என் மலர்
கிறித்தவம்
கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்கள், குடும்பத்தினருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தின் மூதாதையர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராவது இறந்து போய் இருந்தால் அவர்களை நினைவுகூரும் வகையில், கல்லறை தோட்டங்களுக்கு சென்று அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அந்தவகையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து இறந்த தங்களுடைய மூதாதையர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, பிரார்த்தனை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருச்சபை பாதிரியார்கள், கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியை நடத்தினர்.
அந்தவகையில் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் பலர் குடும்பத்தினருடன் வந்து இறந்த தங்களுடைய மூதாதையர்கள், குடும்பத்தினர், உறவினர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, பிரார்த்தனை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருச்சபை பாதிரியார்கள், கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலியை நடத்தினர்.
இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்படுகிறது.
இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்படுகிறது.
இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார்.
இலவசங்களை எதிலும் எப்போதும் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்க கூடாது. ஒரு முறை ஒரு இசைக்கலைஞர் வெகு விமரிசையாக வயலின் இசைத்து கொண்டிருந்தார். அந்த இசையை ரசித்த இன்னொருவர் அந்த கலைஞருக்கு ரூ.ஆயிரம் அன்பளிப்பாக வழங்கினார். கலைஞர் அதை பெற மறுத்தார். “எனக்கு ஏன் உங்கள் அன்பளிப்பு? என் இசை உங்களை மகிழ்வித்தது என்றால் எனக்கும் மகிழ்ச்சியே.
அதற்கு ஏன் அன்பளிப்பு வழங்குகிறீர்கள்? இந்த பணிக்கு எனக்கு ஊதியம் கிடைக்கிறது. அதுபோதும் எனக்கு. உங்களுக்கு நன்றி” என்று இலவசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த கலைஞரைப் பற்றிய பார்வை அருகில் இருந்த பலரின் எண்ணங்களில் ஓங்கி உயர்ந்து நின்றது. ஏன் இலவசங்களை பெற வேண்டும்? இலவசங்களை பெறும்போது நாம் ஒரு வகையில் நம் உரிமைகளை அடகு வைத்துவிடுகிறோம்.
ஆதாம், ஏவாளை, பரம தந்தை நினைத்திருந்தால் இலவசமாக எக்காலமும் சிங்கார வனத்தில் வாழ வைத்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் பாவம் செய்தபோது தண்டனை வழங்கினார். வாழ்வை மீண்டும் பெற, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டார். உழைத்து உண்பது பாவமா? இல்லையே! உழைக்காமல் உண்பது தான் பாவம்.
இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார். தன் ரத்தத்தை சிந்தினார். சிலுவையில் மரித்து உயிர் நீத்தார். இயேசுவின் சிலுவை சாவுதான் மீட்பின் விலையாக அமைந்தது. நாமும் மீட்பை இலவசமாக பெறக்கூடாது.
அதனால் தான் ஆண்டவர் இயேசு சொன்னார், “என்னை பின்பற்ற விரும்புபவர், தன்னலம் துறந்து, தன் சிலுவையை சுமந்து வர வேண்டும் (மத் 16:26)” என்று. நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது? முள் இல்லாத ரோஜா மலர் இல்லை. இரவு இல்லாத பகல் இல்லை. பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை.
அதற்கு ஏன் அன்பளிப்பு வழங்குகிறீர்கள்? இந்த பணிக்கு எனக்கு ஊதியம் கிடைக்கிறது. அதுபோதும் எனக்கு. உங்களுக்கு நன்றி” என்று இலவசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த கலைஞரைப் பற்றிய பார்வை அருகில் இருந்த பலரின் எண்ணங்களில் ஓங்கி உயர்ந்து நின்றது. ஏன் இலவசங்களை பெற வேண்டும்? இலவசங்களை பெறும்போது நாம் ஒரு வகையில் நம் உரிமைகளை அடகு வைத்துவிடுகிறோம்.
ஆதாம், ஏவாளை, பரம தந்தை நினைத்திருந்தால் இலவசமாக எக்காலமும் சிங்கார வனத்தில் வாழ வைத்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் பாவம் செய்தபோது தண்டனை வழங்கினார். வாழ்வை மீண்டும் பெற, நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்ண வேண்டும் என்று கட்டளையிட்டார். உழைத்து உண்பது பாவமா? இல்லையே! உழைக்காமல் உண்பது தான் பாவம்.
