என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாணுவம்பேட்டையில் உள்ள யூதா ததேயு ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்26 Oct 2021 3:25 AM GMT (Updated: 26 Oct 2021 3:25 AM GMT)
3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது.
சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள திருத்தூதர் யூதா ததேயு திருத்தலத்தின் 44-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ராமாபுரத்தில் உள்ள கிறிஸ்து ஜோதி ஆலய பங்குத்தந்தை ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார்.
விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியும் நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது. 4-வது நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது.
அன்றைய நாளில் காலை திருப்பலியும், மாலை திருவிழா திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு புனித தோமையார் அகாடமி இயக்குனர் சி.பால்ராஜ் தலைமை தாங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மார்ட்டின் ஜோசப், திருத்தல ஆன்ம குரு ஐசக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியும் நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது. 4-வது நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது.
அன்றைய நாளில் காலை திருப்பலியும், மாலை திருவிழா திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு புனித தோமையார் அகாடமி இயக்குனர் சி.பால்ராஜ் தலைமை தாங்குகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மார்ட்டின் ஜோசப், திருத்தல ஆன்ம குரு ஐசக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X