search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    திருமங்கையாழ்வார் திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
    இந்த திவ்ய திருத்தலத்தை ஆழ்வார்கள் எவரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று பலர் காலகாலமாகக் கருதி வந்திருந்த போதிலும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ‘வெருவாதாள்’ என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும், ‘ஏழைஏதலன்’ எனத் தொடங்கும் பத்து பாசுரங்களிலும், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மேலும் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகரும் நிபாச திலகத்தில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ஆழ்வார்கள் திருக்கோவில்களில் இருந்தே பாடியதால் 108 திவ்ய தலங்களில் இத்திருத்தலம் இடம்பெறவில்லை.

    திருமங்கையாழ்வார் திருமொழி
    ஐந்தாம் திருமொழி வெருவாதாள்
    1.வெருவாதாள் வாய்வருவி வேங்கடமே!
    வேங்கடமே! யென்கின்றாளால்
    மருவாளால் வெண்குடங்கால் வாணெடுங்கண
    துயில் மறந்தாள் வண்டார் கொண்ட,
    உருவாளன் வானவர்தம் உயிரால் ஒலி திரை
    நீர் பௌவங் கொண்ட
    திருவாளன் என்மகளை செய்தனகள்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே
    2.கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா
    என்செய்கேன் நான்?
    விளையாளா அடியேனை வேண்டுதியோ?
    வேண்டாயோ? என்னும் மெய்ய
    மலையாளன் வானவர்தம் தலையாளன்
    மராமரம் ஏழுஎய்த என்றிச்
    சிலையாளன் என்மகளை செய்தனகல்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
    3.மானாய மென்நோக்கி வானெடுங்கன்
    நீர்மல்கும் வளையும் சோறுடம்
    தேனாய நறுந்துளாய் அலங்கலின்
    திறம் பேசி உறங்கான் காண்மின்
    கானாயன் கடமலையில் தயிருண்டு
    நெய்பருக நந்தன் பெற்ற
    ஆனாயன் என்மகளை செய்தனகள்
    அம்மனைமீர்! அறிகிலேனே!
    4.தாய்வாயிற் சொற்கேளான் தன்னாய்த்
    தோடணையாள் தடமென்கொங்கை
    யே ஆரச் சாந்தணியாள் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே என்னும்
    பேய்மாய முலையுண்டு இவ்வுலகுஉண்ட
    பெருவயிற்றின் பேசில் நங்காய்
    மாமாயன் என்மகளை செய்தனகள்
    மங்கையீர்! மதிக்கிலேனே!
    5.பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயற்கண்
    மைஎழுதாள் பூவை பேணாள்,
    ஏன் அறியாள் எத்தனையும் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே? என்னும்
    நான் மலரால் நாயகனாய் நாமறிய
    வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
    ஆண்மகனாய் என் மகளை செய்தனள்
    அம்மனைமீர்! அறிகிலேனே.
    ‘‘திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்’
    திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
    எட்டாம் திருமொழி - ஏழையேதலன்.

