என் மலர்
குழந்தை பராமரிப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.
மூன்று ஆண்டுக்குள் (2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை) 24 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தேர்வுகளில் தோல்வி, திருமண அழுத்தம், வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம், சமூகத்தில் நற்பெயர் வீழ்ச்சி, தேவையற்ற கர்ப்பம் போன்ற காரணங்கள் தற்கொலைக்கான பின்னணியில் உள்ளன. நன்றாக படித்தாக வேண்டும் என்று குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம்தான் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. கல்வி மீதான அழுத்தம் காரணமாக 4,046 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள். குழந்தை பருவ திருமண நிர்பந்தம் காரணமாக 639 பேர் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் உடல்நலக்குறைவு காரணமாக 2,567 பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் விவகாரம் காரணமாக 3,315 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி 81 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களின் இறப்பு ஏற்படுத்திய துக்கம் காரணமாகவும் சிலர் இறந்திருக்கிறார்கள். தற்கொலை செய்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை 13,325. திருமண நிர்பந்தத்தால் இறந்த 639 பேரில் பெண் குழந்தைகள் 411 பேர்.
ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2017-ல் 8,029 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது 2018-ல் 8,162 ஆக இருந்தது. 2018-ல் 8,377 ஆக உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இருக்கின்றன.
பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம் என்பது குழந்தை நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மன அழுத்தம், சுய சந்தேகம், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி, குடும்ப நிதி நிலைமை போன்றவையும் தற்கொலையுடன் தொடர்புடையவை என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
தேர்வுகளில் தோல்வி, திருமண அழுத்தம், வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம், சமூகத்தில் நற்பெயர் வீழ்ச்சி, தேவையற்ற கர்ப்பம் போன்ற காரணங்கள் தற்கொலைக்கான பின்னணியில் உள்ளன. நன்றாக படித்தாக வேண்டும் என்று குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம்தான் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. கல்வி மீதான அழுத்தம் காரணமாக 4,046 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள். குழந்தை பருவ திருமண நிர்பந்தம் காரணமாக 639 பேர் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் உடல்நலக்குறைவு காரணமாக 2,567 பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
காதல் விவகாரம் காரணமாக 3,315 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி 81 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களின் இறப்பு ஏற்படுத்திய துக்கம் காரணமாகவும் சிலர் இறந்திருக்கிறார்கள். தற்கொலை செய்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை 13,325. திருமண நிர்பந்தத்தால் இறந்த 639 பேரில் பெண் குழந்தைகள் 411 பேர்.
ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2017-ல் 8,029 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது 2018-ல் 8,162 ஆக இருந்தது. 2018-ல் 8,377 ஆக உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இருக்கின்றன.
பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம் என்பது குழந்தை நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மன அழுத்தம், சுய சந்தேகம், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி, குடும்ப நிதி நிலைமை போன்றவையும் தற்கொலையுடன் தொடர்புடையவை என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
விளையாட்டுச் சிகிச்சை என்பது ஒருவிதமான உளவியல் சிகிச்சை. இங்கே குழந்தைகள் தங்களுடைய உணர்வு மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை தாங்களே அலசுகிறார்கள், அதை சிகிச்சையாளர் அல்லது தங்களது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்சனைகளைக் குறைக்கும்.
வாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போது விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன.
விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.
விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்சனைகளைக் குறைக்கும்.
வாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போது விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன.
விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.
குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள்.
வீடுகள் தோறும் சிறுமிகள் ஐந்து மணி நேரம் வரை `ஆன்லைன்' வகுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள். அம்மாவோ, அப்பாவோ குறைந்தது எட்டு மணி நேரம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகமே இணையதளத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் சரிதான்! ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் இருக்கும் ஆபத்துகள் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?
தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப்படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சைல்டு க்ரூமிங் என்றால் என்ன?
சிறுமிகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பாலியல்ரீதியாக வக்கிரமாக பயன்படுத்தும் எண்ணத்தோடு அணுகுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் குழந்தைகளிடம் வக்கிரத்தை அரங்கேற்றுகிறவர்களும், அவர்களது அறியாமையை பயன்படுத்தி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறவர்களும் இரைதேடும் வல்லூறுகள் போல் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக களமிறங்குகிறார்கள். முதலில் குழந்தைகளிடமும், பின்பு அவர்களது குடும்பத்தினரிடமும் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்கிறார்கள். நம்பிக்கையை பெற்ற பின்புதான் அவர்கள் மனதில் இருக்கும் கொடூர எண்ணங்கள் வெளிப்பட தொடங்கும். தங்கள் வக்கிர எண்ணத்திற்கு இசையும் அளவுக்கு குழந்தைகளை அவர்கள் வசப்படுத்தும் விதத்தைதான் `க்ரூமிங்' என்கிறார்கள்.
குழந்தைகள் எங்கெல்லாம் அதிகமாக புழங்குகிறார்களோ அங்கெல்லாம் பாலியல் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட்டிலும், ஆன்லைன் பிளாட்பாம்களிலும் குழந்தைகள் குவிந்ததால் அந்த கட்டமைப்புகளை நோக்கி அவர்கள் இரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முகத்தை காட்டாமலே ஆன்லைனில் இரை பிடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.
இந்த ஆன்லைன் குற்றவாளிகள் எந்த வயதாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை இரையாக்க முயற்சிக்கிறார்கள். பள்ளிகள், மத அமைப்புகளை சேர்ந்த குழந்தைகளையும் `க்ரூமிங்' செய்கிறார்கள். தங்களது எல்லாவிதமான விருப்பங்களுக்கும் உடன்படும் அளவுக்கு குழந்தைகளை வளைத்தெடுப்பார்கள். அதை குழந்தைகளால் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு உணர்வுபூர்வமாக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
அதற்காக நண்பர், ஆலோசகர், உறவினர், குரு, பயிற்சியாளர் போன்ற எந்த வேட மணியவும் அவர்கள் தயாராவார்கள். தேவைப்பட்டால் காதலர் என்ற போர்வையிலும் களம்காண்பார்கள். சில மாதங்களிலே இவர்களது அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றும் அளவுக்கு குழந்தைகளை மூளைச் சலவை செய்துவிடுவார்கள். தங்களுடனான உறவை ரகசியமாக வைத் திருக்க வலியுறுத்துவார்கள். அதற்காக கொலை மிரட்டல் விடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடனான உறவை தொடருவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள்.
