என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
    பெற்றோரின் கடமை பிள்ளைகளுக்கு சோறு போட்டு வளர்ப்பது, படிக்க வைப்பது, நல்ல உடை வாங்கிக் கொடுப்பது, பாதுகாப்பதோடு முடிந்துவிடுவதில்லை. புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.

    டீன்ஏஜ் பருவம் தனக்குள்ளே ஈகோவை வளர்த்துக்கொண்டு, தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் பருவம். பெற்றோர் சொல்லை மீறிப் பார்ப்போமே என்று தோன்றும். மொத்தத்தில் ‘பெற்றோர்கள்தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கு முதல் எதிரி’ என்று நினைக்கும் பருவம். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது இமாலய சாதனை. அதை செவ் வனே செய்து முடிக்க பெற்றோர் பெரும் முயற்சி எடுக்கவேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

    ராகவ் பள்ளியில் முதல் மாணவன். அது அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் கல்லூரியில் அந்த புத்திசாலித்தனம் எடுபடவில்லை. நாளுக்கு நாள் படிப்பில் பின்தங்கினான், ஆனால் படிக்கும் நேரம் குறையவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தான். பெற்றோர் குழம்பினர். கல்லூரியில் போய் விசாரித்தும் பார்த்தார்கள். தன் மகன்மேல் எந்தக் குறையுமில்லை. பிறகு அவனுடைய புத்தக பையை சோதனை போட்டபோதுதான் உண்மை புரிந்தது. அத்தனையும் கவர்ச்சி நிறைந்த ஆபாச புத்தகங்கள். தினமும் அதைத்தான் அவன் பார்த்து, படித்துக் கொண்டிருந்திருக்கிறான்.

    அதை படித்து எப்படி கல்லூரியில் மார்க் வாங்க முடியும்? என்று வருந்திய பெற்றோர், குடும்பநல மருத்துவர் உதவி யுடன் கவுன்சலிங் செய்து புரிய வைத்து, படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி திசை திருப்பிவிட்டனர்.

    இன்று ராகவ் பிரபலமான பொறியாளர். உயரமான கட்டிடத்தில் நின்று கடந்த காலத்தை நினைக்கும்போது அவனுக்கே அது ஆச்சரிய அனுபவமாக இருக்கிறது.

    மனீஷாவின் வயது 45. வெளிநாட்டில் வசிக்கிறாள். அலுவலகத்தில் பெரிய பதவி. கைநிறைய சம்பாதிக்கிறாள். வசதியான வாழ்க்கை. தன் ஒரே மகளை கல்லூரிக்கு அனுப்பும்போது ‘ஒழுங்காக படி. காதலில் ஈடுபட்டு வம்பை விலைக்கு வாங்காதே’ என்று அறிவுரை கூறிவைத்தாள். இப்படி மகளுக்கு அறிவுரை கூற காரணம், அவளுக்கு டீன்ஏஜில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்!

    மகளுக்கு அறிவுரை கூறும் இவள், கல்லூரியில் படிக்கும்போது ஊரே பயப்படும் ஒரு ரவுடியை காதலித்து, பெற்றோரை கதற வைத்தவள். பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு ரவுடியோடு ஓட நினைத்ததை இன்று நினைத்தாலும் அவள் உடல் நடுங்குகிறது.

    சினிமாப் படங்களில் வருவதுபோல் ‘நான் திருமணம் செய்துக் கொண்டு அவரை திருத்திவிடுவேன்’ என்று பெற்றோரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த சூழலில் ஒருநாள், அவன் எதிரிகளால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டான். அதன் பின்பு வந்த செய்திகள்தான், அவன் மகாகொடூரன் என்பதை அவளுக்கு உணர்த்தியது.

    பின்பு மகள் அந்த ஊரிலே இருந்தால் அவள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பெற்றோர், அவளுக்காக இன்னொரு ஊருக்கு குடிபெயர்ந்து போய்விட்டார்கள். சில ஆண்டுகளில் அவளுக்கு திருமணம் நடந்தது. கணவரோடு வெளிநாட்டிற்கு போய் வசித்தாள்.

    இப்போது கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு அவள் அறிவுரை கூறும்போது, இவளுக்காக அம்மா-அப்பா நடத்திய போராட்டம், கதறல், அறிவுரை, தியாகம் எல்லாம் ஒன்றன்பின்ஒன்றாக நினைவுக்கு வந்தது. அவளை பொத்திப் பொத்தி காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள். இன்று தன் மகள் டீன்ஏஜில் இருக்கும்போது இவளும், தன் தாயைப்போல் பதற்றம் அடைகிறாள்.

    டீன்ஏஜ் என்பது ஒரு மேஜிக் பருவம். காதல் கண்ணை மறைக்கும். அப்போது அறிவு மங்கும். கடந்து வந்த பிறகு தான் விழவிருந்த அதலபாதாளத்தின் அளவு தெரியும்.

    பிள்ளைகள் டீன்ஏஜ் பருவத்தை அடையும்போதுதான் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. பொறுமையும் அவசியமாகிறது.

    பக்குவப்பட்ட அறிவு நம்மை வழிநடத்தும். பக்குவப்படாத செயல்கள் நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்!
    குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    தாய்மார்களில் பலர், ‘15 வயதைக் கடந்த பின்பும் தங்கள் பிள்ளைகள் தனியறையில் தூங்குவதில்லை. இரவில் தங்களுடனே படுக்கையை பகிர்ந்து கொள்கின்றன’ என்கிறார்கள். தங்கள் பிள்ளைகளை எந்த வயதில் தனி அறையில் தூங்க வைப்பது? என்றும் கேட்கிறார்கள்.

    குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப்பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

    சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரலை கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ’குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்தபட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.

    குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்க வைக்கும் எண்ணத்துக்கும் வந்து விடுகிறார்கள்.

    இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலில் இருந்து தப்பித்து விடுகிறது.

    ஆனால் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    நான்கு, ஐந்து வயதுகளில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

    7,8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.

    இதிலும் சிலர் டி.வி.யில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன பேய் கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்போது ஸ்மார்ட் போன் தொந்தரவு வந்துவிட்டதால், தங்கள் பிள்ளைகளை தனியறையில் தூங்கவைத்தால் திசைமாறிபோய் விடுவார்களோ என்று பெற்றோர் அஞ்சுகிறார்கள். ஆனாலும் சரியான கண்காணிப்போடு 15 வயதுகளில் பிள்ளைகளை தனியாக தூங்கவைப்பதே நல்லது.

    பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது.
    பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது. 

    தாயின் கருவறையில் கருவாகும் அனைத்துக் குழந்தைகளையும் 37 வாரங்கள் வரை கவனமாகக் காப்பாற்றி, பின்னர் 37-லிருந்து 40 வாரங்களுக்குள் முழுமை அடைந்த நிறைமாதக் குழந்தையாகப் பிறந்திட உதவ வேண்டும். அப்படிப் பிறக்கவிருக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் கருவறைக்கு உள்ளேயும், பிறந்த பின்னரும், பெரும் சவால்கள் காத்திருக்கும்.

    கருவறைத் தொற்றுகள், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் பாதித்த தாய்மார்கள், குறைமாதப் பிரசவம், பிரசவ நேர உபாதைகள், சிசு பிறந்ததும் நடந்திடும் முதல் சுவாசக் கோளாறுகள், பிறந்த பின்னர் வந்திடும் சிசுத் தொற்றுநோய்கள் எனப் பல உயிர் போராட்டங்களுக்கு இடையேதான் பிறக்கும் பல குழந்தைகள் ஜீவிக்கத் தொடங்குகின்றன.

    1. தாய் கருவறைத் தொற்றுகள் - முறையான மாதாந்தர மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தடுக்கலாம்.

    2. கர்ப்பகால சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் என்பது சில தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்னை. இவற்றுக்குத் தக்க நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனை பெற்று வந்தால், கருவிலிருக்கும் குழந்தைக்குப் பாதிப்புகள் பெரிதாய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    3. பிறந்ததும் அழாத, மூச்சுவிடாத குழந்தை அதனால் ஏற்படும் மிகப்பெரும் உயிர் அபாயத்துக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் அதிலும் முக்கியமாகப் பக்கவிளைவுகள் எதிர்பார்க்கப்படும் பிரசவங்களுக்கு, சிசு மருத்துவம் பயின்ற, அனுபவம் பெற்ற சிறப்பு பச்சிளங்குழந்தை மருத்துவர் கொண்டு பிரசவம் பார்த்தல் நலம். பிறந்து 10 நிமிடங்களுக்குள் இத்தகைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தற்கால நவீன மருத்துவ யுக்திகள் கொண்டு குழந்தையைப் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்க முடியும்.

