என் மலர்
இது புதுசு
ஹோண்டா நிறுவனத்தின் 2021 ஹெச்ஆர் வி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை ஹெச்ஆர் வி மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்தது. புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மூன்றாம் தலைமுறை மாடல் முந்தைய வெர்ஷன்களை விட அளவில் பெரியதாக உள்ளன.
புதிய காரின் வெளிப்புறம் ஒற்றை நிறத்தால் ஆன ஹெக்சகன் வடிவ முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. முன்புற பம்ப்பரின் கீழ் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. காரின் பக்கவாட்டில் குறைந்தளவு டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

2021 ஹெச்ஆர் வி மாடலில் 5-ஸ்போக் அலாய் வீல், பிளார்டு வீல் ஆர்ச்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், டூயல்-டோன் பம்ப்பர் இடம்பெற்றுள்ளன. உள்புறம் பிளாக் நிற தீம், புளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்கான் கண்ட்ரோல்கள் உள்ளன.
புதிய ஹெச்ஆர் வி மாடல் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய ஹோண்டா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், அறிமுகமானால் இந்த மாடல் கியா செட்லோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து வாகன மென்பொருள் உருவாக்க புது கூட்டணி அமைத்துள்ளன.
போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்த வாகனங்களுக்கான மென்பொருள் பிளாட்பார்மை உருவாக்க இருப்பதாக அறிவித்து உள்ளன. தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பங்கள் துறையில் களமிறங்க இருப்பதை ஒட்டி போஷ் புதிய கூட்டணியை அமைக்கிறது.
கிளவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மென்பொருள் வாகனங்களின் கண்டோரல் யூனிட் மற்றும் கணினிகளுக்கு மென்பொருள் கிடைக்க செய்யும் என போஷ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸ்யூர் மற்றும் போஷ் நிறுவனத்தின் சாப்ட்வேர் மாட்யூல்களை சார்ந்து உருவாகிறது.
இரு நிறுவனங்கள் இணைந்து தற்போதைய மென்பொருளை பயன்படுத்தி சொந்தமாக மென்பொருள் அப்டேட்களை வழங்க இருக்கின்றன. கடந்த வாரம் போக்ஸ்வேகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்து மென்பொருள் சேவைகளை உருவாக்க இருப்பதாக அறிவித்தது.
மெக்லாரன் நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெக்லாரன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்டுரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-என்ஜின்டு பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.
புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 577 பிஹெச்பி பவர், 584 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 94 பிஹெச்பி பவர், 225 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

அந்த வகையில் மெக்லாரன் அர்டுரா மாடல் 671 பிஹெச்பி பவர், 804 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது.
பேட்டரியை பொருத்தவரை 2021 மெக்லாரன் அர்டுரா மாடலில் 7.4 kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி காரினை எலெக்ட்ரிக் மோடில் 30 கிலோமீட்டர்களை பயணிக்க செய்கிறது. இந்த மோடில் கார் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும்.
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் சர்வதேச வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலை மார்ச் 18 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய குஷக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய குஷக் மாடல் போக்ஸ்வேகன் குழுமத்தின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இவோ பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம் என தெரிகிறது. குஷக் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB AO-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்கோடா கார் பட்டாம்பூச்சி வடிவ கிரில், எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், பாக் லைட்கள், ஸ்கிட் பிளேட், டைமண்ட் கட் அலாய் வீல், ரூப் ரெயில் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சி கிளாஸ் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சி கிளாஸ் மாடலை பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய சி கிளாஸ் மாடல் MRA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடலில் ஒற்றை ஸ்லாட் கிரில், எல்இடி லைட்டிங், செனான் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறது. பின்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுவித டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன.

சமீபத்திய இ கிளாஸ் வரிசையில் புதிய சி கிளாஸ் மாடலிலும் இரண்டாம் தலைமுறை MBUX வழங்கப்படுகிறது. இது சென்டர் கன்சோலில் பொருத்தப்படுகிறது. இந்த மாடலின் கேபின் சமீபத்திய பென்ஸ் செடான் மாடல்களில் உள்ளதை போன்றே உருவாக்கப்படுகிறது.
புதிய மாடலின் இதர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். புதிய சி கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.
போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ டர்போ எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் டர்போ எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய டர்போ எடிஷன் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
விலையை பொருத்தவரை போலோ டர்போ எடிஷன் மாடல் ரூ. 6.99 லட்சம் என்றும் வென்டோ டர்போ எடிஷன் மாடல் ரூ. 8.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய டர்போ எடிஷன் மாடல் கம்பர்ட்லைன் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாற்றங்களை பொருத்தவரை புது வேரியண்ட்டில் ஏராளமான காஸ்மெடக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கிளாஸி பிளாக் ஸ்பாயிலர், ORVM கேப்கள், பென்டர் பேட்ஜ் மற்றும் ஸ்போர்ட் சீட் கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டர்போ எடிஷன் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான போலோ இரண்டு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின் - 76 பிஹெச்பிஸ 95 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் டாப் எண்ட் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 110 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. வென்டோ மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்ப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் கார் மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல் எம்340ஐ என அழைக்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மாடல் மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 368 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது ஆகும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். புது பிஎம்டபிள்யூ காரில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லைட்கள், குரோம் ஸ்டட் செய்யப்பட்ட கிரில், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது.
உள்புறம் 2021 பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஐடிரைவ் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், 3 சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் சத்தமின்றி இந்திய சந்தையில் ஸ்கார்பியோ எஸ்யுவி-யின் பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கார்பியோ வேரியண்ட் எஸ்3 பிளஸ் ஆகும். இது முந்தைய என்ட்ரி லெவல் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 11.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எஸ்5 மாடலை விட ரூ. 68 ஆயிரம் குறைவு ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேஸ் மாடலில் எஸ்5 வேரியண்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
எனினும், சைடு-ஸ்டெப், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், வினைல் சீட், பம்ப்பரில் பாடி கிளாடிங் உள்ளிட்டவை புது வேரியண்ட்டில் இடம்பெறவில்லை. புதிய மாடலில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீரிங், மேனுவல் HVAC, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜாவா நிறுவனத்தின் 2021 பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஜாவா பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில்அறிமுகம் செய்தது. 2021 ஜாவா பார்டி டூ மாடல் விலை ரூ. 1.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு புது அம்சங்கள், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு மூன்று புதிய நிறங்களில் வழங்கப்படுகிறது.
2021 ஜாவா பார்டி டூ மாடல் சிரியஸ் வைட், ஆல் ஸ்டார் பிளாக் மற்றும் ஒரியன் ரெட் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பியூவல் டேன்க் மீது ரேசிங் ஸ்டிரைப்களுடன் 42 எண் மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

2021 ஜாவா பார்டி டூ மாடலில் புதிய விண்ட்ஷீல்டு, பார் எண்ட் மிரர், சவுகரியான சீட், புது வடிவமைப்பு கொண்ட ஸ்டான்டு, அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்லேம்ப் கிரில், பிளை ஸ்கிரீன் உள்ளிட்டவை அக்சஸரீயாக வழங்கப்படுகிறது.
இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடலிலும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே 293சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு பிஎஸ்6 ரக யூனிட் ஆகும். இந்த என்ஜின் 26 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.01 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் 2021 ஹிமாலயன் மாடல் மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அந்நிறுவனத்தின் வலைதளத்திலும் மேற்கொள்ள முடியும்.
2021 ஹிமாலயன் மாடலின் வினியோகம் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேம்பட்ட சீட்கள், நீண்ட தூர பயணத்தின் போது அதிக சவுகரியம் வழங்க ஏதுவான மாற்றங்களை கொண்டிருக்கின்றன.

காஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.
2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் விலை ரூ. 11.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிரையம்ப் நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர்-டூரர் மாடல் ஆகும்.
டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் கிராபைட் / டையபில் ரெட் மற்றும் கிராபைட் / கேஸ்பியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஷீல்டு, ப்யூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட் மற்றும் எல்இடி லைட்கள் டைகர் 900 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் 888சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது டைகர் 900 மாடலை விட 10 பிஹெச்பி மற்றும் 5 என்எம் குறைவு ஆகும்.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவித்து இருக்கிறது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து உள்ளது. அதன்படி 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் பிப்ரவரி 11 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
முன்னதாக இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்ததை குறிக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு மற்றும் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இன்றி, வெளிப்புறங்களில் சிறு மாறுதல்கள் செய்யப்படும் என தெரிகிறது. அதன்படி முன்புறம் பியூவல் டேன்க் மீது இருக்கும் மெட்டல் பிரேம் அளவில் சிறியதாகவும், சற்று முன்புறம் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்ட்-ஸ்கிரீன் சற்று உயரமாகவும், அகலமாகவும் உள்ளது.
காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய மாடல் கிரானைட் கிரே மற்றும் பைன் கிரீன் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர் SOHC ஏர் கூல்டு பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இது 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.






