என் மலர்
குழந்தை பராமரிப்பு
அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும்.
குழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல. குழந்தை வளர்ப்புக்கு ஷார்ட் கட் ஏதும் இல்லை. அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமான வாழ்க்கையை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.
குழந்தைகளைத் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது என்றெல்லாம் நவீன குழந்தை வளர்ப்பு பிதாமகர்கள் அறிவியல்பூர்வமாக அறிவுரை சொல்லி வருகிறார்கள். எல்லாம் நன்றாக இருந்து சொர்க்கபூமியாக இருந்தால் அடிக்காமல், திட்டாமல் இருக்கலாம். அப்படியா இருக்கிறது நிலைமை? நம்மால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள், சமூகத்தில் பழகுவதால் ஏற்படும் கெட்ட பழக்கங்கள் எல்லாவற்றையும், கொஞ்சி பேசி சரி செய்ய இயலாது. லைட்டாகவேணும் , பயமுறுத்துவதற்காகவேணும் திட்டியோ, அடி பயம் காட்டியேதான் சாரி செய்ய வேண்டியுள்ளது. நம் காலத்து தந்தையைப் போன்று காட்டடியும் அடிக்க வேண்டாம். இந்த காலத்து மாடர்ன் தந்தை போல அடித்தாலும், ‘என்னடா செல்லம்’ என்று செல்லம் கொஞ்சியும் கெடுக்க வேண்டாம். நம் சூழலில், நம் சமுதாயத்தில், நம் குழந்தையை வளர்க்க நமக்கு யார் சொல்லிக் கொடுப்பது? தேவையா?
நம் குழந்தையை வளர்க்க நமக்குத் தெரியாதா? நமக்கு வளர்க்கவே தெரிய வேண்டாம். குழந்தை தானாகவே நன்றாக வளரும். நாம் அதை தொந்தரவு செய்யாமல், தட்டிக்கொடுத்து ஷேப் செய்தால் போதும். நம்முடைய கெட்ட எண்ணங்கள், கெட்ட பழக்கங்கள், சூது வாது, கள்ளம் கபடம் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிள்ளை வளர்ப்பு முடிந்தது.
நம் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொடுங்கள். யாரிடமும் வெறுப்பை வளர்க்காதீர்கள். எல்லோருடனும் பழக அனுமதிக்க வேண்டும். சாதி மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வளர்கிறார்களா என்று உறுதி செய்யுங்கள்.
இயற்கையாகவே நல்ல அறிவோடும், கிரியேட்டிவிட்டியோடும் வளரும் குழந்தையைப் பள்ளிக்கூட கல்வி மழுங்கடித்து மண்டாக்கப் பார்க்கும். அப்போது நாம் கொஞ்சம் தடுத்தாட்கொண்டு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். முற்றிலும் காப்பாற்ற முடியாது. சேதாரத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
சாரு நிவேதிதா ஒருமுறை எழுதி இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. “உன் குழந்தை முதல் மார்க் எடுத்ததற்கு நீ கொண்டாடினால், கம்மி மார்க் எடுத்த குழந்தையை மறைமுகமாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாவு என்றுதான் சொல்கிறாய்.”
எல்லோரும், தன் குழந்தை மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளையும் நம் குழந்தை என்று நினைக்க ஆரம்பித்து, அந்த மனப்பான்மை வந்தால் போதும். குழந்தை வளர்ப்பு எளிதாகி விடும்.
இந்த காமெடி கூத்துக்கள் தொடர்ந்து செல்லும்பட்சத்தில், விரைவில் யாரேனும் ஒரு ‘சூப்பர் மாம்’ என் குழந்தை ஆர்கானிக் குழந்தை என்று பெருமையாகச் சொல்லக்கூடும்.
குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.
அம்மா, அப்பா, தாத்தா, அத்தை போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் முதல் சொற்களாக வெளி வருகின்றன. ஆனால் அந்த பருவத்திலே அதையும் தாண்டி அறிவுத்திறனில் அசத்தும் அபூர்வ நினைவாற்றல்கொண்ட குழந்தைகளும் இருக்கின்றன.
“குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியை பொறுத்த வரையில், குழந்தை வளரும் குடும்பச்சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் மனப்பான்மையின் தாக்கமும் குழந்தையிடம் இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும்கூட தொடர்பு இருக்கிறது.
உயர்ந்த பொருளாதார பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் சிறு குழந்தைகளுக்கு பல வகையான வண்ணங்கள், வடிவங்கள், செயல்பாடுகள் கொண்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள். அவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகமாகி, மூளையில் பதிகின்றன. அதனால் குழந்தைகளின் சொல்லாட்சித்திறன் மேம்படுகிறது.
புதிய பொருட்களோடு விளையாடும்போது, குழந்தைகளின் சிந்தனைத்திறனும் வளர்கிறது. அதுவே ஏழைக்குடும்பத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், அத்தகைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த குழந்தைகளின் அறிதல் திறனும் சராசரியாகவே இருக்கும் நிலை உருவாகும். அதனால் பொருளாதார சூழ்நிலை சரியில்லாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளிஇடங்களுக்கு அழைத்துச்சென்று, வித்தியாசமான பொருட்களை காணும் வாய்ப்பினை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.
எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான். பெற்றோரின் வளர்ப்பு முறையில்தான் அதன் அறிதல் திறன் வளரும். சில வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளை பூங்காக்கள், விளையாட்டு மைதானம், கடைத்தெரு, திருவிழாக்கள், திருமணங்கள், உறவினர் வீடுகள் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். இவ்வாறு வளரும் குழந்தைகள் பல்வேறுபட்ட காட்சிகளை காணும்போது அவர்களுக்குப் பரந்த அனுபவம் கிடைக்கும். அதனாலும் அவர்களது அறிவுத்திறன் வளரும். குழந்தைப் பருவம் விளையாட்டுத்தனமானது. அதன் இயல்பில் விளையாட அனுமதிக்கவேண்டும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதாக கூறி குழந்தைகளை இயல்புக்கு மாறாக வதைக்கும் செயலை பெற்றோர் ஒரு போதும் செய்துவிடக்கூடாது”.
பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.
