என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன.
    கொரோனாவால் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கும் குடும்பத்தினரால், சமூகத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களின் சமையல் பணிகளில் ஆண்களும் இணைந்திருக்கிறார்கள். அதனால் சமையலில் இப்போது புது ருசி கிடைத்திருக்கிறது என்று குடும்பமே மகிழ்ந்துகொண்டிருக்கிறது.

    பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. ஆண்களும் இனி அந்த வேலையை செய்ய பொறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என நம்பலாம்.

    பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை. தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது.

    மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறை அளித்து விடுகிறார்கள். அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன.

    குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும்.

    குழந்தைகளின் தேவை என்ன என்பது, எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாடுவதற்கான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும்.

    குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகுவதன் மூலம்தான் அதற்கான அர்த்தத்தை உணர முடியும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    ‘அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள்’ என்று அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன.

    கொரோனா தடை நீட்டிப்பு முடிவதற்குள், குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அப்பாக்களுக்கு தெரிந்து தான் ஆகவேண்டும். அதற்கும் இப்போதே தயாராகிவிடுங்கள்.
    குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
    குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். குறும்புத்தனத்துடன் நடந்து கொண்டவர்கள் வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள். பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறையத்தொடங்கும். அந்த சூழலை பெற்றோர் கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:

    * குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும். அழுகை குறைய தொடங்கியதும் அழைத்து அன்பாக பேசுங்கள். அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிடாதீர்கள். அதேவழக்கத்தை பின்தொடர்ந்துவிடுவார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.

    * தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் இயல்புக்கு திரும்பியபிறகு விளக்கமாக சொல்லி புரியவையுங்கள். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தால் நீங்கள் பிடிவாதத்தை தளர்த்துவதில் தவறில்லை.

    * சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அதுபோல் அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் அணுகுமுறையும் மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறி வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கோபம் கொள்ளும்போக்கு அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.

    * குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். நாளடைவில் முக்கியமான விஷயங்களையெல்லாம் மறைக்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.

    * குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள் வதில்லை. நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் குரோதம் வளராமல் இருக்க வழிவகுக்கும்.

    * நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் ரசித்து ருசிப்பார்கள். காய்கறிகள், பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.

    * செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்க தொடங்கிவிட்டன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவை குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், புதுமையாகவும் அமையும். உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்வதும் முக்கியம்.
    நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.
    குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள். நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

    ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை. ஆனால், இன்றைய குழந்தைகள் பீஸா, பர்கர், சாக்லேட், கோலா பானங்கள், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி போன்ற சாட் ஐட்டங்கள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், செயற்கையான ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பலரச பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

    இதுதான் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை எனக் கொண்டுவருகிறது. தரமற்ற இந்த உணவுகளால் ஏற்படும் அதிகப்படியான தொப்பை, உடல்பருமன் இதய நோய்களைக்கூட உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் போன்ற அனைத்துச் சத்துக்களும் சமச்சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

    இன்றைய குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உண்பது இல்லை. இரவில் வெகு நேரம் நாம் உண்ணாததால் பசியுணர்வு ஏற்பட்டு, உணவைச் செரிப்பதற்காக அமிலங்கள் சுரந்து தயார்நிலையில் இருக்கும். நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது நம் இரைப்பையையும் குடலையும் அந்த அமிலச் சுரப்பு பாதிக்கிறது. மேலும், இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன், பி.பி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவு இடைவேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு பழங்கள், நட்ஸ், சுண்டல் போன்ற புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் அனைத்துச் சத்துக்களும் கொண்ட சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை மட்டுமே உண்ணாமல் கம்பு, கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் கடினமான உணவை உண்ணும்போது செரிமானம் தாமதமாவதால் உறக்கமும், உடலின் பிற வளர்சிதை மாற்றப் பணிகளும் பாதிப்பட்டு உடல் பருமன் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதே போல் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்துப்பு எனப்படும் கறுப்பு உப்பையும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
    நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    கோமண்டர் (Komondor)

    இது ஒரு வகையான ஹங்கேரியன் ஷெபெர்டு நாய். இந்த நாய்க்கு அதிகமான ரோமங்கள் இருப்பதோடு, அவை சுருண்டு இருக்கும். இதுவும் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும்.