குழந்தைகளை க்ரூமிங் செய்வதில் அவர்கள் அவசரம் காட்டுவதில்லை. பல மாதங்களாக நிதானித்து படிப்படியாக அதனை செய்கிறார்கள். பல்வேறு ஆன்லைன் பிளாட்பாம்களில் அவர்கள் உலா வருகிறார்கள். சோஷியல் மீடியா, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்ஆப் போன்ற இன்டர்நெட் மெசேஜிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவைகளில் பொழுதைக் கழிக்கும் சிறுமிகளுக்கு அவர்கள் வலைவீசுகிறார்கள்.
அந்த சிறுமிகளின் விருப்பங்கள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து, கிரிமினல்கள் அவர்களை அணுகுகிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிவைக்கவும் செய்வார்கள். முதலில் அவர்கள் சிறுமிகளின் பிரச்சினைகளை கேட்டறிவார்கள். பின்பு உதவி செய்ய முன்வருவார்கள். இதுதான் பெரும்பாலும் அவர்களது தொடக்க கால நடவடிக்கையாக இருக்கும்.
சிறுமிகளின் நம்பிக்கையை பெறுவதே அவர்களது முதல் நோக்கம். தங்களது நம்பிக்கைக்குரியவர் களாக அவர்களை கருத தொடங்கியதும், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் ரகசியங் களைகூட அவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். காலப்போக்கில் சிலர் அந்த சிறுமிகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு உட்படுத்துவார்கள். மிரட்டியோ அல்லது விரும்பிய பரிசுகளை வழங்கியோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது அல்லது தங்கள் விரும்பிய காரியங்களை செய்ய தூண்டுவது அந்த கிரிமினல்களின் அடுத்தகட்ட செயலாக இருக்கும்.
அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு மட்டும் குழந்தைகளை பயன்படுத்துவதில்லை. குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் `சைபர்- செக்ஸ் டிராபிக்கிங்' என்ற குற்றச்செயல் புதிதாக உருவாகியிருக்கிறது. க்ரூமிங் செய்யப்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அதனை படம்பிடித்து இணைய தளத்திலோ, இதர டிஜிட்டல் முறைகளிலோ வெளிக்கொண்டு வந்து காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது இந்த கிரிமினல்களின் நடைமுறையாகும். பணம் மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கும். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோக்களை பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை யாகும்.
இவர்களிடம் சிக்கிக்கொள்ளும் சிறுமிகள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம், பாலியல் தொடர்புடைய நோய்கள், குற்றஉணர்ச்சி, அதிக பதற்றம், போதைப் பொருட்கள் பயன்பாடு, மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், எதிர்காலத்தை பற்றிய பயம் போன்றவைகள் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு ஏற்படலாம்.
தங்களது குழந்தைகளுக்கு, நேரடியாக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி எல்லா அம்மாக்களும் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் இணையதள டிஜிட்டல் பிளாட்பாமில் பாலியல் வன்முறையாளர்கள் சிறுமிகளை எப்படி அணுகி வசீகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது பற்றி இந்தியாவில் பெரிய அளவில் விவாதங்களும் நடத்தப்படுவதில்லை. ஆனால் உலக அளவில் இது மிக முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் `சைல்டு க்ரூமிங்' (child grooming) என்பது அதிகம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சைல்டு க்ரூமிங் என்றால் என்ன?
சிறுமிகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பாலியல்ரீதியாக வக்கிரமாக பயன்படுத்தும் எண்ணத்தோடு அணுகுகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் குழந்தைகளிடம் வக்கிரத்தை அரங்கேற்றுகிறவர்களும், அவர்களது அறியாமையை பயன்படுத்தி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்கிறவர்களும் இரைதேடும் வல்லூறுகள் போல் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக களமிறங்குகிறார்கள். முதலில் குழந்தைகளிடமும், பின்பு அவர்களது குடும்பத்தினரிடமும் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்துகொள்கிறார்கள். நம்பிக்கையை பெற்ற பின்புதான் அவர்கள் மனதில் இருக்கும் கொடூர எண்ணங்கள் வெளிப்பட தொடங்கும். தங்கள் வக்கிர எண்ணத்திற்கு இசையும் அளவுக்கு குழந்தைகளை அவர்கள் வசப்படுத்தும் விதத்தைதான் `க்ரூமிங்' என்கிறார்கள்.
குழந்தைகள் எங்கெல்லாம் அதிகமாக புழங்குகிறார்களோ அங்கெல்லாம் பாலியல் வன்முறையாளர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். கொரோனாவுக்கு பிறகு இன்டர்நெட்டிலும், ஆன்லைன் பிளாட்பாம்களிலும் குழந்தைகள் குவிந்ததால் அந்த கட்டமைப்புகளை நோக்கி அவர்கள் இரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முகத்தை காட்டாமலே ஆன்லைனில் இரை பிடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.
இந்த ஆன்லைன் குற்றவாளிகள் எந்த வயதாக இருந்தாலும், எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை இரையாக்க முயற்சிக்கிறார்கள். பள்ளிகள், மத அமைப்புகளை சேர்ந்த குழந்தைகளையும் `க்ரூமிங்' செய்கிறார்கள். தங்களது எல்லாவிதமான விருப்பங்களுக்கும் உடன்படும் அளவுக்கு குழந்தைகளை வளைத்தெடுப்பார்கள். அதை குழந்தைகளால் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு உணர்வுபூர்வமாக செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
அதற்காக நண்பர், ஆலோசகர், உறவினர், குரு, பயிற்சியாளர் போன்ற எந்த வேட மணியவும் அவர்கள் தயாராவார்கள். தேவைப்பட்டால் காதலர் என்ற போர்வையிலும் களம்காண்பார்கள். சில மாதங்களிலே இவர்களது அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றும் அளவுக்கு குழந்தைகளை மூளைச் சலவை செய்துவிடுவார்கள். தங்களுடனான உறவை ரகசியமாக வைத் திருக்க வலியுறுத்துவார்கள். அதற்காக கொலை மிரட்டல் விடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடனான உறவை தொடருவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள்.
