என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
* வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
* வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
இதையும் படிக்கலாம்.. கேரட் உருளைக்கிழங்கு சூப்
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.
* காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.
* மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.
* காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
* பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.
* கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் பிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.
* ஒரு காகிதத்தில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
* தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.
* அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.
எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். இசையைக் கேட்கலாம். கவிதை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.
* காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.
* மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.
* காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
* பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.
* கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் பிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.
* ஒரு காகிதத்தில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
* தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.
* அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.
எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். இசையைக் கேட்கலாம். கவிதை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாம்.. குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும்
பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.
தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.
குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.
பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.
தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.
குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.
தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.
இதையும் படிக்கலாம்... உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறி, பழங்கள்
குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. நாம் நம்பும்படியான சம்பவங்கள் நமது வீட்டிற்குள்ளும் நடக்கும். வெளியேயும் நடக்கும். ஆனால் அதன் உண்மை இன்னொருவிதமானதாக இருக்கும். அதுபோல் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எங்கேயாவது நடந்து, அது நமது கவனத்திற்கு வரும்போது ‘எங்கோ.. யாருக்கோ நடந்திருக்கிறது.. நமக்கென்ன..’ என்று கடந்துபோய் விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவம் நமது வீட்டிலும் நடக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படுவது நமது மகனோ, மகளாகவோ இருக்கவும்கூடும்.
தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.
வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.
தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.
வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.
- விஜயலட்சுமி பந்தையன்.
இதையும் படிங்க.. தொப்பை குறைய வேண்டுமா? அப்போ பிராணாயாமம் செய்யுங்க..
எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. குறைப் பிரசவம் / எடை குறைந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. இந்த மாதிரியான குழந்தைகளைச் சிறப்புப் பிரிவினரில் வைத்துள்ளது மருத்துவம்.
குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது எனில், பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது எனில், பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.
ஹெபடைட்டிஸ் – பி மஞ்சள் காமாலை உள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் அந்தக் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி மற்றும் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து இந்தத் தடுப்பூசியை முறையே ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என மூன்று தவணைகள் குழந்தைக்குப் போட வேண்டும்.
இதையும் படிங்க... அறிகுறிகளை காட்டாத கருப்பை புற்றுநோய்
குடும்பப் பின்னணியில் ஆஸ்துமா பாதிப்பிருக்கும் குழந்தைகள், அதிக ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் சவாலானது. குழந்தைகளைப் பொறுத்தவரை அறிகுறிகள் மூலமாகத்தான் பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும். அதனால் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
முக்கியமான அறிகுறிகள்
இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக இருமல், அடிக்கடி சளித்தொந்தரவு, நெஞ்சுப்பகுதியில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடுவதில் சிரமம், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவது, விளையாடி முடித்த பிறகோ, ஓடி வந்த பிறகோ அதிகம் மூச்சுவாங்குதல்.
குறிப்பிட்ட ஏதோவொரு நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் தீவிரமாகத் தெரியலாம். ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்தவரை குழந்தையை அதிக மாசு மற்றும் புகை நிறைந்த சூழலில் விடாமல் இருப்பது நல்லது. சில குழந்தைகளுக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்தகைய ஒவ்வாமைப் பிரச்னைகள் பெரும்பாலும் குழந்தையின் வளரிளம் பருவத்தில் சரியாகிவிடக்கூடும். ஒவ்வாமை தீவிரமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
முக்கியமான அறிகுறிகள்
இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக இருமல், அடிக்கடி சளித்தொந்தரவு, நெஞ்சுப்பகுதியில் சளி அடைத்துக்கொண்டு மூச்சுவிடுவதில் சிரமம், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவது, விளையாடி முடித்த பிறகோ, ஓடி வந்த பிறகோ அதிகம் மூச்சுவாங்குதல்.
