என் மலர்
கார்
- டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களில் கிடைக்கிறது.
- X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் டிஃபென்டர் வி8 கார் சந்தையில் அறிமுகமானது.
2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 இன்ஜினை மீண்டும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் டிஃபென்டர் வரிசையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களிலும் X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த காரின் என்ஜின் 426 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
டிஃபென்டர் வி8 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை:
1. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.39 கோடி
2. டிஃபென்டர் 90 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.42 கோடி
3. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.49 கோடி
4. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.54 கோடி
5. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.64 கோடி
- கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல் வெளியானது.
- ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனை.
ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.
இதுதவிர கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா பன்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2024 ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலும், நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது.
2024 இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் டாப் 5 பட்டியல்:
டாடா பன்ச்: எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்படும் டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 02 ஆயிரத்து 030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மாருதி சுசுகி வேகன் ஆர்: மாருதியின் ஹேச்பேக் மாடலான வேகன் ஆர் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 855 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி எர்டிகா: இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா: மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
- 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள்.
உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும் போது, வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், பல்வேறு முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களில் அறிமுகம் செய்து வருகின்றன.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் எலெக்ட்ரிக், டாடா பன்ச் எலெக்ட்ரிக், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6E, XEV 9e, எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் வின்ட்சர், கியா நிறுவனத்தின் EV9 உள்பட பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யபபட்டுள்ளன. இவைதவிர ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தை 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்து 1.94 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.5 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது, நாட்டின் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை 7.46 சதவீதமாக உயர்த்தியது. இது 2023 ஆம் ஆண்டு 6.39 சதவீதமாக இருந்தது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வரும் போதிலும், பெட்ரோல் வாகனங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. இந்த ஆண்டு விற்பனையான ஒட்டுமொத்த (26.04 மில்லியன்) வாகனஹ்களில் 73.69 சதவீதம் (19.18 மில்லியன்) யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும்.
இதில் 10.5 சதவீதம் (2.62 மில்லியன்) யூனிட்கள் டீசல் மாடல்கள், 9.87 சதவீதம் பெட்ரோல்- சி.என்.ஜி., ஹைப்ரிட் மாடல்கள் ஆகும். 2024 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் வாகனத்திற்கு இணையாக 12.43 பெட்ரோல்-சி.என்.ஜி, ஹைப்ரிட், டீசல் மாடல்கள் அடங்கும்.

மாதாந்திர விற்பனை:
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முறையே 1,45,064 மற்றும் 1,41,740 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மார்ச் மாதத்தில் 2,13,068 யூனிட்களாக அதிகரித்தது. பிறகு ஏப்ரல், மே மாதங்களில் குறைந்து 1,15,898 மற்றும் 1,40,659 யூனிட்களாக இருந்தது. ஜூன் மாதத்தில் 1,40,137 யூனிட்கள் விற்பனையானது.
2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையானது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2,19,482 யூனிட்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிக வாகனங்கள் விற்பனையா மாதமாக அமைந்தது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 1,92,575 மற்றும் 1,32,302 யூனிட்களாக சரிந்தது.
எனினும், இந்த ஆண்டு முழுக்க ஒவ்வொரு மாதமும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறைந்தபட்சம் ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது.

மத்திய அரசு திட்டம்:
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்து ஃபேம் 2 திட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,15,898 யூனிட்களாக சரிந்தது.
இதன் பிறகு, பண்டிகை காலம் மற்றும் பிரதமரின் இ-டிரைவ் திட்டம் காரணமாக மீண்டும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து சாதனை படைத்தது. நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள காலக்கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தியாளர்கள் சமீப காலங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய மாடல்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பை ஒட்டி வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
- அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட்.
- இந்த கார் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆண்டு துவக்கமே, கார் மாடல்கள் விலை ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், அதன்பிறகு முன்னணி கார் பிராண்டுகள் புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தன.
