என் மலர்
கிறித்தவம்
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.
இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.
ஏன் தெரியுமா? ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.
தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை
‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’. (ஏசா.49:15)
ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.
ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.
நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.
‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)
ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார் களே’.
பிரியமானவர்களே! நீங்கள் படுகிற பாடுகளை நம் தேவன் அறிந் திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”. இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும் போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். ஏண்டா நீயெல்லாம் மாடு மேய்க்கப் போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான் நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே சாப்பிட்டிருக்கலாமே இங்க வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி.
அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.
அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக” வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
- சாம்சன் பால்
அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.
சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.
கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.
அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக” வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
“சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”
- சாம்சன் பால்
கடன்பட்ட இருவர் என்ற உவமையின் வாயிலாக இயேசு தம் புதிய உடன்படிக்கையின் அம்சங்களை அறிவித்தார். அதோடு இன்றைய உலகிற்கு தேவையான சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
கடன்பட்ட இருவர் என்ற உவமையின் வாயிலாக இயேசு தம் புதிய உடன்படிக்கையின் அம்சங்களை அறிவித்தார். அதோடு இன்றைய உலகிற்கு தேவையான சில நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அதன்படி ‘நேர்மையாளரை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்க வந்தேன்’ என்று இயேசு அறிவித்தார். (மத்தேயு 9 12-13). இயேசுவின் புதிய உடன்படிக்கையில் ‘கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்’ (மத்தேயு 19-30). ‘தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’ (லூக்கா 14-11).
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது.
நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. இறுதி நாளான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றி, புதுநன்மை உறுதிபூசல் வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடக்கிறது.
தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. இறுதி நாளான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றி, புதுநன்மை உறுதிபூசல் வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடக்கிறது.
நட்டாலத்தில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்ட அறிவிப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து குழித்துறை மறைமாவட்டம் சார்பில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சொந்த ஊரான நட்டாலத்தில் புனிதர் பட்ட அறிவிப்பு விழா நேற்று நடந்தது. மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் பொன்னையா, அருட்பணியாளர் மரிய வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது நினைவு இல்லம், குருசடி ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புனிதர் பட்டம் அறிவிப்பை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம் வாசித்தார்.
நிகழ்ச்சியில் மாங்குழி பங்குத்தந்தை விஜின், பரக்குன்று பங்குதந்தை டோமினிக் ராஜா, மயிலோடு பங்குத்தந்தை ராபின்சன், செட்டிசார் பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மற்றும் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ரசல்ராஜ், அருட்பணியாளர் ரோமரிக்குததேஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
இதையடுத்து குழித்துறை மறைமாவட்டம் சார்பில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சொந்த ஊரான நட்டாலத்தில் புனிதர் பட்ட அறிவிப்பு விழா நேற்று நடந்தது. மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் பொன்னையா, அருட்பணியாளர் மரிய வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது நினைவு இல்லம், குருசடி ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புனிதர் பட்டம் அறிவிப்பை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம் வாசித்தார்.
நிகழ்ச்சியில் மாங்குழி பங்குத்தந்தை விஜின், பரக்குன்று பங்குதந்தை டோமினிக் ராஜா, மயிலோடு பங்குத்தந்தை ராபின்சன், செட்டிசார் பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மற்றும் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ரசல்ராஜ், அருட்பணியாளர் ரோமரிக்குததேஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் கிறிஸ்துநகரில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.
14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.
இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.
மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.
14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.
இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.
மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்துக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் 23-4-1712-ம் ஆண்டு வாசுதேவன்- தேவகியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நீலகண்டபிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்றார். 1752-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்டார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறை மாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2-12-2012-ம் அன்று அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் இதற்கான விழா நாகர்கோவில் கார்மல் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 21-2-2020 அன்று தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம், அதற்கு தடை ஏதும் இல்லை என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில்தான் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை நேற்று புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் குறித்து அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி இன்று (அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முக்திப்பேறுபெற்ற தேவசகாயம் என்னும் லாசருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. புனிதர் பட்டங்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குவார். இந்த விழாவில் நமது நாட்டில் இருந்து ஏராளமானோர் வாடிகனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் முதல் புனிதர்தேவசகாயம்
அடுத்த ஆண்டு ( 2022) முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் திருமணமான பொதுநிலையினரில் முதன்மையானவர் என்ற பெருமையை பெறுகிறார். குமரி மாவட்டத்தில் பிறந்து மறைந்த தேவசகாயம் தமிழகத்தின் முதல் புனிதராகவும், குமரி மாவட்டத்தின் முதல் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறை மாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அதன் முதல் படியாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2-12-2012-ம் அன்று அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் இதற்கான விழா நாகர்கோவில் கார்மல் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக கலந்து கொண்ட இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 21-2-2020 அன்று தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம், அதற்கு தடை ஏதும் இல்லை என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில்தான் அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கடிதத்தை நேற்று புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் குறித்து அவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி இன்று (அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் முக்திப்பேறுபெற்ற தேவசகாயம் என்னும் லாசருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. புனிதர் பட்டங்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குவார். இந்த விழாவில் நமது நாட்டில் இருந்து ஏராளமானோர் வாடிகனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் முதல் புனிதர்தேவசகாயம்
அடுத்த ஆண்டு ( 2022) முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் திருமணமான பொதுநிலையினரில் முதன்மையானவர் என்ற பெருமையை பெறுகிறார். குமரி மாவட்டத்தில் பிறந்து மறைந்த தேவசகாயம் தமிழகத்தின் முதல் புனிதராகவும், குமரி மாவட்டத்தின் முதல் புனிதராகவும் போற்றப்படுகிறார்.
பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.
நம்முடைய வாழ்க்கையில் போராட்டமான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், அதில் இருந்து வெளிவர நம்பிக்கையே நமக்கு உறுதுணையாக இருக்கிறது. அதுவும் கடவுள் மீது நம்முடைய நம்பிக்கையை வைத்து, அவரோடு இணைந்து அந்த போராட்டத்தை எதிர்கொள்ளும்போது, எளிதாக அதில் இருந்து விடுபடவும் முடிகிறது. ஆனால் பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.
இயேசு கிறிஸ்துவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் சீமோன் என்று அழைக்கப்பட்ட பேதுருவும் ஒருவர். பாஸ்கா விருந்தின்போது இயேசு பேதுருவிடம் “சீமோனே.. இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்க, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.
இயேசு கூறியதை கேட்டதும் பேதுரு “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும், ஏன்.. சாவதற்கும் கூட நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்று உறுதிபட கூறினார்.
ஆனால் இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
இயேசுவை கைது செய்து தலைமை குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அங்கிருந்த பணிபெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.
பேதுருவோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவுக்கு மோசேவும், எலியாவும் காட்சி கொடுத்து பேசியபோது, தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த நிகழ்வின் போது என பல முக்கியமான தருணங்களில் பேதுரு இயேசுவுடன் இருந்தார். இயேசு கடல் மீது நடந்தபோது, அவரிடம் தானும் அவ்வாறு கடல்மீது நடக்க ஆணையிடும் என்று கேட்டுகொண்டு பேதுருவும் கடல் மீது நடந்தார். அதுமட்டுமன்றி, விவிலியத்தில் பார்க்கும்போது பல இடங்களில் இயேசு பேதுருவிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார். அதேபோல் இயேசுவிடம் பேதுரு தன்னுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கமும் பெறுகிறார். இவ்வாறு பல தருணங்களில் இயேசுவின் வாழ்வில் முக்கியமான ஒருவராய் பேதுரு திகழ்ந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’’ என்றார். இதன் மூலம் திருச்சபை வளர்ச்சியில் பேதுருவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இயேசு முன்னறிவித்தார்.
அப்படிபட்டவர் இயேசுவை மும்முறை மறுதலிக்க காரணம், இயேசு கூறிய எச்சரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பேதுரு தன் மீது வைத்திருந்த சுய நம்பிக்கையே காரணமாகும். இன்றும் நம்மில் பலர் இறைவன் கூறும் வார்த்தையையும், எச்சரிப்பையும் விடுத்து நம்மையே நாம் அதிகமாய் நம்பிக் கொண்டிருப்பதால்தான் வழி தவறி போகிறோம். தடுமாறி விழுகிறோம். ஆனால் பேதுருவை பார்க்கும் போது அவர் தவறினாலும், அதற்காக மனம் வருந்தினார். மனம் மாறினார்.
“நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பல இடங்களில் இறைவனுக்கு சாட்சியாய் நின்று, பலரும் கிறிஸ்துவை பின்பற்ற காரணமாய் விளங்கினார். அவரை போன்று நாமும் நம்முடைய தவறை உணர்ந்தவர்களாய், அதற்காய் மனம் வருந்தி இனிவரும் காலங்களில் இறைவனுக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ்வோம்.