குறிப்பிட்ட ஏதோவொரு நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் தீவிரமாகத் தெரியலாம். ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, மாசு காரணமாக ஏற்படும் ஒவ்வாமைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முடிந்தவரை குழந்தையை அதிக மாசு மற்றும் புகை நிறைந்த சூழலில் விடாமல் இருப்பது நல்லது. சில குழந்தைகளுக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அத்தகைய ஒவ்வாமைப் பிரச்னைகள் பெரும்பாலும் குழந்தையின் வளரிளம் பருவத்தில் சரியாகிவிடக்கூடும். ஒவ்வாமை தீவிரமாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
குழந்தைகளுக்கென பிரத்யேகமாக திறன் வாய்ந்த இன்ஹேலர் வகைகள் இருக்கின்றன. எனவே, பயமின்றி இன்ஹேலர் பயன்படுத்தலாம். குடும்பப் பின்னணியில் ஆஸ்துமா பாதிப்பிருக்கும் குழந்தைகள், சுற்றுச்சூழல் கேடு அதிகம் உள்ள பகுதியில் வளரும் குழந்தைகள், அதிக ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க..ஓணம் சத்யா: எரிசேரி
போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
அது என்ன மூளை வாதம்? பிறந்த குழந்தைக்கு எப்படி மூளையில் கோளாறு உண்டாகும்? தீர்வு இல்லையெனில் மேற்படி என்ன செய்ய வேண்டும்?
இதனால் குழந்தையின் வாழ்க்கை தரம் எவ்வாறு அமையும்? என அனைத்து கேள்விகளுக்குமான விடையை பற்றி இங்கே தெளிவாக தெரிந்துகொள்வோம்.
மூளை வாதம்...
*செரிபரல் பால்சி (cerebral palsy) என்று மருத்துவ உலகம் அழைக்கும் இந்த மூளை வாதமானது குழந்தையின் வளரும் மூளைக்கு வரக்கூடிய மூளை சேதம் ஆகும்.
*மேலும் இது ஒரு குழுவாக உடலியல் கோளாறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக உடல் அசைவுகள், அறிவுத் திறன், விழித்திறன், பேச்சுத்திறன் சார்ந்த குறைபாடுகள் என பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது.
காரணங்கள்...
* சிசு பிறக்கும் முன், பிறக்கும் போது, பிறந்த பின் என மூன்று கட்டங்களிலும் சி.பி. என சொல்லக்கூடிய செரிபரல் பால்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
* பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் குழந்தையின் மூளையையும், மூளையை போர்த்தியுள்ள திசுவையும் பாதிக்கும்போது ஏற்படலாம்.
* கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்களாலும் குழந்தைக்கு சி.பி. வரக்கூடும்.
* முன்கூட்டியே பிறக்கும் (pre mature) குழந்தைகளுக்கு எளிதில் மூளை செல்களில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
* நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்ட சிசுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளை செல்கள் சேதம் அடையும்.
* குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கும்போது மூளை சேதம் உண்டாகலாம். சாதாரண முறை சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது கருவிகள் கொண்டு குழந்தையை வெளியே கொண்டுவரும் பிரசவமாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
* மஞ்சள் காமாலை இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் வரும் மூளை சேதம்.
குறிப்பு: எனவே, கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை மேல் சொன்ன சிக்கல்கள் ஏற்பட்டால் சி.பி. வரலாம்.
அறிகுறிகள்...
* அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் வெளிப்படும்.
* தாமதமான மைல் கற்கள்தான் பிரதான அறிகுறி. அதாவது தாமதமாக கழுத்து நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் படிகள்.
* உடல் அசைவுகள்தான் பெரிதும் பாதிக்கும். இதனால் ஸ்திரத் தன்மை (balance), பாதிப்படையும். இதன் வெளிப்பாடாய் நடப்பதற்கு, உட்காருவதற்கு குழந்தை சிரமப்படும்.
* தோற்றப்பாங்கு (posture) உடல் முழுவதும் மாறக்கூடும். தசைகள் பாதிப்பதால் சரியான தோற்றப்பாங்கு இல்லாமல் இருப்பார்கள்.
* அறிவுத் திறன் சார்ந்த குறைபாடுகள்.
* சில குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வலிப்பில் பல வகைகள் உண்டு என்பதால் அதுவும் வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் இருக்கும்.
* பார்வைத் திறன் குறைபாடு.
* கேட்கும் திறன் குறைபாடு.
* பேச்சுத் திறன் குறைபாடு.
* வளைந்த முதுகுத்தண்டு.
* தசையையும் எலும்பையும் இணைக்கும் ‘தசை நாண் இறுக்கம்’. இது பொதுவாக கால் தசைகளில் ஏற்படும்.
* நடக்க முடியாமல் இருப்பது, நடக்க சிரமப்படுவது, கோணலாக நடப்பது.
