என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நட்டாலத்தில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்ட அறிவிப்பு விழா
Byமாலை மலர்13 Nov 2021 4:30 AM GMT (Updated: 13 Nov 2021 4:30 AM GMT)
நட்டாலத்தில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்ட அறிவிப்பு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்திற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து குழித்துறை மறைமாவட்டம் சார்பில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சொந்த ஊரான நட்டாலத்தில் புனிதர் பட்ட அறிவிப்பு விழா நேற்று நடந்தது. மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் பொன்னையா, அருட்பணியாளர் மரிய வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது நினைவு இல்லம், குருசடி ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புனிதர் பட்டம் அறிவிப்பை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம் வாசித்தார்.
நிகழ்ச்சியில் மாங்குழி பங்குத்தந்தை விஜின், பரக்குன்று பங்குதந்தை டோமினிக் ராஜா, மயிலோடு பங்குத்தந்தை ராபின்சன், செட்டிசார் பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மற்றும் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ரசல்ராஜ், அருட்பணியாளர் ரோமரிக்குததேஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
இதையடுத்து குழித்துறை மறைமாவட்டம் சார்பில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் சொந்த ஊரான நட்டாலத்தில் புனிதர் பட்ட அறிவிப்பு விழா நேற்று நடந்தது. மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் தலைமை தாங்கினார். மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ், போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் பொன்னையா, அருட்பணியாளர் மரிய வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றினார்.
விழாவை முன்னிட்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் திருஉருவத்திற்கு ரோஜா பூ மலை அணிவிக்கப்பட்டது. மேலும் அவரது நினைவு இல்லம், குருசடி ஆகிய இடங்களில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புனிதர் பட்டம் அறிவிப்பை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம் வாசித்தார்.
நிகழ்ச்சியில் மாங்குழி பங்குத்தந்தை விஜின், பரக்குன்று பங்குதந்தை டோமினிக் ராஜா, மயிலோடு பங்குத்தந்தை ராபின்சன், செட்டிசார் பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மற்றும் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ரசல்ராஜ், அருட்பணியாளர் ரோமரிக்குததேஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X