search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?
    X
    அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?

    அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?

    பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கி விடும். மாத்திரை, சிரப், கேப்ஸ்யூல், டானிக் என்று வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு சுவைகளில் மருந்துகள் வருகின்றன.

    பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக அழுது, ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருக்கும் 

    அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?

    1. முதலில் கொடுக்க வேண்டிய மாத்திரையை நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.

    2. குடிநீரை நன்றாகக் கொதிக்க விட்டு, பின்னர் அதை நன்றாக ஆற விடுங்கள்.

    3. அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள்.

    4. பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்து வைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக் குக் கொடுக் கலாம்.

    குறிப்பு :

    டெட்ரா சைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு நிறைந்த மருந்துகளுக்கு, தேன் சிறிது அதிகம் சேர்த்துத் தரலாம்.

    இது போன்று, மாத்திரையைப் பொடியாக்கி, தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, மருந்தின் அளவு அதிகமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் (Care should be taken not to overdose.).

    மருந்து கொடுக்கும் முறை:

    1. குழந்தைகளின் தலையைத் தாழ்த்தி (Lowering the children's heads), நேராகப் படுக்க வைத்த நிலையில் மருந்துகளைக் கொடுக்கக் கூடாது (Do not give medications while lying upright.).

    2. முதலில் குழந்தையை அமர வைத்து, குழந்தையின் தலைக்கடியில் நம் கையை வைத்துத் தூக்கி, மருந்தைக் கவனமாகக் கொடுக்க வேண்டும்.

    3. மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைக்கோ, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கோ மருந்து கொடுக்கக் கூடாது.

    4. வலிப்பு (Fits) உள்ள குழந்தைக்கு (For a child with epilepsy,), வலிப்பு ஏற்படும் சமயங்களில் அதற்குண்டான மருந்தைக் கொடுக்கக் கூடாது (Do not give the drug in case of seizures.).

    5. காசநோய் பிரச்னை உள்ளவர்களுக்கு, மருந்து கொடுக்கும் போது, தேன் கலந்து தரக் கூடாது. காசநோய் மருந்துகளில் உள்ள உட்பொருளான ஐசோனியா சிட்டின் வீரியத்தை, தேன் குறைத்து விடும்.

    பெரியவர்களுக்கான அளவு மட்டுமே குறிப்பிட்டு உள்ள மருந்தை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.

    மருந்து, மாத்திரைகளை நீங்களாகச் சென்று கடையில் வாங்கித் தராதீர்கள். உரிய டாக்டரிடம் ஆலோசனை பெற்று, அதன் படி சாப்பிடுவது மிகவும் நல்லது (It is best to consult a doctor and eat accordingly.).
    Next Story
    ×