    4. சிசு உயிர் காக்கும் அனைத்து வசதிகள்கொண்ட மருத்துவமனைக்குத் துரிதமாகக் கொண்டு சென்று, பிரசவம் பார்த்து, சிசு தீவிர சிகிச்சை மையத்தின் உயர் பாதுகாப்பில் பராமரித்து, குறைமாதக் குழந்தைகளைக்கூட நவீன விஞ்ஞான மருத்துவத்தின் தொடர் வளர்ச்சியால் எளிதாய் காப்பாற்றிட முடியும்.

    5. சிசு அபாய தொற்றுகளுள், குழந்தை பிறந்த முதல் 28 நாள்களில் சிசுக்களுக்கு ஏற்படும் தொற்றுகள் மிக மோசமானவை. அவற்றை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரியான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அந்தக் குழந்தைகளையும் பெரும் பாதிப்புகளின்றிக் காப்பாற்ற முடியும்.

    பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான சிசு மருத்துவ வசதிகள் கொண்ட, நிறைவான சிசு உயர்சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனையில், கைதேர்ந்த மகப்பேறு மருத்துவர் மேற்பார்வையில், முறையாகப் பயின்ற சிசு மருத்துவர் உதவியுடன் பிறப்பது... குழந்தைக்கும் அதன் பாதுகாப்புக்கும் நல்லது.
    பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும்.

    குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை பழக்கங்களை வளர்ப்பது முக்கியம். உண்மையில் பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை நம் உடல் நலத்திற்கு முக்கியமானவை. உதாரணமாக, ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிகள் மற்றும் பீச், சர்க்கரை, பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்கள் உடலுக்கு நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அழுக்கு அல்லது இரசாயனங்களை அகற்றுவதற்கு இந்த பழங்கள் உதவும். உருளை மற்றும் சேனைக்கிழங்கு, உடல் எடை அதிகரிக்க உதவும். நேந்திரம் பழம், மலை வாழை, கூழாஞ்செண்டு மட்டி கோழிக்கூடு வகை வாழைப்பழங்கள் குழைந்தைகளுக்கு நல்லது. நம் ஊர் சிவப்பு கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை மற்றும் மாம்பழம் போன்றவை மிகவும் நல்லது.

    நீங்கள் உணவை சமைக்கும்போது, சமையலுக்கான பொருட்களை குழந்தைகளுடன் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஒரு மேசையை அமைக்கவும், அதில் சமையலுக்கு தேவையான எளிய வேலைகளை செய்து தருமாறு அவர்களை பணிக்கவும். அதோடுகூட பிற ஒத்த விஷயங்களுக்கும் உதவுமாறு உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். உங்கள் குழந்தைகள் அவர்கள் தயாரிக்க உதவிய உணவை சாப்பிடுவார்கள் அப்போது அவர்களை உற்சாகமூட்டி அவர்கள் உதவிய உணவின் நன்மைகளை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

    பொதுவாக குழந்தைகளுக்கு சாதம் கொடுக்கும் போது, அவர்களுக்கு முதலில் அளவாக உணவைப் பரிமாறவும். இதனால் உணவு வீணாவதைத் தடுக்கலாம். சில குழந்தைகள் உணவு உண்ணும் போது அடம்பிடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்க வேண்டுமெனில், குழந்தை உண்ணும் போது, குழந்தையின் நண்பனை அழைத்து உடன் இருக்க வையுங்கள். அவர்கள் இருக்கும் போது, குழந்தைகளும் சமத்தாக அவர்களுடன் உணவை உண்ண வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பிடித்த உணவில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள். உதாரணமாக, நீங்கள் பர்கரில் உருளைக்கிழங்கு சோயாவை சேர்த்து ஆரோக்கியமான உணவாக மாற்றலாம். மேலும் உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை பாலில் சேர்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லேட் பவுடருடன் சேர்த்து அளியுங்கள்.

