என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அடுத்த மாதம் இந்தியா வரும் புது பிஎம்டபிள்யூ கார்
Byமாலை மலர்15 Feb 2021 7:43 AM GMT (Updated: 15 Feb 2021 9:08 AM GMT)
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் கார் மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல் எம்340ஐ என அழைக்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மாடல் மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 368 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது ஆகும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். புது பிஎம்டபிள்யூ காரில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லைட்கள், குரோம் ஸ்டட் செய்யப்பட்ட கிரில், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது.
உள்புறம் 2021 பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஐடிரைவ் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், 3 சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X