பத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அந்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. ‘செகண்டரி செக்சுவல் சிம்டம்ஸ்’ எனப்படும் மார்பக வளர்ச்சி, உறுப்பு பகுதியில் ரோமவளர்ச்சி போன்றவை சிறுமிகளுக்கு ஏற்படும் காலத்தில் அவர்களுக்கு பூப்படைதல் பற்றி சொல்லிக்கொடுக்க தொடங்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
இந்த உடலியல் மாற்றங்கள் பொதுவாக சிறுமிகளுக்கு 8 முதல் 9 வயதில் ஏற்படும். சிறுமிகள் பெண்ணாகும் இயற்கையான உடல் வளர்ச்சி மாற்றம்தான் பூப்படைதல் என்பதையும், அதை மனப்பூர்வமாக வரவேற்க தயாராக இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி, சிறுமிகளுக்கு தன்னம்பிக்கையூட்டவேண்டும். பூப்படையும்போது ரத்தம் போன்ற திரவம் வெளியேறும், அது இயற்கையானது என்றும் கூறவேண்டும்.
பின்பு மகளை, தாய் தன் அருகில் இருத்தி உடற்கூறு விஞ்ஞானம் பற்றி எடுத்துரைப்பது அவசியம். அதாவது ‘இன்னும் கொஞ்சகாலத்தில் நீ என்னைப் போன்று பெரிய பெண்ணாக வளரத் தொடங்கிவிடுவாய். குறிப்பிட்ட இடங்களில் ரோமம் வளரும். மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும்போது சிறிதளவு ரத்தம் வெளியேறும்’ என்பதை எல்லாம் நிதானமாக எடுத்துரைக்க வேண்டும். இவைகளை சொல்லிக்கொடுக்க நிறைய படங்களும், வீடியோக்களும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. மகளை அருகில் உட்காரவைத்து அதனைக் காட்டி விளக்குவது நல்லது. அப்போது ‘குட் டச்’ எனப்படும் நல்ல தொடுதல், ‘பேடு டச்’ எனப்படும் தவிர்க்கப்படவேண்டிய தொடுதல் பற்றியும் கூறிவிடலாம். உடையால் மூடப்பட்டிருக்கும் உடல் உறுப்பு பகுதிகளை மற்றவர்கள் தொடுவது மோசமான தொடுதல் என்றும், அதற்கு ஒருபோதும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்றும் கூறவேண்டும். இதன் மூலம் சிறுமிகள் பாலியல் வன்முறையில் சிக்காமல் பாதுகாக்கலாம்.
சில சிறுமிகள் தாய்மார்கள் இது பற்றி சொல்லிக்கொடுக்கும் முன்பே, பூப்படைதல் தொடர்பான விஷயங்களை கேட்கத் தொடங்குவார்கள். அப்போது ஒரு சில தாய்மார்கள் ‘இப்போது இதெல்லாம் கேட்கக்கூடிய விஷயமா?’ என்று நறுக்கென்று கடிந்துகொள்வார்கள். அப்படி கடிந்துகொள்ளக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, வயதுக்கு வருதல் பற்றிய அனைத்து தகவல்களையும் உடலியல் விஞ்ஞானபூர்வமாக விளக்கிச்சொல்ல முன்வரவேண்டும். அப்படி தாய்மார்கள் விளக்கிச்சொல்லாவிட்டால் அந்த சிறுமிகள், தவறானவர்களிடம் கேட்டு, தவறான தகவல்களை பெற்று குழம்பிப்போவார்கள்.
உடலியல் பற்றி சிறுமிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடைசொல்ல முடியாத நிலை சில தாய்மார்களுக்கு ஏற்படலாம். அப்போது அவர்கள், தங்களுக்கு தெரியாததை ‘தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளவேண்டும். பின்பு அதற்கான விடையை தங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து, மகளுக்கு விளக்கவேண்டும். இது தொடர்பான இயல்பான உரையாடல் தாய்- மகளுக்கு இடையே ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குள் தோழமை உணர்வு தோன்றிவிடும்.
மகள்கள் எழுப்பும் சில கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அப்போது கோபம் கொள்ளாமல், ‘உன் வயதில் நானும் இப்படிப்பட்ட கேள்விகளைதான் கேட்டேன். அதற்கு காரணம் நமது உடலை பற்றி நாம் அறியாமல் இருந்ததுதான். இப் போது நான் அம்மாவாகிவிட்டதால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன’ என்று கூறி, சிறுபிள்ளைத்தனமான அந்த கேள்விகளையும் எதிர்கொண்டு விளக்கம் அளிக்கவேண்டும்.
இப்போது பெரும்பாலான சிறுமிகள் அதிக உடல்வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். தங்களுக்கு ஜீன்ஸ் அணிவது சவுகரியமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் பூப்படையும் காலகட்டத்தில் சிறுமிகள் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படி தவிர்க்கவேண்டியதில்லை. பூப்படையும் காலகட்டத்திற்கும்- ஜீன்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் இறுக்கமான உடைகளை பெண்கள் தவிர்க்கலாம்.
இந்த உடலியல் மாற்றங்கள் பொதுவாக சிறுமிகளுக்கு 8 முதல் 9 வயதில் ஏற்படும். சிறுமிகள் பெண்ணாகும் இயற்கையான உடல் வளர்ச்சி மாற்றம்தான் பூப்படைதல் என்பதையும், அதை மனப்பூர்வமாக வரவேற்க தயாராக இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி, சிறுமிகளுக்கு தன்னம்பிக்கையூட்டவேண்டும். பூப்படையும்போது ரத்தம் போன்ற திரவம் வெளியேறும், அது இயற்கையானது என்றும் கூறவேண்டும்.
பின்பு மகளை, தாய் தன் அருகில் இருத்தி உடற்கூறு விஞ்ஞானம் பற்றி எடுத்துரைப்பது அவசியம். அதாவது ‘இன்னும் கொஞ்சகாலத்தில் நீ என்னைப் போன்று பெரிய பெண்ணாக வளரத் தொடங்கிவிடுவாய். குறிப்பிட்ட இடங்களில் ரோமம் வளரும். மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பூப்படையும்போது சிறிதளவு ரத்தம் வெளியேறும்’ என்பதை எல்லாம் நிதானமாக எடுத்துரைக்க வேண்டும். இவைகளை சொல்லிக்கொடுக்க நிறைய படங்களும், வீடியோக்களும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. மகளை அருகில் உட்காரவைத்து அதனைக் காட்டி விளக்குவது நல்லது. அப்போது ‘குட் டச்’ எனப்படும் நல்ல தொடுதல், ‘பேடு டச்’ எனப்படும் தவிர்க்கப்படவேண்டிய தொடுதல் பற்றியும் கூறிவிடலாம். உடையால் மூடப்பட்டிருக்கும் உடல் உறுப்பு பகுதிகளை மற்றவர்கள் தொடுவது மோசமான தொடுதல் என்றும், அதற்கு ஒருபோதும் யாருக்கும் வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்றும் கூறவேண்டும். இதன் மூலம் சிறுமிகள் பாலியல் வன்முறையில் சிக்காமல் பாதுகாக்கலாம்.
