தமிழ்நாடு செய்திகள்

ஜல்லிக்கட்டு காளையை அடக்கிய சின்ன பையன்... விஜய் கூறிய குட்டி ஸ்டோரி

Published On 2026-02-23 12:55 IST   |   Update On 2026-02-23 12:55:00 IST
  • ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.
  • என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.

வேலூர்:

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் மத்தியில் விஜய் ' எங்கள் ஓட்டு... எங்கள் உரிமை...' 'எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்...' 'எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது' என்ற உறுதிமொழியை ஏற்று ஒரு குட்டி கதையுடன் ஆரம்பிக்கலாமா என்று பேசத்தொடங்கினார்.

அந்த கதையில், ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜங்ஷனில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஏரியாவில் அதன் நடுவில் ஜல்லிக்கட்டு காளை நின்னுக்கிட்டு இருக்கு. அதன் பக்கத்திலே யாராலயும் போக முடியல. அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஊர்ல இருக்குற ஒரு சில பேருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். ஆனா அவங்க யாரும் இல்லை. அந்த காளையை அடங்கினவங்களோட இருந்த ஒரு சில பேர் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்க பாக்காத காளையா, நாங்க பாக்காத மாடா... என்று சொல்லி காளையை அடக்கப்போறாங்க. ஒருத்தராலையும் அடக்க முடியல. எல்லாரையும் அடிச்சி வீசிட்டுச்சு. அந்த நேரத்தில் கூட்டத்தைய விலக்கிவிட்டு ஒரு சின்ன பையன் ஒரு எண்ட்ரி கொடுக்கறான்.

அப்போ அங்கிருந்தவர்கள், எங்களாலையே முடியல, எங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்கு, நாங்களே அடிப்பட்டு இருக்கிறோம். நீ போய் என்னத்த கிழிக்கப்போற, அந்தப்பையன், இந்தப்பையன் என ஏளனமாப் பேசுறது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம் பரிதாப்பட்டு பேசுறாங்க. அந்த சின்ன பையன் எதையும் காதில் போட்டுக்காமல் இரண்டு கைகளும் பாக்கெட்டில் போட்டு உள்ளே போறான். ஒரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு இருக்கு, மற்றொரு அடி எடுத்து வைக்கிறான் அந்த காளை சீறிக்கிட்டு முன்னாடி வருது. அந்நேரம் அங்கு கூடியிருந்த மக்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க.. இன்னொரு அடி எடுத்து வைக்கும் போது காளை முட்ட வரும்போது பாக்கெட்டுக்குள் மறைச்சு வைச்சிருந்த இரண்டு புல்லுக்கட்டை எடுத்து காளைக்கிட்ட காட்டுறான். காளை சட்டென மாறி அந்த புல்லை சாப்பிட ஆரம்பித்துச்சிடுச்சு.

அப்போ அந்த சின்ன பையன் காளையை தடவ காளை சின்னக்குழந்தை மாதிரி அந்த சின்ன பையனுடன் நடந்து வருது. அருகில் இருந்த வயல்வெளியில் அந்த காளையை மேய விட்டுட்டு வரான். மக்கள் எல்லோரும் அந்த பையன ஆச்சரியமாக பார்க்குறாங்க. அந்த அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிங்க தலையை தொங்கப்போட்டு நிக்குறாங்க. ஏன்னா அவங்க பேசின பேச்சு அப்படி. வாய் இருக்கது என்பதற்காக நக்கலுமாக, நயாண்டியுமாக நசநசன்னு ஒரே பேச்சு. என்ன பண்றது தலையை குனிஞ்சு நிக்குறாங்க.

அங்க ஒரு பெரியவர் வரார். அவர் சின்னப்பையன் கிட்ட வந்து எப்படிப்பா அந்த காளைய அடக்குன? அதற்கு அந்த பையன், ஐயா எனக்கு அந்த காளைய பார்த்தா கோபமாக இருந்த மாதிரி தெரியல. பசியோட இருந்த மாதிரி இருந்தது. அதனால தான் அந்த புல்லுக்கட்டை காட்டியதும் அதற்கு தேவையானதை கிடைத்த மகிழ்ச்சியில் என்னோடு வந்தது என்றார்.

இதைக்கேட்டு அந்த பெரியவர் சொன்னார், இந்த சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் இருக்குறவங்க, அனுபவம் இல்லாதவங்க என்பது விஷயமே கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி என்ன செய்து அந்த பிரச்சனையை தீர்க்குறான் அது தான் விஷயம் என்றார்.

Tags:    

Similar News