search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christ The King"

    • 19-ந்தேதி இரவு தேர் பவனி நடக்கிறது.
    • 20-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    மதுரை விளாங்குடி செங்கோல் நகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பங்குகளை சேர்ந்த பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி சனிக்கிழமை இரவு திருவிழா சிறப்புத் திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடக்கிறது. மறுநாள்(20-ந்தேதி) காலை நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனையடுத்து அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருளானந்தம் தலைமையில் உதவி பங்குத்தந்தை பென்சிகர், பங்குப்பேரவையினர் செய்துள்ளனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 13-ந் தேதி முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது.

    ஆசாரிபள்ளம் அருகே உள்ள சடையால்புதூர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். ஜோசப் பள்ளி தாளாளர் அருட்பணியாளர் கிளேட்டன் தலைமை தாங்கி கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். சரல் பங்குதந்தை சிபி மறையுரையாற்றுகிறார்.

    நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். தாளையாங்கோணம் பங்குத்தந்தை ஜான் தாமஸ்க் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    13-ந் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறுகிறது. இதில் முட்டம் வட்டார முதல்வர் ரூபஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சுரேஷ் மறையுரை ஆற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    19-ந் தேதி காலை 10 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு அன்பின் விருந்தும் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி காலை 8.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் எட்வின் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அம்புரோஸ் மறையுரையாற்றுகிறார்.

    20-ந் தேதி மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோஸ் ஜே பெஸ்கி, பங்கு பேரவை உதவி தலைவர் ஜெஸ்டின், செயலாளர் விக்சன், இணை செயலாளர் ரெட்லின் சோபா, பொருளாளர் ஜோசப் ராஜ் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

    • நாளை தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 19-ந்தேதி கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு முட்டம் வட்டார முதல்வர் ஜான்ரூபஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். கன்னியாகுமரி வட்டார முதல்வர் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 13-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. கிறிஸ்துநகர் குருக்கள் இல்ல அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். இளைஞர் பணிக்குழு இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

    விழாவில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு பார்வதிபுரம் பங்குதந்தை அருள் தலைமை தாங்கி திருமுழுக்கு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட கத்தோலிக்க திருமண நீதிமன்ற நீதிபதி அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கி கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி, கொடியிறக்கம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோனி ஜெரோம், இணை பங்குதந்தை ஜேக்கப் ஆஸ்லின், பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவின் இறுதி நாளான நேற்று சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறைமாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று காலையில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அவரும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

    இரவில் நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள்சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ், பிரான்சீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது.
    நாமக்கல்- திருச்சி சாலையில் கிறிஸ்து அரசர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்து அரசர் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. இறுதி நாளான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றி, புதுநன்மை உறுதிபூசல் வழங்குகிறார். அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மறைவட்ட குருக்கள் அருள் சுந்தர் தலைமையில் திருவிழா திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேவாலய வளாகத்திற்குள் கிறிஸ்து அரசர் தேர்பவனியும் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.
    நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா வருகிற 21-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை டோணி ஜெரோம், இணை பங்குதந்தை மைக்கேல் ஐன்ஸ்டீன், பங்கு பேரவை துணைத்தலைவர் டென்னிஸ் பிராங்ளின், செயலாளர் சார்லெட் மேரி, துணை செயலாளர் சகாய ஞானதிரவியம், பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ் ஆகியோர் வழிகாட்டுதலில் பங்குபேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
    நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் கிறிஸ்துநகரில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு முன்னோர்கள் நன்றி திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறை மாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்குகிறார். புதுக்குடியிருப்பு பங்கு அருட்பணியாளர் ஜெயசந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார்.

    14-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலையில் நடைபெறும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்குகிறார். எட்டாமடை பங்கு அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    இதேபோல் விழா நாட்களில் தினமும் திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    20-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு பார்வதிபுரம் பங்கு அருட்பணியாளர் அருள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு நடைபெறும் குணமளிக்கும் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருட்பணியாளர் ஆரோக்கிய ரமேஷ் தலைமை தாங்குகிறார். இளங்கடை பங்கு அருட்பணியாளர் ஜோஸ் ஜே.பெஸ்க் மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5.45 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    21-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா பரவல் விதிமுறையை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் டோனி ஜெரோம், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் ஐன்ஸ்டீன், அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.
    திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்காக கலிலேயாவிற்கு வந்தார். அங்கு கலிலேயா கடலோரமாகச் சென்றபோது சீமோன் பேதுருவையும், அவர் சகோதரனான அந்திரேயாவையும் கண்டார்.