    1.ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி
    மற்றவர்க்கு இன்னருள் சுரந்து
    மாழை மான்மட நோக்கி உன்தோழி எம்பி
    உம்பி என்று ஒழிந்திலை உகந்து
    தோழன் நீயென கிங்கொழி என்ற சொற்கள்
    வந்தடியேன் மனத்து இருந்திட
    ஆழிவண்ண! நுன் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    2.வாதமாமகன் மர்க்கடம் விலங்கு
    மற்றோர் சாதி என்று ஒழிந்தலை உகந்து
    காதலாதரம் கடலினும் பெருகச் செய்த
    கவினுக்கு இல்லை கைம்மாறு என்று
    கோதில் வாய்மையினாயடு உடனே உன்பனா
    என்ற ஒண்பொருள் எனக்கும்
    ஆதல் வேண்டும என்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    3.கடிகொள் பூம்பொழிற் காமரு பொய்கை
    வைகு தாமரை வாங்கிய வேழம்
    முடியும் வண்ணமோர் முழுவலி முதலைபற்ற
    மற்றது நின்சரண் நினைப்பக்
    கொடிய வாய்விலங்கு இன்னுயிர் மலங்கக்கொண்ட
    சீற்றம் ஒன்று உண்டுள்ளது அறிந்து உன்
    அடியனேனும் வந்து அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    4.நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம்
    வெருவி வந்து நின்சரணெனச் சரணா
    நெஞ்சிற் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு
    அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
    வெஞ்சொலாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய
    செய்வனுள அதற்கு அடியேன்
    அஞ்சி வந்துநின் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    5. மாக மாநிலம் முழுதும்வந்து இறைஞ்சும்
    மலரடி கண்ட மாமறையாளன்
    தோகை மாமயில் அன்னவரின்பம் துற்றிலாமை
    இலத்த இங் கொழிந்து
    போகம் நீயெய்திப் பின்னுநம் மிடைக்கே
    போதுவாய் என்ற பொன்னருள் எனக்கு
    மாக வேண்டுமென்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.

    அன்னை அகிலாண்டேவரி அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும், பின்னரும் கன்னி என மறைபேசும் ஆனந்த வடி மயிலாக விளங்குகின்றாள். கருணை நோக்குடன் கருவறையில் காட்சியளிக்கும் அன்னையின் எதிரில், சங்கராச்சாரிய சுவாமிகள் வைத்த விநாயகர், உள்ளார். அன்னையின் திருவுருவம் நல்ல கம்பீரமான திருத்தோற்றம்.

    கருணை பொழிகின்ற இத்திருமுகநாயகி, வழிபடும் அன்பருக்கெல்லாம் அட்டமாசித்திகள் அருளித் திகழ்கின்றாள். அன்னை அகிலாண்டநாயகியை வணங்கி வழிபட்ட தாயுமானவர்.

    “அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
    விருது கட்டிய பொன் அன்னமே!
    அண்டகோடி புகழ்காவை வாழும்
    அகிலாண்டநாயகி என் அம்மையே”

    என்று அன்னையின் அருள் நிலையைப போற்றுகின்றார். அன்னை அகிலாண்ட நாயகியைக் கண்ணாரக் கண்டு வழிபட்ட மற்றொரு கவிஞன்.

    “அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
    அணிஉருப் பாதியில் வைத்தான்
    தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
    சடைமுடி வைத்தனன் அதனால்
    பிளவியல்மதியம் சூடிய பெருமான்
    பித்தன் என்றொருபெயர் பெற்றான்
    களமர்மொய் கழனி சூழ்திரு ஆனைக்
    கா அகிலாண்ட நாயகியே”

    என்று பாடிப் போற்றுகின்றான்.

    அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன். அன்னையைக் கண்டு வழிபட்ட அக் கவிஞன், அம்மையே! அகிலாண்ட நாயகியே என் போன்ற அடியார்கள் புரியும் எண்ணிறந்த பிழைகளைப் பொருத்தருள் புரியும் அன்னையாகிய உன்னை ஒரு பாகத்தில் வைத்த பரமன் மூன்று பிழைகட்கு மேல் பொறுக்காத ஒரு மங்கையைத் தன் சடைமுடியின் மேல் ஏற்றிவைத்தானே! இதனால் அன்றே பித்தன் என்ற ஒரு பெயரையும் பெற்றான் என்று பாடுவதன் வாயிலாக, அகிலாண்ட நாயகியின் அருட்சிறப்பினைப் போற்றுகின்றான்.