சில சிறுமிகள் தாய்மார்கள் இது பற்றி சொல்லிக்கொடுக்கும் முன்பே, பூப்படைதல் தொடர்பான விஷயங்களை கேட்கத் தொடங்குவார்கள். அப்போது ஒரு சில தாய்மார்கள் ‘இப்போது இதெல்லாம் கேட்கக்கூடிய விஷயமா?’ என்று நறுக்கென்று கடிந்துகொள்வார்கள். அப்படி கடிந்துகொள்ளக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, வயதுக்கு வருதல் பற்றிய அனைத்து தகவல்களையும் உடலியல் விஞ்ஞானபூர்வமாக விளக்கிச்சொல்ல முன்வரவேண்டும். அப்படி தாய்மார்கள் விளக்கிச்சொல்லாவிட்டால் அந்த சிறுமிகள், தவறானவர்களிடம் கேட்டு, தவறான தகவல்களை பெற்று குழம்பிப்போவார்கள்.
உடலியல் பற்றி சிறுமிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் விடைசொல்ல முடியாத நிலை சில தாய்மார்களுக்கு ஏற்படலாம். அப்போது அவர்கள், தங்களுக்கு தெரியாததை ‘தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளவேண்டும். பின்பு அதற்கான விடையை தங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து, மகளுக்கு விளக்கவேண்டும். இது தொடர்பான இயல்பான உரையாடல் தாய்- மகளுக்கு இடையே ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குள் தோழமை உணர்வு தோன்றிவிடும்.
மகள்கள் எழுப்பும் சில கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். அப்போது கோபம் கொள்ளாமல், ‘உன் வயதில் நானும் இப்படிப்பட்ட கேள்விகளைதான் கேட்டேன். அதற்கு காரணம் நமது உடலை பற்றி நாம் அறியாமல் இருந்ததுதான். இப் போது நான் அம்மாவாகிவிட்டதால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன’ என்று கூறி, சிறுபிள்ளைத்தனமான அந்த கேள்விகளையும் எதிர்கொண்டு விளக்கம் அளிக்கவேண்டும்.
இப்போது பெரும்பாலான சிறுமிகள் அதிக உடல்வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். தங்களுக்கு ஜீன்ஸ் அணிவது சவுகரியமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் பூப்படையும் காலகட்டத்தில் சிறுமிகள் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்கவேண்டும் என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படி தவிர்க்கவேண்டியதில்லை. பூப்படையும் காலகட்டத்திற்கும்- ஜீன்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் இறுக்கமான உடைகளை பெண்கள் தவிர்க்கலாம்.
பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பல் நோய்கள் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளை பொறுத்தவரை மிட்டாய்கள், சாக்லேட், குக்கீஸ்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவது பல் நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.
குழந்தைகளை தாக்கும் பல் நோய்களுக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்துகொள்ளும் வழிமுறை குறித்தும் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பற்சிதைவு ஏற்பட உணவு பழக்கம் மட்டுமே காரணம் அல்ல. பல்வலி, பல்லின் நிறத்தில் மாற்றம், ஏதாவது சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது வலி ஏற்படுவது, துர்நாற்றம், எதை சாப்பிட்டாலும் கசப்பாக இருப்பது, எதிர்பாராதவிதமாக எடை இழப்பு போன்றவை பற்களில் நோய்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் பல் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
குழந்தைகள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை விரும்பி சாப்பிட மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். இனிப்பு பலகாரங்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதனை குறைத்து ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கும் வழக்கத்தையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தினமும் இருமுறை பல்துலக்குவதற்கும் பழக்கப்படுத்த வேண்டும். இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்து அதன்படி செயல்பட வைக்க வேண்டும். காலை, மதியம், இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வைத்துவிட வேண்டும். பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் பற்களின் ஆரோக்கியத்தை காக்கலாம்.
அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
குழந்தைகள் தாயின் அருகாமையை எப்போதும் விரும்புகின்றன. தாய் தன் அருகில் இருந்தால் அவை நம்பிக்கையும், உற்சாகமும் கொள்கின்றன. தாய் தங்கள் அருகில் இல்லாவிட்டால் பயந்து அழத்தொடங்கிவிடுகின்றன. தாயின் அருகாமையை குழந்தைகள் வாசனையாலும், தொடுதலாலும் உணர்கின்றன.
எல்லா குழந்தைகளும், எப்போதும் அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்னஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
பாதுகாப்பு உணர்வோடு அம்மாவுடனே குழந்தைகள் தூங்க விரும்பும். அதே குழந்தைகள் பத்து வயதைக் கடக்கும்போது பிரச்சினைகள் உருவாகிறது. 15 வயதுக்கு மேலும் அப்படி அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் சிறுகுழந்தைகளை பெற்றோர் தங்கள் இரு வருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர் களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா-பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப் பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம் மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் ஏற்பட்டுவிடும்.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடு கிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நான்கு- ஐந்து வயது பருவத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
ஏழெட்டு வயதில் குழந்தைகள் சிறுவர்- சிறுமியர் என்ற பருவத்தை அடைகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனி யறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
எல்லா குழந்தைகளும், எப்போதும் அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்னஅசைவில் இருந்து கூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
பாதுகாப்பு உணர்வோடு அம்மாவுடனே குழந்தைகள் தூங்க விரும்பும். அதே குழந்தைகள் பத்து வயதைக் கடக்கும்போது பிரச்சினைகள் உருவாகிறது. 15 வயதுக்கு மேலும் அப்படி அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் சிறுகுழந்தைகளை பெற்றோர் தங்கள் இரு வருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர் களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா-பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப் பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம் மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்...இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் ஏற்பட்டுவிடும்.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடு கிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நான்கு- ஐந்து வயது பருவத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
ஏழெட்டு வயதில் குழந்தைகள் சிறுவர்- சிறுமியர் என்ற பருவத்தை அடைகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனி யறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதே தெரியவில்லை. குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அவைகளை கொல்லும் சம்பவங்களும் தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன” என்று குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விளக்குகிறார், முனைவர் ஆர்.ரமாதேவி. 48 வயதான இவர் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக உலகளாவிய நிலையில் செயல்படுபவர். கூடவே ஏராளமான நாடுகளுக்கு கல்விரீதியான பயணங்கள் மேற்கொண்டு, சர்வதேச அளவிலான கல்வியியல் ஆய்வுகளை மேற்கொள்பவர். பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் ஐக்கிய நாட்டு சபையிலும் உரையாற்றியிருப்பவர்.
