search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஸ்ரீரங்கநாதர்
    X
    ஸ்ரீரங்கநாதர்

    திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர் மங்களாசாசனம்

    திருமங்கையாழ்வார் திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
    இந்த திவ்ய திருத்தலத்தை ஆழ்வார்கள் எவரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று பலர் காலகாலமாகக் கருதி வந்திருந்த போதிலும் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ‘வெருவாதாள்’ என்று தொடங்கும் பத்து பாசுரங்களிலும், ‘ஏழைஏதலன்’ எனத் தொடங்கும் பத்து பாசுரங்களிலும், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு அந்த பாசுரங்களில் இருந்தும், கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மேலும் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீவேதாந்த தேசிகரும் நிபாச திலகத்தில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். ஆழ்வார்கள் திருக்கோவில்களில் இருந்தே பாடியதால் 108 திவ்ய தலங்களில் இத்திருத்தலம் இடம்பெறவில்லை.

    திருமங்கையாழ்வார் திருமொழி
    ஐந்தாம் திருமொழி வெருவாதாள்
    1.வெருவாதாள் வாய்வருவி வேங்கடமே!
    வேங்கடமே! யென்கின்றாளால்
    மருவாளால் வெண்குடங்கால் வாணெடுங்கண
    துயில் மறந்தாள் வண்டார் கொண்ட,
    உருவாளன் வானவர்தம் உயிரால் ஒலி திரை
    நீர் பௌவங் கொண்ட
    திருவாளன் என்மகளை செய்தனகள்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே
    2.கலையாளா அகலல்குல் கனவளையும் கையாளா
    என்செய்கேன் நான்?
    விளையாளா அடியேனை வேண்டுதியோ?
    வேண்டாயோ? என்னும் மெய்ய
    மலையாளன் வானவர்தம் தலையாளன்
    மராமரம் ஏழுஎய்த என்றிச்
    சிலையாளன் என்மகளை செய்தனகல்
    எங்ஙனம் நான் சிந்திக்கேனே?
    3.மானாய மென்நோக்கி வானெடுங்கன்
    நீர்மல்கும் வளையும் சோறுடம்
    தேனாய நறுந்துளாய் அலங்கலின்
    திறம் பேசி உறங்கான் காண்மின்
    கானாயன் கடமலையில் தயிருண்டு
    நெய்பருக நந்தன் பெற்ற
    ஆனாயன் என்மகளை செய்தனகள்
    அம்மனைமீர்! அறிகிலேனே!
    4.தாய்வாயிற் சொற்கேளான் தன்னாய்த்
    தோடணையாள் தடமென்கொங்கை
    யே ஆரச் சாந்தணியாள் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே என்னும்
    பேய்மாய முலையுண்டு இவ்வுலகுஉண்ட
    பெருவயிற்றின் பேசில் நங்காய்
    மாமாயன் என்மகளை செய்தனகள்
    மங்கையீர்! மதிக்கிலேனே!
    5.பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயற்கண்
    மைஎழுதாள் பூவை பேணாள்,
    ஏன் அறியாள் எத்தனையும் எம்பெருமான்
    திருவரங்கம் எங்கே? என்னும்
    நான் மலரால் நாயகனாய் நாமறிய
    வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
    ஆண்மகனாய் என் மகளை செய்தனள்
    அம்மனைமீர்! அறிகிலேனே.
    ‘‘திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்’
    திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
    எட்டாம் திருமொழி - ஏழையேதலன்.

    1.ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி
    மற்றவர்க்கு இன்னருள் சுரந்து
    மாழை மான்மட நோக்கி உன்தோழி எம்பி
    உம்பி என்று ஒழிந்திலை உகந்து
    தோழன் நீயென கிங்கொழி என்ற சொற்கள்
    வந்தடியேன் மனத்து இருந்திட
    ஆழிவண்ண! நுன் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    2.வாதமாமகன் மர்க்கடம் விலங்கு
    மற்றோர் சாதி என்று ஒழிந்தலை உகந்து
    காதலாதரம் கடலினும் பெருகச் செய்த
    கவினுக்கு இல்லை கைம்மாறு என்று
    கோதில் வாய்மையினாயடு உடனே உன்பனா
    என்ற ஒண்பொருள் எனக்கும்
    ஆதல் வேண்டும என்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    3.கடிகொள் பூம்பொழிற் காமரு பொய்கை
    வைகு தாமரை வாங்கிய வேழம்
    முடியும் வண்ணமோர் முழுவலி முதலைபற்ற
    மற்றது நின்சரண் நினைப்பக்
    கொடிய வாய்விலங்கு இன்னுயிர் மலங்கக்கொண்ட
    சீற்றம் ஒன்று உண்டுள்ளது அறிந்து உன்
    அடியனேனும் வந்து அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    4.நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம்
    வெருவி வந்து நின்சரணெனச் சரணா
    நெஞ்சிற் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு
    அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
    வெஞ்சொலாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய
    செய்வனுள அதற்கு அடியேன்
    அஞ்சி வந்துநின் அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    5. மாக மாநிலம் முழுதும்வந்து இறைஞ்சும்
    மலரடி கண்ட மாமறையாளன்
    தோகை மாமயில் அன்னவரின்பம் துற்றிலாமை
    இலத்த இங் கொழிந்து
    போகம் நீயெய்திப் பின்னுநம் மிடைக்கே
    போதுவாய் என்ற பொன்னருள் எனக்கு
    மாக வேண்டுமென்ற அடியினை அடைந்தேன்
    அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
    Next Story
    ×