இயேசு பிரானும் மக்களை பாவங்களில் இருந்து இலவசமாக மீட்டிருக்க முடியும். ஆனால் அவரும் அவ்வாறு செய்யவில்லை. மனித குலத்துக்கு மாண்பை தர, மீட்பை தர பாடுகள் பல பட்டார். தன் ரத்தத்தை சிந்தினார். சிலுவையில் மரித்து உயிர் நீத்தார். இயேசுவின் சிலுவை சாவுதான் மீட்பின் விலையாக அமைந்தது. நாமும் மீட்பை இலவசமாக பெறக்கூடாது.
அதனால் தான் ஆண்டவர் இயேசு சொன்னார், “என்னை பின்பற்ற விரும்புபவர், தன்னலம் துறந்து, தன் சிலுவையை சுமந்து வர வேண்டும் (மத் 16:26)” என்று. நம்முடைய பாவங்களுக்காக, நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இயேசு சிலுவையை சுமந்தார். நாம் ஏன் நம் பாவங்களுக்காக நம் சிலுவையை சுமக்க கூடாது? முள் இல்லாத ரோஜா மலர் இல்லை. இரவு இல்லாத பகல் இல்லை. பாடுகள் இல்லாத பரலோக வாழ்வு இல்லை.
- குழந்தை, காணியிருப்பு.
இதையும் படிக்கலாம்...இறைவேண்டல் நமக்கு தரும் ஆறுதலும், நம்பிக்கையும்
தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார்.
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.
அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.
உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.
அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.
அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.
மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.
பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.
உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.
அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.
நமது நம்பிக்கையை அழிக்கும் சோதனைகளும், பெரும் துன்பங்களும் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. இந்நேரங்களில், இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது. நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியின்படி செயல்பட இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டும். தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
இதையும் படிக்கலாம்..கடன்பட்ட இருவர்
இயேசுவின் கால்களைக் கழுவிய பெண்ணைப்போல், நாமும் எளியோரின் துன்பத்தை துடைக்க வேண்டும். நம் தர்மங்களைத் தாழ்மையுடனும், தம்பட்டம் அடிக்காமலும் செய்யவேண்டும்.
பரிசேயருள் ஒருவர், இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட, படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார், இவள் பாவியாயிற்றே’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன், இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
பரிசேயர் அளித்த விருந்தில் நடந்த காரியங்களும் இயேசு கூறிய உவமையும் நமக்குப் பாடமாக அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. சீமோனைப் போலவே, நாமும் நம்மை நேர்மையாளர் என்று நினைப்பதால், நாம் செய்யும் தர்மகாரியங்களில்கூட அன்பைவிட, தற்பெருமையே மேலோங்கி நிற்கிறது.
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்” என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்” என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம், ஒருவர் ஐந்நூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன், இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.
பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
பரிசேயர் அளித்த விருந்தில் நடந்த காரியங்களும் இயேசு கூறிய உவமையும் நமக்குப் பாடமாக அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, நாமும் நம்மைப் படைத்த இறைவனுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. சீமோனைப் போலவே, நாமும் நம்மை நேர்மையாளர் என்று நினைப்பதால், நாம் செய்யும் தர்மகாரியங்களில்கூட அன்பைவிட, தற்பெருமையே மேலோங்கி நிற்கிறது.
இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், பரிசேயரைப் போலவே, வழிபாட்டுச் சடங்குகளை மட்டும் நாம் செய்கிறோம். இயேசு நம் அருகில் உணவுக்காகவும், கால்கள் கழுவப்படவும், ஏங்கித் தவிப்பவராக நிற்கிறார். இயேசுவின் கால்களைக் கழுவிய பெண்ணைப்போல், நாமும் எளியோரின் துன்பத்தை துடைக்க வேண்டும். நம் தர்மங்களைத் தாழ்மையுடனும், தம்பட்டம் அடிக்காமலும் செய்யவேண்டும். தீர்ப்பு நாளில், இயேசு நம்மை சுட்டிக்காட்டி, ‘இவரைப் பார்த்தீரா, என் காலடிகளைத் துடைத்தார். இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்’ என்று அறிவிப்பார்.
