என் மலர்
பைக்
- ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
- ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.
பெங்களூரை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் இ.வி. ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 16-ம் தேதி துவங்கியது. இதில் பயனர்கள் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.
இதில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகளுக்கு பேட்டரி வாரண்டி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலை வாங்குவோருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டியும், S1 ஏர் மாடலை வாங்கும் போது 50 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய பெட்ரோல் இருசக்கர வாகனத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் பெற முடியும்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு மாத தவணை முறை சலுகைகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவைதவிர முன்பணம் இன்றி, சேவை கட்டணங்கள் இன்றி, 5.99 சதவீத வட்டியில் நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பரிந்துரை செய்து ஒலா கேர் பிளஸ் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். புதிய திட்டத்தின் கீழ் பயனர்கள் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
இந்திய சந்தையில் ஒலா நிறுவனம் தற்போது S1X, S1 ஏர், S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் S1 ப்ரோ ஜென் 2 மாடலின் வினியோகத்தை சமீபத்தில் துவங்கியது.
- டெயில் பகுதியில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டியூக் 790 மாடலில் LC8c என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். நிறுவனம் 2024 790 டியூக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டியூக் 790 மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டியூக் 790 மாடல் அதன் செயல்திறன் மற்றும் அசத்தலான தோற்றத்திற்காக அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது.
2024 மாடலில் கே.டி.எம். நிறுவனம் டியூக் 790 மோட்டார்சைக்கிளை கிரே மற்றும் ஆரஞ்சு என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஃபியூவல் டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயில் பகுதியில் புதிய கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய டியூக் 790 மாடலில் LC8c என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 87 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 43mm யு.எஸ்.டி. பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் உள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 300mm டுவின் டிஸ்க்குகள், பின்புறம் 240mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நான்கு ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கிரம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்து 996, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 போன்றே ஸ்கிராம்ப்ளர் 400X மாடலும் இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலின் டிசைன் ஸ்பீடு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடலிலும் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள், ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் உயரமான ஸ்டான்ஸ், ஹெட்லைட் கிரில், ஸ்ப்லிட் சீட், ஹேண்டில்பார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X மாடலில் 399சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.5 ஹெச்.பி. பவர், 37.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. லைட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனை பொருத்தவரை யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் வழங்கப்பட்டு உள்ளது.
- ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது.
- இந்த மாடலில் ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வசதி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது ஹைனெஸ் CB350 மோட்டார்சைக்கிளின் லெகசி எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய லெகசி எடிஷன் மாடல் பியல் சைரென் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் ஃபியூவல் டேன்க் மீது பிரமாண்ட கிராஃபிக்ஸ் மற்றும் லெகசி எடிஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் வட்ட வடிவிலான டிசைன், க்ரோம் அம்சங்கள் உள்ளது.

இத்துடன் செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ஆப்ஷனல் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிராடிள் ஃபிரேம், 19-18 இன்ச் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 15 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மாடல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா ஸ்டாண்டர்டு, பெனலி இம்பீரியல் 400 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது.
- பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் விற்பனையில் இருந்து வந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மிகவும் பிரபல ஸ்கூட்டர் பிராண்டு, சன்னி-யை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக தெரிகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப்ரோடோடைப் மாடல் பூனே அருகில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
புகைப்படங்களின் படி பஜாஜ் நிறுவனம் சன்னி ஸ்கூட்டரை எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கி இருப்பதாக தெரிகிறது. டெஸ்டிங் செய்யப்படும் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மற்றும் பாடி பேனல்கள் சன்னி ஸ்கூட்டரை போன்றே காட்சியளிக்கின்றன.

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் சன்னி 60சிசி 2-ஸ்டிரோக் ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வந்தது. தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி பஜாஜ் நிறுவனம் புதிய சன்னி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிகிறது. தற்போதைய தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.
Photo Courtesy: Autocarindia
- எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.
- சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையை உயர்த்தியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முறை ஹீரோ இருசக்கர வாகனங்கள் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வில் ஸ்பிலெண்டர் மற்றும் பேஷன் உள்ளிட்டவைகளின் விலை குறைந்த அளவிலேயே உயரும் என்று கூறப்படுகிறது. மாறாக எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையில் ரூ. 7 ஆயிரத்தை உயர்த்தியது. அந்த வகையில், தற்போதைய விலை உயர்வில் இந்த மாடல் சேர்க்கப்படாது என்று கூறப்படுகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகப்படுத்தி வருகின்றன.
விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விற்பனையை அதிகப்படுத்தும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பர் என்று தெரிகிறது.
- பஜாஜ் பல்சர் N150 மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.
- பல்சர் N150 மாடல் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் N150 மாடல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மூன்றாவது 150சிசி பைக் ஆகும். இதுதவிர பஜாஜ் பல்சர் P150 மற்றும் பல்சர் 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
பல்சர் N150 மாடலின் தோற்றம் N160 மாடலில் உள்ளதை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர், இரண்டு எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்.சி.டி. செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பல்சர் மாடலில் 149.6 சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் உள்ளது. இந்த என்ஜின் 14.5 ஹெச்.பி. பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 260mm டிஸ்க், பின்புறம் 130mm டிஸ்க் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 134, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பஜாஜ் பல்சர் N150 மாடல் ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N150 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 160 4V, சுசுகி ஜிக்சர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட் உள்ளது.
- இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கரிஸ்மா XMR விலையை உயர்த்துகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் கரிஸ்மா XMR விலை ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா XMR அடுத்த மாதம் முதல் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
- நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரென்டல்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 25 நகரங்கள் மற்றும் 45 மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 300-க்கும் அதிக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்த முடியும்.

