வக்பு சட்டத்திருத்தம்: நீதிக்கு கிடைத்த வெற்றி- த.வெ.க. தலைவர் விஜய்
- வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
- தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.
நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.