என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். ஆனால் இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீர் என்று திருமணம் செய்தார்.
இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காகசமீபத்தில் நடிகர் விஜய்காந்தை சந்தித்து அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.











