவது கற்றுக்கொண்டால் கூட அது வீண்போகாது. அதனை கொண்டு முதலீடு செய்து வாழ்க்கையில் முன்னேற தொடங்கலாம்.
* பெண்கள் ஏதாவதொரு கைவினைக்கலையை கற்றுக்கொள்ளலாம். இணையதள வீடியோக்கள் அதற்கு வழிகாட்டும். எளிமையான முறையில் விளக்கி புரியவைக்கும் விதத்தில் இருப்பதால் சிரமமில்லாமல் கற்றுக்கொண்டு சம்பாதிக்க தொடங்கலாம்.
* செல்போனில் வீணாக பொழுதைபோக்குவதை விட புத்தகங்கள் படிப்பது உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும். தெரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொள்வது வெளி உலகத்தொடர்பை விசாலப்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு தரும் பழங்கள், ஜூஸ்களை பருகுங்கள். ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த பொருட்களை உணவில் அதிகம் சேருங்கள். இந்த சமயத்தில் அவை உடலுக்கு அதிகம் தேவை.
* வெளி உணவுகளை தவிர்ப்பதற்கு பதிலாக அதே உணவை வீட்டிலேயே தயார் செய்வதற்கு பழகுங்கள். அது சமையல் கலை மீது உங்களை நாட்டம் கொள்ள வைக்கும். புதிய ரெசிபிகளை தயார் செய்து ருசித்துப்பார்க்க தூண்டும்.
* வீட்டின் மொட்டைமாடி, பால்கனியில் செடிகள் வளர்க்கலாம். அறைக்குள்ளும் உள் அலங்கார செடிகள் வளர்க்கலாம். வீட்டின் மொட்டை மாடியை மினி தோட்டமாக மாற்றுவதற்கு உகந்த நேரமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், வேலை செய்வதற்கு ஏற்ற அலுவலக சூழலை உருவாக்குங்கள். படுக்கை அறையில் இருந்து அலுவலக வேலைபார்ப்பதை தவிருங்கள். இடையூறு ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள்.
* உடல் ரீதியான சமூக இடைவெளி என்பது முழுமையான தனிமையில் வாழ்வது என்று அர்த்தமல்ல. குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, நண்பர்களுடன் வீடியோ காலில் அரட்டை அடிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் நேஇரத்தை செலவிடாமல் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடந்தவர்கள் இந்த தருணத்தை அவர்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.






