என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய வஜ்ராய
    நமோ வஜ்ர நகாய ச

    முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

    ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
    தினமும் சிவனுக்கு உகந்த இந்த சிவபுராணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
    தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
    நேயத்தே நின்ற நிமல னடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

    கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறத்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன் பாகிக் கசிந்து ள்ளுருகும்
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே

    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங்காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய் நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    திருமணம் தடைப்படும் பெண்கள் மாங்கல்ய பிராப்தம் கிடைக்க கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.
    மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

    ஓம் பாலாரூபிணி வித்மஹே
    பரமேஸ்வரி தீமஹி
    தன்னோ கந்யா ப்ரசோதயாத்
    பிரிந்தவர்கள் ஒன்று சேர, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும்.
    கிருஷ்ண காயத்ரி :

    ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
    வாசுதேவாய தீமஹி,
    தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

    ராதா காயத்ரி :


    ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
    கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
    தந்நோ ராதா ப்ரசோதயாத்.
    சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
    அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
    புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
    தவனச் சடைமுடித் தாமரை யானே.

    தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவபெருமானே.
    ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’. நமது பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய தெய்வம் ஹயக்ரீவர்.
    ஹயக்ரீவர் ஸ்லோகம் :

    “ஞானானந்தமயம் தேவம் நிர்மல
    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
    ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

    பொருள்:

    ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.

    ஹயக்ரீவர் மூல மந்திரம் :

    உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ
    வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம்
    போதய போதயஹயக்ரீவர்

    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்

    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத்!

    ஹயக்ரீவர் ஸ்லோகம்:

    சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம்
    சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

    பிள்ளைகள் மட்டுமல்ல நாமும் ஶ்ரீஹய்க்ரீவரை தொழுது அருள் பெறுவோம்.
    பைரவருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாட்டின் போது 108 முறை பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.
    பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். ஏனெனில் அந்த நேரத்தில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக கூறப்படுகிறது.

    ‘ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பைரவ ப்ரசோதயாத்’

    இந்த காயத்ரி மந்திரத்தை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாட்டின் போது 108 முறை பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.
    ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயமானதும், சூரிய பகவானுக்கு உகந்த இந்த போற்றியை சொல்லி வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
    1.ஓம் அதிதி புத்ரனே போற்றி
    2.ஓம் அளத்தற்கரியனே போற்றி
    3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி
    4.ஓம் அருணன் சோதரனே போற்றி
    5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
    6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
    7.ஓம் ஆண் கிரகமே போற்றி
    8.ஓம் ஆதிவார நாதனே போற்றி
    9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
    10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
    11.ஓம் ஆன்மாவே போற்றி
    12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
    13.ஓம் இருள் நீக்கியே போற்றி
    14.ஓம் இயக்க சக்தியே போற்றி
    15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
    16.ஓம் உக்கிரனே போற்றி
    17.ஓம் உஷா நாதனே போற்றி
    18.ஓம் உவமைப் பொருளே போற்றி
    19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
    20.ஒம் உத்திரநாதனே போற்றி
    21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
    22.ஓம் என்பானவனே போற்றி
    23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி
    24.ஓம் எழுபரித் தேரனே போற்றி
    25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
    26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
    27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
    28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
    29.ஓம் ஓராழித்தேரனே போற்றி
    30.ஓம் ஓய்விலானே போற்றி
    31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
    32.ஓம் கதிரவனே போற்றி
    33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
    34.ஓம் களங்கமிலானே போற்றி
    35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
    36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி
    37.ஓம் கனலே போற்றி
    38.ஓம் கண்ணின் காவலே போற்றி
    39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
    40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
    41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
    42.ஓம் காயத்ரி தேவனே போற்றி
    43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
    44.ஓம் காலக் கணக்கே போற்றி
    45.ஓம் காய்பவனே போற்றி
    46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
    47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
    49.ஓம் கிரக நாயகனே போற்றி
    50.ஓம் கிருபாகரனே போற்றி
    51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி
    52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
    53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
    54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
    55.ஓம் ஞாயிறே போற்றி
    56.ஓம் ஞாலக் காவலே போற்றி
    57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
    58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
    59.ஓம் சாட்சித் தேவனே போற்றி
    60.ஓம் சமரிலானே போற்றி
    61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி
    62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
    63.ஓம் சிரஞ்சீவியே போற்றி
    64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
    65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி
    66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
    67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
    68.ஓம் செம்மேனியனே போற்றி
    69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
    70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி
    71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
    72.ஓம் சூலாயுதனே போற்றி
    73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி
    74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
    75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
    76.ஓம் தாமிர உலோகனே போற்றி
    77.ஓம் தூயவனே போற்றி
    78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
    79.ஓம் நடுவிருப்போனே போற்றி
    80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
    81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி
    82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
    83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
    84.ஓம் நாடப்படுபவனே போற்றி
    85.ஓம் நீதிதேவனே போற்றி
    86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    87.ஓம் பகற்காரணனே போற்றி
    88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
    89.ஓம் பரஞ்சோதியே போற்றி
    90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
    91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
    92.ஓம் பிரபாகரனே போற்றி
    93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
    94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி
    95.ஓம் மல நாசகனே போற்றி
    96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
    97.ஓம் மயில்வாகனனே போற்றி
    98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
    99.ஓம் முதல் கிரகமே போற்றி
    100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி
    101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி
    102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
    103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
    104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
    105.ஓம் விடியச் செய்பவனே போற்றி
    106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
    107.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
    108.ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!
    குரு ஸ்ரீ ராகவேந்திரருக்கு உகந்த நாட்களில் அல்லது வியாழக்கிழமைகளில் இந்த 108 போற்றியை சொல்லி வரலாம்.
    ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
    ஓம் காமதேனுவே போற்றி
    ஓம் கற்பகவிருட்சமே போற்றி
    ஓம் சத்குருவே போற்றி
    ஓம் சாந்தரூபமே போற்றி
    ஓம் ஞான பீடமே போற்றி
    ஓம் கருணைக் கடலே போற்றி
    ஓம் ஜீவ ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
    ஓம் துளசி வடிவமே போற்றி