‘உமன் அன்ட் சைல்டு கேர் இன்டர் நேஷனல்’ என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.ரமாதேவி, சமீபத்தில் லண்டனை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற ஆன்லைன் வானொலியில் ‘குழந்தைகளின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தினார். புதுமையான சிந்தனைகளும், புள்ளி விபரங்களும் கொண்ட அந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இவர் தேனியை சேர்ந்தவர். தற்போது சாத்தூர் ராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல் வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அவருடன் நமது உரையாடல் :
சமீபத்தில் நிகழ்த்திய லண்டன் ரேடியோ உரை பற்றி கூறுங்கள்?
“உலகளாவிய நிலையில் மாணவர்களுக்காக 24 மணிநேரமும் ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற வலைதள வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது. லண்டனை தலைமையகமாக கொண்டு ஒலிபரப்பும் அந்த வானொலியில் அவ்வப்போது மாணவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் ‘டாக் ஷோ’ நடக்கும். அதில் தற்போது நான் ‘குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் பெருவாரியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனாலும் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டுதானே இருக்கின்றன?
ஆமாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. அதில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி என்ற உறவுச் சங்கிலிகளின் பிணைப்பு இருந்தது. இப்போது தனிக்குடித்தனங்களாகிவிட்டதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
அத்தை, சித்தி, அக்காள் என்று உறவுகளோடு கலந்திருந்த ஆண்கள், இப்போது தனிமையாகி பெண்களை உறவினர்களாக பார்க்காமல் வெறும் உருவங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி எல்லோரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அவர்களை எளிதாக தடம்புரள வைத்துவிடுகின்றன. அதனால் காத்திருக்கும் மனநிலையை கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் விரைவாக அனுபவித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே உருவாகிவிடுகிறது. குழந்தைக்கு எதிரான வன்முறையில் அறிந்தோ அறியாமலோ பலர் ஈடுபடுகிறார்கள். ஒருசில குடும்பங்களில் பெற்றோராலே குழந்தைகள் பாதிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
“யூனிசெப் நிறுவனம் 53 சதவீத குழந்தைகள் பாலியல் தொந்தரவை கடந்தே வருகிறார் கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆண் குழந்தைகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் குழந்தைகளில், 95 சதவீதம் பேர் குடும்பத்திற்கு தெரிந்தவர்களாலே சூறையாடப்படுகிறார்கள். அதனால் குடும்ப மானம் பறிபோவதாக கூறி பெரும்பாலான புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிடுகிறது. 30 சதவீதம் குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைக்கிறது. நிறைய பேர் தப்பிவிடுகிறார்கள். யூனிசெப் அமைப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் எத்தகைய தவறான எண்ணங்கள் சமூகத்தில் இருப்பதாக கருதுகிறீர்கள்?
“பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். படிக்காத குடும்பத்து குழந்தைகளே பாதிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர், படிக்காதவர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் இதில் கிடையாது. எல்லா குழந்தைகளுமே பாலியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதுபோல் பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளாக பெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றரை வயது குழந்தைகூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அதனால் ஆடையையும் ஒரு காரணமாக கூறமுடியாது.
பெற்றோர், குழந்தைகளிடம் நட்போடு பழகி, அவர்களுக்கு பள்ளியில், வெளியிடங்களில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் மனம்விட்டு பேச வைக்கவேண்டும். பள்ளிப் பாடங் களோடு வாழ்க்கைத்திறன் சார்ந்த பாடங்களையும், பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொடுத்து எப்போதும் விழிப்புடன் நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். பாலியல் கல்வி வாயிலாக அவர்களுக்கு உடல் நலம், மனநலம், பாதுகாப்பு முறைகள் பற்றியும் கற்றுத்தருவது மிக அவசியம்” என்கிறார், முனைவர் ரமாதேவி.
‘உமன் அன்ட் சைல்டு கேர் இன்டர் நேஷனல்’ என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.ரமாதேவி, சமீபத்தில் லண்டனை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற ஆன்லைன் வானொலியில் ‘குழந்தைகளின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தினார். புதுமையான சிந்தனைகளும், புள்ளி விபரங்களும் கொண்ட அந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இவர் தேனியை சேர்ந்தவர். தற்போது சாத்தூர் ராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல் வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
அவருடன் நமது உரையாடல் :
சமீபத்தில் நிகழ்த்திய லண்டன் ரேடியோ உரை பற்றி கூறுங்கள்?
“உலகளாவிய நிலையில் மாணவர்களுக்காக 24 மணிநேரமும் ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற வலைதள வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது. லண்டனை தலைமையகமாக கொண்டு ஒலிபரப்பும் அந்த வானொலியில் அவ்வப்போது மாணவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் ‘டாக் ஷோ’ நடக்கும். அதில் தற்போது நான் ‘குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் பெருவாரியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனாலும் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டுதானே இருக்கின்றன?
ஆமாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. அதில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி என்ற உறவுச் சங்கிலிகளின் பிணைப்பு இருந்தது. இப்போது தனிக்குடித்தனங்களாகிவிட்டதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.
