என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கநாதாஷ்டகத்தை தினமும் சொல்வதால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஆநந்தரூபே நிஜபோதரூபே பிரஹ்ம ஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே
    ஸஸாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே

    காவேரிதீரே கருணாவிலோலே மந்தாரமூலே த்ருதசாருகேலே
    தைத்யாந்தகாலே அகிலலோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோ மே

    லஷ்மீநிவாஸே ஜகதாம்நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப
    வாஸே க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவஸே ரமதாம் மநோ மே

    ப்ரமாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே
    வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மநோ மே

    ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட ராஜே ஸுரராஜ ராஜே
    த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே

    அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே
    ஸ்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே

    ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ நந்தாங்கஸாயீ கமலாங்கசாயீ
    க்ஷீராப்திஸாயீ வடபட்ரஸாயீ ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே

    இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி
    பாணௌ ரதாங்கம் சரணாம்பு காங்கம் யாநே விஹங்கம்ஸயநே புஜங்கம்

    ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
    ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்

    (ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிச் செய்தது)

    ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

    ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் :

    1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
    ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

    2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி

    வாராஹி வராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    3) ஓம் வாம் வாராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    ஸ்ரீ வராஹி அம்மன் துதி :

    ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

    பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

    அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

    இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

    தியான சுலோகம்
    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி :

    வேண்டுதல் ; செல்வம் பெருக

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
    க்லீம் வாராஹி தேவியை நம :

    க்லீம் வாராஹிமுகி
    ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம்
    வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும்.

    சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

    ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
    ஔவையார் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார்.
    மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

    ஓம் விக்ன விநாயகா போற்றி!
    பகவான் விஷ்ணுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்; லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும்.
    இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இதோ அந்த அற்புதமான விஷ்ணு காயத்ரி மந்திரம்.

    விஷ்ணு காயத்ரி மந்திரம்:

    ஓம் நிரஞ்சனாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
    துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
    துர்கை வலிமைமிக்கவள். துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரமெடுத்தவள். அசுரக்கூட்டத்தை துவம்சம் செய்தவள். துர்கையைச் சரணடைந்தால், நம் முந்தைய ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது ஐதீகம்.

    ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
    ரட்சிணி ஸ்வாஹ;

    என்கிற ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவோம். காலையும் மாலையும் சொல்லிவருவோம். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.
    கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.
    'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம். தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

    கிருஷ்ணாஷ்டகம்

    வசுதேவ ஸூதம் தேவம்

    கம்ஸ சாணூர மர்த்தனம்

    தேவகீ பரமானந்தம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    அதஸீ புஷ்ப ஸங்காசம்

    ஹாரநூபுர சோபிதம்

    ரத்ன கங்கண கேயூரம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    குடிலாலக ஸம்யுக்தம்

    பூர்ண சந்த்ர நிபானனம்

    விலஸத் குண்டல தரம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிருகிற குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    மந்தார கந்த ஸம்யுக்தம்

    சாருஹாஸம் சதுர்ப்புஜம்

    பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்

    நீல ஜீமூத ஸந்நிபம்

    யாதவானாம் சிரோ ரத்னம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

    ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்

    பீதாம்பர ஸூசோபிதம்

    அவாப்த துளசீ கந்தம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

    கோபிகாநாம் குசத்வந்த்வ

    குங்குமாங்கித வக்ஷஸம்

    ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

    ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்

    வநமாலா விராஜிதம்

    சங்க சக்ரதரம் தேவம்

    க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகன்ற மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

    க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்

    ப்ராதருத்தாய ய படேத்

    கோடி ஜந்ம க்ருதம் பாபம்

    ஸ்மரணேன விநச்யதி

    பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைத்து, குறும்புக் கண்ணனைப் போல் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
    லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ... அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.

    ‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’

    இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள்.

    சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை.
    கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.
    சனி காயத்ரி மந்திரம் :

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

    ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!

    ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!

    ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!

    சனி பகவான் ஸ்லோகம் :

    நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

    சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!

    கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்று பொருள்.

    சனி பரிகார ஸ்தோத்திரம்

    பின்வரும் சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கும் போது உச்சரிக்க, சனி பகவானின் அருள் கிடைக்கும்.

    “சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றிச் சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!”
    எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.
    எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும் முன்னதாக இந்த ஸ்லோகத்தை மனதாரச் சொல்லுங்கள். மதிப்பு கூடும். கவுரவம் உயரம். மரியாதை பெருகும்.
    மதிப்பைத் தந்தருளும் ஸ்லோகம் :

    ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
    ஜஹ்நுர் நாராயணோநம:

    முழுமையாக சிரத்தையுடன் செய்யும் காரியத்திலும் தடைகள் வந்து நம்மை இம்சை பண்ணும். அப்படி நம்மை மீறிய செயல்களிலும் வீர்யத்தைத் தந்தருளும் ஸ்லோகம் இது. எண்ணிய காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்லோகம்.

    ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
    ஸித்தித: ஸித்தி ஸாதன:

    வாழ்வில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்பது திருமணமாகத்தான் இருக்கமுடியும். மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கலையே... மகளுக்கு நல்ல வரன் அமையலையே என்று கலங்கித் தவிக்கும் பெற்றோர்களின் வேதனை சொல்லிமாளாது. ஏதோவொரு தடங்கலால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் திருமணத்தை தந்தருளும் ஸ்லோகம் இது.

