என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    துன்பங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மதுரகாளியம்மனுக்கு உகந்த இந்த போற்றி சொல்லி வரலாம்.
    அகரமென உயிர்க்கு ஆதியே போற்றி
    ஆருயிக் குயிராய் அமைந்தாய் போற்றி
    இச்சா சக்தியாய் இயைந்தாய் போற்றி
    ஈசன் அருளுக் கினியாய் போற்றி
    உண்மைப் பொருளாய் ஒளிர்வாய் போற்றி
    ஊக்கமும் உணர்வும் உதவுவாய் போற்றி
    எழில் தரும் இயற்கை பொருளே போற்றி
    ஏழிசை தாம் இசைப்பாய் போற்றி
    ஐயம் தவிர்க்கும் அன்னையே போற்றி
    ஒன்றென விளக்கும் உணர்வே போற்றி
    ஓதாதுணர்ந்திடும் ஒளியே போற்றி
    ஔவியம் நீக்கிய அருளே போற்றி
    அஃகிய பொருளாய் அமைந்தாய் போற்றி
    கண்ணுள் மணியாய் கலந்தாய் போற்றி
    காட்சிப் பொருளாய் விரிந்தாய் போற்றி
    கிரியா ச்க்தியாய் கிளர்ந்தாய் போற்றி
    கீழ்மை தவிர்த்தெம்மைக் காப்பாய் போற்றி
    குணமெனும் குன்றாய் நிகழ்வாய் போற்றி
    கூர்த்த் மதியினைக் கொடுப்பாய் போற்றி
    கொஞ்சும் குரல் கேட்டிரங்குவாய் போற்றி
    கேட்ட வரங்கள் ஈவாய் போற்றி
    கைதவம் ஒழித்தருள் கடலே போற்றி
    கொண்டல் நிற்ப்பூங் கொடியே போற்றி
    கோதில் உள்ங்கொடி கொள்வாய் போற்றி
    பெயர்க் கனியே போற்றி
    ஙப்போர் மழவேந்தரசியே போற்றி
    சதுர்மறைக் கிறைவியே தாயே போற்றி
    சான்றோர் தவத்தின் உருவே போற்றி
    சிந்தை குடிகொள் தெய்வமே போற்றி
    சீரும் திருவும் அருள்வாய் போற்றி
    ஸுருதிப் பொருளெனெத் தோற்றுவாய் போற்றி
    ஸூரியச் சந்திரச்சுடரே போற்றி
    செம்பொருளாகத் திகழ்வாய் போற்றி
    சேவடி பணிவோர் திருவே போற்றி
    சைவ னெறியிற் றழைப்பாய் போற்றி
    சொல்லும் பொருளும் துலக்குவாய் போற்றி
    சோர்வினைப் போக்கும் சோதியே போற்றி
    சௌபாக்கிய மருள் தாயே போற்றி
    ஞான சக்தியாய் நவில்வாய் போற்றி
    ஞேயம் உறுமகம் நிறைந்தாய் போற்றி
    டம்பம் தவிர்க்கும் தாயே போற்றி
    இணக்கம் பெறுவோர்க்கு இறைவியே போற்றி
    தளிர்போல் மேனி ஒளிர்வாய் பொற்றி
    தாமரைச் சீரடி அமைந்தாய் போற்றி
    திங்கள் முகத்துத் திருவே போற்றி
    தீம்பால் மொழியே செப்புவாய் போற்றி
    துடியிடை பெற்ற சுவர்ணமே போற்றி
    தூமணி ஆரமிடற்றாய் போற்றி
    தெளிந்த நன் நெஞ்சத் தேவியே பொற்றி
    தேன் போல் இனிக்கும் செஞ்சொலா போற்றி
    தைவிகம் போற்றுவார் தண்ணிழல் போற்றி
    தொல்லறப் பயனாய் துலங்குவாய் போற்றி
    புதுமை யாவும் புதுக்குவாய் போற்றி
    பூரண இன்பப் போழியே போற்றி
    பெண்மைக் கரசாய் பிறங்குவாய் போற்றி
    பேரின் பக் கடல் ஆவாய் போற்றி
    பைம்பொன் நிறத்துப் பாவாய் போற்றி
    பொறையே பூணாய் பூண்பாய் பொற்றி
    போற்றுவார்க் கிரங்கும் தாயே போற்றி
    மலருள் மணமென வயங்குவாய் போற்றி
    மாதவத் தோட்கருள் மாதா போற்றி
    மிடிதவிர்த் தாளும் விமலையே போற்றி
    மீனவர் மகளாய் விளங்குவாய் போற்றி
    முடிவிலா ஞான முதல்வியே போற்றி
    மூர்த்திகள் பலவாய் தோற்றுவாய் போற்றி
    மென்மைகள் யாவிலும் மிளிர்வாய் போற்றி
    மேதினிக் கரசியாய் விளஙுவாய் போற்றி
    மையல் நீக்கிடும் ஐயை போற்றி
    மொழிந்திடும் முத்தமிழ்க் குதவுவாய் போற்றி
    மோனளத் தமர்ந்த முழுமுதல் போற்றி
    மௌவலம் குழல் நீள் மயிலே போற்றி
    இயல் இசை நாடகத் தியைவாய் போற்றி
    அரவமோ டாடிடும் அம்பிகை போற்றி
    இலகொளி பரப்பிடும் எந்தாய் போற்றி
    வரங்கள் பலவும் வழங்குவாய் போற்றி
    வான்மழை யாகிக் காப்பாய் போற்றி
    விண்ணும் மண்ணும் விரிந்தாய் போற்றி
    வீடுபே றளிக்கும் மெய்ப்பொருள் போற்றி
    வெற்றியின் சின்னமாய் மிளிர்வாய் போற்றி
    வேதப் பொருளின் விளைவே போற்றி
    வையங் காக்கும் மணியே போற்றி
    அழகெலாம் ஒன்றாய் அமைந்தாய் போற்றி
    இளமையில் என்றும் இருப்பாய் போற்றி
    அறநிலை ஆற்றின் அமிழ்தே போற்றி
    அனந்தமும் நீயே ஆவாய் போற்றி
    கவின் பெறு கற்புக் கனலெ போற்றி
    செழியன் அநீதி தீர்த்தாய் போற்றி
    செல்லிக் குதவிய திருவே போற்றி
    திரிசூ லங்கை திகழ்வாய் போற்றி
    மதுரகாளி மாதா போற்றி
    எல்ல உயிரும் ஈன்றாய் போற்றி
    நல்லவை யாவையும் நல்குவாய் போற்றி
    மங்களம் முழங்கும் மணியே போற்றி
    போற்றி போற்றி போற்றி போற்றி
    போற்றி போற்றி ஜெயஜெய போற்றியே
    தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் துன்பம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    மௌலீஸ்வராய யோகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    நடேஸ்வராய நாகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
     சிவசிவ ஹரஹர மஹாதேவா

    போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா .....
    முருகனுக்கு உகந்த நாட்களிலும், கந்தசஷ்டி நாட்களிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முருகன் பக்தி துதியை மனமுருகி சொல்லி வர வேண்டும்.
    ஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    கந்தனே கடம்பனே கார்த்திகேயனே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    அழகனே அமுதனே ஆறுபடையோனே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    குமரனே குருபரா குறத்தி மணாளா
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    அப்பனே ஆதிமூலமே ஆவினன்குடியோனே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    ஐயனே ஐங்கரன் தம்பியே ஈசன்மகனே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    கந்தனே கிரிராஜனே கிருபாநிதியே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    தயாபரனே தண்டாயுதபாணியே  தகப்பன்சாமியே
    வேல் வேல் வேலவனே வேலா நீ வா
    வெற்றி வேலவனே வேத முதல்வனே
    ஐயப்ப சோதரனே வேலாயுதனே நீ வா .....

    கீழே கொடுக்கப்பட்டுள்ள திருச்செந்தூர் ஸ்ரீ செந்திலாதிபன் திருப்பள்ளி எழுச்சியை கந்தசஷ்டியின் 6 நாட்களிலும் தினமும் 2 வேளை பாடி வரவேண்டும்.
    வெற்றி வேற்கரமுடையாய் எமையுடையாய்
    விடிந்ததுன் பூங்கழற்கிணை மலர்கொண்டு
    சுற்றிய அடியேங்கள் தூய்மனத்துடனே
    சொல்மகிழ்வுடன் நின்திருவடி தொழுவோம்
    தெற்றிய கமலங்கள் அலரும் தண்வயல் சூழ்
    திருச்செந்திலம்பதி வாழ் முருகோனே
    எற்றுயர் சேவற் பதாகையையுடையாய்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!