    மால்தீஸ் (Maltese)

    மொசுமொசுவென இருக்கும் குட்டி நாய். இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு சிறந்த நாய். இந்த நாயிடம் அன்பை காட்டினால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு அது பாசம் வைக்கும்.

    ஆப்கன் ஹவுண்ட்

    (Afghan Hound)

    இந்த நாய் மிகவும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பதோடு, அழகான பட்டுப்போன்ற ரோமங் களைக் கொண்டது. இவை நன்கு வேகமாக ஓடக்கூடியவை மற்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவை.

    நாய்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் நன்கு மொசுமொசுவென்று இருக்கும் நாய்கள் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போன்று இருப்பதால், குழந்தைகளின் செல்லப்பிராணிகள் ஆகின்றன. அப்படி குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டு, வளர்க்கப்படும் நாய் இனங்களை இங்கு பார்ப்போம்.

    கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)

    இந்த நாய் குழந்தைகளுடன் குறும்பாக விளையாடக்கூடியது. இதன் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், அழகாக மொசுமொசுவென்று இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கோல்டன் ரிட்ரைவர் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

    பூடில் (Poodle)

    இந்த மொசுமொசு நாய், பொம்மை போன்று இருக்கும். இந்த நாய் பெண் குழந்தைகளுக்கு நல்ல துணையாக இருக்கும். நன்கு விளையாடுவதோடு, வீட்டில் எந்தவொரு பிரச்சினையையும் கொடுக்காது.

    பொமரேனியன்(Pomeranian)

    இந்தியாவில் பொதுவாக காணப்படும் நாய் இனங்களில் ஒன்று தான் பொமரேனியன். இந்த நாய் பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ஏற்றதாக இருக்கும். மேலும் இவை குழந்தைகளுடன் நன்கு விளையாடக்கூடியவை. மேலும் இதற்கு அதிகப்படியான பராமரிப்பும் தேவைப்படாது.
    தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
    முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் தனிக்குடித்தன முறை தவிர்க்க முடியாததாகி விட்டது.

    கூட்டுக்குடும்ப முறையில் குழந்தைகளை பராமரிக்கவும், நீதிக்கதைகளை கூறி நல்வழிப்படுத்தவும் தாத்தா-பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவு முறைகள் இருந்தன.

    தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர். தனிக்குடித்தனத்தில் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே முழுவதும் சார்ந்துள்ளது. தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மன அழுத்த நோய்கோ, தவறான பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகும் வாய்ப்பு அதிகம். இதனால் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு தாய்க்கு உள்ளது. அதே நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு கைக்குழந்தைகளை கவனிப்பது கஷ்டமான விஷயம்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவகத்தில் தங்களது வளர்ச்சியையும், குடும்ப பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையிலும் சவாரி செய்து வெற்றி மங்கைகளாக வலம் வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காகவும் ஒதுக்க வேண்டும். தினமும் ஒருவேளை உணவாவது அவர்களுடன் சாப்பிட வேண்டும்.

    இதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது. நீ சாப்பிட்ட பின் இதை செய்யவேண்டும் அதை செய்ய வேண்டும் என்று கட்டளையிட கூடாது. அதற்கு பதிலாக மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களை பற்றி பேசலாம். குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    அவர்களது குறைகளை பரிச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தில் பொய் செல்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை அடித்து விடக்கூடாது. உங்களிடம் உள்ள பயத்தின் காரணமாகவே குழந்தைகள் உண்மையை மறைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லுவோம் அவர்கள் நல்ல தீர்வை தருவார்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.