குழந்தைகளை க்ரூமிங் செய்வதில் அவர்கள் அவசரம் காட்டுவதில்லை. பல மாதங்களாக நிதானித்து படிப்படியாக அதனை செய்கிறார்கள். பல்வேறு ஆன்லைன் பிளாட்பாம்களில் அவர்கள் உலா வருகிறார்கள். சோஷியல் மீடியா, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்ஆப் போன்ற இன்டர்நெட் மெசேஜிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவைகளில் பொழுதைக் கழிக்கும் சிறுமிகளுக்கு அவர்கள் வலைவீசுகிறார்கள்.
அந்த சிறுமிகளின் விருப்பங்கள், செயல்பாடுகள், எதிர்பார்ப்புகள் போன்றவைகளை தொடர்ந்து கண்காணித்து, கிரிமினல்கள் அவர்களை அணுகுகிறார்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை குறிவைக்கவும் செய்வார்கள். முதலில் அவர்கள் சிறுமிகளின் பிரச்சினைகளை கேட்டறிவார்கள். பின்பு உதவி செய்ய முன்வருவார்கள். இதுதான் பெரும்பாலும் அவர்களது தொடக்க கால நடவடிக்கையாக இருக்கும்.
சிறுமிகளின் நம்பிக்கையை பெறுவதே அவர்களது முதல் நோக்கம். தங்களது நம்பிக்கைக்குரியவர் களாக அவர்களை கருத தொடங்கியதும், சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் ரகசியங் களைகூட அவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். காலப்போக்கில் சிலர் அந்த சிறுமிகளை போதைப் பொருள் பழக்கத்திற்கு உட்படுத்துவார்கள். மிரட்டியோ அல்லது விரும்பிய பரிசுகளை வழங்கியோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது அல்லது தங்கள் விரும்பிய காரியங்களை செய்ய தூண்டுவது அந்த கிரிமினல்களின் அடுத்தகட்ட செயலாக இருக்கும்.
அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு மட்டும் குழந்தைகளை பயன்படுத்துவதில்லை. குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பாலியல் செயல்பாடுகளுக்காக கடத்துவது, பாலியல் செயல்களில் ஈடுபடுத்துவது போன்றவைகளையும் செய்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில் `சைபர்- செக்ஸ் டிராபிக்கிங்' என்ற குற்றச்செயல் புதிதாக உருவாகியிருக்கிறது. க்ரூமிங் செய்யப்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அதனை படம்பிடித்து இணைய தளத்திலோ, இதர டிஜிட்டல் முறைகளிலோ வெளிக்கொண்டு வந்து காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது இந்த கிரிமினல்களின் நடைமுறையாகும். பணம் மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கும். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோக்களை பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை யாகும்.
இவர்களிடம் சிக்கிக்கொள்ளும் சிறுமிகள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கர்ப்பம், பாலியல் தொடர்புடைய நோய்கள், குற்றஉணர்ச்சி, அதிக பதற்றம், போதைப் பொருட்கள் பயன்பாடு, மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், எதிர்காலத்தை பற்றிய பயம் போன்றவைகள் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு ஏற்படலாம்.
பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. அதனால், அந்த பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் எல்லா குழந்தையுமே ஏதாவது பரிசை கட்டாயம் வாங்கிவிடும் என்று கூறும் வகையில் போட்டிகளை ரக வாரியாகப் பிரித்து நடத்துகிறார்கள்.
விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளை எல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்துவிடுகின்றனர். சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர்.
நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் அதிகப்படியாக புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.
ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடி சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல வல்லுனர்கள்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக்காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
விருதுகளை வழங்குவதால் குழந்தைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது என்பது உண்மைதான். இடைவிடாமல் பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளுக்கு அவை வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதலை தருவதில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய திறமையை முழுதாகக் காட்டாமல் சுமாராக விளையாட வழிவகுத்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பெரியவர்கள் பாராட்டும்போது குழந்தைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகின்றனர். தங்களைத் திறமைசாலி, அறிவாளி என்று புகழ்வதைக்கேட்டு மன மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களுடைய திறமை, அறிவு குறித்த பாராட்டுகளை எல்லாம் கேட்ட பிறகு, எதிலாவது தோல்வி அல்லது சவால் ஏற்பட்டால் மனம் சோர்ந்துவிடுகின்றனர். சமீபத்தில் ஆய்வாளர்கள் சில குழந்தைகளை அழைத்து படம் வரையச் சொல்லி அவர்களை கண்காணித்தனர்.
நல்ல புத்திசாலி, எந்தக் காரியத்தையும் நன்றாகச் செய்வான் என்றெல்லாம் அதிகப்படியாக புகழப்பட்ட சிறுவர்கள் மற்றவர்களைவிட அதிக நேரம் ஓவியம் வரைய வேண்டிய பலகையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் பார்க்கிறார்கள், தப்பில்லாமல் வரைய வேண்டுமே என்ற அச்சமே அவர்களுடைய தயக்கத்துக்கு காரணமாக இருந்தது.
ஒரு விளையாட்டில் அல்லது கலையில் யார் கெட்டிக்காரர்கள், யார் திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் துல்லியமாகவே தெரிந்துகொள்கின்றனர். விளையாட முடியாமல் தவிப்பவர்கள், இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் மயங்கும் வேலையை விட்டுவிடுகின்றனர். நன்றாக விளையாடி சாதிப்பவர்கள், நம்மைப் பாராட்டாமல் மற்றவர்களுக்கே பாராட்டை வழங்கினார்களே என்று கொதிப்படைகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ஏதேனும் ஒரு விளையாட்டிலோ கலையிலோ உண்மையான திறமை இருந்தால், அதை விளையாடுவதில் உள்ள இன்பமும் முடிவு எப்படி இருக்குமோ என்று இனம்புரியாத மர்மமும் அவர்களை நன்றாக திறமைகாட்ட வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பதக்கமும் பரிசுகளும் அதற்கு தேவையே இல்லை. கலந்துகொண்டாலே ஒரு பரிசு நிச்சயம் என்றால், முன்னேற்றத்துக்கு அங்கே என்ன இருக்கும்? தாண்டுவதற்கு தடைகளே இல்லை எனும்போது, எதற்காக மண்டையைப்போட்டுக் குடைந்துகொள்ள வேண்டும் என்ற மெத்தனம் வந்துவிடும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல வல்லுனர்கள்.