    கீழ்திசை அருணணும் கிளரொளி வீச
    கிளி மயில் குயில் காகம் சேவல்கள் கூவ
    காரிருள் நீக்கிடும் கதிரவன் வரவும்
    கடிமா மலருடன் ஏந்திய கையார்
    தாழ்ந்திடும் சென்னியர் தவமுடை பெரியோர்
    தனித்தனி நாமங்கள் புகலுவார் நாவில்
    ஏழிசை பரவும் நற்செந்திலம்பரனே
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!

    வெண் சங்கமுழங்கின விசையொலி பேரி
    விதவித வாத்தியங்கள் ஒலித்தன பலவால்
    தண்ணருள் சுரந்திடும் தளிர் மலர்ப்பாதங்கள்
    சார்ந்துடன் தெரிசிக்க யாவரும் வந்தார்
    பண்ணிசை வேதியர் வேதமுழங்கி
    பனிமலர்த் தூவியே பரவினர் மருங்கில்
    எண்ணரும் செந்தியில் இசைந்தமர் முருகா
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!



    பாற்குடம் காவடி பக்தர்கள் ஒருபால்
    பரிவுடன் வழிபடும் அன்பர்கள் ஒருபால்
    நாற்றிசையோர் திரை கொணர்ந்தனர் ஒருபால்
    நலமுடன் தமிழ்மறை ஒலிப்பவர் ஒருபால்
    பாற்கடல் துயின்றோனும் பிரமனும் ஒருபால்
    பண்புடன் ஊர்வசி அரம்பையர் ஒருபால்
    ஏற்குரும் ஒளிதிகழ் செந்திலமர்ந்தோய்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!

    பஞ்சபூதங்கள் யாவும் பரவி நின்றோய் என்றும்
    பார்க்குமிடந்தோறும் பண்புற அமர்ந்தாய்
    எஞ்சலில் இசையுடன் ஏற்றுதல் அல்லால்
    என்புருகவும் நினைக்கண்டறியோம் யாம்
    தஞ்சமென்றடியவர்க்கருளும் செந்தூரா
    சதுர்மறை யூடுறை ஷண்முகநாதா
    எஞ்சிய பழவினை அறுத்தெமையாண்ட
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!

    செப்பரும் அடியவர் தனியிருந்துணர்வார்
    செய்வினை யகற்றிடுவார் தவர் பலரும்
    ஒப்பரும் இருடிகள் தம்மனையோடும்
    உவமையில் ஜெபத்தொடு ஒன்றியே அமர்ந்தார்
    செய்ப்பெறும் நீள்வயல் சூழ்திருச்செந்தூர்
    சிறப்புடன் அமர் சிவசுப்பிரமணியா
    எப்பிறப்பினும் உனை ஏத்திட அருள்வாய்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...!

    தேனினி தெனக்கண்டு பால் இனிதெனவே
    செப்புகின்ற அமுதம் இனிதென உணரார்
    மானமர் திருவடி படிமிசை உறவே
    வந்தெமை ஆண்டிட இங்கெழுந்தருளும்
    மேல்நிமிர் சோலைசூழ் செந்திலம்பதிவாழ்
    வேலனே சீலனே விஞ்சையர் கோனே
    ஞானவடிவே எமை ஆட்கொண்ட கோவே
    நாதாந்தனே பள்ளி எழுந்தருளாயே...!



    ஆதி நடுவும் அந்தம் ஆகியும் நின்றாய்
    அரி அயன் அறியார் யாருனை அறிவார்
    ஜோதி வடிவாம் இருதேவியும் நீயும்
    தொல் புகழ் அடியார்க் கருள் செயும் பரனே
    ஓதிய மறை புகழ் உருவினைக் காட்டி
    உயர் திருசீரலைவாய் நகர் காட்டி
    வேதியராவதும் காட்டி வந்தாண்டாய்
    விமலனே திருப்பள்ளி எழுந்தருளாயே...!

    வானகத் தேவரும் வழிபடும் நின்னை
    மாபொருளே நிதம் வாழ்த்திட என்றும்
    மான இப்புவிதனில் வந்தமர் வாழ்வே
    மன்னு செந்தூரா வழி வழியடியோம்
    ஊனகத்துலவி நின்றொளிரும் செந்தேனே
    ஒளிக்கொளியா யென்றும் பரவும் அடியார்
    ஞான அகத்தினில் நன்றொளிரானாய்
    நல்லமுதே பள்ளி எழுந்தருளாயே...!