    இங்ஙனம் அருள்பாலிக்கும் வகையில் சிறந்து விளங்குகின்ற அன்னை அகிலாண்டேசுவரி, மிகப்பெரிய தனித் திருக்கோவிலில், அடர்ந்த தென்னந் தோப்பினுள் திருச் சந்நிதி கொண்டு தனிப் பொலிவுடன் திகழ்கின்றாள். அன்னை சந்நிதிக்குச் செல்லும் வழியில் பெரிய தூண் ஒன்றில் ஏகபாத மூர்த்தி காணப்படுகின்றது. மும்மூர்த்திகளையும் தமது திருமேனியில் படைத்து, பிறகு அவர்களைத் தமது திருமேனியிலே ஒடுக்கி விடுகின்றார். சிவபெருமான் என்பதை ஏகபாத மூர்த்தி சிற்பம் உணர்த்துகின்றது. அன்னை சந்நிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்ச முக விநாயகர் விளங்குகின்றார். அவருக்குத்தலைமேல் ஒரு முகமும். இரு காது புறமும் இரு முகங்களும், பின்புறமாக ஒரு முகமும் சேர்ந்து ஐந்து முகங்களுடன் காட்சி தருகின்றார்.
    அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
    “”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
    தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
    நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
    நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

    திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
    திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.

    ‘பத்ம த்வாஜய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’

    இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜையறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளித்தரும்.
    சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
    காகத் வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்நோ மந்தப் ப்ரசோதயாத்

    சனிக்கிழமை அன்று நல்லெண்ணெயில் சனீஸ்வரருக்கு குளிர, குளிர அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதோடு சனி கவசம் பாடி வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனி பகவான் வழங்குவார்.
    ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம்.
    இந்த அன்னை, அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகம் கொண்ட இவள், பட்டாடை அணிந்து, கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவும் சூடியிருப்பாள். திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் கனி, அல்லி மலர் ஆகியவற்றை ஏந்தி, வலது காலை மடித்து வைத்தும் இடதுகாலைத் தொங்கவிட்டு, அதை தாமரை மலரில் வைத்திருக்கும் தோற்றத்துடனும் காணப்படுகிறாள்.

    சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பார்கள். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம். கலைகளில் தேர்ச்சி பெறலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி.

    மந்திரம்:-

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
    நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகம் கொண்டவள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் இருக்கும். இவள் தனது பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி, அபய, வரதம் முத்திரை தரித்தவள். சிவப்புப் பட்டாடை அணிந்திருப்பாள். முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்திருப்பாள்.

    இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள், திருவருட் பார்வையால் நொடியில் மேன்மை அடையலாம். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளில் முதன்மையாக வரலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை பஞ்சமி.

    மந்திரம்:-

    ஓம் நீலபதாகாயை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.
    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீ சக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப்படும். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங் களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக, லலிதா பரமேஸ்வரியை சுற்றி வீற்றிருந்து அருள்வதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை எனப்படும் கிருஷ்ண பட்சம் (அமாவாசையுடன் சேர்த்து 15 நாட்கள்), வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சம் (பவுர்ணமியுடன் சேர்த்து 15 நாட்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்ச பதினைந்து நாட்களில் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் அதிபதிகளாக வருவார்கள். ஒரு மாதத்தின் இரு நாட்களில் பிரபஞ்சத்தை நிர்வாகம் செய்கின்றனர். குறிப்பிட்ட திதியை பரிபாலனம் செய்யும் தேவிகளை வழிபட்டால் வறுமை உள்ளிட்ட சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இங்கே 5 நித்ய தேவிகளைப் பற்றிய விவரங்களை சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    மஹா வஜ்ரேஸ்வரி

    இந்த தேவி ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று, வஜ்ரமணியால் ஆனது என்றும், அதன் அருகில் வஜ்ரமயமான நதி ஒன்று உள்ளது என்றும், அதற்கெல்லாம் அதி தேவதை வஜ்ரேஸ்வரி என்றும், துர்வாச முனிவர் தன்னுடைய லலிதாஸ்தரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் இருக்கிறாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க விரைந்து வருவாள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை, செந்நிற பூக்களால் ஆன மாலையை அணிந்தவள். வைடூரியம் பதித்த கிரீடம், கைகளில் பாசம், அங்குசம், கரும்பு- வில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களை பார்க்கிறாள். இந்த அன்னையை வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சஷ்டி, தேய்பிறை தசமி