அத்தை, சித்தி, அக்காள் என்று உறவுகளோடு கலந்திருந்த ஆண்கள், இப்போது தனிமையாகி பெண்களை உறவினர்களாக பார்க்காமல் வெறும் உருவங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி எல்லோரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அவர்களை எளிதாக தடம்புரள வைத்துவிடுகின்றன. அதனால் காத்திருக்கும் மனநிலையை கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் விரைவாக அனுபவித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே உருவாகிவிடுகிறது. குழந்தைக்கு எதிரான வன்முறையில் அறிந்தோ அறியாமலோ பலர் ஈடுபடுகிறார்கள். ஒருசில குடும்பங்களில் பெற்றோராலே குழந்தைகள் பாதிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?
“யூனிசெப் நிறுவனம் 53 சதவீத குழந்தைகள் பாலியல் தொந்தரவை கடந்தே வருகிறார் கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆண் குழந்தைகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் குழந்தைகளில், 95 சதவீதம் பேர் குடும்பத்திற்கு தெரிந்தவர்களாலே சூறையாடப்படுகிறார்கள். அதனால் குடும்ப மானம் பறிபோவதாக கூறி பெரும்பாலான புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிடுகிறது. 30 சதவீதம் குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைக்கிறது. நிறைய பேர் தப்பிவிடுகிறார்கள். யூனிசெப் அமைப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் எத்தகைய தவறான எண்ணங்கள் சமூகத்தில் இருப்பதாக கருதுகிறீர்கள்?
“பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். படிக்காத குடும்பத்து குழந்தைகளே பாதிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர், படிக்காதவர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் இதில் கிடையாது. எல்லா குழந்தைகளுமே பாலியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதுபோல் பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளாக பெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றரை வயது குழந்தைகூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அதனால் ஆடையையும் ஒரு காரணமாக கூறமுடியாது.
பெற்றோர், குழந்தைகளிடம் நட்போடு பழகி, அவர்களுக்கு பள்ளியில், வெளியிடங்களில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் மனம்விட்டு பேச வைக்கவேண்டும். பள்ளிப் பாடங் களோடு வாழ்க்கைத்திறன் சார்ந்த பாடங்களையும், பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொடுத்து எப்போதும் விழிப்புடன் நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். பாலியல் கல்வி வாயிலாக அவர்களுக்கு உடல் நலம், மனநலம், பாதுகாப்பு முறைகள் பற்றியும் கற்றுத்தருவது மிக அவசியம்” என்கிறார், முனைவர் ரமாதேவி.
குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள். குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள். குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட முடியும். குழந்தைகள் பல விதம் உண்டு. குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களை கையில் எடுத்து கொஞ்ச தோன்றும். ஆனால், சில குழந்தைகள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல்தான் இருக்கும். வயிறு மட்டும் பெருத்து காணப்படும்.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடல் வீங்கி காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது. இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான். இந்த நிலையில் குழந்தையின் கல்லீரல் சிறிதளவு பாதிப்படையும். இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம், அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புறசூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும். இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும். குழந்தைகளின் ஞாபக திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியை தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.
கல்லீரலை பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதற்கு மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையை தூண்ட கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும்.
மேலும் வயிற்று கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்று பொருமல் மாறி ரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும். தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும். குழந்தை அன்பு, பாசம், பரிவு என எல்லாமே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும்.
இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும். முன்பு தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டே மாதத்தில் நிறுத்தி கொள்கின்றனர். இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். ஆனால், அது தவறான எண்ணமாகும்.
குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம், செயல், பாசம், பரிவு என்ற தாய்ப்பாசமும் அவசியமாகிறது.
ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடல் வீங்கி காணப்படும். இந்த பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும்.
இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது. இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடல் செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான். இந்த நிலையில் குழந்தையின் கல்லீரல் சிறிதளவு பாதிப்படையும். இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துகளை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம், அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புறசூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கில் நீர் வடிந்து கொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும். இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும். குழந்தைகளின் ஞாபக திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியை தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான்.
கல்லீரலை பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும். கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதற்கு மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையை தூண்ட கூடிய மருந்துகளை கொடுக்க வேண்டும்.
மேலும் வயிற்று கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்று பொருமல் மாறி ரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும். தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும். குழந்தை அன்பு, பாசம், பரிவு என எல்லாமே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும்.
இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும். முன்பு தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டே மாதத்தில் நிறுத்தி கொள்கின்றனர். இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். ஆனால், அது தவறான எண்ணமாகும்.
குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது. இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம், செயல், பாசம், பரிவு என்ற தாய்ப்பாசமும் அவசியமாகிறது.
அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
அம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம். அற்புதமான தாயாக விரும்பும் பெண்கள், மகள் சிறு வயதாக இருக்கும்போதே அதற்குரிய செயல்பாடுகளை தொடங்கிவிடவேண்டும்.
ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போதே மகளுக்குரிய நேரத்தை ஒதுக்க, தாயார் முன்வரவேண்டும். அவளது குட்டி உலகத்து கனவுகள், கற்பனைகளை எல்லாம் மனந்திறந்து, தன்னோடு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘என் அம்மாவுக்கு நான் ஒரு தேவதை. என் ஆசைகளை எல்லாம் என் அம்மா நிறைவேற்றி வைப்பார்’ என்ற நம்பிக்கையை அவளுக்கு உருவாக்க வேண்டும். உனக்கு ஒரு சோகம் என்றால், சாய்ந்து அழ என் தோள்கள் எந்நேரமும் காத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லாம் உங்கள் மகளை வளர்த்தாலும், அவள் 15 வயதை எட்டும்போது சூழ்நிலைகள் மாறத்தான் செய்யும். கோபம் கொள்வாள்; ஆத்திரப்படுவாள்; கலகம் செய்வாள். அப்போது அவளது அத்தனை செயல்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, அவளோடு சேர்ந்து தாயும் பிடிவாதம் பிடித்து போராட வேண்டியதில்லை. சில விஷயங்களை கண்டும் காணாததும்போல் கடந்து போய்விட வேண்டும். ‘டீன்-ஏஜில்’ இப்படித்தான் கலாட்டா செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு, அவ்வப்போது மெதுவாக தலையிட்டு மென்மையாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களை இதமாக கையாண்டால், 25 வயதில் மகள், தாயின் அன்பிற்குரிய தோழியாகிவிடுவாள்.