    குழந்தைக்கு பிடித்த உணவு வகைகளில் குறைந்தது ஒரு வகையையாவது குழந்தையின் தினசரி உணவில் சேருங்கள். ஒரு புதிய பிளானை உருவாக்குங்கள். உணவு மேஜை மேல் இருக்கும் அனைத்து உணவையும் சிறிதளவு ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் அந்த பிளானாக இருக்க வேண்டும். இதனால் உங்கள் குழந்தை அனைத்தையும் ருசித்து பார்க்கும். ஆனால் குழந்தை உண்ணும் அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

    ஆரோக்கியமான உணவுகள் என்பதில் குறிப்பாக பழங்கள், ஆக்கத்திறனை உண்டாக்கும் சாலட்கள் மற்றும் உப்பு சேர்க்காத கடலை பருப்புகள் போன்றவைகளை மட்டுமே வீட்டிலே செய்து அவர்களுக்கு கொடுங்கள். அவித்த சோளம், பாப் கார்ன், காய்கறிகள் சேர்த்த பன்னீர் சாண்ட்விச், கொண்டைக்கடலை, மற்றும் மோர் போன்ற குறைவான கலோரிகள் நிறைந்த உணவு வகைகளை தெரிந்து வைத்திருங்கள். இதனால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உயர் ஃபைபர் ரொட்டி, அரிசி, கோதுமை, கஸ்கஸ், பாஸ்தா, சோளம், கோதுமை அப்பங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை தானியங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள். உணவு நேரத்திற்கு முன் குழந்தைகளுக்கு பசி எடுத்தால், ஜங்க் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, பழங்கள் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்துச் சாப்பிடுவதால் அவை மிக எளிதாகச் செரிமானமாகும். உணவுக்கும், குணத்துக்கும் நெருங்கிய நேரடி தொடர்பு உண்டு. இயற்கை உணவுகளால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனமும் அமைதி பெறும். அதிக சத்துகள் கொண்ட இயற்கை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க துணைபுரியும். பள்ளி செல்லும் பல குழந்தைகள் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் இல்லாததால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் சத்தான இயற்கை உணவுகள் இடம்பெறச் செய்தால் நிச்சயம் அவர்களது உடல் நலம் சீராகும். நீங்கள் அளிக்கும் உணவை அவர்கள் விரும்பி உண்பார்கள்.

    ’ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? என்ற சந்தேகத்திற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் கூடிய ஒரே பொருள் ஹெல்த் மிக்ஸ்தான். கோதுமை, ராகி, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக இருப்பார்கள்.

    கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரோட்டீன் என எல்லாம் கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு.

    இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும். நல்ல தரமான மிக்ஸை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். வீட்டில் நாமேகூட செய்து கொள்ளலாம்.

    ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, வறுத்த கடலைப்பருப்பு, சிவப்பரிசி, கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம், கொள்ளு, மொச்சை, கம்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, வறுத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடியாக்கிக் கலந்து வைத்து பயன்படுத்தலாம்.
    குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
    இந்த நவீன உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள்.

    பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால், பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும் டயப்பரை அணிவிக்க வேண்டும்.

    இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த அடிப்படைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

    குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு ‘பேபி மௌத் வாஷ்’ கூட பயன்படுத்தலாம்.

    குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

    குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

    குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

    குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

    குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

    குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

    குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.
    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர்.
    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

    ஓடிடிஸ் மீடியா (Ottitis media):

    குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் தொற்று ஓடிடிஸ் மீடியா. இது பெரும்பாலும் யூஸ்டாசியன் டியூப்  (Eustachian tube malfunction) செயல் இழப்பதால் ஏற்படுகிறது. நடுக்காதையும் உள்மூக்கின் மேல்பகுதியையும் இணைக்கும் குழல்தான் யூஸ்டாசியன் டியூப். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளில் இந்த யூஸ்டாசியன் டியூப் அமைந்திருக்கும் நிலை காரணமாகக் குழந்தைகளில்  ஓடிடிஸ் மீடியா  அதிகம் ஏற்படுகிறது எனலாம்.

    குழந்தைகளுக்கு இந்தக் குழாய் செங்குத்தாக இருப்பதால் தொற்று எளிதாகப் பரவி நடுக்காது பகுதிக்குப் பரவக்கூடும். இதனால் தண்ணீரோ அல்லது திரவமோ நடுக்காதில் சேர வாய்ப்பு உள்ளது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். குழந்தை வளர்ச்சியின் காரணமாக கிடைமட்ட நிலைக்கு மாறுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    * கண்டக்டிவ் ஹியரிங் லாஸ் (Conductive hearing loss): ஒலியானது வெளியே இருந்து உள் காதுக்குச் செல்லும் பாதையில் ஏற்படும் தடையை `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்' என்பார்கள். எடுத்துக்காட்டாக அந்நியப் பொருள்கள் பாதையை அடைப்பது (Foreign wax) மற்றும் அழுக்கு சேர்வது (Ear wax).

    * சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ் (Sensori -neural hearingloss): காக்ளியா அல்லது உள்காதிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பே, ,`சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ்' ஆகும். காக்ளியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாக வரும் செவித்திறன் குறைபாடு, இந்த வகையைச் சார்ந்ததாகும்.

    சிகிச்சை முறை

    * காதில் தொற்று ஏற்பட்டால், செவித்திறன் பரிசோதனை வல்லுநர் மூலம் மட்டுமே செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் செவித்திறன் குறைபாட்டின் தன்மைக்கேற்ப காதொலிக் கருவிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு இலவசமாகவே காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    *காக்ளியர் இம்ப்ளான்ட்

    காக்லியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாகப் பிறவிக்கேள்விக் குறைபாடு ஏற்படக்கூடும் .குழந்தைகள் பேச்சுத்திறனிலும் மொழித் திறனிலும் பின்தங்கிக் காணப்படுவார்கள். இந்நிலையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை (உள்காது நரம்பியல்) மூலம் கேட்கும் திறனை முழுமையாகப் பெற முடியும். 
    குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.
    செவித்திறன்தான், குழந்தைகளின் பேச்சுத்திறனுக்கும் மொழித்திறனுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன்படி செவித்திறனற்ற அல்லது செவித்திறன் பாதித்த குழந்தைகள் மொழித் திறன் மற்றும் பேச்சுத்திறனில் பின்தங்குகிறார்கள்.  எவ்வளவு சிறுவயதில் செவித்திறன் பாதிப்பு கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை மேற்கொண்டு குழந்தைகளின் வளர்ச்சியைச் சீராக்கலாம். கை, கால் பாதிப்புகளை சுலபமாகக் கண்டறிந்துவிடலாம். ஆனால் செவித்திறன் குறைபாட்டை பெரும்பாலான பெற்றோர் கண்டறிய  தவறுகின்றன.

    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

    குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டிருந்தால் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் பேச்சும் மொழியும் குழந்தையின் மூளையைச் சென்றடையாது. ஆனால், மூன்று வயதான நிலையில், தங்கள் குழந்தை பேசவில்லை என்றவுடன் பெற்றோர் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவார்கள். 

    இவை அனைத்தையும் கடந்தே சில பெற்றோர் செவித்திறன் சார்ந்த சிகிச்சைக்காகச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் பலரும் காலங்கள் கடந்தே செல்கின்றனர். இதனால் அந்தக் குழந்தையின் மொழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைவிடப் பின்தங்கி நிற்க நேரும். இதனால் பள்ளியில் சேர்வதிலும் சிக்கலை உண்டாக்கும்.

    கருவறையில் 20-வது வாரத்தில் இருந்தே குழந்தை கேட்கும் திறனைப் பெற்று விடுகிறது. உள்காதின்‌ செவித்திறன் சார்ந்த முக்கிய உறுப்பான காக்ளியா (Cochlea) அப்போது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. எனவே, பிறப்பதற்கு பல நாள்கள் முன்பிருந்தே குழந்தை, கேட்கத் தொடங்கி விடுகிறது.

    செவித்திறன் சார்ந்த வளர்ச்சிப் படிநிலை:

    குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.

    * பொதுவாக, முதல் மூன்று மாதத்தில் 50-ல் இருந்து 60 டெசிபல் சத்தம் கேட்டு குழந்தைகள் அனிச்சையான செயலை வெளிப்படுத்துவர். அதாவது திடீர் சத்தம் கேட்டு கண்களைச் சுருக்குவது, சிமிட்டுவது அல்லது தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது, அழுவது என குழந்தைகளிடம் சில இயல்பான நடவடிக்கைகளைக் காண முடியும்.