    அவனியிற் பிறந்து நாம் ஆய்வறிவில்லா
    ஆனகாலம் வீணாய் போக்கினோம் அவமே
    சிவகுமரா யாங்கள் உய்ந்திட நினைத்து
    சீரலைவாய் உறைவாய் அயன் மாலா
    புவிதனில் போற்றவும் புகழவும் நின்றாய்
    புண்ணியனே நின்கருணையும் நீயும்
    தவமிலா சிறியெமை தடுத்தாள வல்லாய்
    தயாபரனே பள்ளி எழுந்தருளாயே...!

    "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
    கந்த சஷ்டி தொடங்கிய 6 நாட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
    கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

    - அருணகிரி நாதர்
    சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஒரு பக்தர் சொல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக இந்த போற்றியைச் சொல்ல வேண்டும்.
    சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஒரு பக்தர் சொல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக இந்த போற்றியைச் சொன்னால் குழந்தைகளின் கல்வியறிவு வளரும். நமது ஊர் குழந்தைகளுக்காக பக்தர்கள் இதைச் சொல்லலாமே!

    1. ஓம் அறிவுருவே போற்றி
    2. ஓம் அழிவிலானே போற்றி
    3. ஓம் அடைக்கலமே போற்றி
    4. ஓம் அருளாளனே போற்றி
    5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
    6. ஓம் அடியார்க்கு அன்பனே போற்றி
    7. ஓம் அகத்து உறைபவனே போற்றி
    8. ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
    9. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அபயகரத்தனே போற்றி
    11. ஓம் ஆலின் கீழ் அமர்ந்தவனே போற்றி
    12. ஓம் ஆன்மிகநாதனே போற்றி
    13. ஓம் ஆச்சாரியனே போற்றி
    14. ஓம் ஆச்சாரக்காவலனே போற்றி
    15. ஓம் ஆக்கியவனே போற்றி
    16. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    17. ஓம் ஆதி பகவானே போற்றி
    18. ஓம் ஆதாரமே போற்றி
    19. ஓம் ஆழ்நிலையானே போற்றி
    20. ஓம் ஆனந்த உருவே போற்றி
    21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
    22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
    23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
    24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
    25. ஓம் உய்யவழி தருபவனே போற்றி
    26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
    27. ஓம் எந்தையே போற்றி
    28. ஓம் எளியோர் காவலே போற்றி
    29. ஓம் ஏகாந்தனே போற்றி
    30. ஓம் ஏடேந்தியவனே போற்றி
    31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
    32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
    33. ஓம் கயிலை நாதனே போற்றி
    34. ஓம் கங்காதரனே போற்றி
    35. ஓம் கலையரசே போற்றி
    36. ஓம் கருணைக்கடலே போற்றி
    37. ஓம் குணநிதியே போற்றி
    38. ஓம் குருபரனே போற்றி
    39. ஓம் சதாசிவனே போற்றி
    40. ஓம் சச்சிதானந்தமே போற்றி
    41. ஓம் சாந்தரூபனே போற்றி
    42. ஓம் சாமகானப்பிரியனே போற்றி
    43. ஓம் சித்தர் குருவே போற்றி
    44. ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
    45. ஓம் சுயம்புவே போற்றி
    46. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
    47. ஓம் ஞானமே போற்றி
    48. ஓம் ஞானியே போற்றி
    49. ஓம் ஞான நாயகனே போற்றி
    50. ஓம் ஞான உபதேசியே போற்றி
    51. ஓம் தவசீலனே போற்றி
    52. ஓம் தனிப்பொருளே போற்றி
    53. ஓம் திருவுருவே போற்றி
    54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
    55. ஓம் தீரனே போற்றி
    56. ஓம் தீதழிப்பவனே போற்றி
    57. ஓம் துணையே போற்றி
    58. ஓம் தூயவனே போற்றி
    59. ஓம் தேவாதிதேவனே போற்றி
    60. ஓம் தேயாத நிலவே போற்றி
    61. ஓம் நன்னெறிக்காவலே போற்றி
    62. ஓம் நல் யாக இலக்கே போற்றி
    63.. ஓம் நாகமணிந்தவனே போற்றி
    64.. ஓம் நான்மறைப்பொருளே போற்றி
    65. ஓம் நிமலனே போற்றி
    66. ஓம் நிலவணிந்தவனே போற்றி
    67. ஓம் நிறைந்தவனே போற்றி
    68. ஓம் நீறணிந்தவனே போற்றி
    69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
    70. ஓம் நோய்தீர்ப்பவனே போற்றி
    71. ஓம் பசுபதியே போற்றி
    72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
    73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
    75. ஓம் பேறளிப்பவனே போற்றி
    76. ஓம் பேசாது தெளிவிப்பவனே போற்றி
    77. ஓம் பொன்னம்பலனே போற்றி
    78. ஓம் போற்றப்படுபவனே போற்றி
    79. ஓம் மறை கடந்தவனே போற்றி
    80. ஓம் மறையாப்பொருளே போற்றி
    81. ஓம் மகேஸ்வரனே போற்றி
    82. ஓம் மங்கலம் அளிப்பவனே போற்றி
    83. ஓம் மலையில் வசிப்பவனே போற்றி
    84. ஓம் மாமுனியே போற்றி
    85. ஓம் மீட்பவனே போற்றி
    86. ஓம் முன்னவனே போற்றி,
    87. ஓம் முடிவிலானே போற்றி
    88. ஓம் முக்கண்ணனே போற்றி
    89. ஓம் மும்மலம் அறுப்பவனே போற்றி
    90. ஓம் மும்மூர்த்தி நாயக@ன போற்றி
    91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி
    92. ஓம் மூலப்பொருளே போற்றி
    93. ஓம் மூர்த்தியே போற்றி
    94. ஓம் மோகம் தீர்ப்பவனே போற்றி
    95. ஓம் மோனசக்தியே போற்றி
    96. ஓம் மவுன உபதேசியே போற்றி
    97. ஓம் மேதா தட்சிணாமூர்த்தியே போற்றி
    98. ஓம் யோக நாயகனே போற்றி
    99. ஓம் யோக தட்சிணாமூர்த்தியே போற்றி
    100. ஓம் யம பயம் அழிப்பவனே போற்றி
    101. ஓம் ருத்ரப்பிரியனே போற்றி
    102. ஓம் ருத்ராட்சம் பூண்டவனே போற்றி
    103. ஓம் வித்தகனே போற்றி
    104. ஓம் விரிசடையனே போற்றி
    105. ஓம் வில்வப்பிரியனே போற்றி