    தாயை கண்டு பயப்படும் குழந்தைகள் உண்மையை மறைக்கவே செய்யும். மேலும் குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிக்க கூடாது. அந்த நேரத்தில் நீங்கள் வேலை செய்து கொண்டு இருந்தால் குழந்தைகளுக்கு சிறிய வேலைகளை பங்கிட்டு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடன் நீங்கள் இருக்கும் நேரம் அதிகரிக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடன் தட்டை தானே எடுத்து வைப்பது, பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து கொடுப்பது போன்ற பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    வீட்டிற்கு விருந்தினரோ, உறவினரோ வந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவு மேம்படும். அதே போல் தங்களது குழந்தைகளை எந்த குழந்தைகளுடனாவது ஒப்பிட்டு குறை கூற கூடாது. இந்த செயல் உங்கள் மேல் குழந்தைகளுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். இது தாய் மற்றும் குழந்தைகள் உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.

    அதே போல் அலுவலகத்தில் அதிக நேரம் இருந்தால் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதனை குழந்தைகளிடம் தெரிவித்து விடுங்கள். இது உங்களை நினைத்து குழந்தைகள் காத்து இருப்பதை தவிர்க்க உதவும். பள்ளியில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றிற்கு குழந்தைகளுடன் கட்டாயம் செல்லுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இழந்து விடாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மேலும் இருக்கும் நெருக்கம் அதிகமாகும். அதே நேரத்தில் வேலைக்கு சென்று கொண்டே குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.
    ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. எனவே பெற்றோர்கள் அந்தக் குழந்தை வளர்ப்பில் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.

    1. ஒரு குழந்தை உற்சாகத்துடன் ஊக்கமும் தந்து வளர்க்கப்பட்டால், அது தன்னம்பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.

    2. ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமரிசக்கப்பட்டும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் பழிப்பதைக் கற்றுக் கொள்கிறது.

    3. ஒரு குழந்தை சகிப்புத் தன்மையுடன் வளர்க்கப்பட்டால், அது பொறுமையை கற்றுக் கொள்கிறது.

    4. ஒரு குழந்தை கேலி கிண்டல் செய்து வளர்க்கப்பட்டால், அது பிறரை கண்டு வெட்கப்பட்டு விலகி நிற்கக் கற்றுக் கொள்கிறது.

    5. ஒரு குழந்தை பாராட்டி வளர்க்கப் பட்டால், அது பிறரை போற்ற, வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது.

    6. ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.

    7. ஒரு குழந்தை பாதுகாப்பு பயமின்மை யோடு வளர்க்கப்பட்டால், அது நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    8. ஒரு குழந்தை ஸ்திரமற்ற நிலையிலே வளர்க்கப்பட்டால், அது சந்தேகத்தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    9. ஒரு குழந்தை மரியாதை மதிப்பு உணர்வோடு வளர்க்கப்பட்டால், அது தன்னை மதித்து விரும்பி வாழக்கற்றுக் கொள்கிறது.

     10. ஒரு குழந்தை பழிகள் சொல்லியே பழித்து வளர்க்கப்பட்டால், அது குற்ற உணர்வோடு வாழக் கற்றுக் கொள்கிறது.

    11. ஒரு குழந்தை நடுநிலையோடு வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் நேர்மையாக வாழக்கற்றுக் கொள்கிறது.

    12. ஒரு குழந்தை ஏமாற்றத்தோடு வளர்க்கப்பட்டால், அது பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது.

    13. ஒரு குழந்தை ஏற்பு உணர்வோடும் நட்பு உணர்வோடும் வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் இவ்வுலகை, இவ்வுலக மக்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கிறது.

    கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்ப தில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.

    பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர் களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

    முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.
    குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
    இப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். அந்த லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியோடு மட்டுமல்ல மறக்காமலும் எடுத்துச் செல்வார்கள்.

