என் மலர்
- சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது.
- இது குறித்து உங்களது கருத்து என்ன? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
விஜய்-திரிஷா ஆகியோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் ஒன்றாக பங்கேற்றது விவாத பொருளானது. த.வெ.க. தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை திரிஷா சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக இன்று விமான நிலையம் வந்தார். அவரிடம் த.வெ.க. தலைவர் விஜய்யும் நீங்கள் இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு திரிஷா எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக விமான நிலையத்திற்குள் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
- நான் தொழிலே அரசியலா பண்றவன் என்று பஞ்ச் டயலாக் பேசியதை பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர்.
- 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது.
தஞ்சையில் இன்று மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் ஷோரூமை நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார். பின்பு மேடையில் ஏறி ரசிகர்கள் மத்தியில் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் தனது படங்களில் நடித்த ஒரு சில அரசியல் வசனங்களை பேசி காண்பித்தார். அதில் மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது. நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன். நான் தொழிலே அரசியலா பண்றவன் என்று பஞ்ச் டயலாக் பேசியதை பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சாவூர் வந்தவுடன் ராஜராஜ சோழன் என என்னை பொதுமக்கள் வரவேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இன்று நான் தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் வரவேண்டும் என தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. ஊரில் மழை இல்லாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பல்வேறு வழிகளை யோசிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார். ஆனாலும், நடவடிக்கை இல்லை.
இதனால், ஊர் மக்கள் சேர்ந்து நிலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள். அவர் கண்டுபிடித்த இடம் யோகி பாபுவின் நிலத்திற்குட்பட்டுட்டது. முதலில் மறுக்கும் யோகிபாபு பின்னர், மக்களின் நலத்திற்காக ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த இடத்தை தோண்டி பார்க்கும்போது அங்கு பெரிய டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.
இது வௌியே தெரியவர அந்த ஊரே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதற்கிடையே, யோகி பாபுவின் காதல். தண்ணீர் இல்லாத ஊருக்கு மகள் லவ்லின் சந்திரசேகரை கட்டிக்கொடுக்க மறுக்கிறார் தந்தை. பின்னர், பள்ளம் தோண்டுவதால், ஊருக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மகளை கட்டிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், டைனோசர் எலும்புக்கூடு கிடைத்த இந்த சூழலில், அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? யோகி பாபு காதல் கைக்கூடியதா என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்திருக்ம் யோகிபாபு சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபுவின் காதலியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமாக நடித்திருக்கிறார்.
ரேச்சல் ரேபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் ஊணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்கம்
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினையை கதை கருவாக கொண்டு அனைவரும் ரசிக்கும்படியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.
இசை
நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
படத்தின் காட்சிகள் கதைக்கு பொருத்தம்.
ரேட்டிங்-3.5/5
- உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படமே ‘தமிழன்’.
- பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முதல்படம் மற்றும் முதல் ஹீரோவை பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'சினிமாவில் எனது முதல்படி தமிழ். என் சக நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்க்கவும் நடனத்தை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் கூடியிருப்பார்கள். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விஜய் ரசிகர் கூட்டத்தை பார்த்த போது அவர் ஒரு கடவுளை போல எனக்கு தோன்றியது. இந்தியாவில் மக்கள் நட்சத்திரங்களை ஆர்வத்துடன் விரும்புகிறார்கள் என பிரியங்கா சோப்ரா மேலும் கூறினார்.
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா நடித்த முதல் படமே 'தமிழன்'. அதற்கு பிறகு அவர் பல மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக மாறினார். விஜய் மீது பிரியங்கா சோப்ராவுக்கு மிகுந்த மரியாதை உண்டு என அவரது தாயார் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- விவாகரத்து பெற்றாலும் கணவரிடம் இருந்து அவர் ஜீவனாம்சம் பெற மறுத்துவிட்டார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோகைல் கதுரியாவை திருமணம் செய்தார். சோகைலுக்கு இது 2-வது திருமணம். அவரது முதல் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி. அவரது திருமணத்தை ஹன்சிகா முன்னின்று நடத்தினார். பின் சோகைல் முதல் மனைவியை பிரிந்த நிலையில் ஹன்சிகா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போது விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து பெற்றாலும் கணவரிடம் இருந்து அவர் ஜீவனாம்சம் பெற மறுத்துவிட்டார்.
இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு முதன்முறையாக பதிவு ஒன்றை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மொழியில் வெளியிட்டுள்ள அவரது பதிவில், எப்போதும் அதிகரித்து வரும் மகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத தைரியம் உலகம் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூகித்து கொண்டிருந்த போது கடினமான காலங்களில் கூட தான் நேர்மறை எண்ணத்தை கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனிடையே ஈரானும் நேற்றுமுதல் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார்.
அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் பாதுகாப்பாக சென்னை திரும்பினார்.
அஜித் சென்னை திரும்பிய நிலையில், அஜித் குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி பரிசாக வழங்கியுள்ளார்.