டீன்-ஏஜ் மகள்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அம்மாக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரிதான் இருக்கிறது. ‘அம்மா என் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறார். என்னை இப்போதும் சின்ன குழந்தைபோல் நடத்துகிறார். அவர் விரும்பியது போல்தான் நான் நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’ என்பதுதான்.
உண்மையில் ‘டீன்-ஏஜ்’ மகள்கள் மீது எல்லா அம்மாக்களும் அதிகபட்ச அக்கறை செலுத்துகிறார்கள். அந்த அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வெளிப்பாடு மகளுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மகள்களின் தோற்றம், அலங்காரம், செயல்கள் அத்தனையிலும் தாய்மார்கள் தலையிடக்கூடாது. மகள்களின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதே நேஇரத்தில் பிரச்சினைக்குரிய நட்புகள், பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்களில் தாயார் தலையிட்டுதான் ஆகவேண்டும்.
பெரும்பாலான அம்மாக்கள், தன்னைப்போலவே தன் மகளும் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தவறு. தன் மகளாகவே இருந்தாலும் அவள் இன்னொரு பெண். அவளுக்கென்று தனித்துவம் இருக்கும். அவளை அவளாக வளர அனுமதிக்கவேண்டும். ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு, அவளை அவளாக வளர அனுமதிப்பதுதான்.
மகளுக்கு, தாயார் பொறுப்புகளை வழங்கவேண்டும். எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்துவிட்டு, அதற்குள் அவளை கட்டுப்படுத்த முயற்சிக்காமல், முடிவுகள் எடுக்கும் வாய்ப்புகளை அவளுக்கு வழங்கவேண்டும். அவள் முடிவுகள் எடுத்த பின்பு அதில் இருக்கும் நிறைகுறைகளை அலசி, அடுத்தடுத்த முடிவுகளை சிறப்பாக எடுக்க அனுமதிக்கவேண்டும்.
மகளோடு தாய் அதிக நேரம் பேசவேண்டியதில்லை. ஆனால் அவளோடு இணைந்து அதிகநேரம் செயல்பட வேண்டும். அதன் மூலம் மகள் தனது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை தாயின் செயல்பாடுகளில் இருந்து பெறுவாள். அதிக எதிர்பார்ப்புகள் கொண்டவளாக மகளை வளர்த்து விடக்கூடாது. எல்லாவற்றிலும் யதார்த்தங்களை மகளுக்கு புரிய வைக்கவேண்டும். தாயும், மகளும் வெவ்வேறு மனிதர்கள். ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், குணாதிசயங்கள், கருத்துக்கள் இருக்கும். மகளிடம் இருக்கும் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தாய்மார்களிடம் இருக்கவேண்டும்.
ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போதே மகளுக்குரிய நேரத்தை ஒதுக்க, தாயார் முன்வரவேண்டும். அவளது குட்டி உலகத்து கனவுகள், கற்பனைகளை எல்லாம் மனந்திறந்து, தன்னோடு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ‘என் அம்மாவுக்கு நான் ஒரு தேவதை. என் ஆசைகளை எல்லாம் என் அம்மா நிறைவேற்றி வைப்பார்’ என்ற நம்பிக்கையை அவளுக்கு உருவாக்க வேண்டும். உனக்கு ஒரு சோகம் என்றால், சாய்ந்து அழ என் தோள்கள் எந்நேரமும் காத்திருக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லாம் உங்கள் மகளை வளர்த்தாலும், அவள் 15 வயதை எட்டும்போது சூழ்நிலைகள் மாறத்தான் செய்யும். கோபம் கொள்வாள்; ஆத்திரப்படுவாள்; கலகம் செய்வாள். அப்போது அவளது அத்தனை செயல்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, அவளோடு சேர்ந்து தாயும் பிடிவாதம் பிடித்து போராட வேண்டியதில்லை. சில விஷயங்களை கண்டும் காணாததும்போல் கடந்து போய்விட வேண்டும். ‘டீன்-ஏஜில்’ இப்படித்தான் கலாட்டா செய்வார்கள் என்பதை புரிந்துகொண்டு, அவ்வப்போது மெதுவாக தலையிட்டு மென்மையாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அடுத்த 10 வருடங்களை இதமாக கையாண்டால், 25 வயதில் மகள், தாயின் அன்பிற்குரிய தோழியாகிவிடுவாள்.
டீன்-ஏஜ் மகள்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அம்மாக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ஒரே மாதிரிதான் இருக்கிறது. ‘அம்மா என் மீது தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிக்கிறார். என்னை இப்போதும் சின்ன குழந்தைபோல் நடத்துகிறார். அவர் விரும்பியது போல்தான் நான் நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்’ என்பதுதான்.
உண்மையில் ‘டீன்-ஏஜ்’ மகள்கள் மீது எல்லா அம்மாக்களும் அதிகபட்ச அக்கறை செலுத்துகிறார்கள். அந்த அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த வெளிப்பாடு மகளுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மகள்களின் தோற்றம், அலங்காரம், செயல்கள் அத்தனையிலும் தாய்மார்கள் தலையிடக்கூடாது. மகள்களின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதே நேஇரத்தில் பிரச்சினைக்குரிய நட்புகள், பிரச்சினைக்குரிய பழக்க வழக்கங்களில் தாயார் தலையிட்டுதான் ஆகவேண்டும்.
பெரும்பாலான அம்மாக்கள், தன்னைப்போலவே தன் மகளும் வளரவேண்டும், வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தவறு. தன் மகளாகவே இருந்தாலும் அவள் இன்னொரு பெண். அவளுக்கென்று தனித்துவம் இருக்கும். அவளை அவளாக வளர அனுமதிக்கவேண்டும். ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு, அவளை அவளாக வளர அனுமதிப்பதுதான்.
மகளுக்கு, தாயார் பொறுப்புகளை வழங்கவேண்டும். எல்லா முடிவுகளையும் தாங்களே எடுத்துவிட்டு, அதற்குள் அவளை கட்டுப்படுத்த முயற்சிக்காமல், முடிவுகள் எடுக்கும் வாய்ப்புகளை அவளுக்கு வழங்கவேண்டும். அவள் முடிவுகள் எடுத்த பின்பு அதில் இருக்கும் நிறைகுறைகளை அலசி, அடுத்தடுத்த முடிவுகளை சிறப்பாக எடுக்க அனுமதிக்கவேண்டும்.