    இப்ப்போது பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான உணவை எடுத்துச் சென்றுகொண்டிருப்பீர்கள். அதுவும் கொரோனா அச்சத்தால் ஹோட்டல்களில் சாப்பிட நினைப்பவர்கள்கூட வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துசெல்லத் தொடங்கியிருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று

    கடையில் விதவிதமான லஞ்ச் பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவையாகத்தான் இருக்கும். குழந்தைகளும் வண்ணம் வண்ணமாக இருக்கும் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைத்தான் வாங்கச் சொல்வார்கள். மேலும், அவர்களுக்குப் பிடித்ததுபோல ஆப்பிள், மீன், படகு போன்ற வடிவங்களில் இருக்கும். ஆனால், நீங்கள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதைத் தவிர்க்கும்படி உணவியல் ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    குழந்தைகளோ பெரியவர்களோ காலையில் ஸ்கூல் அல்லது ஆபிஸ்க்கு நிதானமாகப் புறப்படுவது இல்லை. அவசரம் அவசரமாகத்தான் ஏதாவது மறந்துவிட்டு கிளம்பும் விதத்தில்தான் காலை பொழுது இருக்கும். அப்படியிருக்கையில், சமையல் ஒருபக்கம், புறப்படுவது ஒரு பக்கம் நடக்கும். எனவே, அந்தப் பரப்பரப்பான நேரத்தில் ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய முடியாது என்பது இயல்புதான். அதனால் சில விஷயங்களில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

    ‘சுடச் சுட இருக்கும் உணவை (சாதம், இட்லி, உப்புமா, சாம்பார், ரசம்… என எதுவாகினும்) அப்படியே லஞ்ச் பாக்ஸில் வைப்போம். அது பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எனில், உணவில் உள்ள வெப்பத்தில் பாக்ஸின் உள் லேயர் பிளாஸ்டிக்கும் வெப்பமாகி இலகும். அது உணவோடு கலந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அந்த உணவைச் சாப்பிடும் குழந்தை அல்லது பெரியவர்களுக்கு வயிற்று தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, ஃபுட் பாய்சன், செரிமாண கோளாறு, வ‌யிற்றுப் புண் உள்ளிட்டவை’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

    ஆனால், இது காலையில் கொடுத்து மாலையில் நடக்கும் ஒருநாள் விஷயம் அல்ல. நீண்ட நாள்கள் நடக்கும்போது நேரிடலாம். அதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

    ஒருவேளை குழந்தைகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்தான் வேண்டும் என அடம்பிடிக்கக்கூடும். பெரும்பாலான வீடுகளில் அம்மாதிரி நடக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தரும் குழந்தை வளர்ப்புக்கு பலரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி, குழந்தை அடம்பிடித்து பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் கேட்டால், வாங்கிக்கொடுங்கள். ஆனால், அதில் சூடான உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீர்கள். காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் செய்து கொடுப்பது, பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப அந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைப் பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள கேடுகளை அவர்களின் மொழிக்கு ஏற்ப சொல்லிக்கொடுங்கள். மாறாக, வலுக்கட்டாயமாக அதை மறுக்காதீர்கள். அப்படி மறுக்கும் விஷயங்கள் மீதுதான் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிமாகும். எனவே, கவனத்துடன் கையாளுங்கள்.
    இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:
    ஆன்லைன் வழியே பாடம் படிக்க தொடங்கியதில் இருந்து குழந்தைகளுக்கும், இணையதளத்திற்கும் இடையேயான நெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இணையதள வீடியோக்கள் வழியாக கல்வி சார்ந்த ஏராளமான விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதில் பொழுதை போக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் இணையதளம் வழியே நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைப்பது அவசியமானது. அதற்கான டிப்ஸ்:

    பல்வேறு ஆன்லைன் தளங்கள் குழந்தைகளை எளிதாக ஈர்த்துவிடுகின்றன. அதன் பின்னணியில் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அம்சங் களும் இருக்கின்றன. ஆன்லைனில் நல்ல விஷயங்களை பார்க்க அனுமதிப்பதுபோல தீய விஷயங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். எந்தெந்த ரூபத்தில் தீய விஷயங்கள் வெளிப்படும் என்பதையும், அதனை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதையும் பக்குவமாக புரியவைக்க வேண்டும்.