    மந்திரம்:-

    ஓம் மஹா வஜ்ரேஸ்வர்யை வித்மஹே
    வஜ்ர நித்யாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    சிவதூதி

    சிவபெருமானையே தூதாக அனுப்பியவள் இந்த தேவி. சும்பன் மற்றும் நிசும்பன் ஆகியோருடன் போரிட அம்பிகை முடிவு செய்தாள். போர் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை அந்த அசுரர்களிடம் சிவபெருமானை தூதாக அனுப்பியதாக தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம், கோடை காலத்து சூரிய ஒளிபோல் மின்னும். நவரத்தினங்கள் இழைத்த மகுடமும், பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்வன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங் களையும் அன்பர்களுக்கு அளிப்பவள். இந்த தேவியை வழிபட்டு வந்தால், நமக்கு எதிராக நடைபெறும் அநீதியும், அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கைகள் எளிதாக நிறைவேறும். ஆபத்து நெருங்காது.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சப்தமி, தேய்பிறை நவமி

    மந்திரம்:-

    ஓம் சிவதூத்யை வித்மஹே
    சிவங்கர்யை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    த்வரிதா

    இந்த தேவிக்கு ‘தோதலா தேவி’ என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். தன்னுடைய உடலில் எட்டு நாகங்களை சூடியிருப்பாள். கருநீல நிறமான இவள், முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுகத்துடன் அருள்கிறாள். சலங்கை, இடை மேகலை, ரத்ன ஆபரணங்களுடன், மயில் பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார ரூபமாக தரிசனம் தருகிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியை வணங்கு பவர்களுக்கு, அஷ்ட சித்திகளும், ஞானமும் கைகூடும். பயம் விலகும். கலைகளில் தேர்ச்சி பெறலாம். அதோடு பூரண ஆயுளும் கிடைக்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி

    மந்திரம்:-

    ஓம் த்வரிதாயை வித்மஹே
    மஹாநித்யாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    குலஸுந்தரி

    குலஸுந்தரி என்பது குண்டலினி சக்தியை குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இந்த தேவி. பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரைப் போன்ற மலர்ந்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் இருக்க, கரங்களில் ஜெபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள். தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும் இவளைச் சுற்றி இருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும், அசுரர்களும் கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர். இந்த தேவியை வழிபடுபவர்கள், சகல ஞானமும் பெறுவர். செல்வ வளமும், சொத்துக்களும் சேரும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை நவமி, தேய்பிறை சப்தமி

    மந்திரம்:-

    ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
    காமேஸ்வர்யை தீமஹி
    தன்னோ சக்தி ப்ரசோதயாத்.

    சர்வாத்மிகா

    காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி

    மந்திரம்:-

    ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
    நித்யா நித்யாயை தீமஹி
    தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
    சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு.
    கருணை மிகுந்த இந்த அம்பிகையை வழிபடுவோர், மூவுலகிலும் புத்தி மற்றும் சக்தியோடு வாழ்வர். சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல், முக்கண்கள், திருமுடியில் பிறை சந்திரன் கொண்டு அருளும் இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். இந்த அன்னையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை திருதியை, தேய்பிறை திரயோதசி.

    மந்திரம்:

    ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
    நித்ய மதத்ரவாய தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    வஹ்னி வாஸினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.
    அக்னி மண்டலத்தில் உறைவதால் வஹ்னி வாஸினி என்று பெயர். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். `வஹ்னி’ என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள். தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள். இந்த அம்மனை வழிபட்டால் நோய் தீரும், தேக பலத்தோடு, உலக இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அமையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை ஏகாதசி.

    மந்திரம்:

    ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
    ஸித்திப்ரதாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்
    ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள், சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்
    மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன
    ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

    இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும். ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
    இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
    காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள்.

    கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி

    மந்திரம்:-

    ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
    நித்யா நித்யாயை தீமஹி
    தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
    ×