தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க. தனி சின்னத்தில் போட்டியிடும்- அவைத் தலைவர் அர்ஜூனராஜ் பேட்டி

Published On 2026-02-23 12:29 IST   |   Update On 2026-02-23 12:29:00 IST
  • இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
  • கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.

சென்னை:

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். 

Tags:    

Similar News