    காமஹா காமக்ருத் காந்த:
    காம: காமப்ரத: ப்ரபு:

    வாழ்வில் வேலை வேலை, உத்தியோகம் உத்தியோகம், சம்பளம் குடும்பம் என்றெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு கம்பீரமான உயர்ந்தபதவி கிடைப்பதற்குத்தானே எல்லோரும் இயங்கிக் கொண்டே இருக்கிறோம். அப்படிப் பதவி உயர்வைத் தரும் மகாவிஷ்ணு ஸ்லோகம் இது:

    வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
    ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ:

    செல்வம் தேவை. அது அழியாத செல்வமாக வளர்ந்திருக்கவேண்டும் என்பதுதான் எல்லோரின் வேண்டுதலும் பிரார்த்தனையும். அப்படி சம்பாதித்த செல்வத்தை அழியாத செல்வமாக்கும் அற்புத ஸ்லோகம் இது :

    அர்த்தோநர்த்தோ மஹாகோசோ
    மஹாபோகோ மஹாதந:
    சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
    அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி சமயபுரம்
    மாரியம்மன் ! !
    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
    திருவடிகளே சரணம் !

    ஓம் அம்மையே போற்றி
    ஓம் அம்பிகையே போற்றி
    ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
    ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
    ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஆதார சக்தியே போற்றி
    ஓம் ஆதி பராசக்தியே போற்றி
    ஓம் இருள் நீக்குபவளே போற்றி
    ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
    ஓம் இடரைக் களைவாய் போற்றி
    ஓம் இஷ்ட தேவதையே போற்றி
    ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
    ஓம் ஈடிணை இலாளே போற்றி

    ஓம் ஈகை மிக்கவளே போற்றி
    ஓம் உமையவளே தாயே போற்றி
    ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
    ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி

    ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
    ஓம் ஏழையர் அன்னையே போற்றி
    ஓம் ஐங்கரத்தவளே போற்றி
    ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
    ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
    ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
    ஓம் கவுமாரித்தாயே போற்றி
    ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி

    ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
    ஓம் காக்கும் அன்னையே போற்றி |
    ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
    ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
    ஓம் குங்கும நாயகியே போற்றி |
    ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
    ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
    ஓம் கை கொடுப்பவளே போற்றி
    ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி

    ஓம் சக்தி உமையவளே போற்றி
    ஓம் சவுந்தர நாயகியே போற்றி
    ஓம் சித்தி தருபவளே போற்றி
    ஓம் சிம்ம வாகினியே போற்றி
    ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
    ஓம் சீதளா தேவியே போற்றி

    ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
    ஓம் செந்தூர நாயகியே போற்றி
    ஓம் செண்பகாதேவியே போற்றி
    ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
    ஓம் சொல்லின் செல்வியே போற்றி

    ஓம் சேனைத் தலைவியே போற்றி
    ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி

    ஓம் தத்துவ நாயகியே போற்றி
    ஓம் தர்ம தேவதையே போற்றி
    ஓம் தரணி காப்பாய் போற்றி
    ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
    ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி

    ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
    ஓம் தீமை களைபவளே போற்றி
    ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
    ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
    ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
    ஓம் தேசமுத்து மாரியே போற்றி
    ஓம் தையல் நாயகியே போற்றி
    ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
    ஓம் தோன்றாத் துணையே போற்றி
    ஓம் நன்மை அளிப்பவளே போற்றி

    ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
    ஓம் நாக வடிவானவளே போற்றி
    ஓம் நாத ஆதாரமே போற்றி
    ஓம் நாகாபரணியே போற்றி
    ஓம் நானிலம் காப்பாய் போற்றி
    ஓம் நித்ய கல்யாணியே போற்றி
    ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
    ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி

    ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
    ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
    ஓம் நேசம் காப்பவளே போற்றி
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
    ஓம் பவளவாய் கிளியே போற்றி
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    ஓம் பசுபதி நாயகியே போற்றி
    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
    ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
    ஓம் பீடை போக்குபவளே போற்றி
    ஓம் பீடோப ஹாரியே போற்றி
    ஓம் புத்தி அருள்வாய் போற்றி
    ஓம் புவனம் காப்பாய் போற்றி

    ஓம் பூமாரித்தாயே போற்றி
    ஓம் பூவில் உறைபவளே போற்றி
    ஓம் பூஜைக்குரியவளே போற்றி
    ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
    ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
    ஓம் மழைவளம் தருவாய் போற்றி
    ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
    ஓம் மந்திர வடிவானவளே போற்றி

    ஓம் மழலை அருள்வாய் போற்றி
    ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
    ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    ஓம் மகமாயித் தாயே போற்றி
    ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
    ஓம் முத்தாலம்மையே போற்றி
    ஓம் முத்து நாயகியே போற்றி

    ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
    ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
    ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
    ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.
    ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்
    திருவடிகளே சரணம்!
    சிவபெருமானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாதேவாய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதாசிவாய வித்மஹே
    ஜடாதராய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
    அதிசுத்தாய தீமஹி
    தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

    ஓம் கௌரீநாதாய வித்மஹே
    சதாசிவாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் சிவோத்தமாய வித்மஹே
    மஹோத்தமாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் தன்மஹேசாய வித்மஹே
    வாக்விசித்தாய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் மஹாதேவாய வித்மஹே
    ருத்ரமூர்த்யே தீமஹி
    தன்னோ சிவ ப்ரசோதயாத்

    ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
    தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
    தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

    ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
    மஹா தேவாய தீமஹி
    தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    ×