    ஓம் தேவ தூதனே போற்றி
    ஓம் பிரகலாதனே போற்றி
    ஓம் பக்தப் பிரயனே போற்றி
    ஓம் திவ்ய ரூபமே போற்றி
    ஓம் தர்ம தேவனே போற்றி
    ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
    ஓம் அன்பின் உருவமே போற்றி
    ஓம் காவியத் தலைவனே போற்றி
    ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
    ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

    ஓம் துவைத முனிவரே போற்றி
    ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
    ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
    ஓம் குருராஜரே போற்றி
    ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
    ஓம் மத்யமவத பீடமே போற்றி
    ஓம் தீனதயாளனே போற்றி
    ஓம் கருணா மூர்த்தியே போற்றி
    ஓம் ஜெகத் குருவே போற்றி
    ஓம் கலியுகக் கடவுளே போற்றி

    ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
    ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
    ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
    ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
    ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
    ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
    ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
    ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
    ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
    ஓம் அறிவின் சுடரே போற்றி

    ஓம் பண்டித மேதையே போற்றி
    ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
    ஓம் வெங்கட பட்டரே போற்றி
    ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
    ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
    ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
    ஓம் அமானுஷ சக்தியே போற்றி
    ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

    ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
    ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
    ஓம் தூய்மை நிதியே போற்றி
    ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் கண்னனின் தாசனே போற்றி
    ஓம் சத்ய ஜோதியே போற்றி
    ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
    ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
    ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
    ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

    ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
    ஓம் மகிமை தெய்வமே போற்றி
    ஓம் அணையர் தீபமே போற்றி
    ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
    ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
    ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
    ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
    ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
    ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

    ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் வியாச பகவானரே போற்றி
    ஓம் சங்கு கர்ணரே போற்றி
    ஓம் பரமாத்மாவே போற்றி
    ஓம் குருதேவரே போற்றி
    ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
    ஓம் தயாநிதியே போற்றி
    ஓம் அருட்தவசீலரே போற்றி
    ஓம் ஞான மூர்த்தியே போற்றி
    ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

    ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
    ஓம் அமுத கலசமே போற்றி
    ஓம் அழகின் உருவமே போற்றி
    ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
    ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
    ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
    ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
    ஓம் மங்களம் தருபவரே போற்றி
    ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
    ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
    ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
    ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
    ஓம் காந்தக் கண்களே போற்றி
    ஒம் யதிராஜரே போற்றி
    ஓம் ஓம்கார ரூபமே போற்றி
    ஓம் பிரம்ம ஞானியே போற்றி
    ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
    ஓம் இணையில்லா இறைவனே போற்றி

    ஓம் விபீஷணரே போற்றி
    ஓம் அனாத ரட்சகரே போற்றி
    ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
    ஓம் சுந்தர வதனரே போற்றி
    ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
    ஓம் நரஹரி பிரியரே போற்றி
    ஓம் தியாகமூர்த்தியே போற்றி
    ஓம் வாணியின் வீணையே போற்றி
    காளிதேவியை மனதில் எண்ணி இந்த போற்றியை சொன்னால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதி முன்பு விளக்கேற்றியும் இதைப் பாடினால் இரட்டிப்பு பலம் கிடைக்கும்.
    மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள காளி வழிபாடு உகந்தது. மாலையில் விளக்கேற்றியதும் காளிதேவியை மனதில் எண்ணி இந்த போற்றியை சொன்னால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதி முன்பு விளக்கேற்றியும் இதைப் பாடினால் இரட்டிப்பு பலம் கிடைக்கும். எண்ணியது கைகூடும்.

