என் மலர்
- ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று படையப்பா ரீரிலீஸ் ஆகவுள்ளது.
- ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோவின் ப்ரோமோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பித்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
இறுதியில் போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்ன? மோசடி செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மிதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் கார்த்தீஸ்வரனே படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரீநிதி விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். கார்த்தீஸ்வரன் நண்பர்களாக ஆதவன், அகல்யா வெங்கடேசன் மற்றும் லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை படத்தில் விழிப்புணர்வோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன்.
சொல்ல வந்த கதையை இன்னும் கூடுதலாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மோசடி செய்யும் காட்சிகளை பார்க்கும் போது செல்போனை தொடுவதற்கே பயமாக இருக்கிறது. தினமும் ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுக்கும் மக்களின் பரிதாப நிலையை அப்படியே சொல்லி இருக்கிறார்.
இசை
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையை அதிக இரைச்சலுடன் கொடுத்து இருக்கிறார்.
ஔிப்பதிவு
என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
நாயகன் உதய தீப், தனது தந்தையை 2 மாமன்கள் கொலை செய்துவிட்டதாக இருவரையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாமனின் மகளை காதலித்து வரும் உதய தீப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.
இந்த நேரத்தில் மாமன் ஒருவர் விபத்தில் மரணம் அடைகிறார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மாமனின் உடல் காணாமல் போகிறது. பிணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதேஷ்பாலாவும் குடும்பத்தினரும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தபோது இன்னொரு மாமனும் திடீரென மரணமடைகிறார்.
இறுதியில் காணாமல் போன மாமனின் உடல் கிடைத்ததா? இன்னொரு மாமன் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதய தீப் இயல்பாகவும் காமெடி கலந்தும் நடித்துள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ஆதேஷ்பாலா காணாமல் போன பிணத்தையும் இன்னொரு மாமன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம், கே.சேஷாத்திரி ஆகியோர் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
இயக்கம்
காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டனி அஜித். ஆரம்பத்தில் புரியாமல் செல்லும் திரைக்கதை, இறுதியில் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் பற்றி பேசியிருப்பது சிறப்பு. இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இசை
சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ரேட்டிங்- 2.5/5
- ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ஆவேஷம் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து, ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இது சூர்யாவின் 47-வது படமாகும். இப்படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் "சூர்யா 47" திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
சென்னையில் நடந்த பூஜையில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா நசீம், இயக்குநர் ஜித்து மாதவன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்
இதனையடுத்து சூர்யா 47 படம் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹாப்பி ராஜ் படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார்.
- பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மரியா ராஜா.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று மாலை வெளியாகும் 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிடுகிறார்.
- தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷன் நேற்று இரவு நடைபெற்றது.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷனில் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி நடித்துள்ளனர்.
- 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.
பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே விழாவில் விஜய் ஒருபுறம் குட்டி கதை சொல்ல தனுஷ் மறுபுறம் ரஜினி ஸ்டைலில் பேச வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிரார்ப்பிக்கின்றனர்.
மறுபுறம் சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
- தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி, டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.
உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது. அடுத்ததாக 2 புதிய சீசன்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். கடந்த 2023 வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் படத்திற்காக சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வாங்கியது அவரது நடிப்புத்திறனுக்கு சான்று.

இதற்கிடையே பீக்கி பிளைண்டர்ஸ் தொடரை படமாக தயாரிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. படத்திலும் சிலியன் மர்ஃபி -யே டாமி ஷெல்பியாக நடிக்கிறார். முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இந்த படத்திற்கு "தி இம்மோர்டல் மேன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் "தி இம்மோர்டல் மேன்" திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

- ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார்.
- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது.
நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் சர்வம் மாயா என்ற படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளது.
இதற்கிடையில் பி.ஆர். அருண் எழுதி இயக்கியுள்ள 'பார்மா' என்ற வெப் தொடரில் நிவின் பாலி நடித்திருந்தார் .
இந்த படம் வரும் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல.. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால், படையப்பாவின் ரீ ரிலீஸ்க்காக ரசிகர்கள்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இதற்கிடையே, அரசன் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வரும் சிம்பு நகை கடை திறப்பு விழாவிற்காக இன்று மலேசியா சென்றுருந்தார்.
அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு தல ரசிகனாக அஜித்தை பார்க்க சென்றுவிட்டார்.
அதுவும் எப்படி தெரியுமா..? அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்சியை அணிந்து அவரை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு. இவர்களின் சந்திப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.