    இருவரும் மீனவர்கள். இவர்கள் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் வலைகளை வீசிக்கொண்டிருந்த பொழுது, இறைமகன் இயேசு அவர்களைப் பார்த்து, ‘என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ என்றார்.

    உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

    பின்னர், சிறிது தூரம் போகவே யாக்கோபையும், அவர் சகோதரனான யோவானையும் கண்டார். இருவரும் செபதேயுவின் குமாரர்கள். இவர்களும் மீனவர்கள். இவர்கள் மீன்பிடிக்கப் போகிறதற்கு ஆயத்தமாக படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆண்டவர் இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தகப்பன் செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

    முதல் சீடர்களை அழைத்தல்

    நற்செய்தி மறைபரப்பு பணியின் வழியாக இறையரசின் வருகையைக் குறித்து இறைமகன் இயேசு மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இறையரசைப் பற்றிய அறைகூவலுக்குப் பின்பு, தன்னைப் பின்பற்ற அழைப்பு விடுவிக்கிறார். இது நற்செய்தியின் முக்கிய பாகம் சீடத்துவம் என்பதை வெளிப் படுத்துகிறது.

    கலிலேயாக் கடல் என்பது சிலரால் ஏரி என அழைக்கப்படுகிறது. ஆனால், பாலஸ்தீன கிறிஸ்தவ மரபில் கடல் என உள்ளதால் மாற்கு நற்செய்தியாளரும் அதனையேப் பின்பற்றினார்.

    இறைமகன் இயேசு சீடர்களை அழைத்த வரலாற்றைப் பார்க்கையில் அழைக்கப்பட்டவர்கள் ஆண்டவருக்கு முன்பின் அறிமுகமற்றவர்கள் போல் தோன்றுகிறது. இது இயேசுவுக்கு மனிதர் மேல் இருந்த அளவற்ற அதிகாரம் எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதே இப்பகுதியின் சிறப்பாகும்.

    என் பின்னே வாருங்கள்

    மீன் பிடிக்கிறவர்கள் மனிதரைப் பிடிக்கிறவர்களாகும்படி அழைக்கப்படுகின்றனர். ‘பின்னே வாருங்கள்’ என்பது சீடத்துவத்தின் முக்கியத் தொடர் ஆகும்.

    யூத ரபிமார்கள் தங்களது சீடர்கள் பின்வர அழைப்பு விடுத்தனர். இது இந்திய சமயங்களிலுள்ள குரு, சீடர் உறவினைக் குறிக்கும். திருச்சபையின் ஆரம்பம் இதுவே.

    ‘மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்’ (எரேமியா 16:16) என்ற தொடரை பழைய ஏற்பாட்டிலும் காணலாம். சீடர்களின் வாழ்வில் ஏற்படும் மனந் திரும்புதலை இப்பகுதி சித்தரிப்பதாகும்.

    பேதுரு, அந்திரேயா இருவரும் தனது சொந்த வருமானம் தரும் பணியினை விட்டுவிட்டு குருவாகிய இயேசு தரும் பணியினை மேற்கொள்கின்றனர்.

    யோவான், யாக்கோபு இருவரும் பேதுரு, அந்திரேயாவை விட அதிகமான செல்வம் உடையவர்கள் போல் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் மட்டுமல்ல, கூலியாள்களோடு தங்களுடைய தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர் (மாற்கு1:20).

    இதன் மூலம் சீடர்கள் வேறுபாடின்றி அனைவரும் இயேசுவைப் பின்பற்றுவதில் வெளிப்படுத்திய தியாகத்தைக் காணலாம்.

    பின்பற்றுதலின் முறைகள்

    1. சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றுதல்: தம்மிடம் வந்த மக்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்’ (லூக்கா 9:23) என்கிறார்.

    2. உைடமைகளை பகிர்ந்துவிட்டு பின்பற்றுதல்: ஆண்டவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான இளைஞரிடம் இயேசு, ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார் (மத்தேயு 19:21).

    3. உடனடியாகப் பின்பற்றுதல்: இறைமகன் இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்களிடம் இயேசு, ‘என்னைப் பின்பற்றி வாரும்’ என்கிறார். ‘என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’ என அனுமதி கேட்டவரிடம் இயேசு, ‘கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல’ என்கிறார் (லூக்கா 9:62).