    1. ஓம் காளியே போற்றி
    2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
    3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
    4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
    5. ஓம் அகநாசினியே போற்றி
    6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
    7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
    8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
    9. ஆலகாலத் தோன்றலே போற்றி
    10. ஓம் இளங்காளியே போற்றி
    11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
    12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
    13. ஓம் இடர் களைபவளே போற்றி
    14. ஓம் ஈறிலாளே போற்றி
    15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
    16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
    17. ஓம் உக்ரகாளியே போற்றி
    18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
    19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
    20. ஓம் ஊழிசக்தியே போற்றி
    21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
    22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
    23. ஓம் ஓங்காரியே போற்றி
    24. ஓம் கருங்காளியே போற்றி
    25. ஓம் காருண்யதேவியே போற்றி
    26. ஓம் கபாலதாரியே போற்றி
    27. ஓம் கல்யாணியே போற்றி
    28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
    29. ஓம் காளராத்ரியே போற்றி
    30. ஓம் காலபத்னியே போற்றி
    31. ஓம் குங்குமகாளியே போற்றி
    32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
    33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
    34. ஓம் சத்திய தேவதையே போற்றி
    35. ஓம் சம்ஹார காளியே போற்றி
    36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
    37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
    38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
    39. ஓம் சிவசக்தியே போற்றி
    40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
    41. ஓம் சுடலைக்காளியே போற்றி
    42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
    43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
    44. ஓம் செங்காளியே போற்றி
    45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
    46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
    47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
    48. ஓம் சோமகாளியே போற்றி
    49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
    50. ஓம் தனகாளியே போற்றி
    51. ஓம் தட்சிணகாளியே போற்றி
    52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
    53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
    54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
    55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
    56. ஓம் தில்லைக்காளியே போற்றி
    57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
    58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
    59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
    60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
    61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
    62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
    63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
    64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
    65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
    66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
    67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
    68. ஓம் நித்தியகாளியே போற்றி
    69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
    70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
    71. ஓம் பராசக்தி தாயே போற்றி
    72. ஓம் பஞ்சகாளியே போற்றி
    73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
    74. ஓம் பயங்கரவடிவே போற்றி
    75. ஓம் பத்ரகாளியே போற்றி
    76. ஓம் பாதாளகாளியே போற்றி
    77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
    78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
    79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
    80. ஓம் பூதகாளியே போற்றி
    81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
    82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
    83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
    84. ஓம் பேராற்றலே போற்றி
    85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
    86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
    87. ஓம் மதுரகாளியே போற்றி
    88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
    89. ஓம் மகாகாளியே போற்றி
    90. ஓம் மகாமாயையே போற்றி
    91. ஓம் மங்களரூபியே போற்றி
    92. ஓம் மந்திரத்தாயே போற்றி
    93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
    94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
    95. ஓம் முக்கண்ணியே போற்றி
    96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
    97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
    98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
    99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
    100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
    101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
    102. ஓம் விரிசடையாளே போற்றி
    103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
    104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
    105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
    106. ஓம் வெக்காளியே போற்றி
    107. ஓம் வேதனை களைவாய் போற்றி
    108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!
    சப்தகன்னிமார்களை இந்த போற்றியைச் சொல்லி வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். நிம்மதி கிடைக்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.
    சிவாலயங்களில், பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதருக்கு சன்னதி இருக்கும். இவர்களை இந்த போற்றியைச் சொல்லி வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். நிம்மதி கிடைக்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.

