என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    யோகமான நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்களின் கூட்டு முயற்சி வெற்றியடைய வழிகாட்டுவர். கல்யாண வாய்ப்பு கைகூடும். வருமானம் உயரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். நேற்று தடைபட்ட காரியம் இன்று முடிவடையும். உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.

    கன்னி

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    யோகமான நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர்.

    கடகம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் அலைபேசி மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடியும்.

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவிரயம் உண்டு.

    மேஷம்

    இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவில் தடை உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடந்தது.
    • இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியதாவது:

    இது நீண்ட நெடிய பயணமாக இருந்தது. 2024 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்த பயணம் தொடங்கியது. ஜெய்ஷா, ரோகித் சர்மா ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கினார்கள். அவர்கள் அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

    இரண்டு ஆண்டாக நாங்கள் கடுமையாக உழைத்து தற்போது உலகக் கோப்பையை மீண்டும் வென்றுள்ளோம்.

    நான் ஒவ்வொரு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். வீரர்கள் என்ன செய்வார்கள், அவர்களுடைய திறமை என்ன என்று எனக்கு நன்றாக தெரியும்.

    எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர் இருக்கின்றார்கள். சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். அதுவும் இறுதிப்போட்டியில் ரன்கள் சேர்த்திருப்பது உண்மையிலே ஸ்பெஷலான ஒரு விஷயம்.

    பும்ரா ஒரு தலைமுறையின் கிடைக்கும் ஒரு வீரர். நான் எப்போதுமே அவரை இந்த தேசத்தின் சொத்து என்று தான் கூறுவேன். முக்கியமான ஆட்டங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். எப்படி அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் அவர் கைதேர்ந்தவர்.

    எங்கள் அணியில் இரண்டு உலகின் நம்பர் ஒன் வீரர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்றாலே நிச்சயம் சாதிக்க முடியும். இதுதான் என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என தெரிவித்தார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, நெதர்லாந்தின் டேவிட் பை-பிரான்சின் பேப்ரிஸ் மார்டின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-1, 6-3 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரது மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு ஆவார் என கூறப்பட்டது.

    டெஹ்ரான்:

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, அங்கு புதிய உச்சபட்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது. இதில் காமேனியின் மகன் முஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது.

    இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ×