search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?
    X
    குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?

    குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?

    வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
    குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

    * காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.

    * மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.

    * காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது.

    * வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.

    * பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

    * கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் பிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

    * ஒரு காகிதத்தில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    * தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    * அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.

    எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். இசையைக் கேட்கலாம். கவிதை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.

    Next Story
    ×