search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை"

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
    • கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.

    இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்  இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்திசுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்திய சினிமாவில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற  12  வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரான்சில் கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்துவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் மகள் ஆராத்யாவுடன் தோன்றிய புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.

    அதற்கு முக்கிய காரணம் தனது வலது கையில் காயத்துக்காக மாவுக் கட்டு போட்டுகொண்டு அதோடு அவர் அங்கு தோன்றியதே ஆகும். காயத்தையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்காக ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பது நாம் உருவாக்குவதே ஆகும்.

     

    அதன்படி, கையில் கட்டுடன் தோன்றி அதையும் ஒரு ஸ்டைலாக ஐஸ்வர்யா ராய் மாற்றியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பூரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசியாக ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 மாற்றும் 2 ஆம் பாகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர்.
    • இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    சமீபத்தில் இவர் இசையில் கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இசையில் மிகவும் ஆர்வமிக்கவர் ஸ்ருதிஹாசன்.

    2019 ஆம் ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் டூடுல் ஆர்டிஸ்டான சாந்தனு ஹசாரிகாவும் பழகி டேடிங் செய்தனர். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் ஒன்றாக சென்றனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிடுவார். 4 ஆண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகள் தொடர்ந்த ரிலேஷன்ஷிப் இப்பொழுது முறிவடைந்துள்ளது.

    இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்தனர். ஸ்ருதிஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சாந்தனுவுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்துள்ளார்4 ஆண்டுகள் பிறகு பிரிந்த ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா

    . அதைத் தொடர்ந்து தற்காலிகமாக சமூக வலைதளங்கலில் இருந்து ஒரு பிரேக் எடுத்துள்ளார். அவர் கடைசியாக பகிர்ந்த பதிவில் என்னை பற்றியும் , மக்களை பற்றியும் நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரத் சைதன்ய யுவஜனா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
    • கடந்த தேர்தலில் நாராலோகேஷை எதிர்த்து மங்களகிரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிக்பாஸ் நடிகை ஹிஜ்ரா தமன்னா சிம்ஹாத்ரி போட்டியிடுகிறார்.

    இவர் பாரத் சைதன்ய யுவஜனா கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஆந்திராவில் பிரபலமானார். இவர் ஏற்கனவே கடந்த தேர்தலில் நாராலோகேஷை எதிர்த்து மங்களகிரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இந்த முறை பிதாபுரத்தில் பவன் கல்யாணை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • 2006 ஆம் ஆண்டு வெளியான ’போட்டோ’ என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்
    • தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார்.

    2006 ஆம் ஆண்டு வெளியான 'போட்டோ' என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. பின்னர் ராம் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது 'கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அஞ்சலிக்கு ௫௦-வது திரைப்படமாகும். ஷிவா துர்லாபடி இப்படத்தை இயக்கியுள்ளார்.  இப்படம் ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது.

     

    இப்படத்தில் சத்யம் ராஜேஷ், ஸ்ரீனிவாச ரெட்டி, சத்யா, மொஹமத் அலி, சுனில் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி, கேம் சேஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்
    • புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்

    தமிழ் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா கொச்சியில் ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து உள்ளனர். ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்தன.

    இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு மட்டுமல்லாது, படத் தயாரிப்பு மற்றும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக அவர் இருக்கிறார்




    இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.'9 ஸ்கின்' என்ற பெயரில் 'ஸ்கின் கேர்' ப்ராடக்ட் , நாப்கின்கள் தயாரிப்பது என தொடர் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க உள்ளார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியுள்ளார். தற்போது புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

    இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை கருப்பு & வெள்ளை நிறத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்றில் கனவு அலுவலகம் வடிவமைப்பு பணிகளை நயன்தாரா மேற்பார்வையிடுவது போல் அமைந்து உள்ளது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    மேலும் இணையதள பதிவில் விரைவில் 'புதிய தொடக்கம்' என்று நயன்தாரா தலைப்பிட்டு இருக்கிறார்.

    "எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்" என நயன் தாரா கூறியுள்ளார்.




    சமூக வலை தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புதிய தொழில் தொடங்கப்போகிறாரா ? அப்படி தொடங்கினால் எந்த மாதிரியான தொழிலாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்.
    • இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.

    அதை தொடர்ந்து 2008 -ல் வெளிவந்த "லக்" என்ற இந்தி படத்தில் நடித்தார். 2011 -ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற தமிழ் படத்தில் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

    இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அதிக ஆர்வம் உண்டு.இவரது இசை திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.




    மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் ஸ்ருதி பாடிய "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் குறிப்பிடத்தக்கது. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது.பல விருதுகள் பெற்றுள்ளார்.

    2 முறை பிலிம்பேர் விருது, 6 முறை சைமா விருதுகள், ஜீ அப்சரா விருதுகள் குறிப்பித்தக்கது. தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஜய், அஜித், சித்தார்த் ஆகியோருடன் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகி உள்ளார்.




    இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இதன் படப்பிடிப்பில் ஸ்ருதி தற்போது இணைந்துள்ளார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
    • இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை  சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

    அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.




    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார்.
    • இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும்.

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து நடித்து வருகிறார்.

    இவரது படங்கள் பல வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் அவரது நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

    தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது. 

    இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்து உள்ள பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்
    • "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம்

    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை இதுவாகும்.

    சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே, "எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், விரைவிலேயே நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக செய்தி வெளியானது.
    • பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக வீடியோ வெளியானது.

    பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.


    சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    பின்னர் அடுத்த நாளே நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "நான் இருக்கிறேன்" - உயிருடன். ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை; ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.


    கர்ப்பப்பை புற்றுநோய், பிற புற்றுநோய்களை போல் அல்ல; முற்றிலும் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) தடுப்பூசி மற்றும் முன்னரே கண்டறிதல் சோதனைகள் ஆகியவற்றில் இதற்கு தீர்வு உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் நடிகை பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் வலம் வந்தது.

    இந்நிலையில், மராட்டிய சட்டமன்ற மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே, பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பூனம் பாண்டே மீது வழக்கு தொடர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×