பதிய கார் மாடல்களில் சில கார்கள் ஏற்கனவே செய்யப்பட்ட மாடல்களின் வருடாந்திர அப்டேட் செய்யப்பட்டவைகளாக இருந்தன. சில மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. எதுவாயினும், இந்த ஆண்டு அறிமுகமானதில், பிரபல கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
கியா கார்னிவல்:
கியா இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த காரில் ஏராளமான மாற்றங்களுடன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

நிசான் மேகனைட்:
இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட். இந்த மாடலின் புது வெர்ஷனும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா கைலக்:
இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலாக கைலக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் ஸ்கோடா கைலக் மாடல் வெளியிடப்பட்டது.
கியா EV9:
கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக EV9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸி டிசைன் கொண்டிருக்கும் கியா EV9 ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

டாடா கர்வ்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மாடலின் ஐ.சி. எஞ்சின் வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்:
இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV 3XO அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய கேபின் டிசைன் கொண்டிருக்கும் XUV 3XO இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களை புதிய மஹிந்திரா XUV 3XO கொண்டுள்ளது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்:
2024 மாருதி சுசுகி டிசையர் மாடல் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி ரூ. 10.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது.
- சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வருகின்றன.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறவுள்ளது.
நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையின் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
- காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.
மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை நேற்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் தொடங்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிறுவனம் இதனை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த மின்சார எஸ்யூவி வரவிருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா EV உடன் போட்டியிடும்.
நிறுவனத்தின் தாய் நிறுவனமான Suzuki Motor Corporation, இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற மோட்டார் ஷோவான EICMA-2024 இல் உலகளாவிய சந்தையில் இதை வெளிப்படுத்தியது. e-Vitara என்று அழைக்கப்படும், இது நடுத்தர அளவிலான மின்சார SUV EVX இன் production version ஆகும், இது முதலில் Auto Expo-2023ல் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் Global Mobility Show-2025இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த மின்சார எஸ்யூவியின் உற்பத்தி பிப்ரவரி-2025 முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும். இது ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இ-விட்டாரா ஒய்-வடிவ LED ஹெட்லேம்ப்கள், இணைக்கப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் தடிமனான பின்புற பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்னர், சார்ஜிங் போர்ட் முன் இடது ஃபெண்டரில் வைக்கப்படுகிறது. பின்புற கதவு கைப்பிடிகள் சி-பில்லரில் அமைந்துள்ளன.
மேலும், இ-விட்டாராவில் இரட்டை டேஷ்போர்டு திரைகள், வயர்லெஸ் சார்ஜர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காற்றோட்டமான முன் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் பேக் செய்யப்பட்ட கேபின் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
49kWh பேட்டரி பேக் கொண்ட இ-விட்டாரா காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். காரின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
- பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.
- இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனை.
மாருதி சுசுகி நிறுவனம் தனது Fronx மாடல் காரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த கார் உள்நாடு மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் Fronx மற்றம் பிரெஸ்ஸா மாடல்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியுள்ளது.
இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற Fronx மாடல் கடந்த அக்டோபர் மாதம் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜப்பான் நாட்டில் அமோக வரவேற்பை பெற்றது. ஒரு மாதத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த கார் ஒன்பது மடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த மாதம் இந்த காரின் ஏற்றுமதி மட்டும் 11.49 சதவீதமாக இருந்தது. உள்நாட்டிலும் இந்த கார் புதிய சாதனை படைத்துள்ளது. அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை Fronx பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்களில் இரண்டாவது இடம் பிடித்தது.
இந்தியாவில் மட்டும் இந்த கார் 16 ஆயிரத்து 419 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஏற்றுமதியில் 15 சதவீத பங்குகளுக்கும் அதிகமாக பெற்று அசத்தியது.
- மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
- ஆல்டோ K10 விலை ரூ. 3.99 லட்சம் விலையில் துவங்குகிறது.
ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ஹூணடாய் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் வரிசையில், மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகம் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு துவங்கி மாருதி சுசுகி கார்களின் விலை உயர்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.
இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் ஆல்டோ K10 மாடல் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் விலையில் துவங்குகிறது. இத்துடன் இந்த நிறுவனத்தின் இன்விக்டோ மாடலின் விலை ரூ. 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- நிசான் நிறுவனத்தின் பெரும் பகுதியை ரெனால்ட் கொண்டுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்ற பெயரால் அறியப்படுகிறது. 1999-ம் ஆண்டு பிரான்சு நாட்டு கார் உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது.
இந்த நிலையில், 14 மாதங்கள் வரை நிறுவனத்தை நடத்துவதற்கு நிதி உள்ள நிலையில், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த முதலீட்டாளர்களுக்கு நிசான் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நிசான் விடுத்த அழைப்புக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எந்த கார் நிறுவனமும் முன்வராது என்று கூறியுள்ளார்.
நிசானில் நீண்டகாலமாக பங்குகளை வைத்திருந்த ரெனால்ட் அதன் பங்குகளை விற்பனை செய்வதால் நிசானுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- புதிய எலெக்ட்ரிக் கார் லெவல் 2 ADAS சூட் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XEV 9e எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. XUV700 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கூப் மாலின் விலை இந்தியாவில் ரூ. 21.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய XEV 9e எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுடன் BE 6e மாடலையும் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. XEV 9e மாடலில் முக்கோண வடிவம் கொண்ட ஹெட்லைட் மற்றும் ப்ரொஜெக்டர் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் எல்.இ.டி. லைட் பார்கள் உள்ளன. இத்துடன் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், இன்டகிரேட்டெட் ஸ்பாயிலர், கனெக்டெட் டெயில் லேம்ப் செட்டப், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா XEV 9e மாடலில் ஸ்டீரிங் வீல், பானரோமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS சூட், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 3 ஸ்கிரீன்கள் கொண்ட டேஷ்போர்டு, புதிய கியர் லீவர் மற்றும் சுழலும் வகையிலான டயல் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆட்டோ பார்க் வசதி, வயர்லெஸ் மொபைல் ப்ரோஜெக்ஷன் வசதி, ஏழு ஏர்பேக், 65 வாட் டைப் சி சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய XEV 9e மாடல் 59 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 228 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 656 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த காரை 140 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 20 நிமிடங்களில் 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.
- உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
- இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி சீனாவில் தனது லோகோவை மாற்றி இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் முந்தைய லோகோ நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். உலகளவில் இந்த லோகோ மிகவும் பிரபலமான ஒன்று.
இந்த நிலையில் சீன சந்தையில் மட்டும் லோகோவை மாற்றுவது என ஆடி நிறுவனம் எடுத்துள்ள முடிவு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் வளையங்கள் அடங்கிய லோகோ பயன்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்திய ஆட்டோ நிகழ்வில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்திய இ கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்பேக் மாடலில் இந்த லோகோ இடம்பெறாமல் இருந்தது.
கான்செப்ட் வாகனத்தின் முகப்பில் ஆடி (AUDI) என்ற வார்த்தை மட்டும் இடம்பெற்று இருந்தது. முன்னதாக மற்றொரு உலகின் முன்னணி ஆடம்பர கார் விற்பனையாளரான ஜாகுவார் தனது லோகோவை மாற்றிய நிலையில், தற்போது ஆடி நிறுவனமும் தனது லோகோவை மாற்றி இருக்கிறது.
சீன ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC உடனான ஒப்பந்தத்தின் கீழ் ஆடி தனது லோகோவை மாற்றியுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை கவர இலக்கு நிர்ணயித்துள்ளன.
- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா, லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது.
அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்தனர். இந்த மாத தொடக்கத்தில், ஓலா எலெக்ட்ரிக் அதன் இரண்டாவது காலாண்டில் ரூ.495 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.524 கோடியாக இருந்தது. ஆனால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அது ரூ.347 கோடியில் இருந்து விரிவடைந்தது.
ஓலா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களின் புகார்கள் குவிந்ததால், அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புகார்கள் சரி செய்யப்பட்டதாகவும், அதன் விற்பனை மற்றும் இணைந்த சேவை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நிறுவனத்தின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.