    106. ஓம் வேதாந்த நாயகனே போற்றி
    107. ஓம் வேதத்தின் சாரமே போற்றி
    108. ஓம் ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி! போற்றி!
    பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.
    1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
    2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
    3. ஓம் அனுகூலனே போற்றி
    4. ஓம் அருந்துணையே போற்றி
    5. ஓம் அண்ணலே போற்றி
    6. ஓம் அருள்வடிவே போற்றி
    7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
    8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
    9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
    10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
    12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
    15. ஓம் இனியவனே போற்றி
    16. ஓம் இணையிலானே போற்றி
    17. ஓம் இடப உருவனே போற்றி
    18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
    19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
    20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
    21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
    22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
    23. ஓம் உத்தமனே போற்றி
    24. ஓம் உபகாரனே போற்றி
    25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
    26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
    27. ஓம் எளியவனே போற்றி
    28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
    29. ஓம் ஐயனே போற்றி
    30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
    31. ஓம் கனிவுருவே போற்றி
    32. ஓம் களிப்புருவே போற்றி
    33. ஓம் களங்கமிலானே போற்றி
    34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
    35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
    36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
    37. ஓம் கம்பீர உருவனே போற்றி
    38. ஓம் குணநிதியே போற்றி
    39. ஓம் குருபரனே போற்றி
    40. ஓம் குறை களைவோனே போற்றி
    41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
    42. ஓம் கோயில் நாயகனே போற்றி
    43. ஓம் சிவபுரத்தனே போற்றி
    44. ஓம் சிவதூதனே போற்றி
    45. ஓம் சிவனடியானே போற்றி
    46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
    47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
    48. ஓம் சிவஞான போதகனே போற்றி
    49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
    50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
    51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
    52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
    53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
    54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
    55. ஓம் ஞானியே போற்றி
    56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
    57. ஓம் தருமவிடையே போற்றி
    58. ஓம் தயாபரனே போற்றி
    59. ஓம் தளையறுப்பவனே போற்றி
    60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
    61. ஓம் தவசீலனே போற்றி
    62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
    63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
    64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
    66. ஓம் நந்தியே போற்றி
    67. ஓம் நலமளிப்பவனே போற்றி
    68. ஓம் நமனை வென்றவனே போற்றி
    69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
    70. ஓம் நாடப்படுபவனே போற்றி
    71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
    72. ஓம் நாதனே போற்றி
    73. ஓம் நிமலனே போற்றி
    74. ஓம் நீறணிந்தவனே போற்றி
    75. ஓம் நீதி காப்பவனே போற்றி
    76. ஓம் பராக்கிரமனே போற்றி
    77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
    78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
    79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
    80. ஓம் பதமளிப்பவனே போற்றி
    81. ஓம் பர்வதமானவனே போற்றி
    82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
    83. ஓம் புண்ணியனே போற்றி
    84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
    85. ஓம் பெரியவனே போற்றி
    86. ஓம் பெருமையனே போற்றி
    87. ஓம் மஞ்சனே போற்றி
    88. ஓம் மலநாசகனே போற்றி
    89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
    90. ஓம் மறையே கால்களானவனே போற்றி
    91. ஓம் மால்விடையே போற்றி
    92. ஓம் மகாதேவனே போற்றி
    93. ஓம் முனியவனே போற்றி
    94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
    95. ஓம் யோகியே போற்றி
    96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
    97. ஓம் வள்ளலே போற்றி
    98. ஓம் வல்லாளா போற்றி
    99. ஓம் வித்தகனே போற்றி
    100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி
    101. ஓம் வீர உருவமே போற்றி
    102. ஓம் வீரபத்திரனே போற்றி
    103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
    104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
    106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
    107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
    108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

    செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி வெங்கடாசலபதிக்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
    ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம்
    விநேஸ்வராய நம!''

    இந்த மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து.

    "ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
    தனதான்யாதிபதயே தனதான்ய
    ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா''

    இந்த யந்திரத்தைக் கோலமாக பூஜை அறையில் போட்டு அதன் நடுவில் ஒன்றும் எண் இட்ட இடங்களில் தலா 1 வீதமும் கமலதீபம் ஏற்றி இம்மந்திரத்தை 32 வீதம் தினம் ஜெபித்து வர பணக்கஷ்டமே வராது.

    விஷ்ணு சகஸ்ரநாமத்தில் குபேர நிதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46-வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (பழைய மூலவர் கருப்பு படத்திற்கு)க்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.

    "விஸ்தாரஸ் ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்
    பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ
    மகாகோசோ மகாபோகோ மகாதந:''
    கிருபானந்த வாரியார் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். இதை ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள்.
    எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?

    அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.

    இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?

    முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.

    திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.

    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை :

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை :
     
    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை :

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை :

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை :

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை :

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை :

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    அனைத்து வழிகளும் அடைபட்டாலும், அனைவரும் கைவிட்டாலும், உங்களை உடனே ஆதரிக்க ஒரு கரம் உண்டென்றால் சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ வீரபத்ரன் ஒருவனே.
    அனைத்து வழிகளும் அடைபட்டாலும், அனைவரும் கைவிட்டாலும், உங்கள் வாழ்வே சூனியமானாலும் உங்களை உடனே ஆதரிக்க ஒரு கரம் உண்டென்றால் சிவபெருமானின் அம்சமான ஸ்ரீ வீரபத்ரன் ஒருவனே.