மகளோடு தாய் அதிக நேரம் பேசவேண்டியதில்லை. ஆனால் அவளோடு இணைந்து அதிகநேரம் செயல்பட வேண்டும். அதன் மூலம் மகள் தனது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை தாயின் செயல்பாடுகளில் இருந்து பெறுவாள். அதிக எதிர்பார்ப்புகள் கொண்டவளாக மகளை வளர்த்து விடக்கூடாது. எல்லாவற்றிலும் யதார்த்தங்களை மகளுக்கு புரிய வைக்கவேண்டும். தாயும், மகளும் வெவ்வேறு மனிதர்கள். ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், குணாதிசயங்கள், கருத்துக்கள் இருக்கும். மகளிடம் இருக்கும் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் தாய்மார்களிடம் இருக்கவேண்டும்.
வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் பொய் சொல்லக்கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். தங்கள் குழந்தை பொய்யே பேசாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஒருநாள், அந்தக் குழந்தை அடுக்கடுக்காய் பொய் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறார்கள். இது மிகவும் கவனிக்கத் தகுந்த விஷயம். குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் நம்புவதுபோல் காட்டிக்கொள்ளக்கூடாது.
முதலில் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக பொய் பேச ஆரம்பிப்பார்கள். அதன் பின்விளைவுகள் தெரியாமல், “என் பிள்ளை எவ்வளவு அழகாக பொய் பேசுகிறான் பாரு..” என்று சில பெற்றோர், குழந்தையை பாராட்டுவார்கள். அந்த பாராட்டு அவர்களை அடிக்கடி பொய் பேச வைக்கும்.
தான் சொல்லும் பொய்யை பெற்றோர்கள் நம்புகிறார்கள் என்று குழந்தை தெரிந்துகொண்டால், தொடர்ந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். நாளடைவில் சகஜமாக அவர்கள் வாயில் இருந்து பொய் வெளிப்படும். பின்பு தனக்கு கஷ்டமான வேலையை தவிர்க்க பொய் சொல்ல பழகிக் கொள்வார்கள். சின்னச்சின்ன தண்டனைகளில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு, பொய் ஒரு கவசமாக பயன்பட்டுவிடும்.
இதெல்லாம் தெரிந்ததும் பிள்ளையை, பெற்றோர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் தண்டனைகள் குழந்தைகளை திருத்துவதற்கு பதில், அவர்களிடம் வன்மத்தைதான் வளர்க்கும்.
பெற்றோர்கள் வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லை என்று சொல் என்று சிறுவர்களை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் மூளையில் அந்தப் பொய் பதிவாகி விடுகிறது. வேலை பார்க்கும் பெற்றோர்கள், தொலைபேசியில் மேலதிகாரியிடம் விடுமுறைக்காக விதவிதமாக பொய் சொல்கிறார்கள். அருகில் இருந்து கேட்கும் குழந்தைகள், அதையே தங்களுக்கும் பாடமாக்கிக்கொள்கிறார்கள்.
குழந்தைகளின் ஒழுக்கக் குறைவு ஆரம்பமாவதே பொய்யில் இருந்துதான். பொய் ஒரு சாதாரண விஷயமல்ல. ஒரு பொய்யை, ஒரு சிறுவனால் சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அதற்காக அவன் ஒரு கணக்கு போடுவான். எப்படி பொய் சொன்னால், யாரை ஏமாற்ற முடியும்? என்று ஆளுக்கு தக்கபடி பொய் சொல்லத் தொடங்குவான். அதில் வெற்றி பெற்றுவிட்டால், அந்த கணக்கு அவனுக்கு அத்துப்படியாகிவிடும். அதன் பின்பு சுவாரசியமாக அதை பற்றி சிந்தித்து, அந்த கோணத்திலே செயல்படத் தொடங்கிவிடுவான். அது அவனது எதிர்காலத்தையே சிதைத்துவிடும்.
பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லும்போதெல்லாம், உண்மையை ஏன் பேசவேண்டும்? என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும். உண்மையை சொல்லும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, நேர்மை போன்றவைகளை விளக்கவேண்டும். பொய் பேசும்போது மனதிலும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள், குற்ற உணர்ச்சி போன்றவைகளை எல்லாம் எடுத்துச்சொல்லவேண்டும். ஒவ்வொரு பொய்யாலும் ஒருவரோ, ஒரு குழுவோ பாதிக்கப்படும். ஒவ்வொரு உண்மையாலும் மனதுக்கு திருப்திகிடைக்கும் என்பதை விளக்குங்கள்.
அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன.
கொரோனாவால் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கும் குடும்பத்தினரால், சமூகத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்களின் சமையல் பணிகளில் ஆண்களும் இணைந்திருக்கிறார்கள். அதனால் சமையலில் இப்போது புது ருசி கிடைத்திருக்கிறது என்று குடும்பமே மகிழ்ந்துகொண்டிருக்கிறது.
பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. ஆண்களும் இனி அந்த வேலையை செய்ய பொறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என நம்பலாம்.
பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை. தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது.
மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறை அளித்து விடுகிறார்கள். அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன.
குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும்.
குழந்தைகளின் தேவை என்ன என்பது, எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாடுவதற்கான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும்.
குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகுவதன் மூலம்தான் அதற்கான அர்த்தத்தை உணர முடியும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள்’ என்று அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன.
கொரோனா தடை நீட்டிப்பு முடிவதற்குள், குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அப்பாக்களுக்கு தெரிந்து தான் ஆகவேண்டும். அதற்கும் இப்போதே தயாராகிவிடுங்கள்.
பெண்களின் வேலை என்று கருதப்பட்ட, குழந்தை வளர்ப்பிலும் கூட இனி மாற்றம் ஏற்படப்போகிறது. ஆண்களும் இனி அந்த வேலையை செய்ய பொறுப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் குழந்தை வளர்ப்பதிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என நம்பலாம்.
பொதுவாக குழந்தைகள் அப்பாவைவிட, அம்மாவிடம்தான் அதிக நெருக்கம் காட்டும். அது உடலியல், விஞ்ஞானம், தாய்மை ரீதியான உண்மை. தாயின் அரவணைப்பில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணரும். தாயின் பராமரிப்பில் இருக்கவே குழந்தைகள் பிரியப்படவும் செய்யும். ஆனால் காலத்தின் கட்டாயமாக அதை அப்பாக்களும் செய்ய வேண்டியதாகிவிட்டது.
