என் மலர்tooltip icon

    கார்

    • நிசான் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X டெரியில் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது கார்கள் பற்றிய தகவல்களை நிசான் வெளியிட்டு உள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம்- நிசான் ஜூக், நிசான் கஷ்கெய் மற்றும் நிசான் X டிரெயில் என மூன்று சர்வதேச மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இவற்றில் இரு மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என நிசான் அறிவித்து இருக்கிறது. இவை இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல்களாக இருக்குமா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் ரி-எண்ட்ரி கொடுக்கும் நிசான் X டிரெயில் பல்வேறு விஷயங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய X டிரெயில் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிட முடியும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹைப்ரிட் வெர்ஷன் "இ-பவர்" என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இதில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் இயங்கும் போது, வீல்களில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்யப்படும். முன்புற வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

    இதன் முன்புற வீல் டிரைவ் மாடல் 201 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 210 ஹெச்பி பவர், 525 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடலில் வி மோஷன் முன்புற கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிசான் X டிரெயில் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் இருவித இருக்கை அமைப்புகளுடன் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு காரின் சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய சிஎன்ஜி கார் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 95 ஆயிரம் வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிஎன்ஜி காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இம்முறை எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் LXi மற்றும் VXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி விலை அதன் ஸ்டாடர்டு மாடல் விலை ரூ. 95 ஆயிரம் அதிகம் ஆகும். இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகம் செய்து இருக்கும் பத்தாவது சிஎன்ஜி மாடலாக எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அமைந்துள்ளது.

    இந்த மாடலில் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 32.73 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய சிஎன்ஜி காரில் சிஎன்ஜி டேன்க் மட்டுமின்றி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் சஸ்பென்ஷன் செட்டப் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV கார் இந்திய முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.
    • புதிய டியாகோ EV மாடல் முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் எனும் துவக்க விலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சலுகை 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாள் முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக பலர் குற்றம்சாட்டினர். எனினும், முதல் நாளில் புதிய டியாகோ EV காரை வாங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.

    • சீன எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • புதிய பிஒய்டி அட்டோ 3 முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பிஒய்டி ஐந்து கதவுகள் கொண்ட அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை இந்தியாவில் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. இந்த முடிவுகள் வலதுபுறம் மற்றும் இடதுபுற டிரைவ் கொண்ட இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    குளோபல் என்கேப் போன்றே யூரோ என்கேப் அட்டோ 3 காரின் பேஸ் வேரியண்டை சோதனை செய்தது. இந்த காரில் ஏழு ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ஐசோபிக்ஸ் ஆன்க்கர், ADAS அம்சங்களான ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து அம்சங்களும் இந்திய மாடலிலும் உள்ளது.

    பெரியவர்கள் பயணிக்கும் பிரிவில் அட்டோ 3 மாடல் 91 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த கார் 38-இல் 34.7 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த கார் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பக்கவாட்டு டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை அட்டோ 3 பெற்றுள்ளது.

    குழந்தைகள் பயணிக்கும் போது எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அனைத்து விட டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஆறு வயது முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் என கிராஷ் டெஸ்டிங்கில் உறுதியாகி இருக்கிறது. இந்த கார் 49-க்கு 44 புள்ளிகளை பெற்றுள்ளது.

    • லெக்சஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ES300h மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • முன்னதாக 2020 வாக்கில் லெக்சஸ் ES சீரிஸ் இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

    லெக்சஸ் இந்தியா நிறுவனம் மேட்-இன்-இந்தியா ES300h மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் ES300h விலை ரூ. 59 லட்சத்து 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 ஆண்டு லெக்சஸ் நிறுவனம் ES சீரிஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. அந்த வகையில் புதிய ES300h லெக்சஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நான்கவாது மாடலாக அமைந்துள்ளது.

    மேட்-இன்-இந்தியா லெக்சஸ் ES300h மாடல்- எக்ஸ்குசிட் மற்றும் லக்சரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. புது மாடலில் அதநவீன டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, குரல் மூலம் அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ES மாடலின் செண்டர் கன்சோல் ரி-டிசைன் செய்யப்பட்டு கூடுதலாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய லெக்சஸ் ES300h மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 88 கிலோவாட், 202 நியூட்டன் மீட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 ஹெச்பி பவர், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் இணைந்து 215 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் ES300h லக்சரி வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பேஸ் வேரியண்டை விட ரூ. 6 லட்சம் வரை விலை அதிகம் ஆகும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV கார் இந்திய முன்பதிவு நேற்று துவங்கியது.
    • முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக பலர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய டியாகோ EV கார் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் நேற்று துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், முதல் நாளில் புதிய டியாகோ EV காரை வாங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.

    புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.

    டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புதிய டாடா எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலினை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.

    டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் மற்றும் வினியோக விவரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ளது.

    அந்த வகையில் டாடா டியாகோ EV மாடலின் டெஸ்ட் டிரைவ் டிசம்பர் மாத இறுதியில் துவங்குகிறது. டெஸ்ட் டிரைவை தொடர்ந்து வினியோகம் 2023 ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை முதலில் வாங்கும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    புதிய டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா டியாகோ EV காரில் சிப்டிரான் பிராண்டெட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை ஆறு நொடிகளுக்குள் எட்டிவிடும். இத்துடன் இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் 24 கிலோவாட் ஹவர் மற்றும் 19.2 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 61 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 71 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    பெரிய பேட்டரி கொண்ட டியாகோ எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும். சிறிய பேட்டரி கொண்ட கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.3 கிலோவாட் ஏசி மற்றும் 7.2 கிலோவாட் ஏசி ஹோம் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய XUV300 டர்போஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய டர்போஸ்போர்ட் மாடல் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய XUV300 T-GDi வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV300 T-GDi விலை ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் XUV300 ஸ்போர்ட்ஸ் பெயரில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய XUV300 T-GDi மாடலில் 1.2 லிட்டர் எம்ஸ்டேலியன் T-GDi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே காரின் ஸ்டாண்டர்டு டர்போ வேரியண்ட் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    வெளிப்புறம் XUV300 T-GDi மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பிளேசிங் பிரான்ஸ், பியல் வைட் மற்றும் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் T-GDi லோகோ மற்றும் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் மஹிந்திராவின் புதிய ட்வின்-பீக் லோகோ வழங்கப்பட்டு உள்ளது.

    காரின் உள்புறம் ஆல்-பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவரில் லெதர் ராப் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பெடல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய XUV300 T-GDi மாடல் ஹூண்டாய் வென்யூ N லைன் மற்றும் கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.

    விலை விவரங்கள்:

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W6 ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 DT ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) ரூ. 12 லட்சத்து 75 ஆயிரம்

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) DT ரூ. 12 லட்சத்து 90 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • அக்டோபர் மாதத்தில் போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் தள்ளுபடி மற்றும் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன. இரு கார்களில் போக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி பேஸ் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், 1.5 லிட்டர் GT DSG வேரியண்டிற்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. டைகுன் 1.5 லிட்டர் GT மேனுவல் ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் இரண்டு டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை வாங்குவோர் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இதன் டாப்லைன் வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 57 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா எஸ்யுவி மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பே புதிய கிராண்ட் விட்டாரா மாடலை வாங்க 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.

    இதன் காரணமாக புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலை வாங்க அதிகபட்சமாக எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் வாங்குவோர் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். புதிய கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவற்றில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் மட்டும் டொயோட்டா நிறுவனம் உருவாக்கியது ஆகும்.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103 பிஎஸ் பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு அதிகபட்சம் 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

    கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    ×