    பெரும்பாலான சிறுவர்-சிறுமியர்கள் தங்கள் நண்பர்களுடன் சமூக ஊடகங்களில் அரட்டை அடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. ஆரம்பத்தில் நடக்கும் விவாதமும், இணையதள தேடல்களும் நாளடைவில் தவறான பாதைக்கு அழைத்து செல்ல வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களுடன் முரண்பாடான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இணையதளத்தை உபயோகிக்கக்கூடாது என்பதில் பிள்ளைகள் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக எப்படியெல்லாம் தேவையற்ற விவாதங்கள், பிரச்சினைகள் முளைக்கின்றன என்பதை பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

    குழந்தைகள் தங்களுடைய பாஸ்வேர்டை சமூக ஊடகங்களிலோ, நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களுக்கு நம்முடைய பாஸ்வேர்டு தெரிந்துவிட்டால் என்னென்ன பிரச்சினைகளெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை விளக்கி கூற வேண்டும். பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது பற்றியும், அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் புரியவைக்க வேண்டும்.

    சமூக வலைத்தளங்கள் வழியே முன்பின் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கும் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகள் தங்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட அபிலாஷைகள், வசிப்பிடம் பற்றிய தகவல்களை பகிர்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. அதனால் என்னென்னெ பிரச்சினைகள் உருவாகும் என்பதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

    குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் கடமையும் பெற்றோருக்கு இருக்கிறது. யாராவது அருகில் வந்தால் உடனே இணைய தள பக்கத்தை மூடுவது, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லாதது போன்றவை பிள்ளைகள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாக அமையும். அதனால் இந்த விஷயத்தில் கவனத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும்.

    இணையதள சைபர் மிரட்டல் பற்றியும் பிள்ளைக்கு தெரியப்படுத்துங்கள். இது 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்றாகும். சைபர் மிரட்டல் என்பது கடுமையான குற்றமாகும். யாராவது மிரட்டினால் தயங்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பெற்றோர்- பிள்ளைகள் உறவு அமைய வேண்டும்.

    இணையதளம் எந்த அளவுக்கு நல்ல விஷயங் களை தெரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகிறதோ அதற்கு இணையான தீய பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் ஏராளம் நடக்கின்றன. எது சரி எது தவறு என்பதை தீர்மானிக்கும் பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தெடுங்கள்.
    சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
    மனிதனுக்கு என்று தனி அடையாளத்தை தருவது பேச்சுத் திறன்தான். அதை தெளிவாக உச்சரிக்க பற்கள் உதவுகிறது. பற்களின் அணிவகுப்பை வெள்ளைச் சிப்பாய்களின் அணிவகுப்பு என்று கூறலாம். சத்தான உணவை அரைத்து, சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவதுதான் இந்த வெண் சிப்பாய்களின் வேலை.

    பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.

    சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.

    பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.

    மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.

    ‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.
    கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.
    குழந்தைகள், மாணவர்கள், இளம் பருவத்தினர் உள்பட அனைவருக்கும் கால்சியம் சத்து அவசியமாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து அதிகம். காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் சத்து உள்ளது.

    கால்சியம் சத்து உடலில் சேர்வதால் எலும்புகள் வலுப்பெறும். குறிப்பாக குழந்தைகளும், இளம் வயதினரும் இளமைப்பருவத்தில் கால்சியம் நிறைந்த பால் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவது அவசியம் ஆகும். ஏனெனில் 18 வயதுக்குள் தான் எலும்புகள், பற்கள் நன்றாக வளர்ச்சி அடையும்.

    நரம்பு மண்டலம் உறுதியாக இருக்க கால்சியம் உதவும். இதே போன்று இதயம், இதய தசைகள் வலுப்பெறவும், உயர் ரத்த அழுத்த அளவினை குறைக்கவும் கால்சியம் அவசியம். பொதுவாக 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 மில்லி கிராம் அளவில் கால்சியம் சத்து தேவைப்படும்.

