என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    திருமால் எடுத்த அவதாரங்களில் வராஹி அவதாரத்தின் தியான ஸ்லோகத்தையும், மூலமந்திரத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
    திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.

    அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
    முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
    ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
    ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

    மூல மந்திரம்

    ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
    பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.

    மந்திர ஜப பலன்

    இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
    திருமால் எடுத்த அவதாரங்களில் கூர்ம அவதாரத்தின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களை பார்க்கலாம். இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.
    தியான ஸ்லோகம்

    பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
    தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.

    மூல மந்திரம்

    ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.

    மந்திர ஜப பலன்

    இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.
    வாராஹி தேவியை வணங்கி வழிபட்டு வந்தால், எதிரிகள் தொடர்பான பயம் நீங்கும். எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தூள் தூளாக்குவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள்.
    பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதிப்பதற்கான அற்புதமான நாள். வாராஹி தேவிக்கு அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!

    வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

    வராஹி மூல மந்திரம் :
    ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
    ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

    ஓம் ஐம் க்லெளம் ஐம்
    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
    வாராஹி வாராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
    என்று சொல்லி வழிபடலாம்.
    ஓம் வாம் வாராஹி நம:
    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
    க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

    லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்
    பாதுகாப்பாம். ஸ்வாஹா

    எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும்

    எனும் வாராஹி தேவியின் மந்திரத்தை தினமும் 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுத்தருளும். இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தவழச் செய்யும்.

    சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் வாராஹிதேவியை வணங்குவோம். மனோபலம் பெருகும். தடைகள் அகலும். இதுவரை தடைப்பட்டு வந்த விசேஷங்களும் மங்கல காரியங்களும் இனிதே நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வாள் வாராஹி அன்னை!
    திருமால் எடுத்த அவதாரங்கள் தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த வகையில் இன்று மச்ச அவதாரத்திற்கான தியான ஸ்லோகத்தையும், மூலமந்திரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
    திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.

    மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
    ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே

    மூல மந்திரம்

    ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ

    மந்திர ஜப பலன்

    இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.
    தவிர்க்க முடியாத காரணங்களால் கோவில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.
    நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள்களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம். ஒவ்வொரு காலத்துக்குமான பூஜை விவரங்கள் இங்கே உங்களுக்காக...
    மகா சிவராத்திரி!

    முதல் கால பூஜை : (இரவு 10 மணி)

    வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்

    பதிகம்: சிவமகாபுராணம்

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்
    நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க...
    மகா சிவராத்திரி!

    இரண்டாம் கால பூஜை : (இரவு 12 மணி)

    வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்

    பதிகம் : கீர்த்தி திருஅகவல்

    பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
    கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
    அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
    இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
    பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145
    ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே.
    மகா சிவராத்திரி!

    மூன்றாம் கால பூஜை : ( நள்ளிரவு 2 மணி)

    வழிபட வேண்டிய மூர்த்தம் - லிங்கோத்பவர்

    பதிகம் : திருவண்டப்பகுதி

    இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
    அரிய அதில் அரிய அரியோன் காண்க
    மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
    நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
    மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க

    நான்காம் கால பூஜை : (அதிகாலை 4 மணி)

    வழிபட வேண்டிய மூர்த்தம் - ரிஷபாரூடர்

    பதிகம் : போற்றித் திருஅகவல்

    ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
    பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
    பராய்த் துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மகா சிவராத்திரி!
    மகாசிவராத்திரி... உள்ளத்தை உருக்கும்சிவப்பாடல்...
    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம்.
    ஓம் வெங்கட நாதாய வித்மஹே
    ஸச் சித்தானந்தாய தீமஹி
    தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

    ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர். மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
    மீனாட்சி அம்மனின் புகழ் பாடும் இந்த 108 போற்றி திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
    ஓம் அரசிளங்குமரியே போற்றி
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
    ஓம் அமுதநாயகியே போற்றி
    ஓம் அருந்தவநாயகியே போற்றி
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
    ஓம் ஆதியின் பாதியே போற்றி
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
    ஓம் இமயத்தரசியே போற்றி
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    ஓம் ஈசுவரியே போற்றி
    ஓம் உயிர் ஓவியமே போற்றி
    ஓம் உலகம்மையே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
    ஓம் ஏகன் துணையே போற்றி
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி
    ஓம் கற்பின் அரசியே போற்றி
    ஓம் கருணை ஊற்றே போற்றி
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி
    ஓம் கனகாம்பிகையே போற்றி
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
    ஓம் சக்தி வடிவே போற்றி
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

    ஓம் சிவயோக நாயகியே போற்றி
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி
    ஓம் சிங்காரவல்லியே போற்றி
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
    ஓம் சேனைத்தலைவியே போற்றி
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி
    ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
    ஓம் ஞானாம்பிகையே போற்றி
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
    ஓம் திருவுடையம்மையே போற்றி
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    ஓம் திருநிலை நாயகியே போற்றி
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    ஓம் நல்ல நாயகியே போற்றி
    ஓம் நீலாம்பிகையே போற்றி
    ஓம் நீதிக்கரசியே போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
    ஓம் பார்வதி அம்மையே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பெரிய நாயகியே போற்றி
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
    ஓம் மங்கள நாயகியே போற்றி
    ஓம் மழலைக்கிளியே போற்றி
    ஓம் மனோன்மணித் தாயே போற்றி
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
    ஓம் மாயோன் தங்கையே போற்றி
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
    ஓம் வேதநாயகியே போற்றி
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

    ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவடிகள் போற்றி

    பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும், புகழ் கிடைக்கும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்
    ராம நாமம் சொல்ல துவங்குங்கள். உங்கள் வாழ்வில் அந்த கணத்திலிருந்து புது அத்தியாயம் துவங்க ஆரம்பித்துவிடும். இது சத்தியம்.உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.

    ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
    ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

    நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
    இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
    நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும்
    உண்டாம் வீ டியல் வழியதாக்கும் வேரியம்
    கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை
    நீறு பட்டழிய வாகை சூடிய சிலையிராமன்
    தோள்வலி கூறுவார்க்கே.

    பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.
    ஒரே ஒரு கணம், ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
    ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. 'கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

    சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
    முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
    காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
    தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)
    திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
    திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
    கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
    உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!
    பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
    கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
    கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
    விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக
    மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
    காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
    சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
    தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!
    பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
    தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
    சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
    எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!
    சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
    இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
    குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
    கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
    தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!
    எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
    த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
    அநந்தபூமா மம ரோகராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

    – ஸ்ரீமத் நாராயணீயம்

    பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
    திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் தினமும் இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும்.
    திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆனால் இன்று ஆயிரம் வரன்கள் வந்தாலும், ஒரு வரன் கூட அமையாத நிலைதான் பிள்ளைகளை பெற்றவர்கள் படும் துயரம். இதில், இன்றைய பல பெண் வயதாகியும் திருமண பந்தத்தை விரும்பாமல் தனித்து வாழ நினைக்கின்றனர். திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஆண்களும் பெற்றோருடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

    திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் இந்த பாடல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

    அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
    அடியனேன் மெலிவாகிமனம்சற் றிளையாதே
    திறல்குலாவிய சேவடி வந்தித் தருள்கூடத்
    தினமுமேமிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
    விறல்நிசாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
    விமல மாதபி ராமிதருஞ்செய்ப் புதல்வோனே
    மறவர் வாணுதல் வேடைகொளும்பொற் புயவீரா
    மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே!
    ஏறுமயில் ஏறிவிளை யாடும் முகம் ஒன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
    கூறும் அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
    வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
    ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
    ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!

    இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும். தடையின்றி திருமண வைபவம் நடந்தேறும்.
    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து, இதைச் சொல்வது நல்லது.
    தேனாம்ச ரிஷனாம்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேஸம்
    தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து, இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வன்) படத்தின் முன்பாக அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.

    தொகுப்பு:- சிவல்புரி சிங்காரம்
    ×