என் மலர்
பைக்
- ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- டியோ புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் உள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் பிரபல டியோ ஸ்கூட்டரின் முற்றிலும் புதிய வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வெர்ஷன் ஹோண்டா டியோ H ஸ்மார்ட் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 77 ஆயிரத்து 712, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டியோ வெர்ஷனில் H ஸ்மார்ட் அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி டியோ ஸ்கூட்டரின் புது வெர்ஷனில் கீலெஸ் இக்னிஷன் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக இதே ஆப்ஷன்கள் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

ஹோண்டா டியோ H ஸ்மார்ட் வெர்ஷனின் விலை அதன் OBD 2 அப்டேட் செய்யப்பட்ட மாடலை விட ரூ. 3 ஆயிரத்து 500 வரை அதிகம் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ OBD 2 வெர்ஷனும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஹோண்டா டியோ மாடல்- ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் சற்றே குறைந்த விலை கொண்டிருக்கிறது. இதில் ஹாலோஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் பிளாக்டு-அவுட் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது.
டீலக்ஸ் வேரியண்டில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புறம் ஃபியூவல் ஃபில்லர் கேப், தங்க நிறம் கொண்ட அலாய் வீல்கள், 3-ஸ்டெப் இகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய மாற்றங்கள் காரணமாக ஹோண்டா டியோ விற்பனை மெட்ரோ மற்றும் கிராம புறங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
- எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்களின் என்ஜினிலும் வால்வு செட்டப் மாற்றப்பட்டது.
- பிரேக்கிங்கிற்கு புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலுக்கான டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் இந்தியாவில் ஜூன் 14 ஆம் தேதி அறிமும் செய்யப்பட இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வீடியோவில் புதிய பைக்கின் முக்கிய அப்டேட்கள் தெரியவந்துள்ளது.
டீசர் வீடியோவின் படி புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T மாடல்களின் என்ஜினிலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வால்வு செட்டப்-ஐ மாற்றி இருந்தது. இதேபோன்ற அப்டேட் 160R 4V மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போதைய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 15 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பிரேக்கிங்கிற்கு புதிய எக்ஸ்டிரீம் 160R மாடலில் பெட்டல் டைப் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மற்றும் பஜாஜ் பல்சர் NS160 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
- நாடு முழுக்க 40 முதல் 50 நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய சிம்பில் எனர்ஜி இலக்கு.
பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம், சிம்பில் ஒன் மாடலின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆகஸ்டு 2021 வாக்கில் துவங்கியது. எனினும், பல்வேறு காரணங்களால் இதன் வெளியீடு மற்றும் வினியோகம் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
பல்வேறு தடைகளை கடந்து சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு கட்டங்களில் வினியோகம் செய்யப்படும் என சிம்பில் எனர்ஜி நிறுவனம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில், தற்போது பெங்களூருவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த 12 மாதங்களுக்குள் நாடு முழுக்க 40 முதல் 50 நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய சிம்பில் எனர்ஜி நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து நிறங்களின் விலையும் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் , எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், 750 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வேரியண்டை தேர்வு செய்யும் போது கூடுதலாக ரூ. 13 ஆயிரம் செலுத்த வேண்டும்.
- புதிய ஹீரோ HF டீலக்ஸ் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் ஏர் கூல்டு, 97சிசி, சிங்கில் சிலிண்டர் ஸ்லோபர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எண்ட்ரி லெவல் 100சிசி மாடல், HF டீலக்ஸ்-ஐ அப்டேட் செய்து இருக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 60 ஆயிரத்து 760 என்று துவங்குகிறது. புதிய ஹீரோ HF டீலக்ஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 67 ஆயிரத்து 208 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2023 ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் டியூப்லெஸ் டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் i3s (ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம்) வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த பைக்குடன் ஐந்து ஆண்டுகள் வாரண்டி மற்றும் ஐந்து இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.

ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் ஏர் கூல்டு, 97சிசி, சிங்கில் சிலிண்டர் ஸ்லோபர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் OBD 2 மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் டபுல் கிராடில் ஃபிரேமில் வைக்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் 2 ஸ்டெப் அ்ட்ஜஸ்ட் செய்க்கூடிய டுவின் ஷாக் அப்சார்பர் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 9.6 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹீரோ HF டீலக்ஸ் மாடல்- டிரம், கிக் ஸ்டார்ட் மற்றும் டிரம் செல்ஃப் ஸ்டார்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 60 ஆயிரத்து 760, ரூ. 67 ஆயிரத்து 208, ரூ. 64 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- 2024 கேடிஎம் 390 டியூக் மாடல் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
- இந்த பிரிவில் ஏராளமான முதல்முறை அம்சங்களுடன் புதிய டியூக் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
2024 கேடிஎம் 390 டியூக் மாடலின் டெஸ்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய கேடிஎம் 390 டியூக் மாடலின் வெளியீட்டு தேதி பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் டியூக் சீரிசின் 30 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு கேடிஎம் டியூக் 620 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கேடிஎம் வழக்கப்படி, அடுத்த தலைமுறை 390 டியூக் மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 2023 EICMA விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, 2024 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் தான் 2024 கேடிஎம் 390 டியூக் மாடல் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதன்படி இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதனிடையே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது பஜாஜ்-டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவான மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்த தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடலில் மேம்பட்ட மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின், பெரும்பாலும் இது 399சிசி-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த என்ஜின் அதிக திறன் மற்றும் லோ-எண்ட் டார்க் வெளிப்படுத்தும். இதன் காரணமாக இந்த பைக் நகர போக்குவரத்து நெரிசல்களில் பயன்படுத்த சிறப்பானதாக இருக்கும். இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் பட்சத்தில், இது இந்த பிரிவில் ஏராளமான முதல்முறை அம்சங்கள் மற்றும் எலெக்ட்ரிக் ரைடர் ஏய்டுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கேடிஎம் 390 டியூக் மாடலில் ரைடு-பை-வயர் திராட்டில், டூயல் சேனல் சூப்பர் மோட்டோஸ் ஏபிஎஸ், கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, குயிக் ஷிஃப்டர் மற்றும் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி 2024 கேடிஎம் 390 டியூக் மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், IMU சார்ந்த லீன்-சென்சிடிவ் கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் ரைடிங் மோட் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஹார்டுவேரை பொருத்தவரை யுஎஸ்பி முன்புற ஃபோர்க்குகள், ரிபவுண்ட் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
- ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும்.
- தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய 450S மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களை விட குறைந்த விலை வேரியண்ட் ஆகும். புதிய மாடல் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 115 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. எனினும், இது ஏத்தர் 450X மாடலில் இருப்பதை விட அளவில் சிறியதாகவே இருக்கும் என்று தெரிகிறது. தோற்றத்தில் புதிய ஏத்தர் 450S மாடல் ஏத்தர் 450X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் வழக்கமான 125சிசி பெட்ரோல் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய ஏத்தர் 450S மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஃபேம் 2 திட்ட பலன்களை சேர்த்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏத்தர் 450S மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. இதன் வினியோகம் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.
- கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்தது.
- புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலிலும் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலின் லோ-சீட்-ஹைட் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு தான், கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மாடலில் லோ-சீட்-ஹைட் வேரியண்டை அறிமுகம் செய்து இருந்தது. தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடலின் சீட் உயரம் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். தற்போதைய 250 அட்வென்ச்சர் மாடல் லோ-சீட்-ஹைட் வேரியண்டில் 834 மில்லிமீட்டராக உள்ளது.