குழந்தைகளை வளர்க்கும்போது பாராட்டுவதைப் போல தண்டிப்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்ததற்கெல்லாம் தண்டித்துவிடக் கூடாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். தவறு ஏன் நடந்தது என்று ஆராயாமல் தண்டிக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அதை உணர்ச்சி வசப்பட்டு செய்தார்களா, சூழல் காரணமா, வெளிக்காரணம் உண்டா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணம், செயல்பாடு இருந்தால் சுட்டிக்காட்டி அதை மாற்ற வேண்டும்.
குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ரப்பர் நிப்பிளை குழந்தைக்கான பொருள் என்றே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர்.
குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்சனை ஏற்படலாம்.
ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.
குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள். தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.
சில குழந்தைகளுக்கு, வாய், பற்கள் ஆகியவை பாதிக்கப்படும். பற்களின் வளர்ச்சி நன்றாக இருக்காது. சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்தால், குழந்தைகள் பேச முடியாமல் போகும்.
லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்கப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து இந்த ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளும் வரலாம். குழந்தை பேசுவதில் பிரச்சனை ஏற்படலாம்.
ரப்பர் நிப்பிளை தொடர்ந்து வாயில் வைப்பதால் கிருமிகள் வளர வாய்ப்பைத் தருகிறது. கிருமிகள் வளர அதிகம் உதவுகிறது. சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகையில் வாயில் தொற்றும் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த செயற்கை நிப்பிளைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்பட்டால் சிலிக்கான் நிப்பிள் வாங்கலாம். அதையும் முறையாக சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைக்கு அடிக்கடி கொடுக்க கூடாது.
குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த ரப்பர் நிப்பளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அதிகமாக இதைப் பயன்படுத்தினால் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை விரைவில் நிறுத்திக் கொள்வார்கள். தாய்ப்பால் இல்லாமல் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது.
குழந்தையின் கழுத்தில், கைகளில் ரப்பர் நிப்பிளை கட்டிவிட கூடாது. தவறுதலாக குழந்தைக்கு திடீர் அடைப்பு ஏற்பட்டு விடலாம். இதனால் குழந்தைக்கு ஆபத்தான பாதிப்பு கூட ஏற்பட்டுவிடும். குழந்தைகளுக்கு அதிகமாக ரப்பர் நிப்பிளை பயன்படுத்தினால் அவர்கள் பேசுவதில் தடையை ஏற்படுத்தும்.
லேட்டக்ஸ் எனும் மெட்டிரியல் கொண்டு தயாரிக்கப்படும் நிப்பிள், அலர்ஜியையும் ஏற்படுத்தும். ரப்பர் நிப்பிள் அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மூக்கு, கண், வாய் போன்ற இடங்களில் எரிச்சல்தன்மையும் அதிகமாக இருக்கும். தொண்டை வீக்கமடையும். மூச்சு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
`உன் தம்பிக்கு நீ பேனா, பென்சிலைக்கூட கொடுப்பதில்லை. நீ ரொம்ப சுயநலவாதியாக இருக்கிறாய்' என்று பெரும்பாலானவர்கள் குழந்தைகளை பார்த்து சொல்வதுண்டு. குழந்தைகள் இந்த உலகத்தை புரிந்துகொள்ளாதவரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதும், தமக்கு தேவைப்படும்போது அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் பிறப்பிலே தெரிந்துகொள்ளும் விஷயங்கள் இல்லை. பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு இத்தகைய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை குடும்பத்திற்குள்ளே தொடங்கவேண்டும்.
சில குழந்தைகள் தனது அறைக்குள் அடுத்த குழந்தைகளை அனுமதிக்காது. ஒருவேளை பாதுகாப்பு, சுகாதாரம் கருதி குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்ளலாம். அதனால் அதையும் எடுத்த எடுப்பிலே குறைசொல்லிவிடக்கூடாது. சக குழந்தைகளோடு பழகவும், விளையாடவும், பொழுதுபோக்கவும் அனுமதிக்கவேண்டும். அதன் மூலம்தான் குழந்தைகளுக்கு பொதுநலன் என்றால் என்னவென்று தெரியும்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
`உன் தம்பிக்கு நீ பேனா, பென்சிலைக்கூட கொடுப்பதில்லை. நீ ரொம்ப சுயநலவாதியாக இருக்கிறாய்' என்று பெரும்பாலானவர்கள் குழந்தைகளை பார்த்து சொல்வதுண்டு. குழந்தைகள் இந்த உலகத்தை புரிந்துகொள்ளாதவரை அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தேவைப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதும், தமக்கு தேவைப்படும்போது அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் பிறப்பிலே தெரிந்துகொள்ளும் விஷயங்கள் இல்லை. பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு இத்தகைய பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை குடும்பத்திற்குள்ளே தொடங்கவேண்டும்.
சில குழந்தைகள் தனது அறைக்குள் அடுத்த குழந்தைகளை அனுமதிக்காது. ஒருவேளை பாதுகாப்பு, சுகாதாரம் கருதி குழந்தைகள் அவ்வாறு நடந்துகொள்ளலாம். அதனால் அதையும் எடுத்த எடுப்பிலே குறைசொல்லிவிடக்கூடாது. சக குழந்தைகளோடு பழகவும், விளையாடவும், பொழுதுபோக்கவும் அனுமதிக்கவேண்டும். அதன் மூலம்தான் குழந்தைகளுக்கு பொதுநலன் என்றால் என்னவென்று தெரியும்.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க ஜீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு. முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, ஜீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
ஜீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
மேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் உதவியாக இருக்கும் :
1. உணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரைமணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.
2. சாப்பிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
3. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
4. பசியில்லாதபோது சாப்பிடக் கூடாது.
பசும்பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும்.
ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுபோக்கு பிரச்சனையும் வரக்கூடும். பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள் குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.
பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும் விட்டமின் சி இ காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன் குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு மலத்தில் இரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம்.
வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம். பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன் சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும்.
குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழம் அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள் கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு இரத்தசோகை ஆகியவை வரலாம்.
ஒரு வயதுக்கு மேல் பசும்பால் கொடுக்கலாம். கால்சியம் புரதம் விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு நாளைக்கு 1- 1 ½ கப் அளவுக்கு பசும்பால் கொடுக்கலாம். யோகர்ட் தயிர் மோர் போன்றவையும் கொடுக்கலாம். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர் யோகர்ட் தயிர் சீஸ் கொடுத்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது. பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம்.
குழந்தையின் மலம் சற்று திக்காக இருக்கலாம். மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படலாம். பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் கொடுத்து விட்டு யோகர்ட் தயிர் மில்க் ஷேக் சீஸாக கொடுப்பது நல்லது.
பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும் விட்டமின் சி இ காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன் குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு மலத்தில் இரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம்.
வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம். பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன் சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும்.
குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழம் அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள் கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு இரத்தசோகை ஆகியவை வரலாம்.
ஒரு வயதுக்கு மேல் பசும்பால் கொடுக்கலாம். கால்சியம் புரதம் விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு நாளைக்கு 1- 1 ½ கப் அளவுக்கு பசும்பால் கொடுக்கலாம். யோகர்ட் தயிர் மோர் போன்றவையும் கொடுக்கலாம். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர் யோகர்ட் தயிர் சீஸ் கொடுத்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது. பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம்.
குழந்தையின் மலம் சற்று திக்காக இருக்கலாம். மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படலாம். பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் கொடுத்து விட்டு யோகர்ட் தயிர் மில்க் ஷேக் சீஸாக கொடுப்பது நல்லது.
ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது.
ஊட்டச்சத்து குறைபாடுக்கான 8 காரணங்கள்
1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது.
2. ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது.
3. குழந்தையை சரியாக பராமரிக்காதது.
4. நுண்ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை.
5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது.
6. தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது. இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும்.
7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல்.
8. சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது. சுகாதாரமற்ற சூழலில் இருப்பது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பின்விளைவுகள் (Impacts of Malnutrition)
குழந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனைதான்.
எடை குறைவான, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தொற்றுநோய்களாலும், சீதபேதி, நிமோனியா, அம்மை நோய்களால் அதிகம் உயிரிழக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது.
செய்ய வேண்டியது என்னென்ன?
1. உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாத குழந்தைக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.
2. பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
3. உணவு ஊட்டும் முறையை மேம்படுத்துதல், சுகாதாரமான வாழ்வுமுறையைப் பின்பற்றுதல், கர்ப்பிணிகளைப் பேணுதல் போன்றவை குறித்து தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் தீர்வு கிடைக்கும்.
4. தமிழக குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க தாய்ப்பால் தருவது அவசியம்.
5. ஊட்டச்சத்தின் தேவை, கர்ப்பக்கால ரத்தசோகையைத் தவிர்த்தல், குழந்தைகளை நோயிலிருந்து தற்காத்தல், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் செலுத்துதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு அவசியம்.
1. குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் கொடுக்காதது.
2. ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தர தவறியது.
3. குழந்தையை சரியாக பராமரிக்காதது.
4. நுண்ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகளால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை.
5. கருவுற்றபோது தாய் ஊட்டச்சத்தான உணவை உண்ணாமல் இருந்தது.
6. தாய் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டது அல்லது தாய் குறைந்த எடையுடன் இருப்பது. இதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும்.
7. சுகாதாரமற்ற தண்ணீரைப் பருகுதல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தேவையானபோது கைகளை சோப் பயன்படுத்தியோ அல்லது நன்றாக கை கழுவாமலோ இருத்தல்.
8. சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது. சுகாதாரமற்ற சூழலில் இருப்பது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பின்விளைவுகள் (Impacts of Malnutrition)
குழந்தையின் வளர்ச்சியை முடக்கிவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனைதான்.
எடை குறைவான, வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தொற்றுநோய்களாலும், சீதபேதி, நிமோனியா, அம்மை நோய்களால் அதிகம் உயிரிழக்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குறைகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது.
செய்ய வேண்டியது என்னென்ன?
1. உணவில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். 6 மாத குழந்தைக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் சத்தான உணவுகளைக் கூழ், கஞ்சி வடிவில் கொடுங்கள்.
2. பற்கள் முளைத்து விட்ட குழந்தைகள், உடல் பலவீனமாக இருப்பவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
3. உணவு ஊட்டும் முறையை மேம்படுத்துதல், சுகாதாரமான வாழ்வுமுறையைப் பின்பற்றுதல், கர்ப்பிணிகளைப் பேணுதல் போன்றவை குறித்து தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் தீர்வு கிடைக்கும்.
4. தமிழக குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க தாய்ப்பால் தருவது அவசியம்.
5. ஊட்டச்சத்தின் தேவை, கர்ப்பக்கால ரத்தசோகையைத் தவிர்த்தல், குழந்தைகளை நோயிலிருந்து தற்காத்தல், தடுப்பு மருந்துகளைத் தவறாமல் செலுத்துதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு அவசியம்.
பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும்.
குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வைக்க வேண்டும்."
சிறு குழந்தைகள் உள்ள வீட்டில், வீட்டு வேலைகள் நேரத்துக்கு நடக்காது. பொருள்களும் பொம்மைகளும் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிக் கிடக்கும். பொருள்களைச் சீராக அடுக்கி வைக்க சம்பளத்துக்கு ஆள்போடலாமா என்று கூட தோன்றும். குழந்தைகள் வளர்ந்த பின்னும் பல வீடுகளில் நிலைமை இதுதான். எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நிறைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிவதில்லை என்று சொல்வதை விடப் பழக்கப்படுத்தவில்லை என்பதுதான் சரி. சிறு வயதிலேயே பழக்கப்படுத்துகிற செயல்கள்தாம் பெரியவர்களாகும்போதும் தொடரும். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா.
"பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால்,குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அனைத்தையும் அறியும் வயது இது. சிறு வயதுக் குழந்தைகளாக இருந்தால் 'உனக்குத் தெரியாது, நீ கீழே கொட்டிடுவே, போட்டு உடைச்சிடுவே, உனக்கு எட்டாது, கைல குத்திப்பே... அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத' என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.
இந்த வயதில் குழந்தைகளின் கைகள் அத்தனை பலம் வாய்ந்ததாக இருக்காது. அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பயமே நம்மை அப்படி எண்ண வைக்கிறது. குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வைக்க வேண்டும். குழந்தைகளின் இரண்டு வயதில் ஆரம்பித்து `உன் பொம்மையை எல்லாம் கூடையில் போடு தங்கம், டாய்ஸ் எல்லாத்தையும் உன் அலமாரியில் அடுக்கி வை' என்பது போன்ற எளிய வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.
வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.
வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றனவும், சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துக்கொண்டு போய், சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கென நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம்' என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.
3 வயதுக் குழந்தையெனில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.
8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மாத்திரை எடுத்துத் தருவது, சாப்பிட்ட அவர்களுடைய இடத்தைச் சுத்தம் செய்வது, அவர்களைக் கவனித்து கொள்ளப் பழக்கப்படுத்தலாம்.
சிறு குழந்தைகள் உள்ள வீட்டில், வீட்டு வேலைகள் நேரத்துக்கு நடக்காது. பொருள்களும் பொம்மைகளும் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறிக் கிடக்கும். பொருள்களைச் சீராக அடுக்கி வைக்க சம்பளத்துக்கு ஆள்போடலாமா என்று கூட தோன்றும். குழந்தைகள் வளர்ந்த பின்னும் பல வீடுகளில் நிலைமை இதுதான். எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நிறைய குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. தெரிவதில்லை என்று சொல்வதை விடப் பழக்கப்படுத்தவில்லை என்பதுதான் சரி. சிறு வயதிலேயே பழக்கப்படுத்துகிற செயல்கள்தாம் பெரியவர்களாகும்போதும் தொடரும். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா.
"பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால்,குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அனைத்தையும் அறியும் வயது இது. சிறு வயதுக் குழந்தைகளாக இருந்தால் 'உனக்குத் தெரியாது, நீ கீழே கொட்டிடுவே, போட்டு உடைச்சிடுவே, உனக்கு எட்டாது, கைல குத்திப்பே... அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத' என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.
இந்த வயதில் குழந்தைகளின் கைகள் அத்தனை பலம் வாய்ந்ததாக இருக்காது. அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பயமே நம்மை அப்படி எண்ண வைக்கிறது. குழந்தைகளுக்குச் சூழலைக் கையாளும் திறன் குறைவாக இருக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய தயக்கப்படுவார்கள். அதை உடைத்து அவர்களால் முடியும் விஷயங்களைச் செய்ய வைக்க வேண்டும். குழந்தைகளின் இரண்டு வயதில் ஆரம்பித்து `உன் பொம்மையை எல்லாம் கூடையில் போடு தங்கம், டாய்ஸ் எல்லாத்தையும் உன் அலமாரியில் அடுக்கி வை' என்பது போன்ற எளிய வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.
வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.
வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றனவும், சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துக்கொண்டு போய், சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கென நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம்' என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.
3 வயதுக் குழந்தையெனில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.
8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மாத்திரை எடுத்துத் தருவது, சாப்பிட்ட அவர்களுடைய இடத்தைச் சுத்தம் செய்வது, அவர்களைக் கவனித்து கொள்ளப் பழக்கப்படுத்தலாம்.
கூச்ச சுபாவம் கொண்டவர்கள், வெளித்தோற்றத்தில் அமைதியானவர்களாக காட்சியளித்தாலும், அவர்கள் மனதிற்குள் போராட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மாணவர்களே நீங்கள் நன்றாக படிக்கிறீர்கள்..., ஆனால் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பலர் முன்னிலையில் அதை விளக்கிச் சொல்ல கூச்சமாக இருக்கிறதா?. சராசரி மாணவர்கள், தங்கள் பேச்சுத்திறமையால் தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லி பாராட்டு பெற்றுவிடும்போது, பதில் தெரிந்தும் சொல்ல முடியாத நிலை பரிதாபகரமானது. அது உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை பாதிக்கக்கூடியது. கூச்சம் ஏன் வருகிறது, கூச்சம் தவிர்த்தால் வெற்றி எப்படி தேடி வரும் என்பதை பார்ப்போம்...
பலர் முன் பேச கூச்சம், பந்தியில் பிடித்ததை கேட்டு வாங்க கூச்சம், மற்றவர் முன்னிலையில் தன் பெயரைச் சொல்லி யாராவது அழைத்தாலே கூச்சம், புரியாததை புரியவில்லை என்று சொல்ல கூச்சம் என ஒவ்வொருவரும் விதவிதமாக வெட்கப்படுவது உண்டு.
குழந்தைகளிடம் கூச்சம் அதிகரிக்க பெற்றோர் முதன்மை காரணமாக அமைகிறார்கள். ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களுக்கும் அவர்களின் கூச்சத்தில் பங்கு இருக்கிறது.
வாயை மூடு, அமைதியாக இரு என்று அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் எளிதில் கூச்ச சுபாவத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் பிள்ளைகள் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் பயந்த மற்றும் கூச்சம் மிக்கவர்களாக அவர்களை வளரச் செய்துவிடுகிறது. நல்லபிள்ளைக்கு அடையாளம் பேசாமல் இருப்பது என்ற நற்சான்றிதழ் பலரை அவசியமான நேரத்தில்கூட பேச முடியாத மவுனிகளாக மாற்றிவிடுகிறது. இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எது நல்லது, எது கெட்டது, எதை சரியாக பேச வேண்டும், எதை பேசாமல் தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.