நடிகரும் கார் ரேசருமான அஜித் குமாரின் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில், மஹிந்திரா BE FORMULA E EDITION கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
- கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் விஷம பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டேன்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் தனது காதலர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இந்தியா முழுவதும் சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமன் மந்தனா சுமார் 8 வருடங்களுக்கு முன்பு பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்து அவரது தாயார் பேசுவதாகக் கூறப்படுகிறது.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "அந்த ஆடியோ பதிவை 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என ராஷ்மிகா மந்தனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் விஷம பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனது பேச்சுகள் சூழலுக்குப் புறம்பாக மாற்றப்படுவதையும் நான் சொல்லாத விஷயங்கள் தவறான கதைகளாக ஜோடிக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆனால் சமீபத்தில் நடந்த இந்த அத்துமீறலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஆடியோ பதிவை நீக்க வேண்டும். இல்லையென்றால்சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பமாக இருந்தபோது தன்னைக் கைவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
- டிஎன்ஏ பரிசோதனைக்கு அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பமாக இருந்தபோது தன்னைக் கைவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரங்கராஜ், பின்னர் மாநில மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாயை காதலித்ததை ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் அந்தக் குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் ஜாய் கிரிசில்டாவின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இதனிடையே தனது மகன் தொடர்பான புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிசில்டா.
இந்நிலையில் இன்று மகன் ராகா ரங்கராஜின் முகத்தை காட்டியுள்ளார். இதுவரை முகத்தை மறைத்து பதிவிட்டு வந்த அவர், இன்று மகனின் முகத்தை முழுவதுமாக காண்பித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும், இருவர் பிரச்சனையில் குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தாதீர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜாய் தனது முதல் கணவரை ஜூலை 2024-ல் தான் விவாகரத்து செய்த நிலையில், டிசம்பர் 2023-ல் ரங்கராஜைத் திருமணம் செய்ததாகக் கூறுவது சட்டரீதியான கேள்விகளை எழுப்புவதாக நீதிமன்றம் குறிப்பிட்டதும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- பாதுகாப்பு கோரி கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.
2025 ஜனவரியில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றது. இங்கு பாசிமணி, வளையல் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண் மோனலிசா போஸ்லே தனது இயற்கையான மாநிறத்துக்கான வைரலானார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் எளிய குடும்பத்தை சேர்ந்த மோனாசிலாவுக்கு அதன் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.
அவர் தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவின் அருமனுார் கோவிலில் நேற்று மோனலிசா தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. திருமணத்தில் கேரள அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர், தனது தந்தை தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாவும் தனக்கு பாதுகாப்பு கோரியும் கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் திருமணத்தின் பின் இன்று கணவர் பர்மான் கானுடன் மோனலிசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எங்களது திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது, இது லவ் ஜிஹாத் அல்ல" என்று மோனலிசா கூறினார்.
இருவருமே தங்களது மதங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரது கணவர் பர்மேன் கான் தெரிவித்தார்.
- தமிழில் “சினேகிதியே”, “நான் அவன் இல்லை-2” ஆகிய திரைப்படங்களில் ஸ்வேதா மேனன் நடித்துள்ளார்.
- சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை ஸ்வேதா மேனன் பெற்றுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பிறந்த இவர், "அனசுவரம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான இந்தி மொழி படங்களிலும், தமிழில் "சினேகிதியே", "நான் அவன் இல்லை-2" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு (2025) நடந்த மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தநிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாகவும், ஆகவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மார்ட்டின் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்ட நேரத்தில் அவரின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைக்கு எதிரான அந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் கோர்ட்டு, நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 67(ஏ) உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய போலீசார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகை ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்வேதா மேனனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறப்பட்ட புகாரின் மீது அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான ராஜேந்திர பிரசாத் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதில் மறைந்த நடிகர் காந்தா ராவ் குறித்து பெருமையாக பேசிய பிரசாத், காந்தாராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்றும் அவரின் திறமையை பார்த்து, எம்.ஜி.ஆர் பயந்து நடுங்குவார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திர பிரசாத் கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண்டேன்.
ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியையும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல. உங்கள் சகாக்களே புண்பட்டு பேசி ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர் .
இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ், தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது.
நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என்.டி.ஆர். ஏ.என்.ஆர். எஸ் வி ரங்காராவ். சாவித்திரி, சாராதாம்மா. வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம்.
எம்ஜிஆர் அவர்கள் வெறும் நடிகர் மட்டும் அல்ல தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை என்.டி ராமாராவ் அவர்கள் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் எம்.ஜி ஆர் அவர்கள் இருந்திருக்கிறார்.
நான் விடயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமாகாரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன்.
அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அம் மன்னிப்பு வரவேண்டும். எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக இருந்தது.
- மறுதணிக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், அரசியலுக்கு வந்தப்பின் அவர் திரையுலகில் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. மார்ச் 9 அன்று நடக்கவிருந்த மறுதணிக்கையும் (Re-censor), அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் என கூறப்பட்டு வருவதால், ரூ.120 கோடிக்கு வாங்கிய ஓ.டி.டி. உரிமத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.