    அதே போன்று 4 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு 800 கிராமும், இளம் வயதினரான 9 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 1,300 மில்லிகிராமும், 19 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராமும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 1,200 மில்லிகிராமும், கர்ப்பிணி பெண்களுக்கு 1,300 மில்லிகிராமும் கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
    குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கான தரமான தகவல்கள் மற்றும் செய்திகளை தரக்கூடிய சில செயலிகளை பார்க்கலாம்.

    யூ-டியூப் கிட்ஸ் (youtube Kids):

    யூ-டியூப்பில் குழந்தைகளுக்கான காணொளிகள் இருந்தாலும் குழந்தைகள் அவற்றை பார்த்துக்கொண்டிருக்கும்போதே வேறுவிதமான காணொளிகளையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக யூ-டியூப் கிட்ஸ் செயலியை உபயோகிக்கலாம். இந்தச் செயலியின் சிறப்பம்சமே இதில் உள்ள பேரன்டல் கன்ட்ரோல்தான், குழந்தைகள் எதைப் பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை இதில் தீர்மானிக்க முடியும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னும் குழந்தைகள் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் செயலி தானாகவே லாக் ஆகிவிடும்.

    நாசா விசுவலைசேஷன் எக்ஸ்ப்ளோரர் (Nasa Visualization Explorer):

    நாசாவின் இந்தச் செயலியில் பூமியில் நிகழும் மாற்றங்கள், பால்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். பூமியில் மாறும் வெப்பநிலைகளால் எப்படி மாற்றம் நிகழ்கிறது, சூரியனுக்கு அருகில் செல்லும் செயற்கைக்கோள் எப்படி பாதிப்பு இல்லாமல் தகவல்ளை சேகரிக்கிறது போன்ற தகவல்களை அளிக்கிறது இந்தச் செயலி. அனிமேஷன் காணொளிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    கான் அகாடமி கிட்ஸ் (Khan Academy Kid):

    பிரபலமான கற்றல் செயலியான ‘கான் அகாடமி’யின் குழந்தைகளுக்கான செயலி கான் அகாடமி கிட்ஸ். இந்த செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. எண்கள் மற்றும் எழுத்துகள் கற்றுக்கொள்வது, குழந்தைகளுக்கான அடிப்படைக் கணிதம், ஆங்கில இலக்கியம் போன்றவற்றுக்கான காணொளிகளும் இடம்பிடித்துள்ளன. புத்தக வடிவிலும் தகவல்கள் இருக்கிறது. இது தவிர இயற்கை, விலங்குகள் போன்ற பள்ளிக்கல்வியை தாண்டி குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன.

    டைனி கார்ட்ஸ்(Tiny Cards):

    புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான செயலியான டுயோ லிங்கோவின் (Duo lingo) குழந்தைகளுக்கான செயலி டைனி கார்ட்ஸ். இதில் தகவல்கள் அனைத்தும் கார்டு வடிவில் இருக்கும். குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டு மட்டுமே இல்லாமல், ஒவ்வொரு தகவலுக்கு இடையிலும் கேள்விகளை, எப்படி உச்சரிப்பது மற்றும் மீண்டும் உச்சரித்துக் காட்டுதல் என புதுமையான கற்றல் முறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஹவ் டு மேக் ஓரிகாமி (How to make Origami):

    பேப்பரில் செய்யும் பொம்மைகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகம். பேப்பரில் செய்யும் இந்தக் கலைக்கு ஓரிகாமி எனப் பெயர். இந்தக் கலையின் சிறப்பம்சமே தாம் விளையாடும் பொம்மைகளை நாமே பேப்பரில் செய்துகொள்ளலாம் என்பது தான். இது மனதுக்கும் ஒரு விதமான புத்துணர்ச்சியை அளிக்கும். பொம்மைகளை எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியாதுதான். அதற்காகவே இருக்கிறது இந்த செயலி, ‘ஹவ் டு மேக் ஓரிகாமி’.
    ×