இதுதவிர புதிய மாடலின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 249சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 29.6 ஹெச்பி பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லைட், எல்இடி இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன.
சஸ்பென்ஷனுக்கு இந்த மாடலில் 43mm அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேகிங்கிற்கு முன்புறம் 320mm சிங்கில் டிஸ்க், பின்புறம் 230mm சிங்கில் டிஸ்க் வழங்கப்படுகிறது. இத்துடன் டியுபுலர் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்படுகிறது.
- எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை.
- டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை மாறி இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்டம் நேற்றுடன் ரத்தாகி விட்டது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது. அதன்படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
தற்போதைய விலை உயர்வில் எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் ஒலா S1 மாடல் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 3 கிலோவாட் ஹவர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

இது அதன் முந்தைய வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுவும் அதன் முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். எண்ட்ரி லெவல் ஒலா S1 ஏர் மாடலின் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறி உள்ளது.
முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், பெட்ரோல் மோட்டார்சைக்கிள் குறித்து நகைச்சுவையாக மீம் போடுவோருக்கு ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுபற்றிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.
- ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
- மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்று இருக்கிறது. புதிய ஸ்கூட்டர்கள் டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என்று அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வினியோக துறை சார்ந்த பணிகளுக்கானவை ஆகும்.
புதிய டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பிரத்யேக தோற்றம் கொண்டிருக்கின்றன. இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் போஷ் நிறுவனத்தின் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சமாகவே 25 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும்.
மிக குறைந்த வேகத்தில் செல்லும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இவற்றுக்கு சாலை வரியும் செலுத்த வேண்டாம். ஹோண்டா டேக்ஸ் e: மாடலில் ஹை-சீட் ஹேண்டில்பார், வட்ட வடிவம் கொண்ட ஒற்றை ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், முன்புறம் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், டியூபுலர் ஸ்பைன், ஒற்றை சீட் மற்றும் பேட்டரி பேக் உள்ளது.
ஹோண்டா ஜூமர் e: மாடலில் சற்றே தடிமனாக காட்சியளிக்கும் வெளிப்புற ஃபிரேம், வட்ட வடிவிலான இரண்டு ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், டூயல் சைடு ரியர் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எனினும், ஹோண்டா டேக்ஸ் e: மற்றும் ஜூமர் e: மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 வாக்கில் ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350.
- ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் இந்தியாவில் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றி இருக்கிறது. இதில் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கிளாசிக் 350 மாடல் இடம்பெற்று இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 080 என்று மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விலை விவரங்கள்:
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரெடிட்ச் ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்து 092
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 191
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஹல்சியான் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 094
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 852
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 டார்க் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்து 285
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 க்ரோம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 755
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விலை தவிர இந்த மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பல்பு-டைப் பைலட் லேம்ப்கள், வளைவான ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ரக சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகின்றன.
இதில் உள்ள 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
- இந்தியாவில் தற்போது ஹோண்டா டியோ மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புதிய டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- ஆக்டிவா, ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடலாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட்ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிலாஷ் செய்யும். இத்துடன் ஸ்மார்ட்ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார், ஃபியூவல் ஃபில்லர் கேப் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்யும்.

ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும். இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் சார்பில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
- ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் ஜூன் 1 ஆம் தேதி முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை உயர்த்தப்பட இருப்பது உறுதியாகி விட்டது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு FAME-II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில், இதுவரை ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரி-க்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 10 ஆயிரமாக குறைக்கப்படுவதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்த மானிய தொகை 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இது 40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபேம் 2 திட்டத்திற்காக அரசாங்கம் அறிவித்து இருந்த ரூ. 2 ஆயிரம் கோடி தொகை கிட்டத்தட்ட முழுமையாக பயன்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உடனடியாக மானியத்தை ரத்து செய்வது சந்தையில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ. 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது வாகன உற்பத்தியாளர்கள் மானியத் தொகையை பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 1500 கோடி நிதி ஆகஸ்ட் மாத வாக்கில் காலாவதியாகும் என்று கூறப்படுகிறது.