    ஓம் பிராமியே போற்றி
    ஓம் பிரம்மசக்தியே போற்றி
    ஓம் அன்னவாகினியே போற்றி
    ஓம் அபயகரத்தானே போற்றி
    ஓம் இந்தளூர் தேவியே போற்றி
    ஓம் ஈர்த்து அருள்பவனே போற்றி
    ஓம் சடைமுடியாளே போற்றி
    ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
    ஓம் நான்முகியே போற்றி
    ஓம் நால்வேத மாதாவே போற்றி
    ஓம் பத்மாசினியே போற்றி
    ஓம் பயநாசினியே போற்றி
    ஓம் மலர்விழியாளே போற்றி
    ஓம் மான்தோலுடையாளே போற்றி
    ஓம் மாகேஸ்வரியே போற்றி
    ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
    ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
    ஓம் அசுரநிக்ரகம் செய்தாய் போற்றி
    ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
    ஓம் காளை வாகினியே போற்றி
    ஓம் திரிசூலதாரியே போற்றி
    ஓம் திரைலோக்ய மோகினியே போற்றி
    ஓம் பஞ்சமுகியே போற்றி
    ஓம் பல்லாயுதம் ஏந்தியவளே போற்றி
    ஓம் படர் சடையாளே போற்றி
    ஓம் பாம்பணியாளே போற்றி
    ஓம் முக்கண்ணியே போற்றி
    ஓம் முக்தி நாயகியே போற்றி
    ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
    ஓம் கவுமாரியே போற்றி
    ஓம் குமாரசக்தியே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவளே போற்றி
    ஓம் அசுர சம்காரியே போற்றி
    ஓம் உண்மை உணர்த்துபவளே போற்றி
    ஓம் உடும்ப மரத்தடி இருப்பவளே போற்றி
    ஓம் கஞ்சனூர் தேவியே போற்றி
    ஓம் குங்குமவல்லியே போற்றி
    ஓம் சண்முகியே போற்றி
    ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
    ஓம் மயில்வாகினியே போற்றி
    ஓம் மகுடம் அணிந்தவளே போற்றி
    ஓம் வீரசக்தியே போற்றி
    ஓம் வசதி தருபவளே போற்றி
    ஓம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் விரிகண்ணாளே போற்றி
    ஓம் கருடவாகினியே போற்றி
    ஓம் கதாயுததாரியே போற்றி
    ஓம் சங்கேந்தியவளே போற்றி
    ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
    ஓம் சுந்தரவதனியே போற்றி
    ஓம் சேந்தன்குடி தேவியே போற்றி
    ஓம் பெருமுலையாளே போற்றி
    ஓம் பேரழகியே போற்றி
    ஓம் மகாமாயையே போற்றி
    ஓம் மஞ்சள் நிற ஆடையளே போற்றி
    ஓம் வனமால்தாரியே போற்றி
    ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
    ஓம் வாராகியே போற்றி
    ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
    ஓம் அஸ்திர வாராகியே போற்றி
    ஓம் ஆபரணதாரியே போற்றி
    ஓம் கதாயுததாரியே போற்றி
    ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
    ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
    ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
    ஓம் சக்திசேனாபதியே போற்றி
    ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
    ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
    ஓம் தூப்ர வாராகியே போற்றி
    ஓம் பட்டு உடுத்தவளே போற்றி
    ஓம் பகை பொடிப்பவளே போற்றி
    ஓம் மகிஷ வாகினியே போற்றி
    ஓம் மகா வாராகியே போற்றி
    ஓம் இந்திராணியே போற்றி
    ஓம் இன்னல் களைபவளே போற்றி
    ஓம் அங்குசதாரியே போற்றி
    ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
    ஓம் கஜவாகினியே போற்றி
    ஓம் கதாயுதபாணியே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் கல்பமரத்தடியில் இருப்பவளே போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தருமபுரத்தேவியே போற்றி
    ஓம் யமபயநாசினியே போற்றி
    ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
    ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
    ஓம் சண்டனை அழித்தவளே போற்றி
    ஓம் ஆந்தை வாகினியே போற்றி
    ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
    ஓம் அதிகந்தரியே போற்றி
    ஓம் ஆடியருள்பவளே போற்றி
    ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
    ஓம் உத்திரமாயூர தேவியே போற்றி
    ஓம் கர்ஜிப்பவளே போற்றி
    ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
    ஓம் பத்மாக்ஷியே போற்றி
    ஓம் பிரளயரூபியே போற்றி
    ஓம் வாருணி சாமுண்டியே போற்றி
    ஓம் வடவிருஷம் அமர்ந்தவளே போற்றி
    ஓம் ரக்த சாமுண்டியே போற்றி
    ஓம் ராட்சஷ நிக்ரஹியே போற்றி
    ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
    ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
    ஓம் சிவாலயத்தேவியரே போற்றி
    ஓம் சீக்கிரமே அருள்பவரே போற்றி
    ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
    ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி போற்றி
    ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மன தைரியம், சாதுர்யமான புத்தி, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும்.
    "புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்''

    ஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.

    ×