இதையும் படிக்கலாம்..ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
“ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்| தன்னைத் தேடுவோருக்குத் துணை நிற்கும்.
ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்| அதனை வைகறையிலே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக் கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்| அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்| ஞானத்திற்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்”.
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும், சிறப்பும் வந்து சேரும். ஞானத்தோடு வாழ்பவராகக் காட்டிக் கொள்வொர் நிச்சயம் சிறுமைப்படுவார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
ஐந்தாம்; நிலை
துணைக்கு வந்த சீமோன்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம். அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர். கூடவே வாழ்ந்த சீடர்கள், ... .. நன்மைகள் அனுபவித்த மனிதர்கள், .. .. யாரும் இல்லை அங்கே அந்த இக்கட்டில் உதவி செய்ய.! வாழும் வரை உறிஞ்சி வாழ்ந்து, .. ..வாழவைத்த மரத்தையே காய்ந்து போகப்பண்ணும் ஒட்டுண்ணிகளாக மனிதங்கள் .. ..
வாழ்ந்து நிற்கும் மனிதர்களைக் கண்டு மனம் காய்ந்து போகும் மனிதங்கள். .. பிறர் துன்பத்தில் உழலும் நிலை கண்டும் நெஞ்சில் ஈரம் பிறக்காத மனிதங்கள்.. ..
ஆறுதல் மொழிக்கே பஞ்சம் அந்த நாவுகளில்.. .. கருத்துள்ள உதவிக்கு வழியா இருக்கப்போகிறது? வேடிக்கை பார்த்தவன்தான் சீமோன்...! இயேசுவின் நன்மை தீமை அதிகம் அறியான் .. .. கேள்விப்பட்டதுண்டு .. .. ஆனால் அதிகம் நம்பிக்கை கொண்டதில்லை.. ..அவனுக்குச் சிரிப்பு.!.. .. இந்தக் கோலத்தில் அப்படிப்பட்ட வல்லமையா? .. .. நம்பிச் சென்றவர்க்கு இதுவும் வேண்டும்.. .. இதற்கு மேலேயும் வேண்டும்.
அவரை அருகில் காணும் வரையுந்தான் இந்தச் சிந்தனையோட்டம்.. .. ! கண்ட பிறகு அவன் சிந்தையில் மாற்றம்!!.. .. கேள்விப்பட்டதற்கும் மேலான ஒருவரல்லவா இங்கே தள்ளாடித் துவளுவது?
தன்னை உந்தித்தள்ளி உதவச் செய்த போர் வீரனுக்கு அவன் நன்றி கூறவேண்டும். தக்க சமயத்தில் துன்புற்ற மனிதத்திற்கு கை கொடுக்க முடிந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!இவர்களில் ஒருவனுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவிடம் சொல்லுவோம்:
“வாழ்வில் துன்புற்ற வேளையில் நான் உதவி தேடி அலைந்ததுண்டு.. ..வாழும் மனிதர்களோடே உறவு வைத்ததும் உண்டு .. .. தேவையில் மனிதம் வாடியபோது .. தேடி நான் பார்த்ததில்லை. .. வாழவேண்டி துடித்தவர் தமக்கு நான் கைகொடுக்க மறுத்ததும் உண்டு.. .. இயேசுவே மனிதம் யாராக இருப்பினும் அது நீரே என நான் நினைத்தல் வேண்டும்.. .. அல்லல்படும் உயிர்களுக்கு நான் ஆறுதலாக அமைதல் வேண்டும்.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்.
ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்| அதனை வைகறையிலே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக் கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்| அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்| ஞானத்திற்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்”.
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும், சிறப்பும் வந்து சேரும். ஞானத்தோடு வாழ்பவராகக் காட்டிக் கொள்வொர் நிச்சயம் சிறுமைப்படுவார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
ஐந்தாம்; நிலை
துணைக்கு வந்த சீமோன்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம். அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர். கூடவே வாழ்ந்த சீடர்கள், ... .. நன்மைகள் அனுபவித்த மனிதர்கள், .. .. யாரும் இல்லை அங்கே அந்த இக்கட்டில் உதவி செய்ய.! வாழும் வரை உறிஞ்சி வாழ்ந்து, .. ..வாழவைத்த மரத்தையே காய்ந்து போகப்பண்ணும் ஒட்டுண்ணிகளாக மனிதங்கள் .. ..
