என் மலர்

    ஸ்லோகங்கள்

    விஜயா நித்யா தேவி
    X
    விஜயா நித்யா தேவி

    விஜயா நித்யா தேவி காயத்ரி மந்திரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம்.
    இந்த அன்னை, அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகம் கொண்ட இவள், பட்டாடை அணிந்து, கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும், நெற்றியில் பிறை நிலவும் சூடியிருப்பாள். திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம் கனி, அல்லி மலர் ஆகியவற்றை ஏந்தி, வலது காலை மடித்து வைத்தும் இடதுகாலைத் தொங்கவிட்டு, அதை தாமரை மலரில் வைத்திருக்கும் தோற்றத்துடனும் காணப்படுகிறாள்.

    சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பார்கள். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இந்தத் தாய் விளங்குகிறாள். இந்த தேவியை வழிபாடு செய்தால், வழக்குகளில் வெற்றி காணலாம். கலைகளில் தேர்ச்சி பெறலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:-

    வளர்பிறை துவாதசி, தேய்பிறை சதுர்த்தி.

    மந்திரம்:-

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    Next Story
    ×