சிகிச்சை முறை...
சி.பி.யை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனால் குழந்தையின் வாழ்க்கை தரம் எவ்வாறு அமையும்? என அனைத்து கேள்விகளுக்குமான விடையை பற்றி இங்கே தெளிவாக தெரிந்துகொள்வோம்.
மூளை வாதம்...
*செரிபரல் பால்சி (cerebral palsy) என்று மருத்துவ உலகம் அழைக்கும் இந்த மூளை வாதமானது குழந்தையின் வளரும் மூளைக்கு வரக்கூடிய மூளை சேதம் ஆகும்.
*மேலும் இது ஒரு குழுவாக உடலியல் கோளாறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக உடல் அசைவுகள், அறிவுத் திறன், விழித்திறன், பேச்சுத்திறன் சார்ந்த குறைபாடுகள் என பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது.
காரணங்கள்...
* சிசு பிறக்கும் முன், பிறக்கும் போது, பிறந்த பின் என மூன்று கட்டங்களிலும் சி.பி. என சொல்லக்கூடிய செரிபரல் பால்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
* பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் குழந்தையின் மூளையையும், மூளையை போர்த்தியுள்ள திசுவையும் பாதிக்கும்போது ஏற்படலாம்.
* கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்களாலும் குழந்தைக்கு சி.பி. வரக்கூடும்.
* முன்கூட்டியே பிறக்கும் (pre mature) குழந்தைகளுக்கு எளிதில் மூளை செல்களில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.
* நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்ட சிசுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளை செல்கள் சேதம் அடையும்.
* குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கும்போது மூளை சேதம் உண்டாகலாம். சாதாரண முறை சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது கருவிகள் கொண்டு குழந்தையை வெளியே கொண்டுவரும் பிரசவமாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
* மஞ்சள் காமாலை இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் வரும் மூளை சேதம்.
குறிப்பு: எனவே, கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை மேல் சொன்ன சிக்கல்கள் ஏற்பட்டால் சி.பி. வரலாம்.
அறிகுறிகள்...
* அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் வெளிப்படும்.
* தாமதமான மைல் கற்கள்தான் பிரதான அறிகுறி. அதாவது தாமதமாக கழுத்து நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் படிகள்.
* உடல் அசைவுகள்தான் பெரிதும் பாதிக்கும். இதனால் ஸ்திரத் தன்மை (balance), பாதிப்படையும். இதன் வெளிப்பாடாய் நடப்பதற்கு, உட்காருவதற்கு குழந்தை சிரமப்படும்.
* தோற்றப்பாங்கு (posture) உடல் முழுவதும் மாறக்கூடும். தசைகள் பாதிப்பதால் சரியான தோற்றப்பாங்கு இல்லாமல் இருப்பார்கள்.
* அறிவுத் திறன் சார்ந்த குறைபாடுகள்.
* சில குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வலிப்பில் பல வகைகள் உண்டு என்பதால் அதுவும் வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் இருக்கும்.
* பார்வைத் திறன் குறைபாடு.
* கேட்கும் திறன் குறைபாடு.
* பேச்சுத் திறன் குறைபாடு.
* வளைந்த முதுகுத்தண்டு.
* தசையையும் எலும்பையும் இணைக்கும் ‘தசை நாண் இறுக்கம்’. இது பொதுவாக கால் தசைகளில் ஏற்படும்.
* நடக்க முடியாமல் இருப்பது, நடக்க சிரமப்படுவது, கோணலாக நடப்பது.
சிகிச்சை முறை...
சி.பி.யை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு என்னென்ன தொற்று நோய்கள் பரவுகின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இது.
சளி, இருமல்
வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல். காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகும்.
காய்ச்சல்
இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம். ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது. மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.
வயிற்றுப் போக்கு
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும். சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்ட் வரலாம். அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.
சின்னம்மை
கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.
மணல் வாரி அம்மை
இதுவும் வைரஸ் தொற்று தான். குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும். மூக்கில் நீர் வடியும். தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும். வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுதவிர வைட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.
மஞ்சள் காமாலை
பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும். எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக ஏற்படுவது மஞ்சள் காமாலை. சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாகக் குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.
சிறுநீரகப் பிரச்சினை
குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.
இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
ஒரு பெண் என்றைக்கு சாலையில் தைரியமாக நடந்து செல்கிறாரோ? அன்றுதான் உண்மையான சுதந்திரம் நாட்டுக்கு வந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. ஆனால் மகாத்மா கூறிய சுதந்திரம் மலருமா? என்ற கேள்விக்கணைகள் நம் மார்பை துளைத்தெடுக்கிறது. இந்த கேள்விக்கு பதில் உரைக்கும் வகையிலே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால், ஆட்டோ, கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.
பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ, பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.
யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூ வாக இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாறவேண்டிய சந்தர்ப்பத்தில் புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.
கயவர்களின் கழுகுப்பார்வையை மாற்றிட முடியாது. ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம்தான் நமது குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும்.
-கவிப்பிரியா, திருவிடைமருதூர்
இன்றைய சூழலில் நடுத்தர வயது பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்றால், பால் முகம் மாறாத சிறுமிகளும் இந்த வஞ்சக பூமியில் நிம்மதியாக கால் பதிக்க முடியாத நிலையே உள்ளது.
கயவர்களின் பிடியில் இருந்து சிறுமிகளை, குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் துணிச்சலை சிறுமிகளிடையே ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள் தனியே பயணிக்க நேர்ந்தால், ஆட்டோ, கார் என எந்த வாகனத்திலும் ஏறும் முன்பு வாகனத்தின் எண், ஓட்டுனரின் கைபேசி எண் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஓரளவு தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.
பொது இடங்களில் அறிமுகம் இல்லாத ஆண்களோ, பெண்களோ யார் வழிய வந்து பேசினாலும், முகவரி கூற அழைத்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குழந்தைகளிடம் எடுத்துரைக்க வேண்டும்.
யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது என போதிக்க வேண்டும். பூ வாக இருக்க வேண்டிய இடத்தில் பூவாகவும், புயலாக மாறவேண்டிய சந்தர்ப்பத்தில் புயலாகவும் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் நங்கூரமாக நிலை நிறுத்த வேண்டும்.
கயவர்களின் கழுகுப்பார்வையை மாற்றிட முடியாது. ஆனால் கழுகுகளின் பிடியில் இருந்து குஞ்சுகளை காக்கும் கோழிகளைப்போல் நாம்தான் நமது குழந்தைகளை பாதுகாத்திட வேண்டும்.
-கவிப்பிரியா, திருவிடைமருதூர்
தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும்.
பிரச்சினைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு போராட்டங்களை கடந்துதான் வெற்றி என்பது கிடைக்கும். எனவே பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழக்கக்கூடாது. மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைகுலைய செய்து விடக்கூடாது. இதை மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.
நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிட வேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும்போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட வேண்டும். மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதுதொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.
பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப் பழகவேண்டும். கோபம், விரோதம் போன்ற வற்றுக்கு இடம் அளித்து விடக்கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்லமுறையில் விவாதித்து தீர்வு காணவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு.
தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். எப்போது விமர்சனம் எழத்தொடங்குகிறதோ, அபபோது தான் ஒருவருக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும் எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் கூறும் கருத்துகளை காதுகொடுத்து கேட்கவேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளையதலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்தநிலையிலும் மனஉறுதியை இழந்து விடக்கூடாது.
அதுதான் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கவேண்டும். அப்போதுதான் வெற்றியாளராக அல்லது சராசரி மனிதனாக நடமாட முடியும். அந்த அளவிற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அழிவது இல்லை. பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அழிந்துவிடுகிறான் என்று கூறுவார்கள். எனவே எதையும் தைரியத்தோடும், நேர்மையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த காலக்கட்டத்திலும் மீண்டுவர முடியும். இதை ஒவ்வொரு மாணவ- மாணவியரும் உணர வேண்டும்.
நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அவதூறுகளை புறம் தள்ளிவிட வேண்டும். நம்மை பற்றிய குறைகளை கேட்கும்போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட வேண்டும். மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதுதொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வரவேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.
பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப் பழகவேண்டும். கோபம், விரோதம் போன்ற வற்றுக்கு இடம் அளித்து விடக்கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதும் நடந்தால் நல்லமுறையில் விவாதித்து தீர்வு காணவேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு.
தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுகவேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போதுதான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். எப்போது விமர்சனம் எழத்தொடங்குகிறதோ, அபபோது தான் ஒருவருக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும் எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் கூறும் கருத்துகளை காதுகொடுத்து கேட்கவேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளையதலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்தநிலையிலும் மனஉறுதியை இழந்து விடக்கூடாது.
அதுதான் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கவேண்டும். அப்போதுதான் வெற்றியாளராக அல்லது சராசரி மனிதனாக நடமாட முடியும். அந்த அளவிற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அழிவது இல்லை. பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அழிந்துவிடுகிறான் என்று கூறுவார்கள். எனவே எதையும் தைரியத்தோடும், நேர்மையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த காலக்கட்டத்திலும் மீண்டுவர முடியும். இதை ஒவ்வொரு மாணவ- மாணவியரும் உணர வேண்டும்.
சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’
என்ற பாரதியின் உணர்வை இந்திய திருநாட்டில் வளர்கின்ற ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும். இந்த நாட்டில் மதத்தால், மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எண்ணம், சொல், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் எப்போது ஒன்றுபட்ட இந்தியாவை காணமுடியும். இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள். எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.
உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டு வருகின்றது. உலக நாடுகள் தமக்குள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இமயம் முதல் குமரி வரையுள்ள அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என்ற உணர்வு மாணவ பருவத்திலே ஏற்படவேண்டும்.
நம்நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வியத்தகு முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனை காணும் அந்நிய சக்திகள் நம் ஒற்றுமையை உருக்குலைக்க சூழ்ச்சி வலை விரிக்கின்றன. நம் இளைஞர்களில் சிலர் அதில் சிக்கிக்கொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சிலர் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் மக்களிடையே நச்சு விதைகளை தூவி நல்ல உள்ளங்களை கெடுத்து வருகின்றனர். மாணவர்கள் அவற்றில் அகப்படாமல் அவர்களது தீய எண்ணங்களை அழித்து ஒற்றுமை காக்க முன்வரவேண்டும்.
பொதுவாக அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெருமையுடையது. இதனால் மொழிகளுக்குள் வேறுபாடு காட்டாது அனைத்து மொழிகளையும் சமமாக மதித்து போற்றுவதில் மாணவர் கடமை மகத்தானது. தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்று பயனடையவேண்டும்.
‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று- இதில்
பற்பல சண்டைகள் வேண்டா’
என்ற பாரதியின் உணர்வை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து செயல்படவேண்டும். மதங்களின் பெயரால் மாறுபட்டுள்ள மனித உள்ளங்களை திருத்த முயலவேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், எவ்வுயிரும், தம்முயிர்போல் எண்ண வேண்டும் என்ற முன்னோர்களின் கருத்தை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். பிறப்பினால் மனித இனத்தினிடையே எவ்வித வேறுபாடு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், தேசிய நல இயக்கங்கள் போன்ற இயக்கங்களில் ஆர்வத்துடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். மேலும் இயக்கங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு ஒருமைப் பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டலாம். ஆண்டுக்கொரு முறையாவது பிற மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவதன் மூலமும், தேசிய விழாக்களை நாட்டுப்பற்றுடன் நடத்துவதன் மூலமும், பிற மாநில மக்களின் கலை, நாகரிகம், பண்பாட்டை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர வழி ஏற்படும்.
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’
என்ற பாரதியின் உணர்வை இந்திய திருநாட்டில் வளர்கின்ற ஒவ்வொரு மாணவனும் பெறவேண்டும். இந்த நாட்டில் மதத்தால், மொழியால், இனத்தால் பழக்கவழக்கத்தால் வேறுபட்டவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எண்ணம், சொல், செயலால் ஒன்றுபட்டு விளங்கினால் தான் எப்போது ஒன்றுபட்ட இந்தியாவை காணமுடியும். இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள். எனவே மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு அவசியம். அதனை வளர்ப்பதில் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.
உலகம் ஒரு குடும்பமாக வேண்டும் என்ற உணர்வு மேம்பட்டு வருகின்றது. உலக நாடுகள் தமக்குள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இமயம் முதல் குமரி வரையுள்ள அனைவரும் பாரதத்தாயின் மக்கள் என்ற உணர்வு மாணவ பருவத்திலே ஏற்படவேண்டும்.