    1.ஓம் க்லீம் ஓம் ஆதி அக்னி கண நாதாய நம:
    2.ஓம் க்லீம் ஓம் ஆதி மூல அக்னீஸ்வர வீரபத்ராய நம:
    3.ஓம் க்லீம் ஓம் ஆதி பகவத் அக்னிகார்ய வீரபத்ர புத்ராய நம:
    4.ஓம் க்லீம் ஓம் ஆதி தந்த்ர தாந்த்ரீக மஹா வீரபத்ராய நம:
    5.ஓம் க்லீம் ஓம் ஆதி குஹசேவித வீரபத்ராய நம:
    6.ஓம் க்லீம் ஓம் ஆதி நாராயண அனுக்ரஹ வீரபத்ராய நம:
    7.ஓம் க்லீம் ஓம் ஆதி சாஸ்தா சேவித வீரபத்ராய நம;
    8.ஓம் க்லீம் ஓம் ஆதி பைரவாநுக்கிரஹ வீரபத்ராய நம:
    9.ஒம் க்லீம் ஒம் ஆதி காலேஸ்வர சுகதாயை நாம:
    10.ஓம் க்லீம் ஓம் ஆதி கயிலாஸபதி சகாய வீரபத்ராய நம:
    11.ஓம் க்லீம் ஓம் ஆதி கும்பேஸ்வர பூரணதாயை நம:
    12.ஓம் க்லீம் ஓம் ஆதி முனிபுங்கவ இரட்சகாய நம:
    13.ஓம் க்லீம் ஓம் ஆதி சங்கட நிவாரணாய நம:
    14.ஓம் க்லீம் ஓம் ஆதி ஐக்கிய ப்ரம்ம தேஜஸாய நம:
    15.ஓம் க்லீம் ஓம் ஆதி கௌஸ்தூப மணிமாலாய நம:
    16.ஓம் க்லீம் ஓம் அதீதாய நம:
    17.ஓம் க்லீம் ஓம் காரண வஸ்துவே நம:
    18.ஓம் க்லீம் ஓம் க்ரியா சக்தி பூரணவே நம:
    19.ஓம் க்லீம் ஓம் இச்சாசக்திதராய நம:
    20.ஓம் க்லீம் ஓம் ஆதி ஆத்மனே நம:
    21.ஓம் க்லீம் ஓம் மஹா விஸ்வரூபவே நம:
    22.ஓம் க்லீம் ஓம் சதாசிவாம்ஸ மூர்த்தயே நம:
    23.ஓம் க்லீம் ஓம் ஹம்ச சோஹமூர்த்தயே நம:
    24.ஓம் க்லீம் ஓம் தட்சிணகாளி நேத்ர தீட்சண்யை நம:
    25.ஓம் க்லீம் ஓம் ஔஷத கலஸ பாக்யாயை நம:
    26.ஓம் க்லீம் ஓம் ரோக நிவாரண மருந்தீஸாய நம:
    27.ஓம் க்லீம் ஓம் அஷ்ட பைரவ ப்ராணாதீஸாய நம:
    28.ஓம் க்லீம் ஓம் அஷ்ட காளி சஹாதீஸாயா நம:
    29.ஓம் க்லீம் ஓம் அஷ்ட திக் பால சேவிதாய நம:
    30.ஓம் க்லீம் ஓம் அஷ்ட புஜ நமஸ்கராயை நம:
    31.ஓம் க்லீம் ஓம் அஷ்ட ஐஸ்வர்யாயை நம:
    32.ஓம் க்லீம் ஓம் அஷ்ட கர ஸ்வரூபாயை நம்:
    33.ஓம் க்லீம் ஓம் அஷ்டமா சித்திதராய நம:
    34.ஓம் க்லீம் ஓம் அஷ்டாட்சர ப்ரியாயை நம:
    35.ஓம் க்லீம் ஓம் நவவீர பூஜிதாய நம:
    36.ஓம் க்லீம் ஓம் நவக்ரஹ ப்ரியாயை நம:
    37.ஒம் க்லீம் ஒம் நவமாதா சேவிதாய நம:
    38.ஓம் க்லீம் ஓம் நவபாஷாண மூலாய நம:
    39.ஓம் க்லீம் ஓம் நவலோக மூல புருஷாய நம:
    40.ஓம் க்லீம் ஓம் நவநாத சித்தப் ப்ரியாய நம:
    41.ஓம் க்லீம் ஓம் பர்வத சேவிதாய நம:
    42.ஓம் க்லீம் ஓம் பாச மூலாய நம:
    43.ஓம் க்லீம் ஓம் வித்யா ஞானாய நம:
    44.ஓம் க்லீம் ஓம் கந்தர்வ சேவிதாய நம:
    45.ஓம் க்லீம் ஓம் தேவப் ப்ரியாயை நம:
    46.ஓம் க்லீம் ஓம் ருத்ராதிபதிப் ப்ரியாயை நம:
    47.ஓம் க்லீம் ஓம் பிதுர் தேவ பூஜிதாய நம:
    48.ஓம் க்லீம் ஓம் பரிசுத்த அக்னி வீரபத்ராயை நம:
    49.ஓம் க்லீம் ஓம் ஆத்ம காரகாயை நம:
    50.ஓம் க்லீம் ஓம் ஆபத் சகாயை நம:
    51.ஓம் க்லீம் ஓம் ஆதி வீர அக்னி பூரண வீரபத்ர பரப்ப்ரம்மனே நம:

    ஸ்ரீ வீரபத்ரர் காயத்ரி மந்திரம்

    "ஓம் தத்புருஷாய வித்மஹே ஜனசம்ரக்ஷக தேவாய தீமஹி
    தண்நோவீரபத்ரப்ரசோதயாத்"
    நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம்.
    நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் பொருளாக இருக்கும் இறைவனும், இந்த உலகத்தில் அனைத்துமாகவும், அதில் ஊடுருவியிருந்து அதை ஆள்கின்ற ஜெகதீசன் திருவடி வாழ்க. இறைவனைக் காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம்.

    நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

    கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
    ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க!
    புறத்தார்க்கு சேயோந்தன் பூங்கழல்கள் வெல்க!
    அவரவர் ஜாதகப்படி கேது வழங்கும் பலன்கள் எதிர்மறையாக அமையுமானால் அவற்றின் வீரியத்தைக் குறைக்க கீழே கொடுக்கப்பட்டள்ள கவசத்தை சொல்லி வரலாம்.
    சித்திர வண்ணமே திருந்து மேனியு
    மத்துவசம் பொரு மணிகொள் காட்சியும்
    புத்தொளி மணிமுடிப் பொலிவும் தொண்டருள்
    வைத்தமா கேதுவை வணக்கம் செய்குவோம்.

    சித்திர வண்ணன் காக்க
    சிரம் நெற்றி தூம வர்ணனன்
    நித்தமும் காக்க நாட்டம்
    நீடு பிங்காட்சன் காக்க
    பத்தாகை தொழும் செங்கண்ணன்
    பளகறு செவி புரக்க
    வித்தநோ மேனி அண்ணல்

    மேம்படு நாசி காக்க
    சிங்கிகை அளிக்கும் மைந்தன்
    திருமலி சுபுகம் காக்க
    கங்குலும் பகலும் கேது
    சுந்தரம் காக்க கந்தம்
    பொங்கு ஒளிக் கிரகநாதன்
    புரக்க தோள்புலவர் கோமான்
    அங்கு அமர்ந்து அளிக்க உந்தி
    அரவுரு அமைந்தோன் காக்க

    காண்டகு கோரரூபன்
    கடிதடம் புரந்து காக்க
    மாண்டகு மருங்குல காக்க
    வான்வரும் அசுரர் கோமான்
    துண்டகு தொடை இரண்டும்

    சடாச்சிரம் பெரியோன் காக்க
    வேண்டகு கோபமூர்த்தி
    எழின் முழந்தாள் புரக்க
    வெற்றி சேர் குரூர ரூபன்
    மேம்படு பதம் புரக்க
    பற்றிலா மக்கள் யாவர்க்கும்

    பலவகைத் துன்பஞ் செய்யும்
    செற்றமார் கிரகவேந்தன்
    தெரிக்கும் என் அங்கமெலாம்
    அற்றமொன் றானுமேவாது
    அமர்ந்து ராப்பகல் காக்க.
    காண்டகு கேதுவின் கவசம் போற்றிடின்

    மூண்டெழு பகையெலா முடிந்து மாய்ந்திடும்
    வேண்டுவ யாவையும் விரைவின் எய்திடும்
    பூண்டை நோய் போமெனப் புகழும்
    நூல் எல்லாம்.
    அடுத்து வருவது ஸ்கந்த புராணத்தில் உள்ள
     கேது பஞ்சவிம்சதி நாம ஸ்தோத்திரம்.

    இதைப் பாராயணம் செய்தால் எல்லா கஷ்டங்களும் விலகும்.
    தான்யம், பொருள், பசுக்கள் விருத்தியாகும்.
    கேது கால கலாயிதா தூம்ரகேதூர் விவாணக:
    லோககேதுர் மஹாகேது: ஸர்கேதூர்பசுப்ரத:
    ரெளத்ரோ ருத்ரப்ரியோ ருத்ர க்ரூரகர்மா
    ஸுகந்தத்ருக

    பாலால தூமஸமகாச:
    சித்ரயக்னோபவீதத்ருக:
    தாராகண விமர்தீ ச ஜைமினேயோ க்ரஹாதிப:
    கணேச தேவோ விக்னேச
    விஷரோகார்திநாசன:

    ப்ரவ்ராஜ்யதோ க்ஞானதச்ச தீர்த்தயாத்ராப்ர வர்த்தக:
    பஞ்சவிம்சதி நாமானி கேதோர்ய: ஸததம் படேத்
    தஸ்ய நச்யதி பாதா ச ஸர்வாகேது ப்ரஸாதத:
    தனதான்யபசூநாம் ந பவேத் வ்ருத்திர் ந ஸம்சய:
    ×