    * நான்கு முதல் ஒன்பது மாதங்களில் சத்தம் கேட்கும் பக்கம் குழந்தை தங்கள் தலையைத் திருப்ப முயற்சி செய்யும். நான்காவது மாதத்தில் 40-ல் இருந்து 50 டெஸிபல் சத்தத்துக்கு தலையைத் திருப்பிய குழந்தை, ஒன்பதாவது மாதத்தில், 25-35 டெசிபல் சத்தத்துக்கே தலையைத் திருப்பும்.
    * 10-வது மாதம்/ஒரு வயதில் - சரியாக சத்தம் வரும் இடத்தைக் கண்டுபிடித்து அந்தப் பக்கமாகத் தலையைத் திருப்புவார்கள். மிகச்சிறிய சத்தத்தையும் எளிதில் கண்டறிவார்கள்.
    குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்!
    குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன?

    அவற்றை எந்தெந்தக் கால கட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை தேவை.

    தடுப்பூசி

    நோய்த் தடுப்பு என்பது, தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. நோய்க் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும் போது அதை அழிக்கிற வேலையைப் பார்ப்பவை இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் தான். சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் அது போன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலில் இருந்து என்று விழிப்புடன் நம்மைப் பாதுகாக்கிறது.

    சில நோய்த் தாக்குதலைச் சமாளிக்க செயற்கையான நோய்த் தடுப்பு மருந்துகளும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவைதான் தடுப்பூசிகள்!  இப்படி உடலுக்குள் செலுத்தப்படும் நோய்த் தடுப்பானது நோய்க் கிருமி தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

    முதன் முதலில் பெரியம்மைக்குத் தான் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. 

    தடுப்பூசிகள் போடுவதற்கான காரணங்கள்

    தடுப்பூசி நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்கிறது! தவிர, நோய்த் தொற்றுக்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் கால தலை முறையைப் பாதுகாக்கிறது. நம் குடும்பத்தின் நேரம், பணத்தை மிச்சப்படுத்துகிறது.

    ஒரு காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த போலியோ, அம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகளால் பெருமளவு ஒழிக்கப்பட்டன!

    குழந்தைகளைத் தாக்கும் நோய்த் தொற்றில் இருந்து காப்பதோடு மட்டுமல்ல, குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பதில் இருந்தும் தடுப்பூசிகள் தான் தற்காக்கின்றன.

    என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? பிறந்தவுடன்…

    குழந்தைப் பிறந்ததும் காசநோய்க்கு பி.சி.ஜி., போலியோவுக்கு ஓ.பி.வி., ஹெபடைடிஸ் பி வைரஸுக்கு எச்.பி.வி. அளிக்கப்படுகின்றன.

    குழந்தை பிறந்ததும் மருத்துவமனைகளே குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்துகளை அளித்துவிடுவதால் கவலையில்லை.
    பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சுவைகளில் மருந்துகள் வருகின்றன.

    பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும் 

    அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?

    1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.

    2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.

    3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.

    4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக் குக் கொடுக் கலாம்.

    குறிப்பு :

    டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.

    இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (Care should be taken not to overdose.).

    மருந்து கொடுக்கும் முறை:

    1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி (Lowering the children's heads), நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது (Do not give medications while lying upright.).

    2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக்கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

    3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.

    4. வலிப்பு (Fits) உள்ள குழந்தைக்கு (For a child with epilepsy,), வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது (Do not give the drug in case of seizures.).

    5. காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, மருந்து கொடுக்கும் போது, தேன் கலந்து தரக் கூடாது. காசநோய் மருந்துகளில் உள்ள உட்பொருளான ஐசோனியா சிட்டின் வீரியத்தை, தேன் குறைத்து விடும்.

    பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.

    மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவது மிகவும் நல்லது (It is best to consult a doctor and eat accordingly.).
    இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும்.
    இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும். அப்படி எந்த பொருள்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

    வறட்டு இருமல் எதனால் உண்டாகிறது என்பதை முதலில் அறிந்துகொள்வோம். சிலருக்கு சளி இருக்கும் போதும் வறட்டு இருமல் உண்டாகும். ஃப்ளூ வைரஸாக இருந்தாலும் வறட்டு இருமல் வரக்கூடும். பிள்ளைகளுக்கு வாசனை அலர்ஜி பிரச்சனை, புகை போன்றவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு வறட்டு இருமலை எப்படி போக்குவது என்பதை தெரிந்துகொள்வோம்.