மேலை நாடுகளில், குழந்தைகள் பராமரிப்பில் அப்பாக்களும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு, அமெரிக்காவில் இதற்கென ஆண்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இங்கு அப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக ஆஸ்திரேலியாவில் குழந்தை பிறந்தவுடன் அப்பாவிற்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுமுறை அளித்து விடுகிறார்கள். அதனால் மனைவியோடு சேர்ந்து கணவரும் குழந்தையோடு ஒட்டி உறவாடி பிணைப்பை உருவாக்குகிறார். நாளடைவில் அம்மாக்கள் பிரிந்து வேலைக்கு சென்றாலும், அப்பாவின் அருகாமை மூலம் குழந்தைகள் திருப்தியடைகின்றன.
குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, வெளியே உள்ள சத்தங்களை அதனால் உணர்ந்துகொள்ள முடியும். அதில் முக்கியமாக தாய் மற்றும் தந்தையின் குரலைதான் குழந்தைகள் அடிக்கடி கேட்டு உணர்ந்து கொள்கின்றன. பிறந்ததும் அந்த குரலுக்கு சொந்தமானவர்களை அறிந்து, அவர்களோடு நெருங்கிவிடும் தன்மை குழந்தைக்கு உண்டு. அதனால் அப்பாக்களிடம் குழந்தைகள் எளிதாக ஈடுபாடுகாட்டத் தொடங்கிவிடும். அந்த ஈடுபாட்டை மேம்படுத்தினால் குழந்தைகள் தந்தையின் அரவணைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளும்.
குழந்தைகளின் தேவை என்ன என்பது, எல்லா அப்பாக்களுக்கும் தெரிந்ததுதான். அவைகளுக்கு பசிக்கும்போது உணவு தேவை. விளையாடுவதற்கான சூழல் தேவை. தூங்க நினைக்கும்போது அதற்கான வாய்ப்பு தேவை. அவைகளை எல்லாம்விட, ‘அப்பா நம்மை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை அவசியம். இவை அனைத்தும் கிடைத்துவிட்டால், குழந்தை அப்படியே அப்பாவோடு ஒட்டிக்கொள்ளும்.
குழந்தை தனது எரிச்சலையோ, அசவுகரியத்தையோ அழுகை மூலம்தான் வெளிப்படுத்தும். அழுகை மட்டுமே அதன் தகவல் தொடர்பு. குழந்தை ஏன் அழுகிறது என்பதை கண்டுபிடிக்க அகராதி ஒன்றும் இல்லை. அதோடு பழகுவதன் மூலம்தான் அதற்கான அர்த்தத்தை உணர முடியும். பசிக்கான அழுகை, தூக்கத்திற்கான அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, எறும்பு கடித்தலுக்கான அழுகை, பயத்தினாலான அழுகை என்று எல்லாவற்றையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘அம்மாக்களிடம் மட்டுமே பொறுமை உண்டு என்று நினைப்பது தவறு. அப்பாக்கள் தங்கள் பொறுப்பை உணரும்போது அதிக பொறுமைசாலிகளாக ஆகிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த உணவு பிடிக்கவில்லை என்பதை அதன் முக மாற்றத்தால் அப்பாக்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. அம்மாக்களாவது, உணவை திணிப்பார்கள். அப்பாக்கள் திணிக்காமல் ருசிக்க வைப்பார்கள்’ என்று அப்பாக்களுக்கு பயிற்சி தரும் அமெரிக்க நிறுவனங்கள் சொல்கின்றன.
கொரோனா தடை நீட்டிப்பு முடிவதற்குள், குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அப்பாக்களுக்கு தெரிந்து தான் ஆகவேண்டும். அதற்கும் இப்போதே தயாராகிவிடுங்கள்.
குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். குறும்புத்தனத்துடன் நடந்து கொண்டவர்கள் வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள். பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறையத்தொடங்கும். அந்த சூழலை பெற்றோர் கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
* குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும். அழுகை குறைய தொடங்கியதும் அழைத்து அன்பாக பேசுங்கள். அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிடாதீர்கள். அதேவழக்கத்தை பின்தொடர்ந்துவிடுவார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.
* தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் இயல்புக்கு திரும்பியபிறகு விளக்கமாக சொல்லி புரியவையுங்கள். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தால் நீங்கள் பிடிவாதத்தை தளர்த்துவதில் தவறில்லை.
* சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அதுபோல் அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் அணுகுமுறையும் மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறி வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கோபம் கொள்ளும்போக்கு அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.
* குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். நாளடைவில் முக்கியமான விஷயங்களையெல்லாம் மறைக்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.
* குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள் வதில்லை. நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் குரோதம் வளராமல் இருக்க வழிவகுக்கும்.
* நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் ரசித்து ருசிப்பார்கள். காய்கறிகள், பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.
* செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்க தொடங்கிவிட்டன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவை குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், புதுமையாகவும் அமையும். உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்வதும் முக்கியம்.
* குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும். அழுகை குறைய தொடங்கியதும் அழைத்து அன்பாக பேசுங்கள். அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிடாதீர்கள். அதேவழக்கத்தை பின்தொடர்ந்துவிடுவார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.
* தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் இயல்புக்கு திரும்பியபிறகு விளக்கமாக சொல்லி புரியவையுங்கள். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தால் நீங்கள் பிடிவாதத்தை தளர்த்துவதில் தவறில்லை.
* சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அதுபோல் அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் அணுகுமுறையும் மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறி வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கோபம் கொள்ளும்போக்கு அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.
* குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். நாளடைவில் முக்கியமான விஷயங்களையெல்லாம் மறைக்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.
* குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள் வதில்லை. நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் குரோதம் வளராமல் இருக்க வழிவகுக்கும்.
* நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் ரசித்து ருசிப்பார்கள். காய்கறிகள், பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.
* செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்க தொடங்கிவிட்டன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவை குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், புதுமையாகவும் அமையும். உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்வதும் முக்கியம்.






