நானும் மக்களும் வேறு வேறல்ல.. ரத்தமும் சதையும் போல்..!- ஆக்ரோஷமாக பேசிய விஜய்
- இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
- இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லை.
சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் அல்ல. விஜய்க்கும் ஸ்டாலின சாருக்குமான போர்.
இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
வரும் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை வருவது போன்ற தேர்தல்.
தவெகவுக்கும் நமக்கும் எதிரான சூழ்ச்சிகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது அதிசய தேர்தல். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆ் இருந்தபோது நல்ல ஆட்சி. அவர்கள் ஆண்டபோது தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டாராக இருந்தது.
எனக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. நானும் மக்களும் ரத்தமும் சதையும் போல்.
இந்த தமிழ்நாடு விஜயை நம்புகிறார்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறார்களா? என நிரூபிக்கும் தேர்தல்.
நாம் ஏதாவது பேசினால் களத்தில் இல்லாதவர்கள் wanted ஆக வண்டியில் ஏறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.