இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து

Published On 2024-03-02 04:21 GMT   |   Update On 2024-03-02 04:21 GMT
  • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
  • ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்டு பேசியதாவது :-

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில நலன்களை பணயம் வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News