தவறு செய்யும்போது மிரட்டுவதும், கண்டிப்பதும் பிள்ளைகளை பயம் கொண்டவர்களாகவும், தயக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பும் இதில் அடங்கும். மாணவரின் (குழந்தைகளின்) குறையை சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்துவிடுகிறது. அதுவே தாழ்வு மனப்பான்மையாகப் பெருகி, தன்னம்பிக்கையற்றவராக மாற்றிவிடுகிறது. அவர்கள் திறமை இருந்தும் தோல்வியாளர்களாக பின்தங்கிவிடுகிறார்கள்.
பெண்பிள்ளைகள், மாணவிகளுக்கு இந்த கூச்ச உணர்வு கொஞ்சம் மிகுதியாகவே இருக்கலாம். ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்காத மாணவிகள், எதிர்பாலினத்தவரை கண்டாலே கூச்சம் கொள்ளலாம். எதையும் பேசத் தயங்கலாம். பயம் கொள்ளலாம். உங்களின் தயக்கத்தை பெற்றோரிடம் விளக்கி தெளிவு பெறலாம்.
ஆணும், பெண்ணுமாக சேர்ந்து வாழும் சமூகத்தில் யாரையும் புறக்கணித்து வாழத் தேவையில்லை என்பதால் தங்கள் குழந்தைகளை இருபாலரும் பயிலும் பள்ளியில் சேர்ப்பது அவர்களிடம் வேண்டாத தயக்கத்தை தவிர்த்து, எதையும் இயல்பாக எதிர்கொள்ளும் பண்பை வளர்க்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
கூச்சத்தைப் போக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை...
உங்களுக்கு எப்போதெல்லாம் தயக்கம் வருகிறது என யோசியுங்கள். மேலே சொன்னதுபோல ஆசிரியர் -மாணவர்கள் முன்னிலையிலா, அறிமுகமற்ற நபர்கள் கூடியிருக்கும் பொது வெளியிலா? எந்த சூழல் தயக்கம் தருகிறது என பாருங்கள். ஏன் தயங்குகிறோம்? மற்றவர்களிடம் இல்லாத தயக்கம் எனக்கு மட்டும் ஏன்? இது கூச்சம் கொள்ள வேண்டிய சூழலா? என்பதை யோசித்து அடுத்தமுறை தயக்கமின்றி நடக்கப் பழகுங்கள். மாறாக அதுபோன்ற சூழல்களை தவிர்த்து ஒதுங்கிச் செல்லக்கூடாது.
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பேச தயக்கமாக இருந்தால், தெரியாது என்று சொல்லி தண்டனை பெறுவதைவிட, தெரிந்ததை முடிந்தவரை சொல்லிப் பார்ப்பது மேல். அது ஒன்றும் அவமானமல்ல. அதுவே தயக்கத்தைப் போக்கும் சரியான வழி.
நண்பர்களையோ, உறவுகளையோ சந்தித்தால் நீங்களாகச் சென்று பேச்சுக் கொடுத்து பழகுவது கூச்சத்தை விட்டொழிக்க சிறந்த வழி. அவர்கள் உங்கள் தவறுகளை கேலி கிண்டலுடன் சொல்லித் திருத்துவார்களே தவிர, உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் இழிவுபடுத்துவதாகத் தெரிந்தாலும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் கூச்ச உணர்வை விட்டொழித்தால்தான் முடியும்.
இப்படி தெரிந்தவர்கள் முன்னிலையில் சகஜமாக பேசிப் பழகினால், பள்ளியிலும், நாளை அலுவலகத்திலும், சமூகத்தில் பலர் முன்னிலையிலும் உங்களால் எதையும் துணிச்சலாக கூறவும், வெற்றி பெறவும் முடியும்.
மற்றவர்களுடன் உரையாடும்போது, கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கூச்சம் போக்கும். அவ்வப்போது தலையசைத்து பேச்சை ஆமோதித்தல், புன்னகைத்தல், கைகுலுக்குதல் போன்ற பழக்கங்களும் தயக்கத்தை விரட்டும்.
பொது நிகழ்ச்சிகள், விவாத அரங்கங்களுக்குச் சென்று பங்கேற்பது, பேசுவதை ஆவலுடன் கவனிப்பது கூச்சத்தைப் போக்கும். மாணவர் குழுக்கள், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயலாற்றுவது கூச்சத்தைப் போக்க சிறந்த வழிகள்.
சக மாணவர்கள், உறவினர்களிடம் பேசுவதற்கு பொருளே இல்லாவிட்டாலும் விைளயாட்டு, குடும்பம், பிடித்தது, பிடிக்காதது மற்றும் சுற்றுப் பயணங்கள் என பொதுவான விஷயங்களைப் பற்றி பேசலாம். அது உறவை வளர்க்கும், கூச்சம் போக்கும்.
எதற்கும் ஒத்திகையும், பயிற்சியும் சிறந்த பலன் தரும். பேச்சாளர்களும், பாடகர்களும் எத்தனையோ ஒத்திகைகள், சின்னச்சின்ன மேடைகளை சந்தித்து பயிற்சி பெற்றுத்தான் இறுதியில் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எனவே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தவறுகளுக்குத் தயங்கலாம், எண்ணியதைச் சொல்ல தயங்கலாமா?
கூச்சம் தவிர்ப்போம், வெற்றிகள் குவிப்போம்.
பலர் முன் பேச கூச்சம், பந்தியில் பிடித்ததை கேட்டு வாங்க கூச்சம், மற்றவர் முன்னிலையில் தன் பெயரைச் சொல்லி யாராவது அழைத்தாலே கூச்சம், புரியாததை புரியவில்லை என்று சொல்ல கூச்சம் என ஒவ்வொருவரும் விதவிதமாக வெட்கப்படுவது உண்டு.
குழந்தைகளிடம் கூச்சம் அதிகரிக்க பெற்றோர் முதன்மை காரணமாக அமைகிறார்கள். ஆசிரியர்களும், நண்பர்களும், உறவினர்களுக்கும் அவர்களின் கூச்சத்தில் பங்கு இருக்கிறது.
வாயை மூடு, அமைதியாக இரு என்று அதட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் எளிதில் கூச்ச சுபாவத்திற்கு உள்ளாகிறார்கள். பெண் பிள்ளைகள் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் பயந்த மற்றும் கூச்சம் மிக்கவர்களாக அவர்களை வளரச் செய்துவிடுகிறது. நல்லபிள்ளைக்கு அடையாளம் பேசாமல் இருப்பது என்ற நற்சான்றிதழ் பலரை அவசியமான நேரத்தில்கூட பேச முடியாத மவுனிகளாக மாற்றிவிடுகிறது. இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் எது நல்லது, எது கெட்டது, எதை சரியாக பேச வேண்டும், எதை பேசாமல் தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமலே வளர்ந்துவிடுகிறார்கள். பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.