வாழ்ந்து நிற்கும் மனிதர்களைக் கண்டு மனம் காய்ந்து போகும் மனிதங்கள். .. பிறர் துன்பத்தில் உழலும் நிலை கண்டும் நெஞ்சில் ஈரம் பிறக்காத மனிதங்கள்.. ..
ஆறுதல் மொழிக்கே பஞ்சம் அந்த நாவுகளில்.. .. கருத்துள்ள உதவிக்கு வழியா இருக்கப்போகிறது? வேடிக்கை பார்த்தவன்தான் சீமோன்...! இயேசுவின் நன்மை தீமை அதிகம் அறியான் .. .. கேள்விப்பட்டதுண்டு .. .. ஆனால் அதிகம் நம்பிக்கை கொண்டதில்லை.. ..அவனுக்குச் சிரிப்பு.!.. .. இந்தக் கோலத்தில் அப்படிப்பட்ட வல்லமையா? .. .. நம்பிச் சென்றவர்க்கு இதுவும் வேண்டும்.. .. இதற்கு மேலேயும் வேண்டும்.
அவரை அருகில் காணும் வரையுந்தான் இந்தச் சிந்தனையோட்டம்.. .. ! கண்ட பிறகு அவன் சிந்தையில் மாற்றம்!!.. .. கேள்விப்பட்டதற்கும் மேலான ஒருவரல்லவா இங்கே தள்ளாடித் துவளுவது?
தன்னை உந்தித்தள்ளி உதவச் செய்த போர் வீரனுக்கு அவன் நன்றி கூறவேண்டும். தக்க சமயத்தில் துன்புற்ற மனிதத்திற்கு கை கொடுக்க முடிந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!இவர்களில் ஒருவனுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவிடம் சொல்லுவோம்:
“வாழ்வில் துன்புற்ற வேளையில் நான் உதவி தேடி அலைந்ததுண்டு.. ..வாழும் மனிதர்களோடே உறவு வைத்ததும் உண்டு .. .. தேவையில் மனிதம் வாடியபோது .. தேடி நான் பார்த்ததில்லை. .. வாழவேண்டி துடித்தவர் தமக்கு நான் கைகொடுக்க மறுத்ததும் உண்டு.. .. இயேசுவே மனிதம் யாராக இருப்பினும் அது நீரே என நான் நினைத்தல் வேண்டும்.. .. அல்லல்படும் உயிர்களுக்கு நான் ஆறுதலாக அமைதல் வேண்டும்.”
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்.
அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?
தீர்ப்பு நாளில் நடக்க இருப்பதை, இயேசு உவமையாக விளக்குகிறார். இயேசு இந்த உவமையை ஒலிவமலையில் தம் சீடர்களிடம் கூறினார்.
‘‘அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள், ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், “இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்” என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, “எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்” என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, “உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.
எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது” என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது” என்றார். எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது” என்பதோடு உவமையை முடித்து கொண்டார்.
இந்த உவமை அக்கால மக்களுக்கும் பொருந்தியது. இக்கால மக்களாகிய நமக்கும் பொருந்துகிறது.
இயேசு கூறிய இந்த உவமையின்படி நம்மில் நூற்றுக்கு ஐம்பது பேர் வெளிவேடக்காரராக திருச்சபையில் இருக்கிறோம் என்பதை அறியவேண்டும்.
திருச்சபையில் இருப்பதாலும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதாலும், நம்மை நேர்மையாளர் என்றும், மீட்கப்பட்டவர் என்றும் எண்ணுகிறோம். நம்பிக்கையுடன் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நிலைவாழ்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் நம்மில் பலர், தீர்ப்பு நாளை எண்ணி எந்தவித ஆயத்தமுமின்றி, அறிவிலிகளை போலவே இருக்கிறோம். குறிப்பாக நற்செய்தியைத் தவறாது கேட்டாலும், அதன்படி வாழாமல் வெளிவேடக்காரராக இருக்கிறோம்.
அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?
மணமகன் (இறைமகன்) எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நாம் விளக்குகளோடு (புண்ணியம்) தயாராக இருக்கிறோமா..? என்பதை சிந்தித்து பாருங்கள். முன்மதி உள்ளவர்களை போல, (புண்ணிய காரியங்களை) எண்ணெயை சேமித்து வைத்துக் கொள்வோம். ஏனெனில் உரிய நேரத்தில் (தீர்ப்பு நாளில்), உரிய பொருள் (நல்வினை) இல்லாவிட்டால், நம்மால் திருமண மண்டபத்திற்குள் (இறை ஆட்சிக்குள்) நுழைய முடியாது.