இயேசு கிறிஸ்துவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் சீமோன் என்று அழைக்கப்பட்ட பேதுருவும் ஒருவர். பாஸ்கா விருந்தின்போது இயேசு பேதுருவிடம் “சீமோனே.. இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்க, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.
இயேசு கூறியதை கேட்டதும் பேதுரு “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும், ஏன்.. சாவதற்கும் கூட நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்று உறுதிபட கூறினார்.
ஆனால் இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
இயேசுவை கைது செய்து தலைமை குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அங்கிருந்த பணிபெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.
பேதுருவோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவுக்கு மோசேவும், எலியாவும் காட்சி கொடுத்து பேசியபோது, தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த நிகழ்வின் போது என பல முக்கியமான தருணங்களில் பேதுரு இயேசுவுடன் இருந்தார். இயேசு கடல் மீது நடந்தபோது, அவரிடம் தானும் அவ்வாறு கடல்மீது நடக்க ஆணையிடும் என்று கேட்டுகொண்டு பேதுருவும் கடல் மீது நடந்தார். அதுமட்டுமன்றி, விவிலியத்தில் பார்க்கும்போது பல இடங்களில் இயேசு பேதுருவிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார். அதேபோல் இயேசுவிடம் பேதுரு தன்னுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கமும் பெறுகிறார். இவ்வாறு பல தருணங்களில் இயேசுவின் வாழ்வில் முக்கியமான ஒருவராய் பேதுரு திகழ்ந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’’ என்றார். இதன் மூலம் திருச்சபை வளர்ச்சியில் பேதுருவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இயேசு முன்னறிவித்தார்.
அப்படிபட்டவர் இயேசுவை மும்முறை மறுதலிக்க காரணம், இயேசு கூறிய எச்சரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பேதுரு தன் மீது வைத்திருந்த சுய நம்பிக்கையே காரணமாகும். இன்றும் நம்மில் பலர் இறைவன் கூறும் வார்த்தையையும், எச்சரிப்பையும் விடுத்து நம்மையே நாம் அதிகமாய் நம்பிக் கொண்டிருப்பதால்தான் வழி தவறி போகிறோம். தடுமாறி விழுகிறோம். ஆனால் பேதுருவை பார்க்கும் போது அவர் தவறினாலும், அதற்காக மனம் வருந்தினார். மனம் மாறினார்.
“நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பல இடங்களில் இறைவனுக்கு சாட்சியாய் நின்று, பலரும் கிறிஸ்துவை பின்பற்ற காரணமாய் விளங்கினார். அவரை போன்று நாமும் நம்முடைய தவறை உணர்ந்தவர்களாய், அதற்காய் மனம் வருந்தி இனிவரும் காலங்களில் இறைவனுக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ்வோம்.
இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
* தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
* உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக் கொடு.
* ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
* உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
* உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.
* ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.
* சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
* நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.
* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
* நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
* உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக் கொடு.
* ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
* உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
* உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.
* ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.
* சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
* நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.
* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
* நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது.
உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
“அவர் (இயேசு கிறிஸ்து) முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல, வெண்மையாயிற்று” (மத். 17:2).
இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).
ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.
ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).
ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).
இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.
ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.
ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.
நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை புனிதவெள்ளி என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். புனித வெள்ளியன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன 7 வாசகங்கள் குறித்து பிரசங்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.
போதகர் எஸ்.விஜயகுமார்
அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.
ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.
போதகர் எஸ்.விஜயகுமார்
பரிபூரண ஜீவன் ஏ.ஜி.சர்ச், பல்லடம்.
இதையும் படிக்கலாம்...பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை
நாகை, வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கண்ணீர் மல்க இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களது ஆத்மா சாந்தியடையவும் வேண்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.
தொடர்நது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.
அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை புனிதநீர் தெளித்து பிரார்த்தனை நடத்தினார். தொடாந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராயப்பன் கல்லறைதோட்டம் உள்பட நாகையை சுற்றியுள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள பாதிரியார்களின் கல்லறைக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் இறந்தவர்களின் கல்லறை தோட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்நது உறவினர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களை வைத்து அலங்கரித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள்.
அதன்படி கல்லறை திருநாளான நேற்று நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்குப் பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை புனிதநீர் தெளித்து பிரார்த்தனை நடத்தினார். தொடாந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ராயப்பன் கல்லறைதோட்டம் உள்பட நாகையை சுற்றியுள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்துவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ள பாதிரியார்களின் கல்லறைக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோ ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் இறந்தவர்களின் கல்லறை தோட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