தவறு செய்யும்போது மிரட்டுவதும், கண்டிப்பதும் பிள்ளைகளை பயம் கொண்டவர்களாகவும், தயக்கம் உடையவர்களாகவும் உருவாக்குகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பும் இதில் அடங்கும். மாணவரின் (குழந்தைகளின்) குறையை சுட்டிக் காட்டும்போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து அவர்களை செயல்பட விடாமல் செய்துவிடுகிறது. அதுவே தாழ்வு மனப்பான்மையாகப் பெருகி, தன்னம்பிக்கையற்றவராக மாற்றிவிடுகிறது. அவர்கள் திறமை இருந்தும் தோல்வியாளர்களாக பின்தங்கிவிடுகிறார்கள்.
பெண்பிள்ளைகள், மாணவிகளுக்கு இந்த கூச்ச உணர்வு கொஞ்சம் மிகுதியாகவே இருக்கலாம். ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்காத மாணவிகள், எதிர்பாலினத்தவரை கண்டாலே கூச்சம் கொள்ளலாம். எதையும் பேசத் தயங்கலாம். பயம் கொள்ளலாம். உங்களின் தயக்கத்தை பெற்றோரிடம் விளக்கி தெளிவு பெறலாம்.
ஆணும், பெண்ணுமாக சேர்ந்து வாழும் சமூகத்தில் யாரையும் புறக்கணித்து வாழத் தேவையில்லை என்பதால் தங்கள் குழந்தைகளை இருபாலரும் பயிலும் பள்ளியில் சேர்ப்பது அவர்களிடம் வேண்டாத தயக்கத்தை தவிர்த்து, எதையும் இயல்பாக எதிர்கொள்ளும் பண்பை வளர்க்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
கூச்சத்தைப் போக்க சில வழிகளை பின்பற்ற வேண்டும். அவை...
உங்களுக்கு எப்போதெல்லாம் தயக்கம் வருகிறது என யோசியுங்கள். மேலே சொன்னதுபோல ஆசிரியர் -மாணவர்கள் முன்னிலையிலா, அறிமுகமற்ற நபர்கள் கூடியிருக்கும் பொது வெளியிலா? எந்த சூழல் தயக்கம் தருகிறது என பாருங்கள். ஏன் தயங்குகிறோம்? மற்றவர்களிடம் இல்லாத தயக்கம் எனக்கு மட்டும் ஏன்? இது கூச்சம் கொள்ள வேண்டிய சூழலா? என்பதை யோசித்து அடுத்தமுறை தயக்கமின்றி நடக்கப் பழகுங்கள். மாறாக அதுபோன்ற சூழல்களை தவிர்த்து ஒதுங்கிச் செல்லக்கூடாது.
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது பதில் தெரிந்தும் பேச தயக்கமாக இருந்தால், தெரியாது என்று சொல்லி தண்டனை பெறுவதைவிட, தெரிந்ததை முடிந்தவரை சொல்லிப் பார்ப்பது மேல். அது ஒன்றும் அவமானமல்ல. அதுவே தயக்கத்தைப் போக்கும் சரியான வழி.
நண்பர்களையோ, உறவுகளையோ சந்தித்தால் நீங்களாகச் சென்று பேச்சுக் கொடுத்து பழகுவது கூச்சத்தை விட்டொழிக்க சிறந்த வழி. அவர்கள் உங்கள் தவறுகளை கேலி கிண்டலுடன் சொல்லித் திருத்துவார்களே தவிர, உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எதையும் செய்ய மாட்டார்கள். அப்படி அவர்கள் இழிவுபடுத்துவதாகத் தெரிந்தாலும் அதை எதிர்த்துப் போராட நீங்கள் கூச்ச உணர்வை விட்டொழித்தால்தான் முடியும்.
இப்படி தெரிந்தவர்கள் முன்னிலையில் சகஜமாக பேசிப் பழகினால், பள்ளியிலும், நாளை அலுவலகத்திலும், சமூகத்தில் பலர் முன்னிலையிலும் உங்களால் எதையும் துணிச்சலாக கூறவும், வெற்றி பெறவும் முடியும்.
மற்றவர்களுடன் உரையாடும்போது, கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவது கூச்சம் போக்கும். அவ்வப்போது தலையசைத்து பேச்சை ஆமோதித்தல், புன்னகைத்தல், கைகுலுக்குதல் போன்ற பழக்கங்களும் தயக்கத்தை விரட்டும்.
பொது நிகழ்ச்சிகள், விவாத அரங்கங்களுக்குச் சென்று பங்கேற்பது, பேசுவதை ஆவலுடன் கவனிப்பது கூச்சத்தைப் போக்கும். மாணவர் குழுக்கள், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயலாற்றுவது கூச்சத்தைப் போக்க சிறந்த வழிகள்.
சக மாணவர்கள், உறவினர்களிடம் பேசுவதற்கு பொருளே இல்லாவிட்டாலும் விைளயாட்டு, குடும்பம், பிடித்தது, பிடிக்காதது மற்றும் சுற்றுப் பயணங்கள் என பொதுவான விஷயங்களைப் பற்றி பேசலாம். அது உறவை வளர்க்கும், கூச்சம் போக்கும்.
எதற்கும் ஒத்திகையும், பயிற்சியும் சிறந்த பலன் தரும். பேச்சாளர்களும், பாடகர்களும் எத்தனையோ ஒத்திகைகள், சின்னச்சின்ன மேடைகளை சந்தித்து பயிற்சி பெற்றுத்தான் இறுதியில் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். எனவே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. தவறுகளுக்குத் தயங்கலாம், எண்ணியதைச் சொல்ல தயங்கலாமா?
கூச்சம் தவிர்ப்போம், வெற்றிகள் குவிப்போம்.
குழந்தைகள் பொய் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.
குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.
குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.
குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.
குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.