    ​குழந்தைகளுக்கு ஆவி பிடிக்க வைக்க முடியாது. ஆனால் வளரும் பிள்ளைகள் ஓரளவு சூட்டை தாங்ககூடியவர்கள். எனினும் பெரியவர்களை போன்று பிடிக்க வேண்டியதில்லை. வெந்நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கல் உப்பு அதோடு சிறிதளவு யூகலிப்டஸ் தைலம் அல்லது இலைகளை சேர்த்து வாய்குறுகிய பாத்திரத்தில் வைத்து அறையின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு பாத்திரம் அருகில் ஒரு அடி அல்லது இரண்டு அடி தள்ளி பிள்ளையை அமர்த்திகொள்ளுங்கள். அறையில் ஃபேன் போட வேண்டாம்.

    வெளிக்காற்று வருமளவு ஜன்னலையும் திறந்துவைக்காமல் மூடி வையுங்கள். இவை பிள்ளைகளின் சுவாசக்குழாய் வரை சென்று அடைப்பை நீக்கும். மூச்சு சீராக இருக்கும். வறட்டு இருமல் குறையதொடங்கும். தினமும் ஒருமுறை என ஐந்துநாட்கள் இப்படி செய்தால் போதும். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முதல் இதை செய்யலாம். ஆனால் கவனமாக குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ​மசாலா உணவுகளில் பயன்படுத்தும் பட்டை உண்மையில் அருமருந்து தரக்கூடியது என்று சொல்லலாம். வாசனைக்காக மட்டும் இதை உணவுகளில் சேர்ப்பதில்லை. பட்டை நுரையீரலில் இருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. நுரையீரலில் அடைப்பு இருப்பவர்கள் பட்டையை மற்ற வைத்திய பொருள்களுடன் பயன்படுத்தினால் வறட்டு இருமல் காணாமல் போகும். சளி, இருமலுக்கு நல்ல மருந்து பட்டை என்று சொல்லலாம். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தேன் கலந்துகொடுக்கலாம். அரை டீஸ்பூன் பட்டைதூளை அரைடீஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை கொடுத்துவந்தால் இருமல் சரியாகும்.

    ​மஞ்சள் என்பது கிருமி நாசினி. ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பதால் இவை எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். சாதாரணமாகவே வாரம் ஒருமுறையாவது மஞ்சளை பாலில் கலந்து கொடூத்தாலே வளரும் பிள்ளைகளுக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். வறட்டு இருமல் காலங்களில் மஞ்சள் இருமலை போக்கும்.

    பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். தொடர்ந்து ஒருவாரம் வரை கொடுத்தாலே போதுமானது. நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

    வறட்டு இருமலுக்கு இளஞ்சூடான வெந்நீரை காட்டிலும் சீரகம் வைத்த நீரை கொடுக்க வேண்டும். 2 லிட்டர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்க்கவேண்டும். சீரகத்தை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் கொட்டி ஆறவிடவும். பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் சரியாகும் வரை சீரக தண்ணீரை மட்டுமே கொடுக்க வேண்டும். நீரை மேலாக வடிகட்டியும் கொடுக்கலாம்.

    பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் ஏற்பட்ட காலங்களில் இரவு தவிர்த்து மற்ற நேரங்களில் சத்துகஞ்சி, சத்து பானம், பால், டீ, காஃபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக காய்கறிகள் வேக வைத்து மிளகுத்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து இளஞ்சூட்டில் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தினமும் ஒரு கப் அளவு கொடுக்க வேண்டும். அசைவம் பழகிய பிள்ளைகளுக்கு சிக்கன், மட்டன் சூப் கொடுக்கலாம். சூப் கொடுக்கும் போது ஒரு பூண்டு தட்டி போடுவதை மறக்க வேண்டாம்.

    மேற்கண்ட குறிப்புகள் எல்லாமே ஓரு வயது முதல் 6 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்ற சிறந்த வைத்தியம். அதோடு இவை எல்லாமே பக்க விளைவுகள் இல்லாத வைத்தியமும் கூட என்பதும் கவனிக்க வேண்டியதே. வறட்டு இருமல் ஆரம்ப நிலையே சரி செய்ய கூடியதே. ஆனால் பிள்ளைகள் மூச்சு விடுதலில் சிரமத்துக்கு உள்ளாகவில்லை என்றால் கண்டிப்பாக இந்த வைத்தியம் உதவும். வறட்டு இருமலோடு மூச்சுத்திணறலையும் பிள்ளைகள் கொண்டிருந்தால் மருத்துவரையும் அணுகுவது நல்லது.
    குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
    குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.

    இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை (Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.

    அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.

    குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
    ×