இப்போதே மனம் மாறி, இறையாட்சியை வெளிப்படுத்தும் ஒளிவீசும் விளக்குகளாகவும், உலகிற்கு உப்பாக இருப்பவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம்.
‘‘அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம். மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள், ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள், ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.
மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், “இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்” என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.
அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, “எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன. உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்” என்றார்கள். முன்மதி உடையவர்கள் மறுமொழியாக, “உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்.
எனவே வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வதுதான் நல்லது” என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
பிறகு மற்றத் தோழிகளும் வந்து, “ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனக்கு உங்களைத் தெரியாது” என்றார். எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது” என்பதோடு உவமையை முடித்து கொண்டார்.
இந்த உவமை அக்கால மக்களுக்கும் பொருந்தியது. இக்கால மக்களாகிய நமக்கும் பொருந்துகிறது.
இயேசு கூறிய இந்த உவமையின்படி நம்மில் நூற்றுக்கு ஐம்பது பேர் வெளிவேடக்காரராக திருச்சபையில் இருக்கிறோம் என்பதை அறியவேண்டும்.
திருச்சபையில் இருப்பதாலும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதாலும், நம்மை நேர்மையாளர் என்றும், மீட்கப்பட்டவர் என்றும் எண்ணுகிறோம். நம்பிக்கையுடன் இயேசுவின் இரண்டாம் வருகையையும், நிலைவாழ்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஆனால் நம்மில் பலர், தீர்ப்பு நாளை எண்ணி எந்தவித ஆயத்தமுமின்றி, அறிவிலிகளை போலவே இருக்கிறோம். குறிப்பாக நற்செய்தியைத் தவறாது கேட்டாலும், அதன்படி வாழாமல் வெளிவேடக்காரராக இருக்கிறோம்.
அன்பு, பரிவு, தாழ்மை போன்ற இறையாட்சியின் ஒளி அறிவிலிகளிடம் இல்லை. இதை உணர்வதற்குள், தீர்ப்பு நாளை சந்திக்க நேரிட்டால், என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்...?
மணமகன் (இறைமகன்) எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நாம் விளக்குகளோடு (புண்ணியம்) தயாராக இருக்கிறோமா..? என்பதை சிந்தித்து பாருங்கள். முன்மதி உள்ளவர்களை போல, (புண்ணிய காரியங்களை) எண்ணெயை சேமித்து வைத்துக் கொள்வோம். ஏனெனில் உரிய நேரத்தில் (தீர்ப்பு நாளில்), உரிய பொருள் (நல்வினை) இல்லாவிட்டால், நம்மால் திருமண மண்டபத்திற்குள் (இறை ஆட்சிக்குள்) நுழைய முடியாது.
இப்போதே மனம் மாறி, இறையாட்சியை வெளிப்படுத்தும் ஒளிவீசும் விளக்குகளாகவும், உலகிற்கு உப்பாக இருப்பவர்களாகவும் வாழ முயற்சி செய்வோம்.
3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது.
சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள திருத்தூதர் யூதா ததேயு திருத்தலத்தின் 44-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ராமாபுரத்தில் உள்ள கிறிஸ்து ஜோதி ஆலய பங்குத்தந்தை ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார்.
விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியும் நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது. 4-வது நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது.
அன்றைய நாளில் காலை திருப்பலியும், மாலை திருவிழா திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு புனித தோமையார் அகாடமி இயக்குனர் சி.பால்ராஜ் தலைமை தாங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மார்ட்டின் ஜோசப், திருத்தல ஆன்ம குரு ஐசக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியும் நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது. 4-வது நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது.
அன்றைய நாளில் காலை திருப்பலியும், மாலை திருவிழா திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு புனித தோமையார் அகாடமி இயக்குனர் சி.பால்ராஜ் தலைமை தாங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மார்ட்டின் ஜோசப், திருத்தல ஆன்ம குரு ஐசக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம்.