"உண்மையான மோட்டார்சைக்கிள் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற எங்களின் எண்ணத்தை நிறைவேற்றியதில் எங்களது மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். எங்களது முயற்சிகளுடன், இவர்கள் எங்களது மோட்டார்சைக்கிள்களை நீண்டதூரம் பயணிக்க செய்துள்ளனர்," என்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த பிராண்டு அலுவலர் மோஹித் தார் ஜெயல் தெரிவித்து இருக்கிறார்.
"ராயல் என்ஃபீல்டு ரென்டல்ஸ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் மோட்டார்சைக்கிளை வாடக்கைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதோடு மோட்டார்சைக்கிள் வாடகை நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி வரும் சேவையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரவித்தார்.
- 2023 ஹோண்டா CB200X மாடல் புதிய நிறங்களில் கிடைக்கிறது.
- புதிய ஹோண்டா CB200X மாடலில் 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB200X மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 CB200X மாடல் தற்போது OBD-2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி 2023 ஹோண்டா CB200X மாடலின் தோற்றம் மற்றும் டிசைன் 2022 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி இந்த மாடல் மஸ்குலர் தோற்றம், சிங்கில்-பீஸ் ஹெட்லைட், பிகினி ஃபேரிங், ஸ்மோக்டு வைசர், ஸ்ப்லிட் சீட் செட்டப், 2-பீஸ் கிராப் ரெயில், நியூட்ரல் ரைடர் டிரை-ஆங்கில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

டிசைன் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்ற போதிலும், 2023 ஹோண்டா CB200X மாடல் புதிதாக டிசெண்ட் புளூ மெட்டாலிக் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் OBD-2 விதிகளுக்கு பொருந்தும், 184.4சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஃபியூவல் லெவல், நேரம் மற்றும் பல்வேறு விவரங்கள் காண்பிக்கப்படுகிறது.
புதிய CB200X மாடலில் ஹோண்டா நிறுவனம் யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகளையும், மோனோஷாக் யூனிட்டையும் வழங்கி இருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள், ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய 2023 ஹோண்டா CB200X மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 999. எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- குறைப்புக்கு என்ன காரணம் என்று ஹோண்டா தெரிவிக்கவில்லை.
- ஏற்கனவே இதேபோன்ற விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2023 CB300F மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 56 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது.
முன்னதாக இந்த மாடலின் டீலக்ஸ் மற்றும் டீலக்ஸ் ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போதைய விலை குறைப்புக்கு என்ன காரணம் என்று ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இது மோட்டார்சைக்கிள் விற்பனையை அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

முன்னதாக ஹோண்டா நிறுவனம் CB300F மாடல் விலையை ரூ. 50 ஆயிரம் வரை குறைத்து இருந்தது. எனினும், குறுகிய கால சலுகையாகவே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை மேலும் குறைந்து இருக்கிறது. 2023 ஹோண்டா CB300F மாடலில் OBD-II A விதிகளுக்கு பொருந்தும் வகையிலான என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்த மாடலில் 293.52சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.13 ஹெச்.பி. பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
- டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த மற்றும் புதிய நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலை அபாச்சி RTR310 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் அபாச்சி RR310 மோட்டார்சைக்கிளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட்கள், கூர்மையான ஃபியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், இரட்டை பீஸ் இருக்கைகள், உயர்த்தப்பட்ட டெயில் பகுதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் எக்சாஸ்ட் அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒற்றை பீஸ் டியுபுலர் ஹேண்டில்பார் மற்றும் ரியர் செட் ஃபூட்பெக்குகள் உள்ளன.

அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 35 ஹெச்.பி. பவர், 28.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.
புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் ரிவைஸ்டு ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்.இ.டி. லைட்கள் தவிர இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் டி.எஃப்.டி. ஸ்கிரீன் மற்றும் கனெக்ட் கோ ப்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட், 6-ஆக்சிஸ் IMU யூனிட், கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கே.டி.எம். டியூக் 390, பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் கே.டி.எம். 250 டியூக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






