பீகாரில் பேசிய கருத்தை, தமிழ்நாட்டில் பேச முடியுமா? தைரியம் இருக்கிறதா? - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு என்ற பெயரில் தீய செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.
- பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
தருமபுரி:
தருமபுரி தி.மு.க. எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் அவர் பேசுகையில்,
* S.I.R. என்ற பெயரில் வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் விவகாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
* பீகாரில் S.I.R. கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது தமிழகம் தான்.
* முக்கியமான தீர்மானம் ஒன்றையும் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.
* தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என கட்சிகள் வலியுறுத்திள்ளன.
* உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் தந்திர முயற்சி மேற்கொள்கிறது.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு என்ற பெயரில் தீய செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது.
* அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
* பா.ஜ.க.வுக்கு பயந்து S.I.R. நடைமுறையை எடப்பாடி பழனிசாமி எதிர்க்க மறுத்து இரட்டை வேடம் போடுகிறார்.
* பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிசாமி என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
* பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி பேச முடியுமா? தைரியம் இருக்கிறதா?
* வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு எதிராக பீகாரில் பிரதமர் தனது பேச்சின் மூலம் வன்மத்தை காட்டியுள்ளார்.
* தமிழகத்தில் தி.மு.க.வின் 2.0 ஆட்சி அமைந்தது என்பது தான் தேர்தல் முடிவு வெளியாகும் நாளின் தலைப்புச் செய்தி என்றார்.