    பின்பற்றுதலின் ஆசிகள்

    ‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?’, என்று கேட்ட சீடர்களிடம் ஆண்டவர் இயேசு, ‘புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்தவருக்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாய் உங்களுக்கு சொல்லுகிறேன்’ என்றார் (மத்தேயு 19:27,28).

    கடவுளைப் பின்பற்றுவோம்

    மனிதனின் வாழ்க்கைத்தரமும், வசதி வாய்ப்புகளும் உயர உயர சுயநலமும், ஆடம்பரத்தின் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பணம், பதவி, பொருள் அனைத்தும் மனித வாழ்விற்கு அவசியமானதே.

    ஆனால், இவை யாவும் நம்மிடம் நிலைப்பதில்லை. இவைகளை கடவுளுக்கு மேலாகக் கருதுவதும், இந்த ஆசைகளை விட்டுவிட முடியாமல் இறுகப் பற்றிப்பிடித்துப் பின்பற்றுவதும் நமக்கு கடவுள் அருளிய ஆசீர்வாத வாழ்வை கேள்விக்குறியாக்கி விடும்.

    கடவுளோடு இணைந்த வாழ்வு வாழ முற்படுவோம். தன்னலம் துறந்தவர்களாய், எதையும் இழக்கத் துணிந்தவர்களாய், காரணங்கள் கூறி காலந்தாழ்த்தாமல் கடவுளைப் பின்பற்றுவோம்.

    ‘நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப் போல் ஆகுங்கள்’ (எபேசியர் 5:1).

    அருட்பணி.ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது.
    1. அன்பு

    ‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள், சிந்தனைகள் எல்லாமே அன்பு எனும் அச்சாணியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய அன்பு நமக்குள் பிறக்க வேண்டும்.

    2. பணிவு

    கால்நடைகளுக்கான ஒரு மரத் தீவனத் தொட்டியில் பிறந்து, மரங்களோடு வாழும் ஒரு தச்சனாக வளர்ந்து, சிலுவை மரத்தின் உச்சியில் உயிரை விட்டு, பணிவை தனது வாழ்வால் விளக்கியவர் இயேசு. பசியோடும், சோர்வோடும் வாழ்ந்தாலும் பணிவோடும், துணிவோடும் வாழத் தவறவில்லை. கொலைக்களத்தில் துணிச்சலாய் பேசிய இயேசு, சீடர்களின் கால்களைக் கழுவும் அன்பினைக் கொண்டிருந்தார். தனது கால்களைப் பிறர் கழுவுவதில் அல்ல, பிறருடைய கால்களை தான் கழுவுவது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்த்தினார். அத்தகைய பணிவு நமக்குள் பிறக்க வேண்டும்.

    3. உண்மைத்தன்மை

    பாவிகளை அரவணைத்த இயேசு, புனிதர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டவர்களைப் புறக் கணித்தார். விபசாரியைக் கூட மன்னித்து அன்பால் அறிவுரை சொன்னவர், தலைவர்களை நோக்கி ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே…’ என கர்ஜித்தார்.

    உண்மைத் தன்மையை இயேசு நேசித்தார். ‘நான் பாவி’ என வருபவர்களை எப்போதும் அவர் புறம்பே தள்ளவில்லை. ‘நான் சுத்தமானவன்’ எனும் கர்வத்தோடு வருபவர்களை நிராகரிக்கத் தயங்கவும் இல்லை. இயலாமைகளை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் உண்மைத்தன்மை நமக்குள் பிறக்க வேண்டும்.

    4. உறுதி

    லட்சியத்தில் உறுதியாய் இருப்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கை போதிக்கிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுவதே அவரது மனித வடிவின் நோக்கம். அந்த நிலையிலிருந்து இம்மியளவும் அவர் விலகவில்லை. மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார்.

    தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.

    5. ஜெபம்

    இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது.

    கர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம்! சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.
    நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து, திருப்பலி நிறைவேற்றுகிறார். 17-ந் தேதி மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நடைபெறும்.

    18-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல்திருவிருந்து திருப்பலியில் முதன்மை அருட்பணியாளர் கிலாரியஸ் தலைமை தாங்குகிறார். மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 24-ந் தேதி காலை 6 மணி மற்றும் 10 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் அமிர்தராஜ் தலைமையில் திருப்பலியும், காலை 7.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஆங்கிலத்திலும், 11 மணிக்கு மலையாளத்திலும் திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருள் ஆனந்த், துண பங்குதந்தை இன்பன்ட் ராஜ் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர் செய்து வருகிறார்கள்.
    ×