நம்நாடு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வியத்தகு முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனை காணும் அந்நிய சக்திகள் நம் ஒற்றுமையை உருக்குலைக்க சூழ்ச்சி வலை விரிக்கின்றன. நம் இளைஞர்களில் சிலர் அதில் சிக்கிக்கொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சிலர் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் மக்களிடையே நச்சு விதைகளை தூவி நல்ல உள்ளங்களை கெடுத்து வருகின்றனர். மாணவர்கள் அவற்றில் அகப்படாமல் அவர்களது தீய எண்ணங்களை அழித்து ஒற்றுமை காக்க முன்வரவேண்டும்.
பொதுவாக அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெருமையுடையது. இதனால் மொழிகளுக்குள் வேறுபாடு காட்டாது அனைத்து மொழிகளையும் சமமாக மதித்து போற்றுவதில் மாணவர் கடமை மகத்தானது. தாய்மொழியோடு பிற மொழிகளையும் கற்று பயனடையவேண்டும்.
‘பாருக்குள்ளே தெய்வம் ஒன்று- இதில்
பற்பல சண்டைகள் வேண்டா’
என்ற பாரதியின் உணர்வை ஒவ்வொரு மாணவனும் உணர்ந்து செயல்படவேண்டும். மதங்களின் பெயரால் மாறுபட்டுள்ள மனித உள்ளங்களை திருத்த முயலவேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், எவ்வுயிரும், தம்முயிர்போல் எண்ண வேண்டும் என்ற முன்னோர்களின் கருத்தை மக்களிடம் எடுத்து கூறவேண்டும். பிறப்பினால் மனித இனத்தினிடையே எவ்வித வேறுபாடு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். சாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடுகளை நீக்கும் வழிமுறைகளை ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டிலிருந்தே தொடங்கினால் நாடு தானாக மாறி முன்னேற்றமடையும்.
கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், தேசிய நல இயக்கங்கள் போன்ற இயக்கங்களில் ஆர்வத்துடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். மேலும் இயக்கங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு ஒருமைப் பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டலாம். ஆண்டுக்கொரு முறையாவது பிற மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருவதன் மூலமும், தேசிய விழாக்களை நாட்டுப்பற்றுடன் நடத்துவதன் மூலமும், பிற மாநில மக்களின் கலை, நாகரிகம், பண்பாட்டை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர வழி ஏற்படும்.
சென்னையில், கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கான மாறுகண் நோய் 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரி தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் அனுசரிக்கப்படும், ‘குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்' நிகழ்ச்சியையொட்டி, டாக்டர் அகர்வால்ஸ் கண் ஆஸ்பத்திரியின் குழந்தைகளுக்கான முதுநிலை கண் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் இணையதளம் வாயிலான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் சென்னையை சேர்ந்த குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் அல்லது ஒன்றரை கண்’ பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5 மடங்குகள் அதிகரித்திருப்பது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100 சதவீதம் உயர்ந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் இது 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கி இருக்கிறது.
வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதுமே இவற்றிற்கு காரணமாக உள்ளன. மேலும், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், செல்போன், கணினி, டி.வி. ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சென்னையில், கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் 1 அல்லது 2 பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு 10-க்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர்.
கணினி திரைக்கு முன்பாக அல்லது செல்போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுவதை, மாற்றி அமைத்து அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொண்டால் இது போன்ற பாதிப்புகள் குறையும். ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதால், செல்போன்களுக்கு பதிலாக, மடிக்கணினி அல்லது கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும்.
கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் டாக்டர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் சென்னையை சேர்ந்த குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் அல்லது ஒன்றரை கண்’ பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5 மடங்குகள் அதிகரித்திருப்பது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது. அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100 சதவீதம் உயர்ந்திருப்பதும், கடந்த 2 ஆண்டுகளில் இது 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கி இருக்கிறது.
வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதுமே இவற்றிற்கு காரணமாக உள்ளன. மேலும், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், செல்போன், கணினி, டி.வி. ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இவற்றிற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
சென்னையில், கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் 1 அல்லது 2 பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு 10-க்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர்.
கணினி திரைக்கு முன்பாக அல்லது செல்போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுவதை, மாற்றி அமைத்து அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொண்டால் இது போன்ற பாதிப்புகள் குறையும். ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதால், செல்போன்களுக்கு பதிலாக, மடிக்கணினி அல்லது கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும்.
கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் டாக்டர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