“உடைகளை அல்ல, இதயத்தை கிழித்துக் கொண்டு திரும்பி வாருங்கள்“ (யோவேல் 2:13)
உலகிலேயே மிகவும் நீளமான பயணம் என்பது மனிதன் தனக்குள் செல்கின்ற பயணமாகும். மனிதனின் சுய ஆய்வு பயணத்துக்கான காலமே, திருச்சபை வழங்கியுள்ள அருளின் காலமான இந்த தவக்காலம். கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மனமாற்றத்துக்கான காலமாக இதை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப்புதன் (சாம்பல் புதன்) அன்று தொடங்கி நாற்பது நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த காலம் நீண்ட நெடிய அர்த்தமுள்ள தயாரிப்பை, இறைவனை நோக்கிய பயணத்தை வலியுறுத்துகிறது.
திருவிவிலியத்தில் நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. (தொ.நூ 7:4) பின் மக்களினம் உருவானது. இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் (இ.ச 8:2) கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர். மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் தங்கியிருந்து (வி.ப 24:18) திருச்சட்டம் பெற்றார். இயேசு அலகையால் சோதிக்கப்படும் முன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத் 4:2). தவக்காலத்தின் நாற்பது நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று இறைவனின் கொடைகளையும், வரங்களையும் பெறும் காலமாகும்.
கிறிஸ்தவர்கள் சாம்பல் திலகமிட்டு தவக்காலத்தை தொடங்குகின்றனர். சாம்பல் என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மனமாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டுகிறது. தர்மம் செய்து பிறரன்பு செயலில் ஈடுபடுதல், வெளிவேடமற்ற இறை உறவுக்கு வழி வகுக்கும் செபம், பாவத்துக்காக மனம் வருந்தி மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கு முறைகள் ஆகும்.
மனிதனின் நிலையாமை, துன்பங்கள், பாவங்கள், கடவுளன்பு, மன்னிப்பு, செபம், நோன்பு பற்றி சிந்தித்து மனம்மாறி பாவக்கறைகளான “ பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்“ (கலாத்தியர் 5:19-21) வீண் பெறுமை, ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம். இயேசுவின் வழியில் சமூக அக்கறையோடு புதிய சமுதாயம் படைப்போம்.
இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.
விண்ணகத் தந்தையைப் போன்றே தாமும் வாழ்வின் ஊற்றாய் இருப்பதாக இயேசு கிறிஸ்து போதித்தார். தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.
வாழ்வின் தண்ணீர்
சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)
வாழ்வு தரும் உணவு
“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.
அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)
வாழ்வின் ஊற்று
“தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
வாழ்வின் தண்ணீர்
சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)
வாழ்வு தரும் உணவு
“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.
அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)
வாழ்வின் ஊற்று
“தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் மிஷனரி கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கியால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் முகாசபரூரின் வனப்பகுதியாக இருந்த கோணான்குப்பத்தில் அமைந்துள்ளது. இங்கே நிறைய மரங்கள் மற்றும் புதர்கள் இருந்ததால் மக்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பயன்படுத்தி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில், இத்தாலியப் பாதிரியார் மற்றும் மிஷனரி அருட்தந்தை பெஸ்கி, அவர் வேலை செய்யும் இடத்தில், அதாவது ஏலாக்குறிச்சி என்ற திருக்கோவிலூரில் (இப்போது கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ளது [சான்று தேவை]) வைக்க மரியாள் (இயேசுவின் தாய்) இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். தன்னுடைய இடத்திற்கு இந்தக் காடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் தன்னுடன் கொண்டு வந்த இரண்டு சிலைகளுடன் அவர் தூங்கி விட்டார்.
கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் புதரின் பின்னால் ஒரு சிலையினை மறைத்து வைத்து விட்டார்கள். அருட்தந்தை ஒரு சிலை காணாமற் போய்விட்டதென்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு வருத்தத்துடன் இருப்பிடம் வந்தடைந்தார். முகாசபரூரை சேர்ந்த கச்சிரயார் என்ற ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தார். ஒரு நாள் மரியாள் அவருடைய கனவில் தோன்றி "கச்சிரயார், நான் காட்டில் தனியாக இருக்கிறேன், நீ எனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டினால், உனக்கு ஒரு குழந்தையை வரமாகத் தருகிறேன்" என்றார்.
இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார். இதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், காட்டில் சிலையினை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர்கள் புதர்கள் மற்றும் மரங்களை வெட்டும் போது, ஒரு பெரிய புதருக்கு பின்னால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டி அங்கு இந்த சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.
சிறிது காலத்திற்குப் பிறகு அருட்தந்தை பெஸ்கி நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து கோணங்குப்பம் வந்தடைந்தார் அங்கு தொலைந்துபோன மேரி மாதா சிலைக்கு சிறிய தேவாலயம் கட்டப்பட்டு இருந்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் கோணான்குப்பமே தான் வேலை செய்யும் இடம் என்று முடிவு செய்தார். இன்று உள்ள ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். இதுவே அவர் கட்டிய முதல் வழிபாட்டுத் தலமாக இருந்தது. புதிய ஆலயத்தை கட்டி முடித்து அவர் சென்னை சென்று மணிலாவில் இருந்து ஒரு சிலை வாங்கி வருவதற்கு மைலாப்பூர் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கன்னி மாதா தனது கைகளில் குழந்தை இயேசுவை கைகளில் வைத்துள்ள ஒரு மாதிரி உருவத்தை உருவாக்கினார். படம் இறுதியில் வந்தடைந்து தேவாலயத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சபையின் மரியாதைக்குரிய விதமாக பெஸ்கி அவரது படைப்புகளில் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற தமிழ் கவிதைத் தேம்பாவணியை 1726 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1728 - 1729 ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய தமிழ் மாநாடு அவரது தமிழ்ப் பணிக்கு ஒப்புதல் அளித்து பொது நன்மைக்காக அது வெளியிடப்பட்டது.
அமைவிடம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோணான்குப்பம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், முகாசபரூருக்கு அருகிலுள்ளது.
17 ஆம் நூற்றாண்டில், இத்தாலியப் பாதிரியார் மற்றும் மிஷனரி அருட்தந்தை பெஸ்கி, அவர் வேலை செய்யும் இடத்தில், அதாவது ஏலாக்குறிச்சி என்ற திருக்கோவிலூரில் (இப்போது கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ளது [சான்று தேவை]) வைக்க மரியாள் (இயேசுவின் தாய்) இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். அவர் தமிழ்நாடு முழுவதும் பிரசங்கம் செய்து வந்தார். தன்னுடைய இடத்திற்கு இந்தக் காடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் போது களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் தன்னுடன் கொண்டு வந்த இரண்டு சிலைகளுடன் அவர் தூங்கி விட்டார்.
கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் புதரின் பின்னால் ஒரு சிலையினை மறைத்து வைத்து விட்டார்கள். அருட்தந்தை ஒரு சிலை காணாமற் போய்விட்டதென்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு வருத்தத்துடன் இருப்பிடம் வந்தடைந்தார். முகாசபரூரை சேர்ந்த கச்சிரயார் என்ற ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தை இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தார். ஒரு நாள் மரியாள் அவருடைய கனவில் தோன்றி "கச்சிரயார், நான் காட்டில் தனியாக இருக்கிறேன், நீ எனக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டினால், உனக்கு ஒரு குழந்தையை வரமாகத் தருகிறேன்" என்றார்.
இதைச் சொல்லிவிட்டு அவர் மறைந்துவிட்டார். இதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், காட்டில் சிலையினை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர்கள் புதர்கள் மற்றும் மரங்களை வெட்டும் போது, ஒரு பெரிய புதருக்கு பின்னால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிலை சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மக்கள் ஒரு சிறிய தேவாலயத்தை கட்டி அங்கு இந்த சிலையை வைத்து வழிபட தொடங்கினர்.
சிறிது காலத்திற்குப் பிறகு அருட்தந்தை பெஸ்கி நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்து கோணங்குப்பம் வந்தடைந்தார் அங்கு தொலைந்துபோன மேரி மாதா சிலைக்கு சிறிய தேவாலயம் கட்டப்பட்டு இருந்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் கோணான்குப்பமே தான் வேலை செய்யும் இடம் என்று முடிவு செய்தார். இன்று உள்ள ஆலயத்தை கச்சிராயரின் உதவியுடன் கட்டினார். இதுவே அவர் கட்டிய முதல் வழிபாட்டுத் தலமாக இருந்தது. புதிய ஆலயத்தை கட்டி முடித்து அவர் சென்னை சென்று மணிலாவில் இருந்து ஒரு சிலை வாங்கி வருவதற்கு மைலாப்பூர் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையில் கன்னி மாதா தனது கைகளில் குழந்தை இயேசுவை கைகளில் வைத்துள்ள ஒரு மாதிரி உருவத்தை உருவாக்கினார். படம் இறுதியில் வந்தடைந்து தேவாலயத்தில் அமைக்கப்பட்டு இன்றளவும் உள்ளது.
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலை மரத்தாலான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் வரையப்பட்ட 10 அடி (3.0 மீ) உயர சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்திருச்சபையின் மரியாதைக்குரிய விதமாக பெஸ்கி அவரது படைப்புகளில் மிகப்பெரிய மிகவும் புகழ்பெற்ற தமிழ் கவிதைத் தேம்பாவணியை 1726 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார். 1728 - 1729 ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய தமிழ் மாநாடு அவரது தமிழ்ப் பணிக்கு ஒப்புதல் அளித்து பொது நன்மைக்காக அது வெளியிடப்பட்டது.
அமைவிடம்
உளுந்தூர்பேட்டையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோணான்குப்பம் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம், முகாசபரூருக்கு அருகிலுள்ளது.
நற்செய்தியையும், உலக வாழ்வையும் கைக்குட்டையில் முடிந்துவைத்து வீணாக்கிய நமக்கு, தீர்ப்புநாளில் நிலைவாழ்வில் பங்கேற்கத் தகுதியில்லை என்பதை இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகிறார்.
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். வரும் வழிகளில் எல்லாம் நற்செய்தி அளித்துக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு, மக்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்.
“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவர, தொலைதூரத்தில் இருந்த நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்து பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.
வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன், நீர் வைக்காததை எடுக்கிறவர், நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார்.
அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன், வைக்காததை எடுக்கிறவன், விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.
பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் ஏற்கனவே பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள். அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார்” என்றதோடு அந்த உவமையை இயேசு முடித்தார்.
நற்செய்தியையும், உலக வாழ்வையும் கைக்குட்டையில் முடிந்துவைத்து வீணாக்கிய நமக்கு, தீர்ப்புநாளில் நிலைவாழ்வில் பங்கேற்கத் தகுதியில்லை என்பதை இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகிறார்.
நற்செய்தியை உள்வாங்கி தாழ்மையும், அன்பும், இரக்கமும் உள்ளவருக்கு தீர்ப்பு நாளில் மிகுதியாகவே கொடுக்கப்படும் என்பதும், அன்பும், முயற்சியும் இல்லாதவரிடமிருந்து, உள்ளதும் எடுக்கப்படும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.
“உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவர, தொலைதூரத்தில் இருந்த நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்து பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, ‘இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை’ என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.
முதலாம் பணியாளர் வந்து, ‘ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன்’ என்றார். அதற்கு அவர் அவரிடம், ‘நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ‘ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன்’ என்றார். அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.
வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன், நீர் வைக்காததை எடுக்கிறவர், நீர் விதைக்காததை அறுக்கிறவர்’ என்றார்.
அதற்கு அவர் அவரிடம், ‘பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன், வைக்காததை எடுக்கிறவன், விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக்கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே’ என்றார்.
பின்பு அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் ஏற்கனவே பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள். அவரோ, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதாரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். மேலும் அவர், ‘நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக்கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார்” என்றதோடு அந்த உவமையை இயேசு முடித்தார்.
நற்செய்தியையும், உலக வாழ்வையும் கைக்குட்டையில் முடிந்துவைத்து வீணாக்கிய நமக்கு, தீர்ப்புநாளில் நிலைவாழ்வில் பங்கேற்கத் தகுதியில்லை என்பதை இந்த உவமை வழியாக இயேசு உணர்த்துகிறார்.
நற்செய்தியை உள்வாங்கி தாழ்மையும், அன்பும், இரக்கமும் உள்ளவருக்கு தீர்ப்பு நாளில் மிகுதியாகவே கொடுக்கப்படும் என்பதும், அன்பும், முயற்சியும் இல்லாதவரிடமிருந்து, உள்ளதும் எடுக்கப்படும் என்பதை இந்த உவமை விளக்குகிறது.






